search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவெண்காடு"

    ஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.
    ஓம் அழகனே போற்றி
    ஓம் அருளாகரனே போற்றி
    ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
    ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அழகுருவே போற்றி
    ஓம் அம்பு பீடனே போற்றி
    ஓம் அலிக்கிரகமே போற்றி
    ஓம் அலங்காரனே போற்றி
    ஓம் ஆனந்தனே போற்றி
    ஓம் ஆயில்ய நாதனே போற்றி
    ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
    ஓம் இரு வாகனனே போற்றி
    ஓம் இளை நாதனே போற்றி
    ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
    ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
    ஓம் உயர்ந்தவனே போற்றி
    ஓம் உகந்தவனே போற்றி
    ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
    ஓம் உடலிற் தோலானவனே போற்றி
    ஓம் கலைவாணனே போற்றி
    ஓம் கல்வியருள்பவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
    ஓம் கவியரசே போற்றி
    ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
    ஓம் கிரஹபதியே போற்றி
    ஓம் கிரகபீடாஹரனே போற்றி
    ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
    ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
    ஓம் குஜன் பகைவனே போற்றி
    ஓம் குதிரை வாகனனே போற்றி
    ஓம் கேடயதாரியே போற்றி
    ஓம் கேட்டை நாதனே போற்றி
    ஓம் சசி சுதனே போற்றி
    ஓம் சந்திர குலனே போற்றி
    ஓம் சத்வ குணனே போற்றி
    ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
    ஓம் சிவனடியானே போற்றி
    ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
    ஓம் சிங்க வாகனனே போற்றி
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் சுப கிரகமே போற்றி
    ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
    ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
    ஓம் ஞானியே போற்றி
    ஓம் ஞான நாயகனே போற்றி
    ஓம் தவசீலனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தயாகரனே போற்றி
    ஓம் தனிக்கோயிலானே போற்றி
    ஓம் தாரை மகனே போற்றி
    ஓம் தரித்ர நாசகனே போற்றி
    ஓம் திருவுருவனே போற்றி
    ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
    ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
    ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி
    ஓம் தேவனேபோற்றி
    ஓம் தேரேறி வருபவனேபோற்றி
    ஓம் நட்சத்ரேசனேபோற்றி
    ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
    ஓம் நாற்கரனேபோற்றி
    ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
    ஓம் நான்காமவனேபோற்றி
    ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
    ஓம் பயிர்க் காவலனேபோற்றி
    ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி
    ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
    ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
    ஓம் பித்தளை உலோகனேபோற்றி
    ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
    ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி
    ஓம் புராணத் தேவனேபோற்றி
    ஓம் புலவர் பிரானேபோற்றி
    ஓம் புலமையளிப்பவனேபோற்றி
    ஓம் பூங்கழலடியனேபோற்றி
    ஓம் புண்ணியனேபோற்றி
    ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
    ஓம் பொன்னணியனேபோற்றி
    ஓம் பொற்கொடியோனேபோற்றி
    ஓம் பொன்மேனியனேபோற்றி
    ஓம் பொன்னாடையனேபோற்றி
    ஓம் போகமளிப்பவனேபோற்றி
    ஓம் மணிமுடியனேபோற்றி
    ஓம் மரகதப் பிரியனேபோற்றி
    ஓம் மனோகரனேபோற்றி
    ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
    ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
    ஓம் ரவி மித்ரனேபோற்றி
    ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
    ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி
    ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
    ஓம் வள்ளலேபோற்றி
    ஓம் வல்லபிரானேபோற்றி
    ஓம் வாட்கரனேபோற்றி
    ஓம் வடகீழ் திசையனேபோற்றி
    ஓம் வாக்கானவனேபோற்றி
    ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
    ஓம் வித்தகனேபோற்றி
    ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
    ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி
    ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
    ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
    ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
    ஓம் புத பகவானே போற்றிபோற்றி
    நரம்புத் தளர்ச்சி உடையவர்களும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் அவசியம் தரிசித்துப் போக வேண்டிய தலம் திருவெண்காடு. இந்த கோவிலில் பரிகாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    புதன் பகவான் உங்கள் ஜாதகத்தில் மீனத்தில் நீசம் பெற்று இருந்தாலும், செவ்வாய், சந்திரனுடன் சேர்ந்து இருந்தாலும், 6, 8, 12-ல் அமையப் பெற்றிருந்தாலும், கோசாரப்படி உங்கள் ராசியில் சஞ்சாரிக்கும்போதும், (ஒரு மாத காலம்) மிதுனம், கன்னிராசி, லக்னத்தில் பிறந்திருந்தாலும், புதன்கிழமை பிறந்தவராக இருந்தாலும், புதன் திசை, புதன் புத்தி நடந்து கொண்டு இருந்தாலும்,

    5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தாலும், தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் ஐந்து வந்தாலும், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்திருந்தாலும், திருவெண்காடு வந்து, புதன்கிழமை, புதன் ஓரையில் புதன் பகவானை வழிபட்டுப் பரிகார பூஜை செய்தால் கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் எல்லாம் உண்டாகும்.

