என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலைவர்"
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை தாங்கினார்.
இதில் கலெக்டர் மேகநாத ரெட்டி, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், சிவகாசி ஜி.அசோகன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகரசபை மற்றும் யூனியன் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த நிதி ஆண்டுகளில் நிலுவையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 4,800 மாணவர்களுக்கு ரூ.106 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ரூ.120 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தொகுதி எம்.எல்.ஏ. தலைமையில் கல்வித்திருவிழா நடத்தி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கவும், கல்விக்கடன் தொடர்பாக மாணவர்களுக்கான விளக்கங்களை வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 46 ஆயிரம் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலி ருந்தே வேலை யின்மையின் தீவிரம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தெரியவருகிறது. நடப்பு கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்