search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம்"

    • விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை.
    • விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது.

    விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என்று வருத்தமாக உள்ளது என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மோகன் ஜி. "நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக உள்ளது.

    இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால், அது இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போல மாறிவிடும். ஏனெனில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது போல, ஒரு தோற்றம் வந்துவிடும் என்பதால், இந்துவாக இருக்கும் பலரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது என்பது வேறு, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது வேறு, இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலை முதலில் மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
    • ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனியக்குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று மற்றும் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்றய தினம் அவரது தொகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி அந்த புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

     

     

    மேலும் இன்று திக்கணங்கோடு சந்திப்பில் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு பயணத்தை தொடங்கினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Dr. பினுலால் சிங், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு. ராஜேஷ்குமார், சி.பி.எம் மாவட்ட செயலாளர் திரு செல்லசாமி, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராஜசேகரன், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் இந்த பயணத்தில் கலந்து கொண்டனர்.

     

     

    மேலும் நேற்றய திருவட்டாரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.பி. விஜய் வசந்த் ஓணம் வாழ்த்து தெரிவித்தார்.

     

    • போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.
    • இட்லி சாப்பிடும் போட்டியில் 60 பேர் பங்கேற்றனர்.

    கேரளாவின் கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சட்னி சாம்பார் எதுவும் இன்று வெறும் இட்லி மட்டும் சாப்பிட வேண்டும்.

    இப்போட்டியில் 60 பேர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற 50 வயது முதியவர் ஒரே நேரத்தில் 3 இட்லிகளை வாயின் உள்ளே திணித்துள்ளார். அப்போது இட்லி தொண்டையில் சிக்கியதால் அவர் மூச்சு திணறி மயங்கி விழுந்தார்.

    பின்னர் சுற்றி இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த எக்ஸ் பதிவை தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் விஜய் பதிவிட்டுள்ளார். 

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி சட்டையுடன் ஓணம் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.

    பேரூர்:

    கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் அனைத்து மக்களாலும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஓணம் பண்டிகையில் மிக முக்கியமாக இடம் பெறுவது பூக்கள் தான். 10 நாட்களும் மகாபலி மன்னனை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிடுவது வழக்கம்.

    இதனையொட்டி விழா தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே கேரளாவில் மலர்கள் விற்பனை சூடுபிடித்து விடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    குறிப்பாக கேரளாவின் அருகே உள்ள தமிழக மாவட்டமான கோவையில் இருந்து தான் அதிகளவில் பூக்கள் விற்பனைக்கு செல்கின்றன. ஓணம் பண்டிகைக்காகவே, பிரத்யேகமாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, அறுவை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவையில் பூக்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, ஓணம் விழாவுக்கு அவர்கள் வாங்கி செல்வார்கள். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளுக்கும், அந்த 10 நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகை வந்தால் சில நாட்களுக்கு முன்பிருந்தே கேரளா மாநிலம் முழுவதும் விழா களைகட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.

    இதற்கு முக்கிய காரணம் சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு தான். இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர்.

    இப்படி மக்கள் இன்னல்களில் தவிப்பதால் கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அரசால் கொண்டாடப்படாது என அறிவித்து விட்டது. இதனால் அரசு கல்லூரிகள், அரசு சம்பந்தமான அலுவலகங்களில் நடைபெறும் அனைத்து ஓணம் விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

    தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும், தாங்களும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என தெரிவித்து விட்டனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடுகிறார்கள். இதனால் வழக்கமான ஆட்டம்பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.

    கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களையிழந்ததால், இந்த விழாவை நம்பி மலர்களை பயிரிட்டிருந்த தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வடிவேலம்பாளையம், மோளபாளையம், மங்கலபாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஓணம் பண்டிகையை எதிர்பார்த்து, அதிகளவில் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டிருந்தனர். பூக்களும் பூத்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்ததால், அங்கு இருந்து எந்தவித ஆர்டர்களும் கோவைக்கு வரவில்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து பூக்களை வாங்க வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். அவை செடியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் பூக்களை பறித்து தோட்டத்தின் ஓரத்தில் கொட்டி செல்கிறார்கள்.

    இந்த பகுதிகளில் உள்ள தோட்டங்களையொட்டி சாலையோரங்கள் மற்றும் வயல்வெளி ஓரங்களில் அதிகளவில் பூக்கள் கொட்டி கிடப்பதையும், அவற்றை கால்நடைகள் உண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ஓணம் பண்டிகை வந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் அந்த 10 முதல் 12 நாட்களும் மலர் விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டு எங்களிடம் இருந்து பூக்களை வாங்கி செல்வார்கள். பூக்களுக்கும் நல்ல விலை இருக்கும். இதனால் விற்பனை சூடுபிடித்து, விலையும் கிடைத்து வருவதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

    ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் களையிழந்ததால், வழக்கமாக பூக்களை ஆர்டர் செய்பவர்களில் சிலர் மட்டுமே ஆர்டர் கொடுக்கிறார்கள்.