    நரம்புத் தளர்ச்சி உடையவர்களும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் அவசியம் தரிசித்துப் போக வேண்டிய தலம் இது. மனநோய், சோகை, புற்றுநோய், வாதநோய், நரம்புத் தளர்ச்சி, வெண்குட்டம், ஆண்மைக்குறைவு, சீதள நோய் ஆகிய நோய்களுக்கு புதனே காரணமாக இருப்பதால் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்டவர் அவசியம் திருவெண்காடு வந்து, புதன் பகவானுக்கு பரிகார பூஜை செய்து ஆக வேண்டும்.
    திருவெண்காடு தலம் நால்வர் மற்றும் பல்வேறு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்புக் குரியது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருவெண்காடு தலம் நால்வர் மற்றும் பல்வேறு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிறப்புக் குரியது. அது பற்றிய விபரம் வருமாறு:-

    திருஞானசம்பந்தர்- இவர் இத்தலத்தின் இறைவன் பேரில் மூன்று தேவாரத்திருப்பதிகங்கள் அருளி உள்ளார். இத்திருப்பதிகங்களில் திருவெண்காட்டின் இயற்கைக் காட்சியையும், இறைவன் அழகையும் இறைவனுடைய வியா பகத்தன்மையையும், அடியார்களுக்கு அருளும் பெற்றியையும், எமன் திறலைழித்த வன்மையையும், முக்குளநீர்ப் பெருமையையும் கூறியிருக்கின்றார்.

    பசுங்கிளிகளும் இறைவன் திருநாமத்தைப் பண்மொழியால் பயில்கின்றன என்றும், முக்குள நீராடி வழிபடுவர் பிள்ளைப்பேறடைவதுடன் நினைத்த வரம் பெறுவர் என்றும், அவர்களைத் தீவினைகள் தாக்காது என்றும், தொழுவார் தங்கள் நோய்கள் தள்ளிப்போக அருளும் தலைவன் என்றும் இன்னும் பலவாறாக சிவபெருமான் பெருமைகளை பாடி உள்ளார்.

    திருநாவுக்கரசர்- இவர் இத்தலத்தைப்பற்றி இரண்டு திருப் பதிகங்கள் அருளியுள்ளார். மேலும், சேத்திரக் கோவைத் திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம் இவைகளிலும் திருவெண் காட்டைப்பற்றிபாடி அருளி யுள்ளார்.

    திருமுதுகுன்ற திருப்பதிகப்பாடல் ஒன்றில் “ வெண் பாடு மேவிய விகிர்தன் தன்னை” என்று கூறி யிருக்கிறார். சம்பந்தர் பதிகத்தின் முதற்பாடலான “கண் காட்டு நுதலானும்” என்பதைப்போலவே, அப்பர் திருப்பதிக முதல் பாடலும் அமைந்திருப்பது கண்டு இன்புறத்தக்கது.

    திருக்குறுத் தொகைப்பாடல்கள் நெஞ்சைப்பார்த்து அறிவுறுத்துவதாக உள்ளன. “நெஞ்சமே! இறைவன் உறை யும் திருவெண்காடடைந்து உய்வாயாக” என்று கூறுகிறார்.

    திருத்தாண்டகத்தில் சிவபெருமான் திருமேனி அழகையும் இறைவர் எங்கும் தங்கி நிற்கும் எழிலையும் பிச்சை ஏற்றுத்திரியும் தன்மையையும், அடியார்களுக்கு வேண்டும் வரம் அளிக்கும் பண்பையும், இன்னும் இறைவனது செயல்கள் பலவற்றையும் அகப் பொருட்டுறையியல் அழகு பெற அமைத்துத்திருவாய் மலர்ந்தருளியுள்ளார். தாண்டகச் செய்யுளில் “வெண் காடே என்பீராகில் வீடாத வல்வினைநோய் வீட்டலாமே” என அறிவுறுத்துகிறார்.

    சுந்தரமூர்த்தி சுவாமிகள்- இவர் இத்தலத்திற்கு ஒரு திருப்பதிகம் பாடி அருளியுள்ளார். ஒவ்வொரு பாடலின் முற்பகுதியில் இறைவனது சிறப்புக்களை கூறி, பிற்பகுதியில், “இவ்வளவு பெருமைகளை உடைய நீர் மனைகள் தோறும் தலைகையேந்தி விடங்கராகித்திரிவதும், காமனைக் கண்ணழலால் எரித்ததும், பிச்சை ஏற்க எருகேறி அலைவதும், கடலின் நஞ்சுமுண்டதும், வேதம் ஓதித்திரிவதும், யானையை உரித்ததும், அயனும் மாலும் அணுகாவண்ணம் அனல் பிழம்பாய் நின்றதும் எதற்காக” என்று கேட்கும் முறையில் அமைந்திருக்கிறது.

    மாணிக்கவாசக சுவாமிகள்- இவர்அருளிய திரு வாசகத்தின் கீர்த்தித் திருஅகவலில் “விருந்தி னனாகி வெண்காடதனில் குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்” என்று கூறியிருக்கின்றனர். மேலும் திருக்கோவையாரில் “வேலன் புகுந்து வெறியாடுக” என்று தொடங்கும் பாடலிலும் வெண்காட்டைக்குறிப்பிடுகிறார்.
    கபிலதேவ நாயனார்- இவர் இயற்றிய சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் இரண்டு பிரபந்தங்களும் பதினொராந் திரு முறையில் இடம் பெற்றுள் ளன. வெண்காடர் அன்பர் சித்தத்தடங்குவர் என்றும், துயரத்தைத் தீர்ப்பரென்றும் இந்த நூல்களிலுள்ள இரண்டு பாடல்களில் கூறி இருக்கிறார்.

    பரணதேவ நாயனார்-இவர்அருளிய சிவபெருமான் திருவந்தாதி என்ற நூலும் பதினொராம் திருமுறையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. “புகலூர் உடையாய்” என்று தொடங்கும் பாசுரத்தில் “வெண்காடா வேலை விட முண்டாய் வெள்ளேற்றாய் வெண்காடா என்பேனா நான்” என்று அருளிஇருக்கிறார்.

    பட்டினத்தார்- இவர் பாடி அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருவேகம் முடையார் திருவந்தாதி ஆகியவைகளும் பதினொராம் திருமுறையிலுள்ளன. மும்மணிக்கோவை, “ தெய்வத்தாமரை” என்று தொடங்கி “தெய்வத்தாமரையே”என்று முடிகிறது. அதன் கடைசி பாடலில் “வெண்காடன்” என்று குறித்திருக்கிறார். திருவந்தாதியில், “நினைவார்கருளும் பிரான்” என்று தொடங்கும் பாடல்களில் சொல்லும் போது திருவெண்காட்டையும் சொல்லி இருக்கிறார்.

    சேக்கிழார்- இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தில் சம்பந்தர் புராணத்திலும்,ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும், திருவெண்காட்டைப் பற்றிக்கூறியிருக்கிறார். திருச்சாய்க்காட்டை வணங்கிய பின் சம்பந்தர் திருவெண்காடு போய் வழிபட்டதை நான்கு பாடல்களில் சொல்லியிருக்கிறார். ஏயர்போன் கலிக்காம நாயனார் புராணத்தில் சுந்தரரர் திருச்சாய்காட்டை வணங்கி, திருவெண்காட்டிற்கு வந்து வழிபட்டுப் பதிகம் பாடி திருநனிபள்ளிக்குச் சென்றதைக் கூறியிருக்கிறார்.
    திருவெண்காடு தலத்தில் புதனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இவரை வழிபட நரம்பு தொடர்புடைய நோய்கள் மட்டுமின்றி சகல நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    உலகத்திலுள்ள உயிர்கள் தம்மை வழிபட்டு உய்யும் பொருட்டு இறைவன் திருமேனி தாங்கித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள் திருப்பதிகம் பெற்றவை மிகச் சிறந்தவை. அவைகளைப் பாடல் பெற்ற பதிகள் என சொல்வார்கள். சோழ நாடு, ஈழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கொங்கு நாடு, நடு நாடு, தொண்டை நாடு, துளுவ நாடு, வடநாடு என நாட்டு வகையாக அத்தலங்களை நம் முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர். அதிலும் சோழ நாட்டை இரு பகுதிகளாக வகுத்துள்ளனர்.

