search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரங்கல்"

    • நேரடியாக சென்று உரிய முறையில் முறையிட்டு அவர்களுக்கு நீதி பெற்று கொடுத்தவர்.
    • ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்

    தருமபுரி,

    அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயலாளர் தர்மபுரி மணிவண்ணன் மறைவுக்கு மாநில தலைவர் சேலம் ஜங்சன் அண்ணாதுரை இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்பேத்கார் மக்கள் இயக்கத்தை பட்டி தொட்டி எல்லாம் கால் ஊன்ற செய்த தர்மபுரி மணிவண்ணன் அவர்கள் இறந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனை அடைந்தேன். அவர் அம்பேத்கார் மீதும், டாக்டர் வை.பா அவர்கள் மீதும் அதிக பற்று கொண்டவர். தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், வாழ்வதற்கு வசதியின்றி,வழி இன்றி தவித்த ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்

    .மக்கள் பிரச்சனைகளை ஆட்சியாளர்களிடமும், அரசு அதிகாரியிடமும் நேரடியாக சென்று உரிய முறையில் முறையிட்டு அவர்களுக்கு நீதி பெற்று கொடுத்தவர். 1977 -ம் ஆண்டு அம்பேத்கார் மக்கள் இயக்கம் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரை தன் இறுதி மூச்சு வரை அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் போர்வாளாக திகழ்ந்த தர்மபுரி மணிவண்ணன் இறப்பு அம்பேத்கார் மக்கள் இயக்கத்திற்கு மிகுந்த பேரிழப்பு.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்துவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறூ அவர் கூறியுள்ளார்.

    கேரளாவில் கனமழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #EdappadiPalanisamy
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 
    கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார்.

    கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை இன்று திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ள நிவாரனங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.5 கோடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
    ×