search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 188514"

    • நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.
    • இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

    ஈரோடு, அக்.31-

    ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் 30 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

    கூட்டம் தொடங்கியதும், பேசிய 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆதி பேசும் போது, தனது வார்டில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.

    இதனால் அவருக்கும் மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.

    இதனை ஏற்காமல் தொடர்ந்து கவுன்சிலர் ஆதி வாக்கு வாதம் செய்து கொண்டிருந்ததால் ஆவேசமடைந்த மேயர், தனது இருக்கையில் இருந்து எழுந்து கவுன்சிலர் இருக்கைக்கு சென்று அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து சமாதான ப்படுத்தினார்.

    மற்ற கவுன்சிலர்களும் சமாதானப்படுத்தினர். இதனால் மாநகராட்சி கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை தனியாருக்கு விடும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது, வார்டை நான்காக பிரிப்பது குறித்து எங்களுடன் கலந்தோசி க்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எங்களையும் அந்த குழுவில் இடம் பெற செய்ய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிப் பணி தங்கு தடை இன்றி நடைபெறும் என்றார்.

    மேலும் தூய்மை பணியாளர்கள் அவர்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும் .

    அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    அப்போது பேசிய ஆணை யாளர் சிவக்குமார் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

    இதனை ஏற்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யாமல் சபை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றனர்.

    36-வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் பேசும்போது, என் வார்டில் நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது.

    அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என் வார்டில் குண்டும் குழியுமாக ரோடுகள் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என்றார்.

    இதேப்போல் 43- வது வார்டு கவுன்சிலர் சபுராமா சாதிக் பேசும்போது, என்னுடைய வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல் மற்ற மாநகராட்சியில் குப்பை வரி எடுக்கப்பட்டுவிட்டது.

    இதனால் சொத்து வரி வசூல் பாதிக்கப்படுகிறது.

    எனவே நமது மாநகராட்சியில் குப்பை வரி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.

    • திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் அமைத்தல், தார்சாலை அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.

    பல்வேறு சாலைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், கவுன்சிலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில், 60 வார்டுகளிலும் சாலைப்பணிகளை சீரமைப்பது மற்றும் குழிகளை மூட நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ள நிலையில், தலா ஒவ்வொரு மண்டலத்திற்கும் 8 பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிப்பர், ஒரு ரோலர் மற்றும் 16 பணியாளர்கள் என 32 பொக்லைன் எந்திரம் மற்றும் 64 பணியாளர்கள் மூலம் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் 4 மண்டல அலுவலகங்களிலும் தொடங்கி வைத்தார். இதில் மண்டல தலைவர்கள் உமா மகேஷ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, இல.பத்மநாபன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் மேயர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாநகராட்சி பகுதிகளில் நடந்து வருகிற பல்வேறு பணிகளின் காரணமாக சாலைகள் சேதமடைந்து மக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில், பழுதடைந்த மற்றும் சேதமடைந்த சாலைகளைசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் பொக்லைன் எந்திரங்கள் வழங்கப்பட்டும், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பணி மேற்கொள்வார்கள். உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகளை முடிப்பதற்கு என காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. விரைவில் அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். பாதாள சாக்கடை திட்டம், 4-வது குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
    • அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு இலவச மதுபானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் ஓட்டல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக அறிவித்ததுடன், விளம்பரம் செய்ததற்கு மன்னிப்பும் கோரியது. முன்னதாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு அனுப்பினார்.

    அதில், தனியார் ஓட்டல் சார்பில் கலாசார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. கலாசார சீரழிவு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை அனுமதிக்கக்கூடாது. தவறான செய்திகளை சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    • மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்று வரும் 4-வது குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் உடனிருந்தனர். 

    • ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டிதரப்பட்டது.
    • அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலரும் மாநாகராட்சி மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் நொய்யல் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டிதரப்பட்டது. தற்பொழுது நொய்யல் கரையோரம் வசித்து வந்த பலரும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் கொடுத்த குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலரும் நேற்று திருப்பூர் மாநாகராட்சி மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக அப்பகுதிக்கு ஆய்வுக்கு வருவதாக தெரிவித்தார்.அதன்படி அப்பகுதிக்கு சென்ற மேயர் தினேஷ்குமார் குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி,மின்சாரவிளக்கு ,தார்சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அப்பகுதி மக்கள் கூறுகையில் ,போதிய அடிப்படை வசதிகள் இல்லை .பல நாட்களாக குடிநீரின்றி இருப்பதாகவும் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வருவதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். குடியிருப்பில் பல வீடுகளின் ஐன்னல் கதவுகள் உடைந்து உள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் இப்பகுதிக்கு குறித்த நேரத்திற்கு பேருந்துகள் வருவதில்லை . இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்,வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆகியோருடன் பிரச்சனைகள் பற்றி மேயர் கேட்டறிந்தார்.பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

    • தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 176 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    இதில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சியை திறன்மிகு மாநகராட்சியாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தினமும் 600 முதல் 700 டன் குப்பைகளை அகற்றி வருகிறோம். திடக்கழிவு மேலாண்மை 100 சதவீதம் செயல்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வழங்கும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பணியாற்ற வேண்டும். தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் , சிக்கண்ணா அரசு கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என மொத்தம் 176 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கோவிந்தசாமி, மாநகர பொறியாளர் முகமது சபியுல்லா, மாநகர் நல அதிகாரி (பொறுப்பு) கார்த்திக், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

    • மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.
    • கொசுபுழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.

    ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர்ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, மாநகராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கழிவு நீரில் வரும் கொசுபுழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பகுதி வாரியாக வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்குதல், மாநகராட்சி பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுவரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய ஜே.சி.பி. எந்திரம் வாங்குதல், மேற்கு மண்டலம் வி.வி.டி.சிக்னல் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரவுண்டானா பகுதியில் நீரூற்று அமைத்து பசுமை புல்தரைகளுடன் அழகுபடுத்தும் பணி, தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2021-22-ம் ஆண்டு மானிய தொகை ரூ.3.06 கோடி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.

    இதனை பயன்படுத்தி தூத்துக்குடி நகரின் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகர பகுதியில் விபத்து ஏற்படும் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து இரண்டு மடங்கு அபராதம் விதித்தல்,

    மாநகராட்சி 60 வார்டுபகுதிகளில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்கள், 21 அலுவலக கட்டிடங்கள், 30 நீரேற்று நிலையங்கள், 60 பூங்காக்கள், 20 மாநகராட்சி பள்ளிகள், 8 அம்மா உணவகங்கள் உட்பட கட்டிடங்களில் மின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், விஜயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை மேற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் கூட்டத்தில் சாலை, குடிநீர் கேட்டு மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • பெயர்மாற்றம், வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி யின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது.

    திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மேயர் இந்திராணி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன், மேற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் இந்திரா காந்தி, விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் பகுதியில் பஸ்நிலையத்தை மீண்டும் செயல்படுத்தவும், மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    திருநகர் விஸ்தரிப்பு பகுதியான 94-வது வார்டு பகுதியில் எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் சாலைவசதி மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்து அந்தப்பகுதி பொதுமக்கள் மேயர் இந்திராணியிடம் மனு கொடுத்தனர். திருநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். ஆக்கிரமி ப்புகளை அகற்றக்கோரியும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல பெய ர்மாற்றம், வீட்டுவரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை குறித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்களின் கோரி க்கைகளை நிறைவேற்று வதாக அதிகாரிகள் பொது மக்களு க்கு வாக்குறுதி அளித்து அனுப்பி வை த்தனர்.

    • 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    திருப்பூர் :

    75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவைக் கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பேசியதாவது:-

    இந்தியா முழுவதும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். ஆகவே, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • மாநகருக்குள் ஆறு, ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். மாநகருக்குள் நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடைகளின் மேல் உயர்மட்ட பாலம் அமைத்தால் கனரக வாகனங்கள் சிரமம் இல்லாமல் சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் திட்டமிட்டு உயர்மட்ட பாலங்கள் தேவைப்படும் இடங்களை ஆய்வு செய்தனர். அதன்படி திருப்பூர் ஈஸ்வரன் கோவில் செல்லும் நொய்யல் ஆற்றின் மேல் உயர்மட்ட பாலம், ஜம்மனை ஓடை மேல் தந்தை பெரியார் நகரில் உயர்மட்ட பாலம், சங்கிலிப்பள்ளம் ஓடை மேல் செல்லாண்டியம்மன் துறை அருகே சொர்ணபுரி லே-அவுட்டில் உயர்மட்ட பாலம் மற்றும் நடராஜா தியேட்டர் முன்புறம் பாலம் விரிவாக்கம் ஆகிய பணிகள் என மொத்தம் ரூ.36 கோடியே 36 லட்சத்தில் மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    உயர்மட்ட பாலங்கள் அமைக்கும்போது கனரக வாகனங்கள் எளிதில் சென்று வரவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்மட்ட பாலங்களுக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    • பணிகளை விரைவாக முடிக்கும் படி மேயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • கட்டிட பணிகளை மேயர் பார்வையிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான திட்டங்கள் மற்றும் பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்து வருகிறார். மேலும், பணிகளை விரைவாக முடிக்கும் படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் டவுன்ஹால், பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட கட்டிட பணிகளை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார் ஆய்வு செய்தார். மேலும், கட்டிட பணிகளையும் பார்வையி–ட்டார். இந்த நிகழ்ச்சியில் 3 வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி கழக செயலாளர் மு.கே.உசேன், கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, கண்ணப்பன், திவாகரன் மற்றும் உதவி ஆணையர்கள் வாசுகுமார், கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் நாஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது.
    • போட்டியில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் நாஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் 40 அரசு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ போட்டியில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

    ×