search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்றுக்குட்டி"

    தஞ்சை அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள நவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (வயது 27). விவசாயியான இவர் பசுமாடு வளர்ந்து வருகிறார். இவரது பசு மாடு ஏற்கனவே 2 கன்றுகளை ஈன்றுள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை பசுமாடு ஒரு கன்றை ஈன்றது. அப்போது கன்றுக்கு நெற்றியில் கண் உள்ளது. மேலும் 4 துவாரத்துடன் 2 மூக்குகள் இருந்தது.

    நெற்றிக்கண்ணுடன், 2 மூக்குடனும் பிறந்த கன்றுக்குட்டி நலமாக உள்ளது. வழக்கம்போல் மற்ற கன்றுகளை போல துள்ளி குதித்து விளையாடுகிறது.

    நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர்.

    வேதாரண்யம் அருகே வயலில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள்- கன்றுக்குட்டி உயிரிழந்தன.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட உம்பளச்சேரி கீழ்பகுதியில் வசித்து வருபவர் திலகர்(வயது45). அதே ஊரை சேர்ந்தவர் சாந்தி(40). இவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளில் பசுமாடுகள் வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திலகருக்கு சொந்தமான ஒரு பசுமாடு மற்றும் கன்று குட்டி ஒன்றும், சாந்திக்கு சொந்தமான பசுமாடும் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் சம்பவத்தன்று மோய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வயலில் சாய்ந்த கிடந்த மின்கம்பத்தில் சென்ற மின்கம்பியை மாடுகள் மிதித்துள்ளன. இதனால் மாடுகளை மின்சாரம் தாக்கியது. இதில் 2 பசுமாடுகளும், கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 பசுமாடு, ஒரு கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×