என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாய்"
- கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
- ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான்வலசு என்ற பகுதியில் கனகராஜ் ( வயது 65) என்பவர் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார்.நேற்று முன்தினம் 5 ந்தேதி இரவு வழக்கம்போல் ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார். மீண்டும் காலையில் சென்று பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்தன. 2 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன, அதன் பின் விசாரித்த போது நாய்கள் வாயில் ரத்த கரையுடன் சுற்றிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு இவரது தோட்டத்தில் இருந்த ஆடுகளை நாய் கடித்துள்ளது. அதேபோல் பக்கத்து தோட்டத்திலும் நாய்கள் ஆடுகளை கடித்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்துபாளையம், கச்சேரி வலசு, சேனாபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாய்கடித்து 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன, ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிறிஸ்டோபர் ஜாண் என்பவரின் வீட்டு நாய், யேசுராஜனை கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.
- கிறிஸ்டோபர் ஜாண், தன்னை தாக்கியதாக மண்டைக்காடு போலீசில் யேசுராஜன் புகார்
கன்னியாகுமரி :
திங்கள்நகர் அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் யேசுராஜன் (வயது36), கட்டிட தொழி லாளி. இவர் மண்டைக்காடு அருகே காளிவிளையில் வசிக்கும் தங்கையை பார்த்து வர சென்றார். அப்போது கிறிஸ்டோபர் ஜாண் என்பவரின் வீட்டு நாய், யேசுராஜனை கடிக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கு மிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.இதில் கிறிஸ்டோபர் ஜாண், தன்னை தாக்கியதாக மண்டைக்காடு போலீசில் யேசுராஜன் புகார் செய்தார். போலீசார் கிறிஸ்டோபர் ஜாண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக நாய் திகழ்கிறது. இது மனிதர்களின் நண்பனாக மாறியுள்ளது. வீட்டில் பாதுகாப்பிற்காகவும், தனிமையை குறைப்பதற்காவும் பலர் நாய்களை வளர்க்கின்றனர். நாய் மிகவும் நன்றியுள்ள மிருகமாக கருதப்படுகிறது. இந்நிலையில், மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறன் நாய்களுக்கு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்பிரிஞ்சர் என்ற தனியார் நிறுவனம் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. நாய்கள் தங்கள் எஜமான்களின் முகபாவத்திற்கு ஏற்ப தலையை திருப்புகின்றன. கோபம், பயம் மற்றும் சந்தோஷமாக இருக்கும் போது தலையை இடது பக்கமாக திருப்புகின்றன. ஆச்சரியமாக முகத்தை வைத்திருக்க்ம் போது வலது பக்கமாக தலையை திருப்புகின்றன.
ஒருவேளை அவர்கள் சோகமாக இருந்தால் நாய்களின் இதயத்துடிப்பு மிகவும் அதிகரிக்கிறது. இந்த ஆய்வு மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே உள்ள பாசத்தை எடுத்துக்காட்டுகிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழ்வதன் மூலம் நாய்கள் புதிய பண்புகளை வளர்த்துக்கொண்டுள்ளன. அவற்றின் மூலம் மனிதர்களுடன் பேசிப்பழகுகின்றன.
நாய்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவற்றின் மூளை செயல்பாடு குறித்து அறிய முடிந்தது. மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் நாய்களின் மூளை தான் பெரும் பங்கு வகிக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்