search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை"

    • ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு போக சிரமமாக இருப்பதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணனிடம் பொதுமக்கள், தாய்மார்கள் மனு அளித்தனர்.
    • தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல ஊர்தி சேவையை கண்ணன் எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு செல்ல சிரமமாக இருப்பதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணனிடம் பொதுமக்கள், தாய்மார்கள் மனு அளித்தனர்.

    மேலும் தலைமை மருத்துவர் டாக்டர் உஷா தாய் சேய் வாகனம் தேவை என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார்.

    அதன் அடிப்படையில் தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல ஊர்தி சேவையை கண்ணன் எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்.

    மேலும் மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் சென்று நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் சரியான முறையில் நோயாளிகளுக்கு கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    இதில் மருத்துவர்கள் செந்தில்குமார், ராஜா, கீதா நவீன் குமார் மற்றும் செவிலியர்கள் திமுக நகர செயலாளர் கருணாநிதி கவுன்சிலர் புகழேந்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் தாக்கியதாக கூறி சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்றவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டபட்டி கிராமத்தில் உள்ள காலனியில் புதிதாக அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெறாமல் வைக்கபட்ட சிலையை அகற்ற காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலித் அமைப்புகள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சிலையின் முன்பாக அமர்ந்து, சிலையை எடுத்தல் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    அப்போது அங்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு வந்து பேசினார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்காத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றி எடுத்து செல்லப்பட்டது.

    இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்களை சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சிலை விவகாரம் பிரச்சனை ஓய்ந்ததால், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஓமலூரில் கொண்டு வந்து விடப்பட்டனர்.

    இந்தநிலையில், இளம்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர் சமுராய்குருவை மட்டும் தனியாக வாகனத்தில் அழைத்து சென்றதாகவும், இதுபற்றி அவர் கேட்டபோது, மேச்சேரி இன்ஸ்பெக்டர் அவரை தாக்கியதாகவும் கூறி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகாமில் பெண்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    • 105 நபர்கள் மதுரையிலுள்ள கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிராம்பட்டினம் லயன் சங்கம், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தினர்.

    முகாமிற்கு அதிராம் பட்டினம் லயன் சங்க சாசன தலைவர் லயன் பேரா. அப்துல் காதர், மாவட்ட தலைவர்கள் லயன் எஸ். எம். முகமது முகைதீன், அகமது, அப்துல் ஜலீல், அப்துல் ரஹ்மான், இயக்குனர்கள் லயன் அப்துல் ஹமீது, லயன் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமை மாவட்ட முன்னாள் ஆளுநர் பி.எம்.ஜே.எப். லயன் எஸ்.முகமது ரபி துவக்கி வைத்தார்.

    சிறப்பு அழைப்பாளராக சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சுப்ரமணியன், எம்சி.அலுமினி லயன்ஸ் சங்க சாசன தலைவர் அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு, நகர் மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதன் ஒருங்கிணைப்–பாளராக லயன் பேரா. செய்யது அஹமது கபீர், மாவட்ட தலைவர் மற்றும் லயன் குப்பாசா அகமது கபீர், துணைத்தலைவர்ஆகியோர் இருந்தனர். இந்த முகாமில் பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொ ண்டனர். இதில் 105 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் லயன் சங்க தலைவர் மேஜர் டாக்டர் கணபதி, செயலாளர் டாக்டர் லயன் முருகானந்தம், பொருளாளர் லயன் செல்வராஜ் உட்பட அதிரை லயன் சங்க நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், இயக்கு னர்கள் உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டனர்.

    • திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதனால் வேனின் டிரைவர் நிறுத்த முயன்றார்.
    • வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது இதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் காயமடைந்தனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோ ணம் காடு வெட்டி விடுதியை சேர்ந்த 13 பேர் இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வாடகை வேனில் காலை 9 மணி யளவில் திருவோணத்திற்கு புறப்பட்டனர்.

    வேன் திருவோணம் பகுதிய அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

    இதனால் வேனின் டிரைவர் நிறுத்த முயன்றார்.

    ஆனால் வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணம் செய்த 13 பேரும் காயமடைந்தனர்.

    வேன் கவிழ்ந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து வேனில் இருந்தவர்களை மீட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர்.

    இதையடுத்து காயமடை ந்த 13 பேரையும் திருவோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பரபரப்பான காலை வேளையில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆலங்குடி மருத்துவமனையில் பாம்புகள் தொல்லை உள்ளது
    • செடி கொடிகளை அகற்ற வேண்டும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 75 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளும் உள்ள இந்த மருத்துவ மனையில் பாம்புகள் நுழைந்து அவ்வப்போது நோயாளிகளை மிரட்டி வருவதாக மருத்துவமனைக்கு வரும் மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவேமருத்துவமனை வளாகத்தில் உள்ள அதிகமான செடி கொடிகளை அகற்றி தூய்மையாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைததுள்ள்ளனர்.

    • சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடந்த இருதரப்பினர் மோதலில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இறந்தவரின் உடலுக்கு மாலை போடுவது தொடர்பாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (56). இவர் கடந்த 25-ந் தேதி மருதிப்பட்டியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.

