என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 189229
நீங்கள் தேடியது "நிலங்கள்"
தென்ஆப்பிரிக்காவில் சுதந்திரத்துக்கு பிறகும் நிரந்தரமாக தங்கி இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் உள்ள நிலங்களை பறிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரிட்டோரியா:
ஆப்பிரிக்க நாடான தென்ஆப்பிரிக்கா இந்தியா போல நீண்டகாலமாக வெள்ளைக்காரர்களின் அடிமை நாடாக இருந்து வந்தது. 1961-ல் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும் வெள்ளைக்காரர்களிடம் தான் ஆட்சி இருந்து வந்தது. 1994-ல் தான் முழு சுதந்திர நாடாக உருவெடுத்தது.
ஆனால் ஆப்பிரிக்க சுதந்திர நாடாக மாறினாலும் அங்கு வசித்த வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. நிரந்தர குடிமக்களாக அங்கேயே உள்ளனர்.
தென்ஆப்பிரிக்காவின் மொத்த மக்கள் தொகை 5 கோடிய 15 லட்சம். அதில் 8 சதவீதம் பேர் வெள்ளைக்காரர்களாக உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் பெரும்பாலான சொத்துக்கள் அவர்களிடம் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக வளம்கொழிக்கும் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் தான் உள்ளது.
அதே நேரத்தில் நாட்டின் பூர்வீக குடிமக்களான கருப்பர்கள் பலரிடம் நிலம் எதுவும் இல்லை. எனவே வெள்ளைக்காரர்களிடம் இருந்து நிலத்தை பறித்து கருப்பர்களுக்கு வழங்குவதற்கு ஏற்கனவே அரசு முயற்சிகள் மேற்கொண்டது.
இவ்வாறு 30 சதவீத சொத்துக்களை பறிப்பது என்று திட்டமிட்டு இருந்தது. ஆனால் இதுவரை 10 சதவீத சொத்துக்கள் கூட கைப்பற்றப்படவில்லை.
எனவே வெள்ளைக்காரர்களிடம் இருக்கும் பெரும்பாலான சொத்துக்களை பறிக்க அரசு இப்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக இப்போது புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக அதிபர் ராமபோசா தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தின்படி எந்த இழப்பீடும் கொடுக்கப்படாமல் வெள்ளைக்காரர்களிடம் இருந்து சொத்துக்கள் பறிக்கப்படும். அவை நிலம் இல்லாத கருப்பர்களுக்கு அவர்களுடைய தகுதிகளின் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும்.
ஆப்பிரிக்க அரசின் இந்த முயற்சியால் வெள்ளைக்காரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அண்டை நாடான ஜிம்பாப்வே நாட்டில் இதேபோல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளைக்காரர்களின் பெரும்பாலான சொத்துக்கள் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு 3 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வேளாண் இணை இயக்குனர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:- சென்னை, மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்காக, காட்பாடி தாலுகா முத்தரசி குப்பம் தொடங்கி சேர்க்காடு, திருவலம், ராணிப்பேட்டை, செட்டித்தாங்கல் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு 3 மடங்கிற்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.
ஒரு தென்னை மரத்தில் ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதே போல், சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கும் 3 மடங்கும், தென்னை மரத்திற்கு ரூ.40 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
தஞ்சையில் விவசாயிகளுக்கு நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் நெல் விதை மற்றும் ஏர் கலப்பையை இலவசமாக வழங்க வேண்டும். காட்டு பன்றிகள் தொல்லையை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களின் நலன் கருதி மலிவு விலையில் உணவு கிடைக்க அம்மா உணவகம் அமைக்க வேண்டும். 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களை விவசாய வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.
100 நாள் ஊரக வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரப்பை சரி செய்ய, பாத்தி கட்ட உள்ளிட்ட விவசாய பணிகளை செய்ய 100 நாள் ஊரக திட்ட பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக, முறைபடி விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வேளாண் இணை இயக்குனர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:- சென்னை, மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்காக, காட்பாடி தாலுகா முத்தரசி குப்பம் தொடங்கி சேர்க்காடு, திருவலம், ராணிப்பேட்டை, செட்டித்தாங்கல் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு 3 மடங்கிற்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது.
ஒரு தென்னை மரத்தில் ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதே போல், சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை 4 வழி பாதைக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கும் 3 மடங்கும், தென்னை மரத்திற்கு ரூ.40 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
தஞ்சையில் விவசாயிகளுக்கு நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கும் நெல் விதை மற்றும் ஏர் கலப்பையை இலவசமாக வழங்க வேண்டும். காட்டு பன்றிகள் தொல்லையை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களின் நலன் கருதி மலிவு விலையில் உணவு கிடைக்க அம்மா உணவகம் அமைக்க வேண்டும். 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களை விவசாய வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.
100 நாள் ஊரக வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரப்பை சரி செய்ய, பாத்தி கட்ட உள்ளிட்ட விவசாய பணிகளை செய்ய 100 நாள் ஊரக திட்ட பணியாளர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக, முறைபடி விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X