search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 190477"

    • நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.6000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
    • தமிழக அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் 22-வது பேரவை கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    முருகேசன், பானுமதி, கார்த்திக் ஆகியோர் தலமை தாங்கினர். பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர்மணி மூர்த்தி பேரவை கொடியினை ஏற்றி வைத்தார்.

    அஞ்சலி தீர்மானத்தை சங்கத் துணைத் தலைவர்பரிமளா வாசித்தார். சங்க துணை செயலாளர்சேவையா வரவேற்று பேசினார். ஏ .ஐ. டி. யூ .சி மாநில செயலாளர் சந்திரகுமார் பேரவையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கோவி ந்தராஜன் முன்வைத்தார். மாவட்ட பொருளாளர்சுதா வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

    ஏஐடியூசி மாவட்ட செயலாளர்தில்லைவனம் பேரவையினை நிறைவு செய்து பேசினார்.

    இந்த பேரவையில் நல வாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 மாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர்அன்பழகன், போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை. மதிவாணன், சுமை தூக்கும் சங்கத்தின் மாநில தலைவர் சாமிக்க ண்ணு, தெருவியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துக்கு மரன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர்செந்தில்நாதன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர்கோடீஸ்வரன், தலைவர்இளஞ்செழியன், நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர்தியாகராஜன், கட்டுமான சங்க மாவட்ட துணை செயலாளர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோய் மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி ரூ.5 கோடி மதிப்பிலும், 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், ஒரு லினியர் ஆக்ஸிலரேட்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், தன்னார்வலர்கள், அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் 33 சதவீதமும் திரட்டி ரூ.60 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல்கட்டமாக மருத்துவ உபகரணங்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நமது தொகையை செலுத்தி அரசின் பங்குத்தொகையையும் செலுத்தி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் மொத்த தொகையையும் செலுத்தி மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பாக இதுவரை ரூ.4½ கோடி நிதி வந்துள்ளது. மீதமுள்ள நிதியை திரட்ட அனைத்து தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேயர் தினேஷ்குமார் பேசும்போது, புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும். அவற்றை பெற்று முதல்கட்டமாக கட்டிட பணிகளை தொடங்கி விட்டால் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து நிதி அளிப்பார்கள். அதனால் கட்டிட பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றார்.கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ரூ.10 லட்சம், மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினார்கள். அனைத்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.10 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்று அதில் மாற்றுத்திறனாளிளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் இளங்குமரன், திருப்பூர் பிரிண்டிங் அசோசியேசன் தலைவர் ஸ்ரீகாந்த், சைமா சங்க பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ், பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி, நிட்மா சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், அரிமா சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.

    • ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது.
    • உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர். பாலசுப்பிரமணியன் மற்றும் பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ- மாணவிகள் முதியோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில், ரூ.2.15 லட்சம் நிதி திரட்டி தானம் வழங்கினர்.

    தங்களது இந்த செயலால் முதியோர்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பதை அறிந்துகொண்டனர். மேலும், உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் திரட்டிய நிதி 600 முதியோர் இல்லங்களை பராமரித்து வரும் ஹெல்ப் ஏஜ் இந்தியா முதியோர் இல்லங்களின் பிரதி நிதி ரேச்சல் சாம்சனிடம் வழங்கப்பட்டது. நிதி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் 2007ம் ஆண்டு முதல் தொடங்கி

    நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் நிதி வழங்கிய மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

    • ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சங்கர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய குழு துணை தலைவர்வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரித்து வாரமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 78.10 லட்சத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட 2021-22ம் ஆண்டு 15-வது மத்திய நிதிக்குழு சுகாதார தலைப்பு ஒதுக்கீட்டு மான்ய நிதி ரூபாய் 60 லட்சம் போக பற்றாக்குறை நிதியான ரூபாய் 18.10 லட்சத்தை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து வழங்கவும் வடகிழக்கு பருவமழையில் பழுதடைந்த அரித்துவாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 569 மதிப்பீட்டில் பழுது ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்நீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகையாக ரூபாய் 58 ஆயிரத்து 569-ம்.

