என் மலர்
நீங்கள் தேடியது "மரணம்"
- தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
- 76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.
பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
1980-களில் ரஜினி, கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ்.
இவர் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. தொடர்ந்து, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், நடிகை பிந்து கோஷ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
- நடைபயிற்சி சென்ற போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- தென் தமிழகத்தின் தமிழ் இலக்கிய மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.
நெல்லை:
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் நாறும்பூ நாதன் (வயது 64). தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சொந்த ஊராக கொண்ட நாறும்பூ நாதன் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு மனைவி மற்றும் 1 மகன் உள்ளனர். மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் தீபக் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
நெல்லை சாந்திநகரில் வசித்து வந்த நாறும்பூ நாதன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியாகவும் இருந்தார்.
இந்நிலையில் நாறும்பூநாதன் இன்று காலை நடைபயிற்சி சென்ற போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் காலமானார்.
அவரது உடல் சாந்திநகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள் நாறும்பூ நாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு நூல்களை எழுதியுள்ள நாறும்பூநாதன் தென் தமிழகத்தின் தமிழ் இலக்கிய மொழி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்.
இவருக்கு தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டிற்கான உ.வே.சா. விருது வழங்கி கவுரவித்துள்ளது.
- சவுந்தர்யா மரணம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவதாக அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார்.
- சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புகிறேன்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா (31 வயது) கடந்த 2004 ஏப்ரல் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
தனது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூரில் தேர்தல் பிரசாரம் ஒன்றுக்கு தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் இருந்து சௌந்தர்யா புறப்பட்ட தனி விமானம் விழுந்து நொறுங்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் அதன் பின்னணியில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருப்பதாகவும் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கம்மம் ஏசிபி மற்றும் கம்மம் கலெக்டரிடம் புகார் கடிதம் அளித்திருக்கிறார்.
அவரது புகாரில், தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு அந்த மாளிகையை சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத்தும் அதை நிராகரித்தனர்.
விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார். செளந்தர்யா சென்ற விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என இதுவரை உறுதியாகவில்லை. இதன் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா என்பதை காவல்துறை முழுமையாக விசாரிக்க வேண்டுமே என கோரியிருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள சொத்து குறித்து மோகன் பாபு சார் மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது.
சொத்து தொடர்பாக பரவி வரும் ஆதாரமற்ற செய்தியை நான் மறுக்க விரும்புகிறேன். மோகன் பாபு சார் எனது மனைவி மறைந்த ஸ்ரீமதி சௌந்தர்யாவிடமிருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
எனக்குத் தெரிந்தவரை அவருடன் நாங்கள் எந்த நில பரிவர்த்தனையும் செய்யவில்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நான் மோகன் பாபு சாரை அறிவேன்.
அவருடன் வலுவான நல்ல நட்பைப் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குடும்பங்கள், என் மனைவி, என் மாமியார் மற்றும் மைத்துனர் எப்போதும் மோகன் பாபு சாருடன் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் பழகி வந்தனர். இதனால் அவரை நான் மதிக்கிறேன்.
அவர் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். உங்கள் அனைவருடனும் உண்மையைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது ஒரு தவறான செய்தி என்பதால், தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சௌந்தர்யா உயிரிழப்பதற்கு 1 வருடத்திற்கு முன் 2003 இல் சாப்ட்வேர் இன்ஜினீயரான ரகுவை மணந்து கொண்டார். உயிரிழந்த சமயத்தில் சௌந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது.
- உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் பறிப்போகும் உயிர்.
- கிடப்பில் போடப்பட்ட மழை நீர் வடிகாRain Drainல் பணியால் விபரீதம்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி (42) என்பவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியாகி உள்ளார்.
உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு துரை.கோவிந்தராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்தவர் துரை.கோவிந்தராஜன் (வயது 90). இவர் தமிழக அரசின் முன்னாள் கொறடா ஆவார்.
இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 17-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் துரை.கோவிந்தராஜனின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை காவேரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு துரை.கோவிந்தராஜன் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க. துணை பொதுசெயலாளர் ரெங்கசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் மனோகரன், அமைப்பு செயலாளர் சீனிவாசன், வேங்கை கணேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி, திராவிடர் கழக மண்டல தலைவர் அய்யனார், திருச்சி மாவட்ட த.மா.கா. தலைவர் குணா, தஞ்சை தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்க ளை அ.ம.மு.க. மருத்துவபிரிவு இணை செயலாளர் துரை.கோ.கருணாநிதி, வடக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் துரை.கோ.பாண்டியன், திராவிடமணி பால்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
- கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.
லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.
அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பக்கிங்காம் கால்வாய் பகுதியில் முனுசாமி மர்மமாக இறந்து கிடந்தார்.
- கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
கோவளத்தை அடுத்த குன்னுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 46). மீனவரான இவர் பக்கிங்காம் கால்வாயில் படகுமூலம் மீன், இறால், நண்டு ஆகியவற்றைப் பிடித்து வந்தார். நேற்று காலை மீன்படிக்க சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் முனுசாமி மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முனியனின் சாவில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன்.இருங்காட்டு கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
பரிமளா பாலுசெட்டியிலுள்ள தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். பரிமளா வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லாத அவரது கணவர் முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது சொல் பேச்சை கேட்காத மனைவியின் செயலால் முனியன் மன உளைச்சலில் அவ்வப்போது மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2-ந் தேதி பரிமளா, முனியன் வீட்டில் வைத்திருத்த 4000 ரூபாயில் 1000 ரூபாயை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றார். செல்லும் வழியில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
சிறுணையில் இருந்து பாலுசெட்டி செல்லும் சாலையில் பரிமளாவை வழிமறித்து முனியன் வாக்குவாதத்தில் ஈடுபட பரிமளா தான் வைத்திருந்த பிளேடால் முனியனின் கழுத்தை கிழித்துள்ளார்.இதனையடுத்து முனியன் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து பாலுசெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் தனது மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத முனியன், பரிமளா பணிபுரியக்கூடிய துணிக்கடைக்கு சென்று சண்டையிட்டதால் பரிமளாவை பணியில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா அன்று முதல் முனியனுடன் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வந்த முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் முனியனின் பெற்றோர் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது முனியன் இறந்து விட்டதாக பரிமளா தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து முனியனின் சாவில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பரிமளா தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பாலுசெட்டி போலீசார் முனியனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஏலத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் உதயகுமார் லாரியை ஏற்றி 2 பெண்கள் உள்பட 6 பேரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் புளியரை கற்குடியை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 33). லாரி டிரைவர்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு கற்குடி பகுதியில் லாரியை ஆட்டோ மீது மோதவிட்டார். அப்போது அதில் பயணம் செய்த செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக புளியரை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மீன்பாசி ஏலத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் உதயகுமார் லாரியை ஏற்றி 2 பெண்கள் உள்பட 6 பேரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உதயகுமாரை போலீசார் கைது செய்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவர் தனக்கு எதிராக சாட்சி அளித்த அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் என்பவரை கொலை செய்தார். இந்த கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வந்து தலைமறைவானார். சமீபத்தில் அவருக்கு பிடிவாரண்டு போடப்பட்டு போலீசார் தேடி வந்தனர். பின்னர் கடந்த ஜூலை மாதம் பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அதிகாலை 3 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அங்கு இரவு பணியில் இருந்த ஜெயிலர்கள், விசாரணை கைதியான உதயகுமாரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
- மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அதிர்ச்சியில் அன்னையப்பா இறந்தது தெரியவந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் அன்னையப்பா. இவரது மகன் சென்னப்பா என்கிற சேகர் (வயது 37). வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் முனிராஜ் என்கிற விஜய் (25). அன்னையப்பாவும், கிருஷ்ணப்பாவும் அண்ணன் -தம்பி ஆவார்கள்.
சென்னப்பாவும், முனிராஜூம் பெரியப்பா-சித்தப்பா மகன் வழி முறையில் அண்ணன்-தம்பி ஆவர். இவர்கள் அருகருகில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு முனிராஜ் மனைவி மதுவிற்கும், சென்னப்பாவின் தந்தை அன்னையப்பாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் சென்னப்பா தனது தம்பி மனைவி மதுவை கண்டித்தார். இது குறித்து மது தனது கணவர் முனிராஜூக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ், பக்கத்து வீட்டில் வசிக்கும் பசவராஜ் என்பவரின் மகன் ரேணுகா ஆரத்யா (20), பேகேப்பள்ளி சக்தி (22) ஆகியோர் அங்கு வந்து சென்னப்பாவுடன் தகராறு செய்தனர். அவர்களுக்குள் தகராறு முற்றியதில் சென்னப்பாவை அவர்கள் கத்தியால் குத்தினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சென்னப்பா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வேன் டிரைவர் கொலை தொடர்பாக முனிராஜ், ரேணுகா ஆரத்யா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சக்தியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட சென்னப்பாவின் உடல் ஓசூர் தனியார் மருத்துவமனையில் இருந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும், சென்னப்பாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது. இதையடுத்து பேகேப்பள்ளியில் உள்ள வீட்டிற்கு சென்னப்பாவின் உடல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் படுத்திருந்த சென்னப்பாவின் தந்தை அன்னையப்பாவை உறவினர்கள் எழுப்ப முயன்றனர்.
அப்போது மகன் இறந்த தகவல் அறிந்ததும் அவர் இறந்து விட்டார். மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அதிர்ச்சியில் அன்னையப்பா இறந்தது தெரியவந்தது. இதை கண்டு உறவினர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தந்தை-மகன் ஆகிய 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.
- அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.
- தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிறது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காளீஸ்வரி கடந்த 3-ந் தேதி பிரசவத்திற்காக உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்கள் 5-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் காளீஸ்வரி வழக்கம்போல் பால் கொடுத்துவிட்டு குழந்தையை உறங்க வைத்துவிட்டு தானும் தூங்கினார். இன்று அதிகாலை 4 மணிக்கு விழித்த காளீஸ்வரி குழந்தையை பார்த்தபோது பேச்சு மூச்சின்றி இருந்தது.
இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் உடனே குழந்தையை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை எப்படி இறந்தது? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தை இறப்புக்கான காரணம் என்ன? உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பால்கனி திடீரென சரிந்து கீழே விழுந்தது. பால்கனியில் பேசிக் கொண்டிருந்த 2 பேரும் கீழே விழுந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், பார்சுரு பஜார் தெருவில் 5 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. குடியிருப்பில் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் ஆங்காங்கே சேதம் அடைந்து இருந்தது. சேதம் அடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணி நடந்து வந்தது.
பூவுல பாலத்தை சேர்ந்த மதுமோகன் தனது மனைவி ஸ்ரீவித்யாவுடன் (வயது 36), 2-வது மாடியில் குடியிருந்து வந்தார். முதல் மாடியில் அனுராதா (56) என்பவர் குடியிருந்து வந்தார். நேற்று மாலை ஸ்ரீவித்யாவும், அனுராதாவும் 2-வது மாடியில் உள்ள பால்கனியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது பால்கனி திடீரென சரிந்து கீழே விழுந்தது. பால்கனியில் பேசிக் கொண்டிருந்த 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் ஸ்ரீவித்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்தவர்கள் அனுராதாவை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.