search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் எஞ்சிய 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    போதிய வருகை இல்லாததால், செமஸ்டர் தேர்வு எழுத சட்டக்கல்லூரி மாணவருக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர் பி.பாலசுப்பிரமணியன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:-

    மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நான் என்னுடைய சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்தேன். இதனால், கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. மேலும், 4-வது செமஸ்டர் தேர்வு கட்டணம், கடந்த ஜனவரி 31-ந் தேதிக்குள் செலுத்தவில்லை. உடல்நலம் தேறி பிப்ரவரி மாதம் கல்லூரிக்கு வந்தபோது, கல்லூரியை இடம் மாற்றுவதை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரி செயல்படவில்லை. இதன் காரணமாக தேர்வு கட்டணத்தை பெற கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது.

    அதுமட்டுமல்லாமல், போதிய வருகை இல்லை என்று என்னை செமஸ்டர் தேர்வு எழுதவும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே, செமஸ்டர் தேர்வு எழுத எனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது கல்லூரி முதல்வர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக கட்டணத்தை மனுதாரர் செலுத்தவில்லை. அதேபோல ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கல்லூரி நடைபெறாத காலகட்டத்திற்காக, மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளிலும் அவர் பங்கேற்கவில்லை. 66 சதவீதத்திற்கும் குறைவாக வருகைப்பதிவு உள்ளதால், செமஸ்டர் தேர்வை எழுத அனுமதிக்க முடியாது. அதனால், அவர் 4-வது செமஸ்டர் தேர்வை எழுத மீண்டும் படிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து நீதிபதி, ‘சம்பந்தப்பட்ட மாணவர் உரிய தேதிக்குள் கட்டணத்தை செலுத்தவில்லை. அதுபோல வருகைப்பதிவும் இல்லை. அதனால், செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. அவர் மீண்டும் 4-வது செமஸ்டரை படிக்க வேண்டும்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார். 
    என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய அனுமதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #Engineering #AnnaUniversity
    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொன்.பாண்டியன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு கல்வியாண்டில் ‘ஆன்லைன்’ மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கடந்த கல்வி அண்டே அறிவித்து விட்டோம். வெளியூர் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் விண்ணப்பம் கொடுப்பதற்காக சென்னை வந்து செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டே ‘ஆன்லைன்’ மூலமாக விண்ணப்பிக்கவும், கலந்தாய்வில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு விண்ணப்பிக்க ஆங்கில அறிவோ அல்லது கம்ப்யூட்டர் அறிவோ அவசியம் கிடையாது. வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினாலே எளிதாக விண்ணப்பித்து விடலாம்.

    கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, போதிய எண்ணிக்கையில் ஆட்களையும் நியமித்துள்ளோம். எனவே, ஆன்லைன் கலந்தாய்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைனால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த மே 3-ந் தேதியில் இருந்து மே 7-ந் தேதி வரை 30 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


    ஆனால் மனுதாரர்கள் தரப்பில், ‘ஆன்லைனில் விண்ணப்பிக்க வங்கி கணக்கும், விண்ணப்பத் தொகையை செலுத்த டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு, ‘நெட்பேங்கிங்’ அவசியம் தேவையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்யவேண்டும் என்ற நிலை கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று கூறியிருந்தனர்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘கிராமப்புற மாணவர்கள் பலருக்கு வங்கி கணக்கு கூட கிடையாது. அவ்வாறு வங்கி கணக்கே இல்லாத மாணவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எப்படி இருக்கும்? இவற்றை பயன்படுத்தி அவர்கள் எப்படி விண்ணப்பிக்க முடியும்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    பின்னர் நீதிபதிகள், ‘இந்த நடைமுறை சிக்கல் உள்ளதால், மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத்தொகையை ரொக்கம் அல்லது வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்த அனுமதிக்கலாமா? என்பது குறித்தும், விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய அனுமதி வழங்குவது குறித்தும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலிக்க வேண்டும். அதன்பின்னர் எடுக்கப்பட்ட முடிவை இன்று (வியாழக்கிழமை) மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. #Engineering #AnnaUniversity #highcourt
    ×