என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிதியுதவி"
- ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
- குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
பெரம்பலூர்:
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண், பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்திடவும், தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காகவும் அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த ரூ.75 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கும், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம்.
திருப்பூர் :
பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-25-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இந்த திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் சிறு உணவு பதப்படுத்துதல் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) 98656 78453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- 6 மாணவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரத்து 600 வீதம் ரூ. 21 ஆயிரத்து 600 ஐ உதவி தொகையாக வழங்கினார்.
- ஆசிரியர் ஆதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வி படித்து வரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்ஆசிரியர்கள் இளஞ்செழியன், தியாகராஜன், நாகராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ராஜாஜிகாட்டை சேர்ந்த கோவிந்தராஜ் உயர்கல்வி பயின்று வரும் 6 மாணவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரத்து 600 வீதம் ரூ. 21 ஆயிரத்து 600 ஐ உதவித் தொகையாக வழங்கினார். மாணவர்களின் சார்பில் சீகரன் ஏற்புரை வழங்கினார். ஆசிரியர் ஆதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார், அரங்க சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- இடைகாலில் சாம்பியன் செஸ் பயிற்சி மையம் 15 வருடங்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சதுரங்க பயிற்சி அளித்து வருகிறது.
- மாணவர்களுக்கு 20 சதுரங்க பலகைகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு கலெக்டர் ஆகாஷ் தன்விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் இடைகாலில் சாம்பியன் செஸ் பயிற்சி மையம் 15 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சதுரங்க பயிற்சி அளித்து வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று மாணவர்களுக்கு 20 சதுரங்க பலகைகள் மற்றும் 2சதுரங்க கடிகாரங்கள் வாங்குவதற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தன்விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 15 ஆயிரத்திற்கான காசோலையினை பயிற்சியாளர் இசக்கியிடம் வழங்கினார்.
- அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி பராமரிப்புக்கான நிதியுதவியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியுள்ளது
- இந்நிறுவனம் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து நிதியுதவியளித்து வருகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தழுதாழைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகத்தின் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டது.
விழாவுக்கு ஊராட்சித் தலைவர் திலகவதி மகேந்திரன் தலைமை வகித்தார். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் காரைக்கால் பிரிவு முதன்மைப் பொது மேலாளர் தி.சாய்பிரசாத் கலந்து கொண்டு ஓஎன்ஜிசி சார்பில் ரூ.10.05 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது-
நிறுவனத்தின் சார்பில் ரூ.10.5 லட்சம் செலவில் பள்ளி கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு, மாணவர்கள் அமர்வதற்கு இருக்கை,மேஜைகளும், இதே போல் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து நிதியுதவியளித்து வருகிறது.
பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, நிறுவனம் நாட்டின் எரிசக்தி தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வருகிறது. ஆண்டு வருவாயில் குறிப்பிட்ட தொகையை கல்வி, நலவாழ்வு, சுகாதாரம், மருத்துவம், பேரிடர் மேலாண்மை, கிராம மேம்பாடு, விளிம்புநிலை மக்களுக்கான வாழ்வாதாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகளில் அரசு துறைகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றிவருகிறது.
ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடி ரூபாய் அளவுக்கு இந்நிறுவனம் தனது சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பயனுள்ளவகையில் செலவிட்டு வருகிறது என்றார்.
ஜெயம்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை இயக்நனர் ஜான். கே. திருநாவுக்கர, மத்திய அரசின் "சுஜித்தா பக்வாடா" எனும்
தூய்மையே சேவை திட்டம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு உறுப்பினர்சுமதி இளங்கோவன் , பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ம.தனசெல்வி, வார்டு உறுப்பினர்கள் எம். சக்திவேல், பி.சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் க.திருமுருகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சி.அன்பழகன் நன்றி தெரிவித்தார்.
- மேலும் தீ பரவி அருகில் இருந்து வீடுகளுக்கு பரவி 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது.
- ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தில் காலனி தெருவில் மின் கசிவால் ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் தீ பரவி அருகில் இருந்து வீடுகளுக்கு பரவி 3 வீடுகள் எரிந்து நாசம் ஆனது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
இது குறித்து அறிந்த ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் சம்பவ இடத்திற்கு உடனே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரண உதவியும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஸ்ரீதரன், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.
- வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.
கடலூர் எம்.புதூரில் உள்ள சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.
இந்நிலையில், கடலூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
- கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதியுதவி கோரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் சொந்தக்கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கீழ்கண்ட தகுதிகள் உடைய, கிறித்துவ தேவாலயங்களிடமிருந்து புனரமைப்பிற்கான நிதி உதவி கோரி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படிகிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும்.
தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.
விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணை யதள முகவரியில்www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கை -IIமற்றும் III ஐ பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னனு பரிவர்தனை மூலம் செலுத்தப்படும்.மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்