search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 188514"

    • சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
    • 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 24 வது வாா்டு மாமன்ற உறுப்பினருமான ஆா்.நாகராஜ், மேயா் என்.தினேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி 24 ஆவது வாா்டுக்குள்பட்ட சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

    இது தொடா்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 4 வது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும்போது இந்தப் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், தற்போது வரையில் எந்தவி தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சிவசக்தி நகரில் 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். அதேபோல நாகாத்தம்மன் கோயில் வீதி, சத்யா நகா் பகுதியில் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனதில் அவர் கூறியுள்ளார்.

    • 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
    • கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் வரும் 11ம் தேதி, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இதில் கலந்து கொண்டு தங்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்காக வெளியிடப்பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    பள்ளி மற்றும் கல்லுாரி களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், வேலை தேடுவோர் மற்றும் தங்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தேடுவோர் பதிவு செய்து, பங்கேற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் குறித்து பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலை தளங்களில் இந்த முகாம் குறித்து மேயர், கலெக்டர், கமிஷனர் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

    முகாமுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார். சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    • திருப்பூர் மாநகராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் தினேஷ்குமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,தூய்மை பணியாளர்கள் என 392 பேருக்கு நற்சான்றுகளை மேயர் தினேஷ் குமார் வழங்கினார்.

    திருப்பூர்:

    74 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் தினேஷ்குமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றினார்.பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர் மாநகராட்சி சார்பில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கலை குழுவினர், பள்ளி மாணவ மாணவிகள், நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் என 2250 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள் ,செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என 392 பேருக்கு நற்சான்றுகளை மேயர் தினேஷ் குமார் வழங்கினார்.

    விழாவில் குடியரசு தின சிறப்புரை ஆற்றிய மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் சுத்தம் ,சுகாதாரம், சுற்றுப்புற சூழல் நலம் காக்க திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியையும் வழங்கி வருகிறார். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாநகராட்சியின் வசதிகள், பொது சுகாதாரம், கல்வி வளர்ச்சி ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,திருப்பூர் மாநகராட்சியை தூய்மையான மாநகராட்சியாக மாற்றிடும் வகையில் நாம் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் மக்களின் தேவைகளை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்தில் முதன்மை மாநகராட்சியாக மாற்றும் வகையில் பணியாற்றி வருகிறோம். திருப்பூர் மாநகராட்சி யில் உள்ள பூங்காக்களை புனரமைப்பு செய்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வருகிறோம். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் அவர் பேசினார்.

    தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.குடியரசு தின விழாவில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி மண்டல தலைவர்கள் ,கவுன்சிலர்கள், உதவி கமிஷனர்கள் ,அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் சிவசங்கரன், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநகர பகுதிகளில் பொங்கல் விடுமுறையில் பொதுமக்கள் பயன்படுத்து வதற்காக பல பூங்காக்களை செப்பனிட்டு வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதன் ஓரு பகுதியாக டூவிபுரத்தில் உள்ள சங்கர நாராயணன் பூங்கா மற்றும் குறிஞ்சி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வரும் கரிசல் இலக்கிய பூங்காவையும் முழுமையாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி, பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்களிடம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்க ளையோ, பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வைத்திருக்கவோ, விற்கவோ வேண்டாம் என்று மேயர் கேட்டுக் கொண்டார்.

    • கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் 6 பேர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.
    • தஞ்சையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கேரம் போட்டி நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கேரம் கழகத்தின் தலைவரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் தமிழ்நாடு கேரம் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அதற்கான சான்றிதழ்களை தமிழ்நாடு கேரம் கழக தலைவர் நாசர்கான், செயலாளர் இருதயம், பொருளாளர் கார்த்திகேயன், மண்டல செயலாளர்கள் மாரியப்பன், சிவக்குமார், சேலம் மாவட்ட கேரம் சங்க செயல் தலைவர் லாரன்ஸ், செயலாளர் டேனியல், தஞ்சை மாவட்ட கேரம் சங்க செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் மேயர் சண்.ராமநாதனிடம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுடெல்லியில் நடந்து முடிந்த 50-வது தேசிய சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் பிரிவில் 6 பேர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளோடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெறவும், கேரம் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் கோரிக்கை வைக்க உள்ளோம்.

    தஞ்சையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கேரம் போட்டி நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாநகராட்சி பகுதிகளில் தினமும் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்காக பல்வேறு திட்டங்களையும் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மக்களுடன் மேயர் என்ற திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்து வருகிறார்.

    இந்நிலையில் மக்களுடன் மேயர் திட்டத்தில் மாநகராட்சி 52-வது வார்டு பகுதியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சாலை பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    • பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
    • பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    நாகர்கோவில்:

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பேருந்து நேரம், சுகாதாரம், கழிவறை சுகாதாரம், போக்குவரத்து குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    • பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். மேலும் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பேருந்து நேரம், சுகாதாரம், கழிவறை சுகாதாரம், போக்குவரத்து குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்குள் குறைகள் ஏதாவது உள்ளதா என கேட்டறிந்தார். மேலும் பஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து தாடிக்காரர் முக்கு, மாட்டுக் கொட்டகையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை குறித்து பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடைபெற்று வரும் தண்ணீர் தொட்டி பணிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர் கண்ணப்பன், மாநகராட்சி உதவி ஆணையர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அருகில் உள்ள புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டார்.

    • வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தொடர்ந்து 2 முகாம்கள் நடத்தப்படும்.
    • 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் திருப்பூர் மண்டலம் - 2, வார்டு19, திருநீலகண்டபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை மேயர் தொடங்கி வைத்து பேசியதாவது :- பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" செயல்படும்.

    இத்திட்டத்தின் மூலம் தொடர்ந்து 2 முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்கள் 26.11.2022 அன்று 1ம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-24, ஈபி காலனி, அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் 3:12.2022 அன்று 4ம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்- 40 இடுவம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சனிக்கிழமை தோறும் சிறப்பாக நடைபெறும்.

    பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி சுகாதாரமாக வாழ வாழ்த்துகிறேன் என்றார். தொடர்ந்து, 7 நபர்களுக்கு மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகம், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் துணை மேயர் பாலசுப்ரமணியம், சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், மாநகர நல அலுவலர் அலுவலர் கௌரி சரவணன், மண்டல தலைவர் கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல்.
    • அரசு வேலை, தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் கிராந்தி குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் தினேஷ்குமார் பெண் கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகளை பேச அனுமதி வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து 23 -வது வார்டு கவுன்சிலர் துளசி மணி பேசினார். அப்போது 23 -வது வார்டு தியாகி பழனிச்சாமி நகரில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். அங்கேரிபாளையம் ரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிட வருவதில்லை. ஆகையால் பணிகள் தரமற்ற முறையில் தாமதமாக நடைபெற்று வருகிறது. எனவே அதிகாரிகள் தினமும் அதை பார்வையிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் சாந்தாமணி:-

    38வது வார்டில் மங்களம் ரோடு குறுகளாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் பின்னர் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து செல்வதால் பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் சென்று அடையவில்லை. அதனையும் சரி செய்ய வேண்டும்.

    மேலும் தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருளாக காணப்படுகிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி முழுவதும் தெருநாய்கள் தொல்லை இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் தினேஷ்குமார் ,தெரு நாய்களை பிடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கருத்தடை செய்து ஐந்து நாட்கள் பராமரித்து அதனை உரிய முறையில் மீண்டும் அந்த இடத்தில் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    51 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில்,

    152 வது அரசாணை நமது காலகட்டத்தில் ஏற்க முடியாத பாவ செயல். அரசு வேலை ,தூய்மை வரி வசூல் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசம் என்பது மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு அவர் வெளிநடப்பு செய்தார்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 152-வது அரசாணையை ரத்து செய்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய போதுமான நிதி உள்ளதால் போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தகவல் கொடுத்தால் அதனை முதலில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

    4-வது கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 40 மீட்டர் பணிகள் மட்டும் தான் செய்ய வேண்டியது உள்ளது. 2023ம் ஆண்டுக்குள் பெரும்பாலான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்றார்.

    • தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் தினேஷ்குமார் இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர், பகுதியில் நடைபெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகளாக நீர்த்தேங்கி இருக்கும் பகுதிகள்,குப்பை கொட்டும் இடங்கள், கழிவுநீர் வடிகால்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்கு பின் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பகுதிகளில் உடனடியாக சுகாதாரப் பணிகள் மேற்கொண்டு அங்கு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    • திருப்பூரில் பெத்திசெட்டிபுரத்தில் உள்ள ஆடிட்டர் அசோசியேஷனில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு கடனுதவி மற்றும் அரசு மானிய உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில், நாடுமுழுவதும், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு கடனுதவி மற்றும் அரசு மானிய உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் திருப்பூரில் பெத்திசெட்டிபுரத்தில் உள்ள ஆடிட்டர் அசோசியேஷனில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆடிட்டர் அசோசியேஷன் திருப்பூர் கிளை தலைவர் வரதராஜன், செயலாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.

    இதில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், 1984 பஞ்சப்படி பிரச்சினை எழுந்தபோதே, பின்னலாடை தொழில் இனி தாக்குப்பிடிக்காது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் இன்று அடுத்தடுத்து பல சோதனைகளை கடந்து தொழில் வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.வங்கிகள், தொழில் முனைவோருக்கு தொடர்ந்து கடனுதவி வழங்கி, பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுக்க வேண்டும் என்றார்.

    மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை ஒரு லட்சம் கோடி என்கிற வர்த்தக இலக்கை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. மாநகர உள்கட்டமைப்பு மேம் பாட்டுக்கு தொழில்துறையினர் கைகொடுக்கவேண்டும்.சாயக்கழிவுநீர் பிரச்சினை உட்பட எத்தனையோ சோதனைகளை கடந்துதான் இன்று சாதித்து கொண்டிருக்கிறது. தேவையான கடனுதவிகளை வழங்கி வங்கிகளும், ஆலோசனைகளை வழங்கி ஆடிட்டர்களும் தொழில் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளனர். நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைநகராக திருப்பூர் உயர்ந்துள்ளது. பிற நாடுகளுடனான போட்டியை எதிர்கொண்டு திருப்பூர் பின்னலாடை துறை வர்த்தக இலக்கை விரைவில் எட்டிப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×