search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • சாலை விபத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

    கரூர்

    குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த மாட்டு தரகர் ஓமாந்து (81). இந்தநிலையில் சிவக்குமார் தனக்கு மாடு வாங்குவதற்காக ஓமாந்துவை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே 2 பேரும் சாலையை கடந்துள்ளனர்.

    அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம், இவர்கள் மீது மோதியது. இதில் சிவக்குமார் மற்றும் ஓமாந்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்பாடி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இந்த விபத்தில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர். அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள பழைய கரியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 55 ) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சானூரப்பட்டி அருகே கரியப்பட்டி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் வேலூர் மாவட்டம் காட்பாடி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயபாலன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபாலன் இறந்தார்.

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரியை சேர்ந்தவர் சந்திரசேகர் ( 43).

    இவர் நேற்று மாலை உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    வல்லம் - ஆலக்குடி சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையின் வளைவில் வைக்கப்பட்டிருந்த எதிரொளிப்பான் போர்டு மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரசேகர் இறந்துவிட்டார்.

    வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த இரண்டு விபத்துக்கள் குறித்தும் செங்கிப்பட்டி மற்றும் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் தானியப்பாடியை சேர்ந்தவர் குமார். இவர் தனது மகன் அருள்முருகன், உறவு பெண் சுமதி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அருள் முருகன் காரை ஓட்டி சென்றார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் அருகே பெருவள வாய்க்கால் வளைவில் கார் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்னை நோக்கி வந்த அரசு பஸ், காரை முந்தி சென்றது.

    இதில் பஸ், காரை உரசியதால் நிலை தடுமாறிய கார், தாறுமாறாக ஓடி அங்குள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கிய குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தகவல் அறிந்த விரைந்து வந்த சமயபுரம் போலீசார், குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இன்று காலை வழக்கம்போல் அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
    • காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே இன்று காலை அரசு பஸ் கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இருந்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் திருவெறும்பூரில் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பத்தாளபேட்டை, கடம்பகுடி, மேகளத்தூர், மாறனேரி ,ஊரத்தூர், ஆற்காடு வழியாக திருக்காட்டுபள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த பஸ்சில் நாராயணன் ஓட்டுனராகவும், ரெங்கராஜ் கண்டக்டராகவும் இருந்தனர்.

    இன்று காலையும் வழக்கம் போல் பஸ் புறப்பட்டு சென்றது. காலை நேரம் என்பதால் பஸ்சில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ் பூதலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தின் அருகே சென்ற போது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த சுபலட்சுமி (19). ஸ்ரீராம்,(17) வர்ஷினி (12)சுபஸ்ரீ (14)பிரணவ் (14)அபிஷேக்(14) கனிலா(51) சுரேஷ்(52) சமீரா பேகம் (50)மகேஸ்வரி (37) எடிசன்(15) ரம்மி (52) கடல் மணி (50) உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 17 பேர் மாணவர்கள் ஆவார்.

    இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயம் அடைந்தவர்களை தஞ்சை ஆர்டி ஓ (பொறுப்பு) பழனிவேல் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    • காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் தெருநாய் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் கும்பலாக சுற்றித்திரிந்த தெருநாய்கள் அவ்வழியாக வருவோர், செல்வோரை எல்லாம் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், வெறிநாய் பொதுமக்களை கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்களை அனுப்பி வைத்து நாய்கள் பிடிக்கப்பட்டன. நகரில் உள்ள நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.

    • முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது.
    • பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் அருகே, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 கார்கள் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக பஸ் பின்புறமாக மோதியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதில் பஸ்ஸில் பயணம் செய்த 4 பயணிகள் உள்பட, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குழந்தைகள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில், அனுசுயா (63), பாருண் (29), நவீன் (23), ஹென்சா (1), ஷிவா பாத்திமா (7), நவ்ஷத் (30), யமுனா (8), ஆகியோர் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

    இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் அதிவேகமாக பஸ்சை இயக்கி விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பொதுவாகவே திருப்பூர்- கோவை செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகவே இயக்கப்படுகிறது. ஓட்டுனர்களின் அலட்சியத்தால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் அந்த நபரது உடல் காணப்பட்டது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள கம்பர் நத்தம் அக்கரை நெடுந்தரை அருகே நெய்வாசல் வாய்க்காலில் இன்று அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.

    உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் அந்த நபரது உடல் காணப்பட்டது.

    இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர். ஆனால் மர்மமான முறையில் இறந்து கிடப்பவர் யார் ? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை . உடலில் சில இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து யாரேனும் அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்றனரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி பள்ளி மாணவ, மாணவிகள் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    • இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம், வலையபட்டி ஆகிய அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவி–கள் 11 பேர் கள்ளிக்குடி கே.வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வ–தற்காக இன்று காலை ஆட் டோவில் புறப்பட்டு சென்றனர்.

