என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம்"

    • ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
    • கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    கேரளாவில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகள் உள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 5 லட்சத்து 87 ஆயிரத்து 691 பேர், நல வாழ்வு மையங்களில் வாழும் 20 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த ஆண்டு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பில் தேயிலைத்தூள், சிறுபருப்பு, சேமியா பாயாசம் மிக்ஸ், நெய், முந்திரி பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகு பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, துவரம் பருப்பு, சிறுபயறு மற்றும் உப்பு ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.

    ரேஷன் கடைகள் மூலமாக ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ரூ.32 கோடி முன்பணமாக சப்ளை கோ நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து ஓணம் பரிசு தொகுப்பு விரைவில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடந்த ஆண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நடப்பாண்டில் நிதி நெருக்கடி காரணமாக 6 லட்சத்து 7 ஆயிரத்து 691 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 17 பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது உலர் அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய 4 பொருட்கள் நீக்கப்பட்டு, 13 பொருட்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்த நாளும் அன்றுதான் எனவும் குறிப்புகள் கூறுகின்றன.

    மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

    தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    ஓணம் ஸ்பெஷல் உணவுகள்

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா"என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.

    ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்

    ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுவர்.

    புத்தாடை

    கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். 10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.

    திருவிழா பத்து நாட்கள் நீடிக்கும், முதல் நாள் அத்தம் என்றும் மற்றவை சித்திரை, சோதி, விசாகம், அனிசம், திருக்கேடா, மூலம், பூராடம், உத்ராடம் மற்றும் திருவோணம் என்றும் வரிசையாக முத்திரை குத்தப்பட்டு, திருவோணம் மிக முக்கியமானது. இந்த ஆண்டு ஓணம் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 31 வரை கொண்டாடப்படும்.

    • பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது.
    • பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன. அப்போது ஓணம் பாடல்கள் இசைக்கப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. அறுவடை திருநாள் எனப்படும் இந்த பண்டிகையை கேரள அரசு 10 நாட்கள் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் (கடந்த 20-ந்தேதி) ஓணம் பண்டிகை தொடங்கியது. வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் விருந்து படைத்து மக்கள் மகிழ்வார்கள்.

    பண்டிகை தொடங்கிய நாள் முதல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஓணம் திருவிழாவை பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் வீடுகள், அலுவலகங்களில் அத்தப்பூ கோலமிட்டு பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றன. அப்போது ஓணம் பாடல்கள் இசைக்கப்பட்டன.

    விழாவில் பங்கேற்ற கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்சனா பர்வீன், ஓணம் பாடலை கேட்டு உற்சாகம் அடைந்தார். அத்துடன் நில்லாமல் அவர், சேலையை வரிந்து கட்டிக்கொண்டு மேடையில் அசத்தல் நடனமும் ஆடினார். அவரை கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். பண்டிகை அனைவருக்கும் சமமானது என்பதை உணர்த்தும் வகையில் அவரது ஆட்டம் அமைந்தது.

    இந்தநிலையில் கலெக்டர் நடனம் ஆடிய வீடியோ, தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் கலெக்டர் அப்சனா பர்வீனை பாராட்டி வருகின்றனர்.

    • மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம்
    • அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பீச்ரோடு-செட்டிகுளம் சாலையில் உள்ள ஒரு கல்லூரயில் ஓணம் பண்டிகை கொண்டாடத்தின்போது கல்லூரி மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் அங்கு சென்று சோதனை செய்த போது ஆபத்தாக வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, பதிவு எண் இன்றி வாகனம் ஓட்டியது, போக்குவரத்திற்கு இடையூறு செய்தது ஆகிய விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.
    • ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஓணம் பண்டிகை இன்று கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    ஓணம் திருநாளில், நம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, வளம், நல்ல ஆரோக்கியத்தை வழங்கி நாம் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ அருள்புரியட்டும் - ஆளுநர் ரவி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்கினார்.
    • ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்து பேசினார்.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகர் உஷாரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாலசுந்தர் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியினை மாணவி ஹரிணி மலையாளத்தில் தொகுத்து வழங்க, மாணவி ஸ்வேதா அதை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியை ஜோஸ்பின் சினேகா மற்றும் மாணவர் அத்வைத் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி ரக்சனா வரவேற்று பேசினார்.

