என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம்"
- தனது தோழியை கிண்டல் செய்ய போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
- மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
இந்த போலியான கணக்கு மூலம் தனது தோழியிடம் பேசி விளையாடியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசிய மனிஷ் மீது அப்பெண் காதல் வயப்பட்டுள்ளார்.
காதல் ஏற்பட்ட பிறகு அப்பெண் அந்த நபரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவளது தோழி 'சிவம் பாட்டீல்' என்ற மற்றொரு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
அந்த போலியான கணக்கில் நான் தான் மனிஷின் அப்பா என்று கூறி, அவள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக அவளது தோழியிடம் தெரிவித்துள்ளார்.
கற்பனையான அவளது காதலன் இறந்த துக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் ஜூன் 12 ஆம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த பெண்ணின் மொபைல்போனில் இந்த இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை பார்த்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான அவளது தோழியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.
- ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.
எனது பெற்றோரின் காதல் கதை என்று ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
சமீர் ரிஷூ மொஹந்தி என்ற பெயர் கொண்ட அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது பெற்றோரை பற்றிய மனதை தொடும் காதல் கதையை பகிர்ந்துள்ளார்.
அவரது தந்தை இந்தியாவை சேர்ந்தவர். தாய் ஜப்பானை சேர்ந்தவர். இவர்களுக்கு பிறந்த மொஹந்தி பதிவிட்டுள்ள வீடியோவில், எனது தாயார் ஒரு எழுத்தாளர் ஆவார். அவர் கல்லூரியில் படிக்கும் போது உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது ஒடிசா மாநிலம் பூரி பகுதிக்கு வந்த அவருக்கு அந்த பகுதி மிகவும் பிடித்துப் போனது. இதனால் படிப்பை முடித்த பிறகு பூரியில் குடியேற விரும்பிய அவர் தொடர்ந்து புத்தகங்கள் எழுதினார். ஆனாலும் போதிய வருமான ஆதாரம் இல்லை. எனவே பூரி பகுதியில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக ஓட்டல் கட்ட விரும்பினார்.
ஆனால் எனது தாய் வெளிநாட்டவர் என்பதால் அங்கு நிலம் வாங்க முடியவில்லை. அப்போது தான் எனது தந்தையை சந்தித்துள்ளார். அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அங்கு ஓட்டலை கட்டினர். அந்த ஓட்டலுக்கு காதல்-வாழ்க்கை என்று பெயரிட்டனர்.
இந்த ஓட்டல் எனது தாய்-தந்தையின் காதல் கதைக்கு ஒரு சான்று. சில காதல் கதைகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பது உண்மை தான் என்று முடித்தார். அவரது இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.
- தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல நண்பர்களுடன் சேர்ந்து கரண் ரீல்ஸ் எடுத்துள்ளான்.
- உண்மையறிந்து கரணின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஒட்டியுள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் மோனேரா மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ரீக்ரியேட் செய்ய முயன்றபோது கழுத்தில் கயிறு இறுக்கி 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொள்வது போல் இன்ஸ்டாகிராமில் வந்த ரீல்ஸை கரண் என்ற மாணவன் பார்த்துள்ள்ளான். இம்மாதிரி தானும் ரீல்ஸ் செய்து வெளியிட்டால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் என்று கரண் எண்ணியுள்ளான்.
ஆகவே தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல நண்பர்களுடன் சேர்ந்து கரண் ரீல்ஸ் எடுத்துள்ளான். அப்போது கழுத்தை கயிறு இறுக்கி கரண் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது அவன் நடிப்பதாக நினைத்துள்ளனர்.
பின்னர் உண்மையறிந்து கரணின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஒட்டியுள்ளனர். பின் உண்மையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ரீல்ஸ் எடுத்த மொபைல்போனை கைப்பற்றிய போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்போது தவுபா தவுபா பாடல் டிரெண்டிங்கில் உள்ளது.
- நடிகர் விக்கி கவுசல் அசத்தலாக நடனம் ஆடியிருப்பார்.
சமூக ஊடகங்களில் தற்போது தவுபா தவுபா பாடல் டிரெண்டிங்கில் உள்ளது. பேட் நியூஸ் படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு நடிகர் விக்கி கவுசல் அசத்தலாக நடனம் ஆடியிருப்பார்.
இந்த பாடலுக்கு இளசுகள் நடனமாடி வலைத்தளத்தில் பதிவேற்றி லைக்குகளை அள்ளிக் குவித்துவரும் நிலையில், கர்நாடகத்தின் ஆதரவற்ற முதியோர் இல்ல மூதாட்டிகளும் நடனமாடி யாவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர்.
மூதாட்டிகள் 6 பேர் குழுவாக ஒரே நிறத்தில் சேலை கட்டி, தவுபா பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார்கள். துள்ளல் நடனம் நிறைந்த அந்த பாடலுக்கு, மூதாட்டிகள் எளிமையாக நடனமாடி இருப்பது, நடிகரான விக்கி கவுசலையும் கவர்ந்துள்ளது.
