என் மலர்
நீங்கள் தேடியது "விக்கிரமராஜா"
- தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
- மின் கட்டணம், கட்டிட வரி உள்ளிட்டவற்றை தமிழக அரசு குறைக்கவேண்டும் என்றார் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் வெள்ளகுளம்சாலையில் ஸ்ரீ செந்தூர் முருகன் டைல்ஸ் & டோர்ஸ் ஷோரூம் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது:
இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வணிகர்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். அதிகாரிகள் குழுவினர் கடைகளில் பொருட்களை வாங்கி ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சோதனை முறையை கைவிட வேண்டும்.
அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்தவில்லை என்பதால் அவர்களிடம் வாடகை செலுத்தி வரும் கடைக்கும் சேர்த்தே சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்த்து கடை உரிமையாளரிடம் நேரடியாக வாடகையை வசூலித்துக் கொண்டு சீல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் வணிகர்கள் உறுதியாக உள்ளனர்.
திடீரென கடை சீல் வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது என்பதில் வணிகர் சங்க பேரமைப்பினர் உறுதியாக உள்ளனர். அதனையும் மீறி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிப்பதில்லை.
மின் கட்டணமும், கட்டிட வரியும் அதிகளவில் உயர்ந்துள்ளதால் மின் கட்டணத்தையும், கட்டிட வரியையும் தமிழக அரசு குறைக்க வேண்டும்.
சிறுகுறு தொழில் பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் பொருட்களை பேக்கிங் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஒரே சட்டம் அமல்படுத்தி வணிகர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலும் பல நடிகர்கள் நடித்ததாகவும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் என விளம்பரங்களில் நடிப்பவர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதில் விஜய ராஜேந்திரன் நாடார், கனகராஜ் சோமசுந்தரம், குணசேகர் முத்துக்குமார், சென்னை மாவட்ட தலைவர் எட்வர்ட் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், நடராஜன், நந்தன், முத்துப்பாண்டியன், முருகன், பால் பாண்டி, வேலு ஆசாரி, ஏகாம்பரநாதன், பாலகிருஷ்ணன், கர்ணா, யுவராஜ், அப்துல்காதர், வெல்டன் வாசகர் சந்தனகுமார், சுரேஷ்குமார், ஜிவிஎம் குமார், மீஞ்சூர் ரியாஸ், முகமது அலி, செல்லத்துரை, துரையரசன், பகிர்முகமது, மாதர்பாக்கம் பாலமுருகன், அஜிஸ் அகமது உள்பட பேரமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முன்னதாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகையை வரன்முறைப்படுத்தும் சீரமைப்பு குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பிற்கு பிரதிநித்துவம் அளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விக்கிரமராஜா நன்றி தெரிவித்து கொண்டார்.
- காஞ்சிபுரம் மண்டல-மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை பெரியமேட்டில் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது
- கூட்டத்தில் வணிக வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘டெஸ்ட் பர்ச்சேஸ்' நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை, காஞ்சிபுரம் மண்டல-மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை பெரியமேட்டில் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவிர்த்திட கோரியும், இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் 4 கட்ட போராட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி முதல் கட்டமாக வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகள் முன்பு விழிப்புணர்வு பதாகைகள் வைப்பது என்றும், விழிப்புணர்வு 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 2-ம் கட்டமாக 24-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 3-ம் கட்டமாக உண்ணாவிரதமும், 4-ம் கட்டமாக கடையடைப்பு போராட்டமும் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது. உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கான தேதிகள் 24-ந்தேதி அறிவிக்கப்படும் என தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
- புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று விக்கிரமராஜா கூறினார்.
- விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சங்க தலைவர் பீட்டர் தலைமை தாங்கி சங்க வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா,தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை பழைய பாலம் அருகே புதிய பாலம் கட்ட மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
மாநிலத் துணைத் தலைவர் வெற்றிராஜன், தூத்துக்குடி மத்திய மாவட்ட கூடுதல் செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி செயலாளர் ராஜம், தூத்துக்குடி 3-ம் மைல் வியாபாரி சங்க தலைவர் ஜெயபாலன், ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்புராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதுக்கோட்டை வியாபாரிகள் சங்க பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதுக்கோட்டை கிளை மேலாளர் கணேச பாண்டியன்,குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, துணைத் தலைவர் முப்பிலி யன், தூத்துக்குடி மாவட்ட மருந்து வியாபாரி சங்கத் தலைவர் முனியசாமி, வியாபாரிகள் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளான தர்மராஜ், தாமோதரன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் ஏழை எளியவருக்கு தையல் எந்திரம், மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை, பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம்,பரத்,ராஜன் ஆகியோர் வழங்கிய கண்காணிப்பு காமி ராக்களை 3 முக்கிய சந்திப்புகளில் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி பொருத்தி திறந்து வைத்தார்.
நெல்லை- தூத்துக்குடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பால பணி நிறைவு பெறும்போது கனரக வாகனங்கள் புதுக்கோட்டை ஊருக்குள் வர முடியாத நிலை ஏற்படும். எனவே பழைய பாலம் அருகே புதிய பாலம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்க துணை தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.
