search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தியமங்கலம்"

    • சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    • இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, வடக்குபேட்டை, கெஞ்ச னூர் உள்பட 59 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 31-ந் தேதி பிரதி ஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி முன்னதாக சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வர ப்படுகிறது.

    இதை தொடர்ந்து பஸ் நிலையம் பகுதி, ஆற்று பாலம், பழைய மார்க்கெட், கோட்டு வீராம்பாளையம், பெரிய பள்ளிவாசல் வீதி வரதம்பாளையம் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

    இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு சத்தியமங்கலம் பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இதையொட்டி சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அவர்கள் பொதுமக்கள் சிைலகளை கரைக்கும் போது அரசு அறிவித்து உள்ள பாதுகாப்பு வழி முறை களை கடை பிடிக்க வேண்டும். ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுபாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் சிலைகள் இன்று மாலை 3 மணிக்கு அந்தியூர் ஈரோடு ரோட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அத்தாணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    இதனை அடுத்துபவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, ஏ.டி.எஸ்.பி. கணகேஸ்வரி ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் 180 போலீசார் என 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
    • மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.

    இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.

    மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.

    ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.

    இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:

    மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.

    சத்தியமங்கலம் பவானி ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் அருகே இருக்கும் பல ஊர்களில் உள்ள சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளது.
    சத்தியமங்கலம்:

    தென்மேற்கு பருவ மழை மீண்டும் பலமாக கொட்டி வருவதால் கர்நாடகம், கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி மலை பகுதி மற்றும் கேரள மாநில வன எல்லையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. வரலாறு காணாத வகையில் தண்ணீர் வரத்தால் பவானிசாகர் அணை நிரம்பியது. இதை தொடர்ந்து அணைக்கு வரும் 40 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 2 நாட்களாகவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி சத்தியமங்கலம் பவானி ஆற்றில் இருகரைகளையும் தாண்டி வெள்ளம் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர், தொட்டாம்பாளையம் மற்றும் ஆலத்துக்கோம்பை, நஞ்சை ஊத்துக்குளி உள்பட பல ஊர்களில் உள்ள சுமார் 500 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    தொட்டாம்பாளையத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் முக்கால் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் உள்ள பொருட்கள் துணி மணிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.

    சத்தியமங்கலம் அருகே ஆலத்துக்கோம்பை பகுதியில் பவானி ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து ரோட்டிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வேன் இன்று காலை 7 மணியளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வரச்சென்றது. ரோட்டில் தண்ணீர் ஓடியதால் டிரைவர் அதில் வேனை இயக்கினார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய வேன் பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஒரு புறமாக கவிழ்ந்து மூழ்கியபடி சாய்ந்து நின்றது.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் - பதட்டமும் ஏற்பட்டது. பொதுமக்கள் துணையுடன் அந்த வேன் மீட்கப்பட்டது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்தால் விபரீதம் ஆகி இருக்கும்.

    இதேபோல் பவானி நகரில் பாலக்கரை, சின்னாற்று பாலம், பூ மார்க்கெட் பகுதியில் சுமார் 50-வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசித்த மக்கள் பவானி அரசு மாணவிகள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் பள்ளி பாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளம் 500-க்கும் மேற்படட வீடுகளை சூழ்ந்து உள்ளது. 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அப்பகுதி மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி மற்றும் பவானி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மாவட்ட கலெக்டர் பிரபாகர் கரையோர பகுதி மக்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். அவர் பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்று பொதுமக்களை சந்தித்து அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூறி வருகிறார்.
    ×