அவரும் அந்த நடன வீடியோவின் கீழ் கருத்து பதிவிட்டு பாராட்டி உள்ளார். தனது வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்தார்.
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டு உள்ளது. 3.5 லட்சம் பேர் விருப்பப் பொத்தானை அழுத்தி ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
- பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் கலைஞர் ரிதேஷ் அகாரியா
- அவரது நெஞ்சில் “F**k the police” என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் ரிதேஷ் அகாரியா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவரின் நெஞ்சில் "F**k the police" என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.
இந்த புகைப்படம் வைரலாக நிலையில் போலீசின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிதேஷ், தனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் "F**k the police" என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக டாட்டூ கலைஞர் ரிதேஷ் அகாரியா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 இந்த கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
- இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
மகாராஷ்டிராவில் உள்ள கும்பே அருவி இந்தியாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற கருவியாகும். வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் அந்த அருவிக்கு செல்வது போல பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
அப்போது இந்த அருவி இந்தியாவில் எங்குள்ளது என்று தமிழர்கள் பலரும் இணையத்தில் தேடி பயணம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில், இந்த கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27) ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் 6 மணி நேரம் போராடி அன்வி காம்தரை பலத்த காயங்களுடன் பள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர். எனினும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவரை இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
- வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனின் ஆளும் ஜனநாயக காட்சியை எதிர்த்து குடியரசுக் காட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 2017 தேர்தலில் வெற்றிபெற்று அதிபரான டிரம்ப் ]2021 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை டிரம்ப் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததால் 2021 இல் வெள்ளை மாளிகை கலவரம் நடந்த அடுத்த நாளே டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மெட்டா நிறுவனத்தால் முடக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து கடந்த 2023 பிப்ரவரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவரது கணக்குகள் மீதான தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது கருத்து சுதந்திரத்தை மதித்து கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. முன்னதாக டொனால்டு டிரம்பின் எக்ஸ் [டிவிட்டர்] மற்றும் யூடியூப் கணக்குகள் மீதும் தடை விதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து அதை மறைக்க பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்
- மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லார்' படத்தின் கதாநாயகனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் மேத்யூ மெக்கானஹே. இவர் நடிப்பில் வெளியான 'உல்ப் ஆப் வால் ஸ்டிரீட்' 'டாலஸ் பையர்ஸ் கிளப்', 'தி ஜென்டில்மேன்' ஆகியவை பேசப்பட்ட படங்கள் ஆகும். இன்டர்டெல்லாருக்கு அடுத்த படியாக இவர் நடித்த 'ட்ரூ டிடக்டிவ்ஸ்' வெப் சீரிஸுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் மேத்யூ தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது முகம் வீங்கிய நிலையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் அவரது வலது புற கண்கள் வீங்கிய நிலையில் உள்ளன. தேனீக்கள் கொட்டியதால் அவருக்கு இந்த வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது படப்பிடிப்பின்போது ஏற்பட்டுள்ளதா என்று படத்தைப் பார்த்து கலவலையடைந்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாகவே மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர். கடந்த 2008 ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முகத்தில் அவரே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'டாலஸ் பையர்ஸ் கிளப்' படத்தில் ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை மேத்யூ வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 21.07 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
- BTS உறுப்பினர் V-ன் பதிவு 21.01 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலகக்கோப்பையை வென்ற புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் 21.07 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஆசியாவில் அதிக லைக்குகள் வாங்கிய இன்ஸ்டாகிராம் பதிவு என்ற BTS உறுப்பினர் V-ன் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
V பதிவிட்டிருந்த தனது செல்லப்பிராணியின் புகைப்படங்கள் 21.01 மில்லியன் லைக்குகள் பெற்றிருந்த நிலையில், விராட் கோலி பதிவிட்ட டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்ட புகைப்படங்கள் 21.07 மில்லியன் லைக்குகள் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு நடிகை கியாரா, சித்தார்த்தின் திருமண புகைப்படம் தான் இந்தியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் வாங்கி சாதனை புடைத்திருந்தது. அந்த சாதனையை அண்மையில், விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை புகைப்படம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
- ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது.
- மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது.
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில வருட சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்துள்ளார். இதனையடுத்து நடிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
சமந்தா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'நெபுலைசர்' கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் "ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
இதனையடுத்து, பலரும் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பேட்மிட்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், 'மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தாவின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சமந்தா கூறுவது போல் யாரும் செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி அவர்களுடைய அறிவுரையின்படி தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இறுதியாக இத்தகைய விமர்சனங்களுக்கு சமந்தா பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய சொந்த அனுபவத்தை தான் நான் பகிர்ந்தேன். இருப்பினும் பொதுவெளியில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
- எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.டோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
இன்று தங்களது 15 ஆம் ஆண்டு திருமண நாளை எம்.எஸ்.டோனி - சாக்ஷி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- சமீபத்தில் வெளியான 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.
- வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் காலண்டர் பாடலின் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இதனை படத்தின் நிறுவருமான லைகா வெளியிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்