- முப்பெரும் விழா திருவள்ளுவர் நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடந்தது.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருவள்ளுவர் நகர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 30-வது ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா திருவள்ளுவர் நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் நடந்தது. செயல் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார. செயலாளர் பெப்சி நாராயணன் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். என்.டி.மோகன், தேசிகன், சின்னவன், ராதா கிருஷ்ணன், மகேந்திரன், சுதர்சன், மீனாட்சி சுந்தரம், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது.
- தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 40-வது வணிகர் தின மாநில மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக வருகிற மே 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதுதொடர்பாக சென்னை மண்டல ஆலோசனை கூட்டம், மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில், சென்னை மண்டலத் தலைவர் கே.ஜோதி லிங்கம் முன்னிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஓட்டல் ஜெய்டூணில் நடைபெற உள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 7 மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், மாநிலத் துணைத் தலைவர், மாநில இணைச் செயலாளர், பழைய பொருள் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
- மணலி சேக்காடு வணிகர் சங்கம் சார்பில் 40 - வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க கொடி ஏற்று விழா நடைபெற்றது.
- மே 5-ந்தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் மணலியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவொற்றியூர்:
மணலியில், மணலி சேக்காடு வணிகர் சங்கம் சார்பில் 40 - வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்க கொடி ஏற்று விழா நடைபெற்றது. மாநில தலைவர் ஏ. எம். விக்கிரம ராஜா கலந்து கொண்டு கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் கொரட்டூர் த. ராமச்சந்திரன் கல்வெட்டினை திறந்து வைத்தார். மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி. மணி, தென் சென்னை மாவட்ட தலைவர் ஒய் . எட்வர்ட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மணலி சங்க பொதுச் செயலாளர் என். மாரிமுத்து வரவேற்று பேசினார். விழாவுக்கு மணலி பேரமைப்பு தலைவர் எம்.பால்ராஜ் தலைமை தாங்கினார். நிதிக்குழு தலைவர் சந்தனா சேகர், சமுத்திர பாண்டி, எஸ். எஸ். காட்வின் ராஜ், இளைஞரணி செயலாளர் சோலை கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை வடக்கு மாவட்ட செயல் தலைவர் வி.பி. வில்லியம்ஸ், செயலாளர் சங்கர் ஆகியோர் இனிப்பு வழங்கினர்.
கூட்டத்தில் மகளிர் அணி மாவட்ட தலைவி சுமித்ரா, செயலாளர் நிர்மலா, மணலி செயலாளர் கருணாமூர்த்தி, துணை செயலாளர் சரவணன், துணை தலைவர் முத்தையா கோதண்டம், செயலாளர் ராஜேஷ், இளைஞர் அணி நிர்வாகிகள் கோகுல், ஆரோக்கிய செல்வம், அன்பு, சரவணன், தேவேந்திரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர் நன்றி கூறினார். முன்னதாக மாநில தலைவர் விக்கிரம ராஜாவுக்கு வடசென்னை வடக்கு மாவட்ட கிளைச் சங்கங்கள் மற்றும் இளைஞர் அணி சார்பில் மேளதாளத்தோடு வரவேற்பளிக்கப்பட்டது. மே 5-ந்தேதி நடைபெறும் மாநில மாநாட்டில் மணலியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது.
- மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ந்தேதி, 40வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக ஈரோடு, டெக்ஸ்வேலி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக லட்சக்கணக்கான வணிகர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.
மாநாட்டு கால்கோள் விழா என்பது மகிழ்ச்சிக்குரியது. அதுவும் 40-வது வணிகர் தின வணிகர் உரிமை முழக்க மாநாடு என்பது அதன் பின்னனியில் மறைந்துள்ள 40 ஆண்டுகால பேரமைப்பின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வியத்தகு மாநாடு ஆகும்.
40 ஆண்டுகால வேதனையை துடைத்தெறிந்து வணிகர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி முழக்கமிடும் மாநாடாக ஈரோடு மாநாடு நடைபெற இருப்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் தமிழகத்தின் அனைத்து வணிகர்களும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் எனும் பேருண்மையை எடுத்துக்காட்டும் மாநாடாக வணிகர் உரிமை முழக்க மாநாடு நடக்கும்.
வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது.
மாநாட்டு பந்தல் கால்கோள்விழா நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் மாநாட்டுத்திடலில் நடைபெற உள்ளது. விழாவிற்கு பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்று பேச மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா நன்றி கூறுகிறார்.
மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.
கால்கோள் விழாவைத் தொடர்ந்து, மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கி ணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனையும் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும்.
- எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரமராஜா இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதாவால் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி அடையும். தமிழகம் ஏற்கனவே அதிகளவு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணி செய்தால் அவர்களுக்கான ஊதியமும் அதிகரிக்கும். வேலை வாய்ப்பும் பெருகும். கொரோனா கால கட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இதனை எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. தோழமை கட்சிகளும் சாதக, பாதகங்களை உணர்ந்து அரசுக்கு எடுத்துக்கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். எந்த நிறுவனமும் தொழிலாளிகள் இல்லாமல் முதலாளிகள் இல்லை. அதேபோல முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகளும் இல்லை.
தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் 12 மணிநேர வேலை மசோதவை தொழிற்சங்கங்களும், தோழமை கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் மே 5-ந்தேதி ஈரோட்டில் வணிகர் உரிமை முழக்க மாநாடு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் திண்டுக்கல் மண்டலம் சார்ந்த திண்டுக்கல், பழனி, தேனி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரம் வணிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிநிறைவு சான்றிதழ்கள் பெற்றால்தான் வணிக கட்டிடங்களுக்கு புதிய மின்இணைப்பு வழங்கப்படும் என்ற மின்சார வாரியத்தின் கொள்கை முடிவை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மண்டல தலைவர் கிருபாகரன், மாவட்ட செயல்தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் மங்களம் அழகு, பொருளாளர் நசீர்சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந்தேதி ஈரோட்டில் 40-வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படுகிறது.
- தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 லட்சம் வணிகர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந்தேதி ஈரோட்டில் 40-வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படுகிறது.
மாநாட்டுக்கு பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் வி.கோவிந்த ராஜுலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாடு தீர்மானங்களை பிரகடனப்படுத்துகிறார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 3 லட்சம் வணிகர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் சு.முத்துசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன், செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகிய 5 அமைச்சர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.
மாநாட்டில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. வ.உ.சி. விருதை அமைச்சர் முத்துசாமி வழங்குகிறார். வணிக செம்மல் விருதினை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழங்குகிறார். கல்வி ஊக்கத் தொகையை அமைச்சர் பி.மூர்த்தியும், நலிந்த வணிகர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலத் திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர்.
வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டில் முதன் முறையாக இப்போது குறு-சிறு உற்பத்தியாளர்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக மாநாட்டு பந்தல் வளாகத்தில் 'எக்ஸ்போ' கண்காட்சி நடத்தப்படுகிறது. இதை 4-ந்தேதி அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் திறந்து வைக்கிறார்.
மாநாட்டை அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் ஓட்டல்கள், சங்க தலைவர் வெங்கடசுப்பு, மருந்து வணிகர் சங்க பொருளாளர் செல்வம், பாண்டிச்சேரி வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவவர் சிவசங்கர், ஜெயந்திலால் ஜெலானி உள்பட பல்வேறு அமைப்பு சார்பில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
மாநாட்டில் கூடுதல் செயலாளர் வி.பி.மணி, சங்கத்தின் தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மண்டல தலைவவர் கே.ஜோதிலிங்கம் உள்ளிட்ட அனைத்து மண்டல, மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டையொட்டி ஈரோட்டில் மிகப் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் பேர் மாநாட்டுக்கு வருவதால் அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
- மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.
சென்னை:
மே 5 வணிகர் தினத்தையொட்டி வணிகர் சங்கங்கள் நாளை மாநாடுகள் நடத்துகின்றன. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மாநாடு நடைபெறுகிறது. பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நடத்தும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, வெள்ளக் கோவில் சாமிநாதன், பி.மூர்த்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி விருதுகள் வழங்குகிறார்கள்.
பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்புரை நிகழ்த்த மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா மாநாட்டு தீர்மானங்களை பிரகடனபடுத்தி முன் மொழிந்து பேசுகிறார். வணிகர் உரிமை முழக்க மாநாடாக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வணிகர்களின் உரிமையை வென்றெடுக்க பேரமைப்பின் கள நிகழ்வினை முன்னிறுத்தும் மாநாடாக இது நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு தொழில் முனைவோர்களும் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய வணிகர் சம்மேளன தேசிய தலைவர் பார்டியா, தேசிய பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் பாராட்டுரை வழங்குகிறார்கள்.
மாநாட்டு திடலில் 20 ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதுடன் பஸ், கார், வேன், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி என 3 லட்சம் பேருக்கு மாநாட்டில் உணவு வழங்கப்படுகிறது.
மாநாட்டையொட்டி நாளை (5-ந்தேதி) தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த சில்லரை வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளனர். இதையொட்டி இன்று (4-ந்தேதி) மாநாட்டு திடலில் சிறு-குறு நிறுவனங்கள் தங்களது நிறுவன பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் (கண் காட்சி) அமைத்துள்ளன. இதை இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைக்கிறார்.
ஈரோடு மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமையில் கோவை மண்டலத் தலைவர் சூலூர் சந்திரசேகரன் வணிக கொடியை ஏற்றி வைக்கிறார். சங்க தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கே.ஜோதிலிங்கம், ஆம்பூர் கிருஷ்ணன் அமல்ராஜ் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் உள்பட பலர் மாநாட்டு பணிகளை செய்து வருகின்றனர்.
- ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார்.
- வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது.
ஈரோடு:
வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.
மாநாட்டில் வணிகர்களுக்கான 'வி.வி.டி.', 'மைசாட்டோ' ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார். 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:-
வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம்.
இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களை போன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
- அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
- பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது.
பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
எனவே செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது.
இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.