    அவை காவிரியாற்றுக்கு வடகரையில் 63, தென்கரையில் 127 திகழும் தலங்களாகும். இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.

    சோழ நாட்டில் இரண்டு ஆரண்யேசுவரர்கள் மிகவும் புகழ் வாய்ந்தவர்கள். ஒருவர் வேதாரண்யேசுவரர். இன்னொருவர் திருவெண்காட்டில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவேதாரண்யேசுவரர். மூர்த்தி தல தீர்த்தத்தில் காசிக்கு நிகரான தலம் இது. திருவெண்காடு தலத்திலும் சிவ பெருமான் தம் வீரத்தை நிலை நாட்டி அந்தநார்ந்த திருக்கோலத்தை இன்னமும் காட்டி வருகிறார். அவர் தான் அகோரசிவம்.

    அசுரர்கள் தவம் கிடந்து வரம் கேட்டனர். இறைவனிடம் வரம் பெற்ற பின் தங்களது அசுரக்குணத்தை வெளிப்படுத்துவர். மருத்துவாசுரனும் அப்படித்தான் சிவபிரானிடம் வரம் பெற்ற பின்பு தேவர்களை வருத்த ஆரம்பித்திருக்கிறான். தீய சக்தியை இனியும் வளர்த்தால் ஆகாது என்னும் நிலை உருவாகிட, பெருமான் மண்ணுலகும் விண்ணுலகும் அஞ்சும்படியாக அகோர சிவமாக ஆர்த்தெழுந்துச் சென்று மருத்துவாசுரனை அடக்கினார். அதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் ஈசன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார்.

    இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
    திருவெண்காட்டிற்கு தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் காவிரியாறும், வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் மணிகர்ணிகை என்னும் மண்ணியாறும் ஓடுகின்றன. திருச்சாய்காடு (சாயாவனம்), காவிரி பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம், திருவலம்புரம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருக்கலிக்காமூர் முதலிய தலங்கள் திருவெண்காட்டைச் சூழ்ந்துள்ளன. திருநாங்கூர், திருவாலி, திருநகரி என்ற வைணவப் பதிகளும் இதன் அருகே இருக்கின்றன.

    காசிக்கு சமமாகத் திகழும் ஆறு தலங்களுள் திருவெண்காடும் ஒன்று. பிற தலங்கள் திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாய்க்காடு, ஸ்ரீவாஞ்சியம் ஆகியனவாகும். வால்மீகி ராமாயணத்தில் இத்தலத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சுவேதாரண்ய ஷேத்திரத்தில் எமனை சுவேதாரண்யேசுவரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரதூஷனாதிகளை ராமன் சம்ஹாரம் செய்தான் என்று வால்மீகி முனிவர் ஆரண்ய கண்டத்தில் குறிப்பிட்டுள்ளது இத்தலத்தின் தொன்மைக்கு சான்றாகத் திகழ்கிறது.

    ஆதி சிதம்பரம் இதுவாகும். உலகத்தில் உள்ள உயிர்கள் வாழும் வண்ணம் பெருமான் 1008 விதமான தாண்டவம் புரிந்தார். இத்தலத்தில் பெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்தார். ஆனந்த தாண்டவம், காளீ நிருத்தம், கவுரீ தாண்டவம், முனி நிருத்தம், ஸந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதா தாண்டவம், ஸம்ஹார தாண்டவம், பைஷாடனம்” ஆகிய ஒன்பது தாண்டவ ஷேத்திரங்களுள் திருவெண்காடு முதன்மையானது. சிதம்பரத்தில் நிற்குணமாக ஆடி முக்தியைத் தருகிறார். திருவெண்காட்டில் சகுணமாக ஆடி இருமைப் பயனும் தருகிறார்.

    விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, இந்திரன், ஐராவதம் சிவப்பிரியர் வேதராசி, சுவேதகேது, சுவேதன் முதலியவர்கள் இத்தலத்தை வழிபட்டுள்ளனர்.
    சக்தி பீடங்கள் 108 ஆகும். சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று. நவகோள்களில் புதன் வழிபட்ட தலம். இத்தலத்தில் புதனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இவரை வழிபட நரம்பு தொடர்புடைய நோய்கள் மட்டுமின்றி சகல நோய்களும் தீரும்.

    சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் ஒன்றாகிய ஸ்ரீஅகாரமூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவ்வூர் சங்கல்பத்தில் “பிர்மஸ்மசானம்” என்று சொல்லப்படுகிறது. பிரமசமாதி அம்பிகைக் கோயிலுக்கு வடபால் உள்ளது. இது, “எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும், மண்மிசை மால்பலர் மாண்டர்”, “நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்” என்ற கணக்கில் இறந்தவர்களுடைய ஈமச்சுடலையாகும்.