    அந்த ஆட்டோ கே.வெள் ளாகுளம் பகுதிக்கு வந்தபோது இருசக்கர வாகனம் முந்திச்செல்ல முயன்றது. இதில் நிலை தடுமாறி கட் டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் ஆட் டோவில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் இந்துஜா (10), பகதீஷ் ஸ்ரீ, சரண் (9), முத்தமிழ் அன்பு (10), பன் னீர்செல்வம் (12), கவிதா (12), ஆதிஸ்வரன் (12), கார்த்திகா (11), நாகலட் சுமி (12), சாதனா (11) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

    அவர்களை உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த–வர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்து–வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் இந்த விபத் தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவரான பொன்னையம்பட்டியை சேர்ந்த பெருமாள், இரு–சக்கர வாகனத்தில் வந்த பூபதி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்துஜா, கவிதாஸ்ரீ, மகாலட்சுமி ஆகிய மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் காயம் அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கள் பதறி அடித்துக்கொண்டு திருமங்கலம், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

    • லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள்கள் தூள், தூளாக நொறுங்கி கிடந்தன.
    • விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    வண்டலூர்:

    சென்னை மறைமலைநகர் அருகே பொத்தேரி பகுதியில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொத்தேரி வழியாக செங்கல்பட்டு நோக்கி இன்று காலை (வெள்ளிக்கிழமை) 10 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

    பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே வாகன ஓட்டிகள், பொது மக்கள் சாலையை கடந்து செல்ல பாதை உள்ளது. அதில் சாலையை கடப்பதற்காக 10-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் செல்ல காத்திருந்தனர்.

    அப்போது அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கடந்து செல்ல காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

    தாறுமாறாக ஓடிய லாரி 3 மோட்டார்சைக்கிள்களில் இருந்தவர்கள் மற்றும் நடந்து செல்ல இருந்தவர்கள் மீது மோதி அருகில் இருந்த சிக்னல் கம்பத்தை இடித்து தள்ளிவிட்டு சர்வீஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 5-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பலியானவர்களின் உடல்கள் சாலையில் சிதறி கிடந்தன. அப்பகுதி முழுவதும் ரத்தமாக காணப்பட்டது.

    மேலும் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள்கள் தூள், தூளாக நொறுங்கி கிடந்தன.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 5-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    அதிவேகத்தில் லாரியை டிரைவர் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிகிறது. பலியானவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த கோர விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    திருமங்கலம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன் (வயது 58). இவர் திருவனந்தபுரம் பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பியூட்டி பார்லர் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் பிரதாப் சந்திரன் மற்றும் அவர் நடத்தி வரும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தூத்துக்குடியை சேர்ந்த பழனிமுருகன் (45) மற்றும் அழகு நிலைய மேலாளர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரிதா (37) மூன்று பேரும் காரில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு வியாபாரம் தொடர்பான பொருட்கள் வாங்குவதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. காரை நிறுத்த டிரைவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

    கடைசியில் அந்த கார் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரதாப் சந்திரன் காரின் இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் பயணம் செய்த மற்ற இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காலை நேரம் என்பதால் கண் அயர்ந்து டிரைவர் தூங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது.
    • தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது.

    திருமங்கலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் செங்குடியை அடுத்த செங்கண்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் ஜேம்ஸ் மார்ட்டின் (வயது 34), சாம் டேவிட்சன் (30). இதில் ஜேம்ஸ் மார்ட்டின் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது தம்பியான சாம் டேவிட்சனையும் கப்பலில் வேலைக்கு சேர்க்க விரும்பினார். இதற்கான பயிற்சிக்காக சென்னைக்கு தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார்.

    அவர்களுடன் ஜேம்ஸ் மார்ட்டினின் பெரியப்பா மகன் கமலேஷ் (50) என்பவரும் சென்னை செல்ல தயாரானார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே காரில் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி சென்னைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த கார் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடியை அடுத்த விருதுநகர் மாவட்ட எல்லையான நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்துகொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் வந்த அந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.

    காரை ஓட்டி வந்த ஜேம்ஸ்மார்ட்டின் அதனை நிறுத்த முயன்றார். ஆனால் தாறுமாறாக ஓடி அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதியது. ஆனாலும் வேகம் கட்டுக்குள் வராததால் நிற்காமல் சென்ற கார் தடுப்புசுவரையும் தாண்டி எதிர்திசை நோக்கி பாய்ந்தது.

    அப்போது பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. இதில் அந்த லாரி நான்குவழிச்சாலையில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் வந்த மூன்று பேர் மற்றும் கண்டெய்டனர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுரை விரகனூரைச் சேர்ந்த செல்வகுமார் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையே தாறுமாறாக எதிர்திசையில் பாய்ந்த காரை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சினிமா படப்பிடிப்பில் நடப்பது போன்ற பிரமிப்பை இந்த விபத்து ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய காருக்குள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்த நான்கு பேரின் உடல்களையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

    பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தால் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
    • டிரைவர் பஸ்சை நிறுத்தும் முன்பே மூதாட்டி இறங்கியதால் தவறி விழுந்தார்.

    தென்காசி:

    தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்லும் அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு புறப்பட்டது.

    இந்நிலையில் நெல்லை- தென்காசி 4 வழிச்சாலையில் பாவூர்சத்திரம் பிரதான பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த பஸ்சில் வழி தவறி ஏறிய சுமார் 80 வயது உள்ள மூதாட்டி ஒருவர் அவசரமாக இறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.

    இந்நிலையில் பஸ் டிரைவர் நிறுத்துவதற்கு முன்பே அந்த மூதாட்டி பதட்டத்தில் இறங்கியதால் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு தலையில் அடிபட்டதால் தனது பெயர், அவரது ஊர் மற்றும் உறவினர்கள் பெயரை சொல்ல முடியாமல் திணறினார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் அந்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பின்னர் அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்பு லன்சில் ஏறுவதற்கு மறுத்த மூதாட்டியை பெண் போலீஸ் ஒருவர் கரிசனையுடன் பேச்சு கொடுத்து அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காகவும், மூதாட்டியின் உறவினர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது. அந்த பெண் போலீசுக்கு பாராட்டுகளும் குவிகிறது. இந்நிலையில் மூதாட்டியின் சொந்த ஊர் மடத்தூர் என்பது தெரியவந்தது.

    ×