search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகவல்"

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

    கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இன்று(புதன்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், மதுரை, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100.4 முதல் 104 டிகிரி வரை இருக்கும்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    திருச்செங்கோடு 7 செ.மீ., தொண்டி, மணமேல்குடி தலா 5 செ.மீ., தேவகோட்டை 4 செ.மீ., கூடலூர் பஜார், பவானி, பட்டுக்கோட்டை, ஓட்டப்பிடாரம் தலா 3 செ.மீ., குமாரபாளையம், காரைக்குடி, தேனி மாவட்டம் கூடலூர், சூளகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர், உத்தமபாளையம், பெண்ணாகரம், தாளவாடி, பவானிசாகர், போடிநாயக்கனூர் தலா 2 செ.மீ., அன்னூர், பெரியகுளம், சேலம், வேடசந்தூர், ராதாபுரம், பெருந்துறை, கொடுமுடி, ஒகேனக்கல், ராஜபாளையம், பாப்பிரெட்டிப்பட்டி, ஏற்காடு, ஈரோடு, பாண்டவராயர்தலை தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில், இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 98 டிகிரி வெப்பநிலை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மழை அளவு விவரம் வருமாறு:-

    புதுக்கோட்டை, திருப்பத்தூர், தாராபுரம், கோவிலான்குளம், அருப்புக்கோட்டை, கோத்தகிரி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 3 சென்டி மீட்டர் மழையும், பெரியார், இரணியல், சிவகாசி, தாளவாடி, திருமயம், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    தளி, பாப்பிரெட்டிபட்டி, குளச்சல், சூலூர், பவானிசாகர், பீளமேடு, தக்கலை, சத்தியமங்கலம், குடவாசல், அரவக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. 
    இந்தியன் வங்கிக்கு கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.1,259 கோடியாகும் என்று வங்கி தலைவர் கிஷோர் கரத் சென்னையில் கூறினார்.
    சென்னை:

    நடப்பாண்டு நிறைவுற்ற காலாண்டிற்கான, இந்தியன் வங்கியின் முடிவுகளுக்கும் மற்றும் நிறைவுற்ற ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்கு வங்கியின் இயக்குனர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுகுறித்து வங்கி தலைவர் கிஷோர் கரத், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கி 2017-18-ம் ஆண்டு வளர்ச்சியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இயக்கலாபம் 25 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது. இதில் ரூ.1,258.99 கோடி நிகர லாபமாகும்.

    வியாபார சிறப்பம்சங்களில் நிதி நிலை அளவு 15.80 சதவீதமாக வளர்ச்சி அடைந்ததன் மூலம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 176 கோடியாக உள்ளது. உலகளவில் கடன்கள் 23.14 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது.

    வாரா கடன் வசூல் 65.98 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    முன்னுரிமை கடன்கள் ரூ.63 ஆயிரத்து 36 கோடி அளிக்கப்பட்டுள்ளது. நலிந்த பிரிவினருக்கான கடன்கள் ரூ.16 ஆயிரத்து 213 கோடியாகும். ‘பிரதான் மந்திரி முத்ரதா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்து 37 கோடியே 46 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3.52 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர்.

    சராசரியாக கிளைக்கு 70 வாடிக்கையாளர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 80 வாடிக்கையாளர்கள் வீதம் சேர்க்கப்பட்டு உள்ளனர். உள்நாட்டில் 2 ஆயிரத்து 820 கிளைகள் உள்ளன. 3 ஆயிரத்து 399 தானியங்கி பணம் பட்டுவாடா மற்றும் பணம் செலுத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. வெளிநாடுகளில் 3 கிளைகள் இயங்கி வருகின்றன.

    வங்கியின் செயல்பாட்டை பாராட்டி சிறந்த செயல் திறன் விருது, சிறந்த வங்கி விருது, ஊழல் விழிப்புணர்வு தொடக்க முயற்சி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

    வங்கியின் இயக்குனர் குழுமம், கடந்த மார்ச் 31-ந்தேதியோடு நிறைவடைந்த ஆண்டுக்கான ஈவுத்தொகை சென்ற ஆண்டை போல 60 சதவீதம் அறிவித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கி உயர் அதிகாரிகள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச்சாரியா மற்றும் பொதுமேலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 
    ×