search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு"

    பீகார் மாநிலத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா :

    பீகார் மாநிலம், கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பீலா ஜெபுர் கிராமத்தில் தினேஷ் என்பவர் தனது வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயலும் போது விஷவாயு தாக்கி தினேஷ் மயக்கமடைந்தார். இதனால் பதற்றமடைந்த தினேஷ் குடும்பத்தினர் அவரை காப்பற்ற தொட்டிக்குள் இறங்கினர்.

    அப்போது, எதிர்பாராத விதமாக காப்பற்ற முயன்றவர்களுக்கும் விஷவாயு தாக்கியதில் தினேஷின் மனைவி, மகன்கள் இருவர் என மொத்தம் 6 பேர் பலியாகினர். 

    சம்பவம் அறிந்து அங்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    பீகார் மாநிலத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா :

    பீகார் மாநிலம், சகர்சா மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் சுய நினைவிழந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கழிவுநீர் தொட்டியில் விஷத்தன்மை உடைய கார்பன்-டை-ஆக்சைடு வாயு நிரம்பி இருந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ×