என் மலர்
நீங்கள் தேடியது "பெண்கள் கைது"
- சந்தேகத்துக்கிடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்த 2 பெண்களை போலீசார் அழைத்து விசாரித்தனர்.
- கைது செய்யப்பட்ட யசோதா மீது சுமார் 15-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்கு உள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி பஸ் நிலையம் அருகே திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்த 2 பெண்களை போலீசார் அழைத்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களை பெண் போலீசார் சோதனை செய்தபோது 2 பெண்கள் காலில் டேப்புகள் அணிந்து புதுவையில் இருந்து 240 மதுபாட்டில்களை நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவர்கள் செஞ்சி பகுதியை சேர்ந்த யசோதா (77), சின்ன பாப்பா (44) ஆகியோர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் புதுவையில் இருந்து மதுபானங்களை கடத்தி செஞ்சி பகுதிக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட யசோதா மீது சுமார் 15-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்கும் சின்ன பாப்பா மீது சுமார் 20-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் கடத்திய வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- சிவகங்கை அருகே 150 கிலோ மின் கம்பிகள் திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ அலுமினிய கம்பிகளை 3 பெண்கள் திருடிக்கொண்டு சென்றனர். இதை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் அவர்களை பிடித்து திருப்பத்தூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி கீரைக்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அய்யம்மாள் (37), ஜெயராஜ் மனைவி குருவம்மாள் (55), வீராச்சாமி மனைவி கலா (55) என தெரியவந்தது.
மின் கம்பிகள் திருட்டு தொடர்பாக மின்பாதை ஆய்வாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின்பேரில் 3 பெண்களையும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.
- தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.
- பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜோத்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கவி. இவர் அங்குள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டைப்பூட்டி விட்டு வெளியே சென்றார்.
அப்போது அங்கு 4 பெண்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வெளியே நின்று கொண்டு நோட்டமிட மற்ற 2 பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.
இந்தநிலையில் அங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.
அப்போது பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார். இதையடுத்து அந்த விவசாயியிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் சிக்கிய 2 பெண்களும் தங்களது ஆடைகளை களைந்து அரை நிர்வாண கோலத்தில் நின்றனர். மேலும் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.
அப்போது வீட்டின் உரிமையாளரான சங்கவி அங்கே வந்துள்ளார். இதையடுத்து 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பார்வதி (வயது 32), சித்ரா( 30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 2 பேரும் ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடுவதும், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களுடன் வந்த பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
- பிரதாப் ,குணசேகரன் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- ரூ.4 லட்சம் மதிப்பிலான 2407 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கோபிநாதம்பட்டி பகுதிகளில் கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு காவல் ஆய்வாளர்கள் சக்திவேல் கமலநாதன் தலைமையிலான காவலர்கள் சுதாகர், மணிரத்தினம், சந்திரசேகர், பிரதாப் ,குணசேகரன் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ரோந்து பணியின் போது கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த கோபிநாதம்பட்டிக ிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ருக்மணி (வயது 60), கெங்கன் மனைவி செல்வி (65), வேங்கன் மனைவி சாந்தி (70) ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த, ரூ.4 லட்சம் மதிப்பிலான 2407 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா்.
- 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.
காங்கயம்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (வயது 25). காா் டிரைவரான இவா் காங்கயத்தை அடுத்த மடவிளாகம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அப்போது கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பிரவீன்குமாா், கூட்டத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 3 பெண்கள் குறித்து காங்கயம் போலீசாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து மகளிா் காவல் நிலைய போலீசாா், 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனா். அதில் அந்த 3 பெண்களும் நாகா்கோவில், ஒழுவஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுப்புதாய் (30), அட்சயா (28), மரியா (33) என்பதும், இவா்கள் 3 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.
- வீட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
- மொத்தம் 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி கம்மார் தெரு, அத்திக்குளம் மேடு ஆகிய பகுதிகளில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே, இன்று காலை போலீசார் அந்தப் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஆரணி கம்மார் தெருவில் மது விற்பனை செய்த காஞ்சனா(வயது32) என்ற பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களையும், அத்திக்குளம் மேடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் மது விற்பனை செய்த பத்மாவதி(வயது65) என்ற மூதாட்டியையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
எனவே, மொத்தம் 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு பெண்களையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார்.
- நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த சகாயராஜ் தனது மனைவி அனிதா(37) என்பவருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் கோவை செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர். பஸ் ஏறியவுடன் நகையை பார்த்தபோது அது திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிதா ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களின் பதிவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகையை திருடியது வத்தலக்குண்டு பண்ணப்பட்டியை சேர்ந்த சத்யா(44), மதுரையை சேர்ந்த முத்துமாரி(35), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணி(31) என தெரியவந்தது.
இவர்கள் பஸ்நிலையம் மற்றும் கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.
- ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) அணுகினார். அவர் தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும், அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரன் சம்பவத்தன்று காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மேலும் 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரைப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றி கொண்டனர். மேலும் அவரிடம் 6 பத்திர தாள்களில் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடமிருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்று கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை அருகே வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.
மதுரை
மதுரை வளர் நகர் அம்பலக்காரன் பெட்டியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு வண்டியூரைச்சேர்ந்த லெட்சுமி எனபவரும் வியாபாரம் செய்கிறார். கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர் களுக்குள் முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் லட்சுமி யின் உறவினர்களான வண்டியூர் செம்மண் சாலையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி மேனகா (37) , ராமசாமி மனைவி சாந்தி (50),சோனை மகள் ரேணுகா (39) ஆகிய 3 பேரும் ராமனை ஆபாச மாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ராமன் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.
மதுரை தென்னோ லைக் காரத் தெருவை தெருவை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி பூர்ணிமா (38).இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தெற்கு வாசலில் உள்ள அரிசி கடைக்கு பூர்ணிமா சென்றிருந்தார். அப்போது அவரு க்கும் அங்கு வந்த ஆரப் பாளையம் ராஜேந்திரா மெயின்ரோடு கணேசன் மனைவி நிஷா காந்தி (45) என்பவருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நிஷா காந்தி, பூர்ணிமாவை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பூர்ணிமா தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து நிஷா காந்தியை கைது செய்தனர்.
- காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பஸ்சை காஞ்சிபுரம் பேட்டையில் நிறுத்தி திடீர் சோதனை செய்தனர். அப்போது அதில் 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
இந்த ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக பஸ்சில் இருந்த ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபா, கன்னியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வினிதா (வயது 28) என்பவர், அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர். இதேபோன்று, லாலா பேட்டையில் மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா (42) என்பவரையும், கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
- அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ் பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த வடசிறு வள்ளூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (75), குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்மின் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.