    குறிப்பாக வாடாமல்லி பூக்களுக்கு அதிகளவில் வரவேற்பு இருக்கும். தற்போது 150 ஏக்கர் பரப்பளவில் வாடமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான மலர்களை பயிரிட்டு, 6 மாதமாக விவசாயிகள் அதனை பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது விற்பனை இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக 25 டன் பூக்கள் இங்கிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 5 டன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வராததால் வியாபாரிகளாகிய நாங்களும், இதனை நம்பி தொழில் செய்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகள் கூறும்போது, ஓணம் பண்டிகை வந்தால் செண்டுமல்லி, கோழிகொண்டை, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் செண்டு மல்லி ரூ.20 முதல் ரூ.40க்கும், கோழிகொண்டை ரூ.50க்கும், வாடாமல்லி ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது என்றனர்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது
    • நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

    நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.

    அதில், "சேச்சி... சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.

    விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
    • கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி,

    கேரளாவின் அறுவடை திருநாளான ஓணம் பண்டி கை நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி யின் நிறுவனர் கொங்க ரசன், பள்ளியின் தாளா ளர் சாமுண்டீஸ்வரி, நிர்வாக இயக்குனர்கள் கவுதமன், புவியரசன், பள்ளியின் முதல்வர் பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

    மேலும், பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

    இதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மாணவ, மாணவிகள் பல்வேறு வண்ண மலர் களின் இதழ்களை பயன்படுத்தி வண்ணமயமான ரங்கோலி கோலம் வரைந்து பள்ளியை அலங்கரித்தனர்.

    • வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார்.
    • கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார் கள்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் ஓணம் பண்டி கையை சிறப்பாக கொண்டாடி னார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டா டினார்கள். மேலும் வீடுகளை மலர்களால் அலங்கரித்திருந்தனர்.

    கலெக்டர் முகாம் அலுவ லகம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆவார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.  வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார். இதையொட்டி கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார்கள்.

    இதே போல ஓசூர், கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்க கூடிய கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை நேற்று சிறப்பாக கொண்டா டினார்கள். இதே போல் தருமபுரி மாவட்டத்திலும் கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.

    • புதுக்கோட்டை லேணா விளக்கு மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
    • ஆசிரியர்கள் பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்

    புதுக்கோட்டை,

    லேணா விளக்கு மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியில் பணியாற்றும் கேரளா மற்றும் நமது மாநில ஆசிரியர்கள் பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, நாட்டில் அமைதி நிலவவும்,சுபிட்சம் பெருகவும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்தனர். பிறகு ஆசிரியர்கள் பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    இந்நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி ஒருங்கிணைப்பாளர் போனிமேஸ் மேரி, சரண்குமார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனார் .

    • நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்கினார்.
    • ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து பேசினார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்க, மாணவி ஸ்வேதா அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியை ஜோஸ்பின் சினேகா மற்றும் மாணவர் அத்வைத் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி ரக்சனா வரவேற்று பேசினார்.

    ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்தும், மாணவர் அத்வைத் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்தும் மலையாளத்தில் பேசினர். மாணவி காளிபிரியா ஓணம் குறித்த சிறப்பு பாடலுக்கு நடனமாடினார். மழலையர் பிரிவு மாணவர்கள் ஓணம் பண்டிகையினை உணர்த்தும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து அணிவகுத்து நின்றனர்.

    நிகழ்ச்சியில் வாமன அவதாரம் தோன்றிய வரலாறு மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கான காரணத்தை காட்சிப்படுத்தினர். இதில் மாணவன் பாலசேஷன் வாமனன் போலவும், சரவணராஜா மன்னன் மகாபலி சக்கரவர்த்தி போலவும் வேடமணிந்து பாடல் பாடியும், நடித்தும் காட்டினர். மாணவன் அதீப் வாமன அவதார காட்சியை பற்றி விவரித்து கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மஞ்சுளா, ரகுமாள் ஜீனுபியா, ஜோஸ்பின் சினேகா, சாஜாதீசாபிரா, பிலோமினா ஜான்சி ஆகியோர் குழுவாக இணைந்து மலரினை வைத்து அத்தப்பூ கோலமிட்டனர்.

    ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.
    • ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஓணம் பண்டிகை இன்று கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் - ஆளுநர் ரவி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×