    இத்தலத்தில் சுவேதாரண்யேசுவரர், ஸ்ரீநடராஜர், அகோரமூர்த்தி என சிவமூர்த்தங்களாக மூன்று அமைந்துள்ளன. இத்தலத்தில் தீர்த்தங்கள் மூன்று -அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தங்கள். இத்தலத்தில் தல விருட்சங்கள் மூன்று - ஆல், கொன்றை, வில்வம்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வராலும் திருப்திகம் பெற்றத் தலம் பரஞ்சோதி முனிவர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்தடிகள், சேக்கிழார், கச்சியப்ப சிவாசாரியார், காஞ்சி சிதம்பர முனிவர், சோமசுந்தர தேசிகர், சைவ எல்லப்ப நாவலர் முதலியோர் இத்தலத்தைப் போற்றியுள்ளனர்.

    பதினோராம் திருமுறையில் பாடிய திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தலம்.சிறுத்தொண்டர் இளமையில் வாழ்ந்ததும், அவர்தம் மனைவி திருவெண்காட்டு நங்கையும், சந்தனத்தாதியும் பிறந்ததுவும் இத்தலமாகும். பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த முழுமுதல் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் அவதரித்த தலம்.

    திருஆவடுதுறை ஆதீன எட்டாவது குருமகா சந்நிதானமாகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலமாணி தேசிகர் அவர்கள் சமாதி இவ்வூரின் மேல வீதியில் மேல்திசையில் உள்ளது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராசார்ய சுவாமிகளின் பரம்பரையில் வந்தவருமாகிய ஸ்ரீபரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சமாதி இவ்வூரிலுள்ள மணிகர்ணிகை கட்டத்தில் உள்ளது. இத்தல புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகராகாச வித்தையைப் பற்றி ‘தகரவித்யா பிரகாசிகை’ என்னும் நூலை சுவாமிகள் எழுதியுள்ளார்.

    சோழர் காலத்தில் செம்பு, ஐம்பொன் வார்ப்பு விக்ரகங்களை உருவாக்கும் தொழில் கூடமாகத் திருவெண்காடு விளங்கியது. இத்திருக்கோயிலில் உள்ள வார்ப்புச் சிலைகள் மிக நேர்த்தியானவை. திருவெண்காட்டில் தோண்டி எடுக்கப்பட்ட சிலைகள் சென்னையிலும், தஞ்சையிலும் உள்ள கலைக் கூடங்களிலும் சிறப்பாக திகழ்கின்றன.
    திருவெண்காடு தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. நடராஜ பெருமான் சிதம்பரத்துக்கு முன்பே இங்கே நடனமாடியதால் அந்த பெயர் பெற்றுள்ளது.
    திருவெண்காடு தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. நடராஜ பெருமான் சிதம்பரத்துக்கு முன்பே இங்கே நடனமாடியதால் அந்த பெயர் பெற்றுள்ளது. இதால் இக்கோவிலில் தில்லைச் சிதம்பரம் போன்றே நடராச சபை அமைந்துள்ளது. ஸ்படிலிங்கமும் ரகசியமும் இங்கு உள்ளன. அன்றாடம் ஸ்படிக லிங்கத்திற்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும், பஞ்ச கிருத்திய பூஜைகளும் நடைபெறுகின்றன.

    ஆடல் வல்லானின் அழகிய திருமேனி உணர்த்தும் தத்துவங்கள் பல. இவர் காலில் 14 உலகங்களை குறிக்கும் 14 சதங்கைகளுடைய காப்பு அமைந்துள்ளது. பிரணவம் முதல் இறுதியாகவுள்ள 81 பதமந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் அமைந்த அரைஞாண் இடுப்பில் திகழ்கின்றது.

    முடிந்துவிட்ட 28 யுகங்களை குறிக்கும் 28 எலும்பு மணிகள் கோத்து கட்டிய ஆரத்தையும் இவர் அணிந்துள்ளார். தலையில் மயில்பீலியும் மீன்வடிவில் கங்கையும், இளம்பிறையும் ஊமத்தம்பூவும், வெள்ளேருக்கும் சூடியுள்ளார்.

