search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 190477"

    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் வழங்கினார்
    • மொத்தம் ரூ.11 கோடி வழங்கப்பட உள்ளது

    அரும்பாவூர்,

    பூலாம்பாடி பேருராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு பன்னாட்டு தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன்படி பொதுமக்களின் சிரமங்களை கேட்டறிந்த அவர், பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன் நமக்குநாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார். அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் செய்த டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் அரசு அதிகாரிகளிடம் கூறி பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறியசொல்லி அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தார்.

    இதனை செய்து முடித்தால் பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் என்பதால், அடிப்படை வசதிகளை நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டது. டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சார்பில் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.11 கோடி பங்களிப்பு தொகையாக தரப்படஉள்ளது. அதன் மூலம்

    பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் பங்களிப்பு தொகையாக அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி முதற்கட்ட நிதியாக ரூ.90 லட்சத்திற்கான வரைவோலையையும், அக்டோபர் 28-ந்தேதி இரண்டாம் கட்டநிதியாக ரூ.74லட்சத்து 8 ஆயிரத்துக்கான வரைவோலையையும் வழங்கியிருந்தார்.இந்தநிலையில் நேற்று (10.04.2023) மூன்றாம் கட்டநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார், ரூ.26லட்சத்து 98 ஆயிரத்துக்கான வரைவோலையைபூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார். பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர்கள் பூங்கொடி மணி, மாணிக்கம், ராமதாஸ், ராஜலட்சுமி செல்வக்குமார், கஸ்தூரி வீராசாமி, பரகத்நிஷா அப்துல்ரஹீம், சுதாகர், ஜெயந்தி பெருமாள், செல்வராணி ராமர் தொழிலதிபர்கள் மணிகவுண்டர்,இசைபாலு, மண்மணி, பூலாம்பாடி சதிஷ், மணி, செங்குட்டுவன் மற்றும் பூலாம்பாடி டத்தோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்புற கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மணிமேகலை விருது பெற தகுதியுள்ள சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவை முறையான கூட்டம் நடத்துதல், சேமிப்பு செய்ததை முறையாக சேமித்தல், வங்கி கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல், சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேலும், மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரிடமும், நகர்ப்புற சமுதாய அமைப்புகள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கமுதாய அமைப்பாளர்களிடம் தொடர்புகொண்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 25.4 2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அபிவிருத்தி திட்ட மேம்பாட்டுக்கு நிதி வழங்கல் நிகழ்ச்சி நடந்தது.
    • நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடலோர சதுப்பு நில காடுகளின் அபிவிருத்தி திட்ட மேம்பாட்டிற்காக ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தை மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் வழங்கினார். இது குறித்து மாவட்ட வன அலுவலர் கூறுகையில், தனியார் நிறுவனங்கள் நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் திட்ட பணிகளை மேற்கொள்ள தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறக்கூடிய லாபத்தில் அதாவது சமூக கூட்டாண்மை பொறுப்புணர்வு திட்டம் (சி.எஸ்.ஆர்.) மூலம் 2 சதவீதம் நிதி உதவி வழங்குவது வழக்கம். அந்த அடிப்படையில் கடற்கரை ஓரமுள்ள வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கான பணிகளுக்கு ரூ.50 லட்சத்தை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி உள்ளனர் என்றார்.

    இதில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத் தலைவர் எஸ்.ராமலிங்கம், உதவி தலைவர் மணிகண்டன், நிர்வாக மேலாளர் சரவணன்,துணை மேலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • உட்கட்டமைப்பு வசதிக்கான பொருட்செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற "நம்ம ஸ்கூல்"- நம்ம ஊரு பள்ளி திட்டம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திட்டப்பணிகளுக்கு நிதி அளிப்பது, பொருட்களாக வழங்குவது, தன்னார்வ சேவைபுரிவது வாயிலாக அரசுபள்ளிகளின் அடிப்படை தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்றிட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    சமூகபங்களிப்பு நிதியினை பெற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி அன்று "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" (nammaschool.tnschools.gov.in) என்ற இணையதளம் மற்றும் தனிவங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

    வங்கிக்க ணக்கு அரசு பள்ளி களின் மேம்பாட்டிற்காக பெரு, சிறு, குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அளித்திட உறுதுணையாக உள்ளது.

    இணையதளம் வழியாக பெறப்படும் நிதியானது பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற இன்றியமையாத தேவைகளுக்கான செலவினம் மேற்கொள்ளப்பட்டு நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டு ள்ளது.

    அரசு பள்ளிகளுக்கென தனிநபர்கள், முன்னாள் மாணவர்கள் குறு மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி போன்றவை இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

    இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் வங்கி கணக்கு தொடங்கவும் பள்ளிக் கல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியை மேற்குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்து உட்கட்ட மைப்பு வசதிக்கான பொருட்செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    • புதிய பஸ்நிலையம் கட்ட முதல் தவணையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி ஆகும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி கவுன்சில் மாதாந்திர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம் அண்ணா சிலை அருகே கருணாநிதி நினைவு கொடிக்கம்பம் அமைக்க தலைவர் கொண்டு வந்த தீர்மானத் திற்கு பா.ஜ.க. கவுன்சிலர் குமார் எதிர்ப்பு தெரி வித்தார். நகர் மன்ற தலை வரின் விளக்கத்திற்கு பின் மற்ற கவுன்சிலர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

    கவுன்சிலர் குமார்: ராம நாதபுரம் நகரில் பாதாள சாக்கடை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க பல கோடி ரூபாயில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது இதனை கண்காணிக்க தனியாக பொறியாளர், அலுவலர்கள் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன்: தற்போது தான் ராமநாதபுரம் சிறப்பு நகராட்சிக்குரிய அரசு உத்தரவு வந்துள்ளது இதன்படி புதிதாக அலுவ லர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்ட பராமரிப்பிற்கு தனியாக பொறியாளர் நியமிக்க வேண்டும்.