    ஆசிரியை ஜோஸ்பின் சினேகா ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் குறித்தும், மாணவர் அத்வைத் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்தும் மலையாளத்தில் பேசினர். மாணவி காளிபிரியா ஓணம் குறித்த சிறப்பு பாடலுக்கு நடனமாடினார். மழலையர் பிரிவு மாணவர்கள் ஓணம் பண்டிகையினை உணர்த்தும் விதமாக பாரம்பரிய ஆடைகளை அணிந்து அணிவகுத்து நின்றனர்.

    நிகழ்ச்சியில் வாமன அவதாரம் தோன்றிய வரலாறு மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கான காரணத்தை காட்சிப்படுத்தினர். இதில் மாணவன் பாலசேஷன் வாமனன் போலவும், சரவணராஜா மன்னன் மகாபலி சக்கரவர்த்தி போலவும் வேடமணிந்து பாடல் பாடியும், நடித்தும் காட்டினர். மாணவன் அதீப் வாமன அவதார காட்சியை பற்றி விவரித்து கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மஞ்சுளா, ரகுமாள் ஜீனுபியா, ஜோஸ்பின் சினேகா, சாஜாதீசாபிரா, பிலோமினா ஜான்சி ஆகியோர் குழுவாக இணைந்து மலரினை வைத்து அத்தப்பூ கோலமிட்டனர்.

    ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுக்கோட்டை லேணா விளக்கு மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
    • ஆசிரியர்கள் பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்

    புதுக்கோட்டை,

    லேணா விளக்கு மௌண்ட் சீயோன் சர்வதேசப்பள்ளியில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியில் பணியாற்றும் கேரளா மற்றும் நமது மாநில ஆசிரியர்கள் பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, நாட்டில் அமைதி நிலவவும்,சுபிட்சம் பெருகவும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்தனை செய்தனர். பிறகு ஆசிரியர்கள் பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    இந்நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி ஒருங்கிணைப்பாளர் போனிமேஸ் மேரி, சரண்குமார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனார் .

    • வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார்.
    • கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார் கள்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் ஓணம் பண்டி கையை சிறப்பாக கொண்டாடி னார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டா டினார்கள். மேலும் வீடுகளை மலர்களால் அலங்கரித்திருந்தனர்.

    கலெக்டர் முகாம் அலுவ லகம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஆவார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.  வீட்டின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார். இதையொட்டி கலெக்டருக்கு அரசு அலுவலர்கள், ஓணம் வாழ்த்துக்களை கூறினார்கள்.

    இதே போல ஓசூர், கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்க கூடிய கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை நேற்று சிறப்பாக கொண்டா டினார்கள். இதே போல் தருமபுரி மாவட்டத்திலும் கேரளா மாநில மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள்.

    • பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
    • கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி,

    கேரளாவின் அறுவடை திருநாளான ஓணம் பண்டி கை நாளந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி யின் நிறுவனர் கொங்க ரசன், பள்ளியின் தாளா ளர் சாமுண்டீஸ்வரி, நிர்வாக இயக்குனர்கள் கவுதமன், புவியரசன், பள்ளியின் முதல்வர் பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

    மேலும், பள்ளியின் ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்று இவ்விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் ஓணம் கொண்டாடினர்.

    இதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மாணவ, மாணவிகள் பல்வேறு வண்ண மலர் களின் இதழ்களை பயன்படுத்தி வண்ணமயமான ரங்கோலி கோலம் வரைந்து பள்ளியை அலங்கரித்தனர்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது
    • நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார்

    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.

    நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.

    அதில், "சேச்சி... சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.

    விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.

    பேரூர்:

    கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் அனைத்து மக்களாலும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஓணம் பண்டிகையில் மிக முக்கியமாக இடம் பெறுவது பூக்கள் தான். 10 நாட்களும் மகாபலி மன்னனை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிடுவது வழக்கம்.

    இதனையொட்டி விழா தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே கேரளாவில் மலர்கள் விற்பனை சூடுபிடித்து விடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    குறிப்பாக கேரளாவின் அருகே உள்ள தமிழக மாவட்டமான கோவையில் இருந்து தான் அதிகளவில் பூக்கள் விற்பனைக்கு செல்கின்றன. ஓணம் பண்டிகைக்காகவே, பிரத்யேகமாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, அறுவை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவையில் பூக்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, ஓணம் விழாவுக்கு அவர்கள் வாங்கி செல்வார்கள். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளுக்கும், அந்த 10 நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகை வந்தால் சில நாட்களுக்கு முன்பிருந்தே கேரளா மாநிலம் முழுவதும் விழா களைகட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.

    இதற்கு முக்கிய காரணம் சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு தான். இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர்.

    இப்படி மக்கள் இன்னல்களில் தவிப்பதால் கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அரசால் கொண்டாடப்படாது என அறிவித்து விட்டது. இதனால் அரசு கல்லூரிகள், அரசு சம்பந்தமான அலுவலகங்களில் நடைபெறும் அனைத்து ஓணம் விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

    தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும், தாங்களும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என தெரிவித்து விட்டனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடுகிறார்கள். இதனால் வழக்கமான ஆட்டம்பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.

    கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களையிழந்ததால், இந்த விழாவை நம்பி மலர்களை பயிரிட்டிருந்த தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வடிவேலம்பாளையம், மோளபாளையம், மங்கலபாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஓணம் பண்டிகையை எதிர்பார்த்து, அதிகளவில் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டிருந்தனர். பூக்களும் பூத்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்ததால், அங்கு இருந்து எந்தவித ஆர்டர்களும் கோவைக்கு வரவில்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து பூக்களை வாங்க வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். அவை செடியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் பூக்களை பறித்து தோட்டத்தின் ஓரத்தில் கொட்டி செல்கிறார்கள்.

    இந்த பகுதிகளில் உள்ள தோட்டங்களையொட்டி சாலையோரங்கள் மற்றும் வயல்வெளி ஓரங்களில் அதிகளவில் பூக்கள் கொட்டி கிடப்பதையும், அவற்றை கால்நடைகள் உண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ஓணம் பண்டிகை வந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் அந்த 10 முதல் 12 நாட்களும் மலர் விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டு எங்களிடம் இருந்து பூக்களை வாங்கி செல்வார்கள். பூக்களுக்கும் நல்ல விலை இருக்கும். இதனால் விற்பனை சூடுபிடித்து, விலையும் கிடைத்து வருவதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

    ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் களையிழந்ததால், வழக்கமாக பூக்களை ஆர்டர் செய்பவர்களில் சிலர் மட்டுமே ஆர்டர் கொடுக்கிறார்கள்.

    குறிப்பாக வாடாமல்லி பூக்களுக்கு அதிகளவில் வரவேற்பு இருக்கும். தற்போது 150 ஏக்கர் பரப்பளவில் வாடமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான மலர்களை பயிரிட்டு, 6 மாதமாக விவசாயிகள் அதனை பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது விற்பனை இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக 25 டன் பூக்கள் இங்கிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 5 டன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வராததால் வியாபாரிகளாகிய நாங்களும், இதனை நம்பி தொழில் செய்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகள் கூறும்போது, ஓணம் பண்டிகை வந்தால் செண்டுமல்லி, கோழிகொண்டை, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் செண்டு மல்லி ரூ.20 முதல் ரூ.40க்கும், கோழிகொண்டை ரூ.50க்கும், வாடாமல்லி ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது என்றனர்.

    • இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் பண்டிகை ஒன்று கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி சட்டையுடன் ஓணம் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    ×