search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகாத்தம்மன்"

    நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டுபெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
    திருவொற்றியூர் கார்கில் நகரில் 60 அடி உயர பிரித்தியங்கிரா தேவி சிலை அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில் ஆடி திருவிழா நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் விழாவின் முதல் நாளான நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இருந்து பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட 1,008 பக்தர்கள் தலையில் பால் குடம் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பால்குட ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தொடங்கி வைத்தார்.

    அப்போது பக்தர் ஒருவர் உடலில் அலகு குத்தி பறவை காவடியில் தொங்கியபடியும், பறவை காவடி அமைந்துள்ள வேனை 2 பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி இழுத்தபடியும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் சில பக்தர்கள் முனிவர், அம்மன் உள்ளிட்ட மாறுவேடங்கள் அணிந்தும், உடலில் ஊசியால் எலுமிச்சை பழங்கள் மற்றும் தென்னங்குலையை அலகு குத்தி இழுத்தபடியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்தி கடன் செலுத்தினார்கள். விழாவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. 
    ×