    ராஜாராம் பாண்டியன் (காங்) : முகவை ஊரணியில் வேலை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். நகராட்சி நிர்வாகம் பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

    கமிஷனர்: பாதாள சாக்கடை குழாயை மாற்றி புதிய குழாய் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்போது முகவை ஊரணியில் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவுன்சிலர் மணிகண்டன் (காங்) : காவிரி குடிநீர் முழுமையாக வராததால் எனது வார்டில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அல்லி கண்மாய் சுடுகாட்டில் போதுமான வசதிகள் இல்லை. ஓய்வு எடுக்க இடம் இல்லாததால் தகனம் செய்ய வரும் மக்கள் அவதிப்படு கின்றனர்.

    தலைவர்: அல்லி கண்மாய் சுடுகாட்டில் ஓய்ெவடுக்கும் இடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குடிநீரை பொறுத்தவரை ராமநாதபுரத்திற்கு 33 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால் 25 லட்சம் லிட்டர் தான் வருகிறது. அதனை வைத்து சப்ளை செய்து வருகிறோம். விரைவில் 55 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.

    மேலும் ராமநாதபுரத்தில் புதிய பஸ்நிலையம் கட்ட ரூ.20 கோடியில் பணிகளை தொடங்க அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி யாக இருந்தாலும் முதல் கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு சந்தை கடை பகுதியையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் கட்டப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    • நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராசு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஞானமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவச்சந்திரன், ஒன்றிய தலைவர் ராஜா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.29,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    மத்திய அரசின் பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் உணவு மானியம் ரூ.1 லட்சம் கோடி குறைக்கப்பட்டதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.29000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இது போல் பல்வேறு விவசாய திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறி இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி தஞ்சை ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பக்கிரிசாமி, கோவிந்தராஜ், அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோஷங்கள் எழுப்பியவாறே பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் எரிந்து கொண்டிருந்த நகலை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

    • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது.
    • அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    சேலம்:

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் மேற்கு இணைப்பு சாலை, கூட்டுறவு காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகம் ராஜ்மெஜஸ்டிஸ்ட், காவேரி சாலை, ஈரோடு சேலம் பிரதான சாலை கருங்கல்பாளையம், ஈரோடு, என்ற முகவரியில் அமலாக்க அதிகாரி வீரேஷ் தலைமையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டங்களில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன், தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு. ஏ. என். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஈரோடு மாவட்ட அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் தாமரைக் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் புகுந்து குளத்தை பாழாக்கி வருகின்றனர்.

    எனவே அந்த சுவரை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    அத்துடன் இதர சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • இந்த பள்ளி நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
    • பள்ளியின் சுற்று சுவர் உயரத்தை எழுப்ப வேண்டும், பள்ளி மைதானத்தில் அலங்கார தரையோடு கற்கள் பதிக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    விஜய்வசந்த் எம்.பி.யை குமரி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாமஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 17 -வது வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ் ஆகியோர் தலைமையில் கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது;-

    கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பழைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் மலையாள பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளி நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

    பள்ளியின் சுற்று சுவர் உயரத்தை எழுப்ப வேண்டும், பள்ளி மைதானத்தில் அலங்கார தரையோடு கற்கள் பதிக்க வேண்டும், பெயர் பலகை சீரமைக்க வேண்டும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கிட வேண்டும், பழைய கட்டிடத்தை பராமரிக்க வேண்டும், கழிவறை சீரமைத்தல், ஒலி பெருக்கி அமைத்தல் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

    எனவே இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தங்களது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.

    • கோவில் விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு புல்லுவிளை, மேலகாட்டு விளை, உடையப்பன் குடியிருப்பு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்
    • நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 51-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் இன்று காலை மோட்டார் சைக்கிள், நடந்து சென்றும் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின் போது அந்த வார்டு கவுன்சிலரும் மண்டல தலைவருமான முத்துராமன் மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்.

    கோவில் விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு புல்லுவிளை, மேலகாட்டு விளை, உடையப்பன் குடியிருப்பு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அந்த பகுதியில் சாலை வசதி, கழிவுநீர், ஓடை வசதி, மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

    இதை தொடர்ந்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக 52 வார்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. புல்லுவிளை பகுதியில் சாக்கடை ஓடையை சீரமைக்க உடனடி நடவ டிக்கை எடுக்கப்படும்.

    கோவில்விளை, காட்டு விளை, சின்னணைந்தன் விளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் மண் சாலைகளை தார்சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியில் பேவர் பிளாக் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.பிள்ளையார்புரம், உடை யப்பன் குடியிருப்பு பகுதியில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தலைமறைவான பெண் மேலாளரை தேடும் பணி தீவிரம்
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வேப்பமூட்டில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது.

    இந்த நிறுவனத்தில் குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார்கள்.

    நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய பொதுமக்கள் தங்களது நகைகளை மீட்க வரும்போது நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.இது தொடர்பாக அந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த வங்கியில் பணிபுரிந்த மேலா ளர் கடந்த சில நாட்களாக பணிக்கு வரவில்லை. நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் வங்கியில் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேல் அதிகாரிகள் கோட்டாறு போலீசில் புகார் செய்தனர்.இன்று காலை கோட்டார் போலீசார் நிதி நிறுவனத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த மேலாளர் கடந்த ஒரு வாரமாக வங்கிக்கு வராமல் தலைமறைவானதால் அவர் நகைகளை எடுத்துச் சென்று இருக்கலாம் என தெரிகிறது.அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    வாடிக்கையாளர்களி டமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டும் தங்களது கணக்கில் பணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் செட்டிகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×