என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 183784
நீங்கள் தேடியது "போக்ஸோ"
மத்திய பிரதேச மாநிலத்தில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த 14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
போபால்:
இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வரை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கொடுமை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஜல்வா எனும் கிராம பகுதியில் 4 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் நடந்துள்ளது. சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதாக அடிக்கடி வீட்டுக்கு வருவான் என்றும், அவ்வாறு வந்தபோது இந்த மாபாதக செயலில் ஈடுபட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் சிறுவன் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 வயது சிறுவனுக்கு இதுமாதிரியான செயலை செய்வதற்கான துணிச்சலும், தேவையும் வரும் அளவுக்கு நம் சமூக அமைப்பு இருக்கிறதோ? என்ற கேள்வி இங்கு அனைவரும் தங்களுக்குள்ளாக கேட்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வரை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த கொடுமை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஜல்வா எனும் கிராம பகுதியில் 4 வயது சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் நடந்துள்ளது. சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதாக அடிக்கடி வீட்டுக்கு வருவான் என்றும், அவ்வாறு வந்தபோது இந்த மாபாதக செயலில் ஈடுபட்டதாகவும் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் சிறுவன் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 வயது சிறுவனுக்கு இதுமாதிரியான செயலை செய்வதற்கான துணிச்சலும், தேவையும் வரும் அளவுக்கு நம் சமூக அமைப்பு இருக்கிறதோ? என்ற கேள்வி இங்கு அனைவரும் தங்களுக்குள்ளாக கேட்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X