    அவர் மீது மோதிய சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் பிரபு என்பவரும் காயமடைந்ததால் இருவரையும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியாண்டியை, மனைவி பாண்டியம்மாள் பாதி சிகிச்சை நிலையில் வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்கு வந்த முனியாண்டி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    வீட்டில் முனியாண்டியின் உடலுக்கு மாலை போடுவது தொடர்பாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. முனியாண்டியின் இறப்பு குறித்து தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மதுபோதையில் அங்கு வந்த முனியாண்டி மற்றும் பாண்டியம்மாளின் உறவினர்கள் அரசு மருந்துவமனை வளாகத்தின் உள்பகுதியில் கல்லால் எறிந்தும், கட்டை, கம்புகளுடனும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சிங்கம்புணரி போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதில் காரைக்குடி ஓ.சிறுவயல் பகுதியை சுரேஷ் (35), கருத்த பாண்டி, வல்லரசு, கண்ணன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் காயமடைந்தனர். இதில் சுரேஷ் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இவர்களைத் தாக்கியதாக விராலிமலையைச் சேர்ந்த முத்து, கண்ணன், சக்திவேல் கருப்பையா, ஆனந்த், சேகர், சிவா, விஜய், பாரதி மற்றும் ஆறுமுகம் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிங்கம்புணரி போலீசார் அவர்களை கைது செய்து ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

    இறந்த உறவினர் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வந்த இடத்தில் மது போதையால் இருதரப்பாக மோதி அரசு மருத்துவமனையை போர் களமாக மாற்றிய இந்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • 1.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவுக்காக 1.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    புதியதாக திறக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

    நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் திலகம், பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் குமரவேல், டாக்டர் ராஜசேகர், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், கோவி அய்யாராசு, பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்து வமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • அரசு மருத்துவமனை ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
    • இதில் அமைச்சர்-மேயர் பங்கேற்றனர்.

    சிவகாசி

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழா சென்னை யில் நடைபெற்றது.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் சிவகாசி அரசு மருத்துவ மனையில் உள்ள ஆய்வகத்தை தொடங்கி வைத்தார். அதனை தொ டர்ந்து சிவகாசி அரசு மருத்து வமனையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆய்வ கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவ காசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.53.62 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.8.11 கோடி செலவில் 20 கிராமங்களில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் கட்டிடங்கள், திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    இவற்றின் திறப்பு விழா மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியின் தமிழ்மன்றம் மற்றும் மாணவர் பேரவை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.அமைச்சர் ராஜ–கண்ணப்பன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் கிறிஸ் ஏஞ்சல் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் 6 மாதத்தில் தொடங்கும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.1,978 கோடியாக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியை, மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதற்காக ரூ.53.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ரூ.1,264 கோடியில் கட்டிடம் கட்ட 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அங்கு கட்டிடம் கட்டப்படாததால் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரி இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 37 மாணவர்கள், 13 மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்துவிட்டது. ரூ.1,978 கோடியில் புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

    கட்டிடத்திற்கான முழுமையான வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஜைகா நிறுவனம் 82 சதவீதம், அதாவது ரூ.1627.70 கோடி நிதி உதவியும், மத்திய அரசு 18 சதவீதம் நிதியும் தர உள்ளன. கட்டிட வரைபடத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் விடப்பட்டு, 6 மாதத்தில் பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடந்தது.

    இதில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குநர் அனுமந்தராவ், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, நகரசபை தலைவர்கள் ராமநாதபுரம் கார்மேகம், ராமேசுவரம் நாசர்கான், கீழக்கரை செஹானாஸ் ஆபிதா, பரமக்குடி சேதுகருணாநிதி, ராமநாதபுரம் நகரசபை துணைத்தலைவர் பிரவீன்தங்கம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன் நன்றி கூறினார். மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

    • அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இருக்கும் மருத்துவரை மாற்று பணி இடத்திற்கு அனுப்புவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இருதயம், மூளை நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. தலைமை மருத்துவமனைக்கு உண்டான எந்த ஒரு வசதிகளும், செயல்பா–டுகளும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டினர். இங்குள்ள ஸ்கேன் கருவி 2, 3 நாட்களாகவே பழுதடைந்து உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் பிணவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருத்துவமனையில் பல கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்து உள்ளது.

    தேசிய தர சான்றிதழ் பெற்ற இந்த அரசு தலைமை மருத்துவமனையின்

    அவலநிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • குரங்கு அம்மை நோய் தடயங்களுடன் வந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
    • சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் 700 பேருக்கு மேல் வருகின்றனர். அதிகளவில் அரபு நாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு, குரங்கு அம்மை நோய்க்கான தடயங்கள் காணப்பட்டது. அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் யாரிடமும் சொல்லாமல் வெளியேறி ஊருக்கு சென்றுவிட்டார். இது குறித்து புதுக்கோட்டை சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சென்று அந்த நபரை அழைத்து வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவரிடமிருந்து ரத்தம், சிறு நீர், தொண்டை மற்றும் தோல் பகுதிகளில் எச்சில் போன்றவற்றை சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப் பிவைக்கப்பட்டுள்ளது. முடிவு வந்த பிறகே எதையும் கூற முடியும் என்றார்.

    • அபிலாஷினி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
    • மாயமான அபிலாஷினி கடத்தப்பட்டாரா? இல்லை வேறுஏதாவது காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? என விசாரணை

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு சாங்கை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் அபிலாஷினி (வயது 21).

    இவர் தக்கலை அருகே பள்ளியாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை அபிலாஷினி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    வழக்கமாக மாலையில் வீடு திரும்பும் அவர், இரவு வரை வராததால் ராதாகிருஷ்ணன் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

    அபிலாஷினி எங்கு சென்றார் என்பது தெரியாததால், உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிலாஷினி கடத்தப்பட்டாரா? இல்லை வேறுஏதாவது காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? என விசாரணை நடத்தி வருகின்றார். இது போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு இளம் பெண் மாயமானது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×