    கேத்தனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 671 மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்ய ஒன்றிய பொது நிதி பங்கு தொகை ரூபாய் 69 ஆயிரத்து 671 விடுவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் திமுக ஒன்றிய குழு உறுப்பினர் ரசூல் நஸ்ரின் பேசுகையில் மூன்று ஆண்டுகாலமாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கின்றனர் நாங்கள் என்ன பதில் சொல்வது என கேள்வி எழுப்பினார்

    இதற்கு பதில் அளித்து அதிமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் சங்கர் பேசுகையில் அரசாங்கம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியும் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனப் பேசினார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி நன்றி கூறினார்.

    • பரமக்குடி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.53.62 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.8.11 கோடி செலவில் 20 கிராமங்களில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் கட்டிடங்கள், திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    இவற்றின் திறப்பு விழா மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியின் தமிழ்மன்றம் மற்றும் மாணவர் பேரவை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.அமைச்சர் ராஜ–கண்ணப்பன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் கிறிஸ் ஏஞ்சல் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் 6 மாதத்தில் தொடங்கும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.1,978 கோடியாக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியை, மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதற்காக ரூ.53.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ரூ.1,264 கோடியில் கட்டிடம் கட்ட 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அங்கு கட்டிடம் கட்டப்படாததால் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரி இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 37 மாணவர்கள், 13 மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்துவிட்டது. ரூ.1,978 கோடியில் புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

    கட்டிடத்திற்கான முழுமையான வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஜைகா நிறுவனம் 82 சதவீதம், அதாவது ரூ.1627.70 கோடி நிதி உதவியும், மத்திய அரசு 18 சதவீதம் நிதியும் தர உள்ளன. கட்டிட வரைபடத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் விடப்பட்டு, 6 மாதத்தில் பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடந்தது.

    இதில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குநர் அனுமந்தராவ், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, நகரசபை தலைவர்கள் ராமநாதபுரம் கார்மேகம், ராமேசுவரம் நாசர்கான், கீழக்கரை செஹானாஸ் ஆபிதா, பரமக்குடி சேதுகருணாநிதி, ராமநாதபுரம் நகரசபை துணைத்தலைவர் பிரவீன்தங்கம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன் நன்றி கூறினார். மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

    • முதல்- அமைச்சர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ரூ. 1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • 4200 சதுரடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உலக நூலகத் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்து, வளர்ந்தார். இவர் பிறந்த சீர்காழியில் உள்ள கிளை நூலக கட்டிடம் பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அவதி அடைந்ததோடு, மழைக்காலங்களில் நூல்கள் நனைந்து சேதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வாசகர்கள் கோரிக்கை வைத்தனர்.அதனைஏற்று எம்.பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ சட்டசபையில் இதனை வலியுறுத்தி புதிய நூலகம் கட்டிடம் கட்டித் தர முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். முதல் அமைச்சர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து 4200 சதுரஅடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

    நகர்மன்றதலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார். பொது–ப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர் நாகவேல், உதவிபொறியாளர் ஜான்டிரோஸ்ட், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் ராமு, வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முத்துக்குமரன், பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு, ரோட்டரி சாசன தலைவர் பாலவேலாயுதம், பொறியாளர் சிவகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.
    • தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண் வங்கி கணக்கு எண் நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் (அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.

    தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும்.

    புதுப்பிக்க தவறிய வர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும். தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண் வங்கி கணக்கு எண் நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் (அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    வங்கி கணக்குடன் ஆதார் எண் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள் தற்பொழுது இணை த்துக்கொ ள்ளலாம்.

    பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ளது. தனியார் பொது சேவை மையங்களிலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மனுதாரர் பெயரில் சிட்டா இருக்க வேண்டும் கூட்டுபட்டாவாகவும் இருக்கலாம்.

    குத்தகை போக்கிய நிலங்கள் பதிவு புதுப்பிக்க இயலாது. மனுதாரர் பதிவை புதுப்பிக்க பொது சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும். ஒருவர் பெயரில் இருப்பதை மற்றவர்கள் புதுப்பிக்க இயலாது.

