search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடை"

    சேலத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த 35 பவுன் நகை மீட்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சேலம் வலசையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), 3 ரோடு பகுதியை சேர்ந்த சிவானந்தம்(30) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராணம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி அம்மாபேட்டையில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்குள் புகுந்து 35 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி கொலுசு மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    மேலும் அவர்களில் கார்த்திக் தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள சுடுகாட்டில் 35 பவுன் நகையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததும், சிவானந்தம் வீட்டின் படிக்கட்டின் கீழே குழி தோண்டி 3 கிலோ வெள்ளி கொலுசுவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் வேறு ஏதாவது திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நாமக்கல் மாவட்டத்தில் 70 நகைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் துறை அதிகாரிகள் மறுமுத்திரையிடாத 9 எடை அளவுகளை பறிமுதல் செய்தனர்.
    நாமக்கல்:

    சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் அறிவுறுத்தலின்படி எடை அளவுகளில் முத்திரையிடாத நகைக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகளிலும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மஞ்சள்நாதன் தலைமையிலான குழுவினர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    70 நகைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட இந்த குழுவினர், மறுமுத்திரையிடாத 9 எடை அளவுகளை பறிமுதல் செய்தனர். மேலும் 36 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின்போது நகைக்கடை வணிகர்களிடம், தங்களது நிறுவனங்களில் உள்ள எடையளவுகளின் மதிப்பில் 10-ல் ஒருபங்கு அளவு சோதனை எடைகற்கள் வைத்திருக்கவும், வாடிக்கையாளர்களுக்கு எடையளவு குறித்த சந்தேகங்கள் எழும் பட்சத்தில் சோதனை எடைகற்களை கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் தவறாது தங்களது எடை அளவுகளை மறுமுத்திரையிடவும், மறுமுத்திரையிடாத எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

    இந்த ஆய்வில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் சங்கர், ராகவன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், ராஜன், சுதா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
    ×