search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சல்கள்"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Encounter
    தும்கா:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்த என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Encounter 
    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Jharkhandencounter #Naxals
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சட்டார்பூர் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர், நக்சல் தடுப்பு மற்றும் போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இன்று காலை போலீஸ் படையை கண்ட நக்சலைட்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். நக்சல்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மூன்று நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவருடையை உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு நக்சலைட்டுகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், ஏகே-47 உட்பட பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. #Jharkhandencounter #Naxals
    ஒடிசாவின் கந்தமால், பலாங்கிர் மாவட்டங்களில் பாதுகாப்பு படை நடத்திய நடந்த என்கவுண்டரில் 6 நக்சல்கள் சுட்டுக் கொன்றனர். #NaxalEncounter
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். 



    இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

    இதேபோல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள கோலங்கி கிராமத்தின் அருகே சுடுகும்பா காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரு பெண்கள் உள்பட 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #NaxalEncounter
    ×