    கைரேகைவைக்க வேண்டும். இந்த செய்தி யினை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உரிய காலத்திற்குள் பதிவினை புதுப்பித்து நிதி உதவியினை தடங்கலின்றி தொடர்ந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இதற்கான விண்ணப்பத்தை சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களுடன்மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களைப் பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள், தேவாலய கட்டடத்தின் ஆண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10- 15 ஆண்டுகள் இருப்பின் ரூ. 1 லட்சமும், 15, -20 ஆண்டுக்குள் இருப்பின் ரூ. 2 லட்சமும், 20 ஆண்டுக்கு மேற்பட்ட தேவாலயத்திற்கு ரூ. 3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

    இதற்கான விண்ணப்பத்தை சான்றிதழ் மற்றும் உரிய

    ஆவணங்களுடன்மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழ் இணை யதள முகவரியில் வெளி

    யிடப்பட்டுள்ளது. இதனைப் படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதி யின் அடிப்படையில் சிறுபான்மை யினர் நல இயக்குநருக்கு அனுப்பி நிதியுதவி கோரி பரிந்துரை செய்யும்.இந்த நிதி உதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுக லாம். இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை, 2011, 2012 ல், இருந்து போதிய அளவு பெய்யவில்லை. அதிகரித்த வறட்சி காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.போதிய தண்ணீர் இல்லாமல் உடுமலை சுற்றுப்பகுதியில், மட்டும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகின. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகியுள்ளன.

    மேலும் பருவமழை காலத்திலும் பலத்த காற்றுக்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்வது தொடர்கதையாகியுள்ளது. கருகிய மரங்கள் தவிர்த்து, பல்வேறு நோய்த்தாக்குதலால் காய்ப்புத்திறன் இல்லாமல் பல மரங்கள் வெறுமையாக காட்சியளிக்கின்றன. இத்தகைய தென்னை மரங்களை அப்புறப்படுத்த கூட வழியில்லாமல் விவசாயிகள் திகைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் முன்பு தென்னந்தோப்பு சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மரத்துக்கு 1,700 ரூபாய் வரை விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பராமரிப்பு ஆகியவற்றுக்கும் தென்னை வளர்ச்சி வாரியம், சீரமைப்பு நிதி ஒதுக்கப்பட்டது.தென்னை விவசாயிகள் பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சீரமைப்பு நிதியை தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக பெற்றுத்தர வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்த தேதியின் அடிப்படையில் 11 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    12-வது தவணை தொகை விடுவிப்பிற்கு ஆதார் விபரங்கள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதம மந்திரி கிசான் கவுரவ ஊக்கத்தொகை பெறுகின்ற கபிலர்மலை வட்டார விவசாயிகள் அருகிலுள்ள இ- சேவை மையங்களையோ, தபால் அலுவலகங்களையோ அணுகி வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் அட்டை கொண்டு தங்களுடைய இருப்பை கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் வழியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உடனடியாக ஆதார் அட்டை மூலம் புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
    • இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களா–கவே வீடு கட்டி கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

    நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அளவில் வீடு கட்ட இடவசதி இருக்க வேண்டும். இந்நிலம் அத்தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் இருக்க வேண்டும். நில உரிமைக்கான பட்டா முறையாக பெற்றிருக்க வேண்டும்.

    நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். அத்தொழிலாளியின் ஆண்டு வருவாய் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    தகுதியானவர்கள் நலவாரிய உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஒரு புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவற்றை tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விபரம் அறிய ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் உள்ள ஒருங்கி ணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது 0424 2275592 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இத்தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார். 

    சேலம் நெத்திமேட்டில் கந்து வட்டி கேட்டு மிரட்டல் நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் நெத்திமேடு கே.பி. கரட்டை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 45). ஜவ்வரிசி வியாபாரியான இவர் நேற்று அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் தொழிலை மேம்படுத்த நெத்திமேட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை அணுகினேன். அப்போது நிதி நிறுவன உரிமையாளரான ராஜவேல் பாபுவிடம் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.2 லட்சம் ரூபாயை கந்து வட்டிக்கு வாங்கினேன், மாதம் 26 ஆயிரம் வீதம் 10 தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தினேன்.

    பணத்தை பெற்ற அவர் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வந்தார். தர மறுத்த நிலையில் கடந்த 9-ந் தேதி மிரட்ட ல் விடுத்தார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறி இருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக ராஜவேல்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×