    சோடச கலைகளை உணர்த்தும் 16 சடைகளும் நடராசரிடம் இருப்பதை காணலாம். 15 சடைகள் தொடங்குகின்றன ஒன்று கட்டியுள்ளது. தோளில் ஒரு சிறு துண்டும், இடையில் புலித்தோல் அணிந்தும், இருகைகளில் உடுக்கை தீப்பிழம்பும் ஏந்தியுள்ளார். காலின் கீழ் முயலகனுடன் காட்சியளிக்கின்றார்.
    இந்த தனி சன்னதி சற்று இருட்டாகத்தான் உள்ளது. பக்தர்கள் நடராஜ பெருமானை உற்று நன்கு பார்த்தால் மேற்கண்ட அணிகலன்களை கண்டு ரசிக்கலாம்.
    புதபகவான் பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம். இவரை துதித்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகிவிடும்.
    சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாக புதன் பிறந்தார். இவர் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து நவகோள்களில் ஒன்றான கிரகபதவியை அடைந்தார். நான்கு குதிரைகள் கொண்ட தேரினை உடையவர். சந்திரனுக்கு அவிட்டத்தில் உதித்தவர். சுக்கிரனுக்கு மேல் இரண்டு லட்சம் யோசனை தூரத்தில் இருக்கிறவர்.

    சூரியனை சுற்றிவரும் முதல் கிரகம் புதனாகும். புதன் சூரியனுக்கு 5 கோடியே 79 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.

    24 மணிக்கணக்கில் தன்னைத்தானே ஒரு தரம் சுற்றிக் கொண்டும் 88 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 9500 மைல், குறுக்களவு 3000 மைல் என்றும் கூறுவர்.

    சந்திரன் புதனுடன் திருவெண்காடு அடைந்து சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், இக்சயதுரோகத்தையும் நீங்கப் பெற்றான்.இத்தலத்தில் புதனுக்கு தனிக்கோவில் இருக்கிறது.

    சுவேதாரண்யப் பெருமானை வழிபட்டு புதன் பகவானை தரிசித்தால் கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை பெறலாம். கல்விக்கு காரணமாக இவர் விளங்குவதால் வித்யாகாரகன் என்றும் இவரை கூறுவர். வித்தையைத் தரும் இவருடைய சன்னிதி பிரம்மவித்யாம்பிகையின் இடது பாகத்தில் அமைந்திருப்பது பொருத்தமேயாகும்.

    மேலும் வித்தைக்கு அதிபதியான பிரம்மனின் சமாதியும் புதன் சன்னதிக்கு தென்பால் அமைந்துள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் கோவிலும், சந்திர தீர்த்தமும் புதன் சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ளன.

    மேலும் அலிக்கிரகமான புதன் ஐந்தாம் இடச்சம்பந்தம் பெறுவதனால் சிலருக்கு குழந்தை பிறக்காது. மேற்படி தோஷம் உள்ளவர்களும் இத்தலத்திற்கு வந்து மூன்று தீர்த்தத்தில் மூழ்கி நீராடி சுவேதாரண்ய பெருமானை வழிபட்ட பின்பு புதனை வழிபட்டால் குழந்தை பேற்றினை பெறலாம்.

    புதன் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் அறிவுக் குறைபாடும், கல்வியில் மந்தமான நிலையும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படலாம். இத்தகைய குறைகளையும் இத்தலத்துக்கு சென்று வழிபட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    இங்கே புதபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். மகிமை வாய்ந்தவர் என்பது கண்கூடு. புத பகவான் வெண்காட்டு ஈசனாரை நோக்கி தவம் செய்து தன் அலிதோஷம் நீங்கி ஒன்பது கிரகங்களில் ஒன்றானார் என்பது வரலாறு. இவர் செய்த தவத்தின் காரணமாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிகாரியானார் என்கிறது அபிதான சிந்தாமணி எனும் நூல்.

    புதபகவான் பூஜித்து பேறு பெற்ற ஸ்தலம். இவரை துதித்தால் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகிவிடும்.புதன் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், பண்டிதர்களாகவும் இருப்பர். செய்யும் தொழில் மேன்மை அடையவும், பேச்சுத்திறன், கணிதம், தர்க்கம், கலை ஆகியவற்றில் சிறப்பு மிக்கவராகவும் விளங்க முடியும். அரசியல் மேன்மை, வைத்தியத்தில் நிபுணத்துவம், இசை, நாட்டியம், பண்மொழிகளில் புலமை புத்திரப்பேறு முதலியவை புதபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகும்.

    உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். புதனுக்கு பன்னிரண்டு ராசிகளில் மிதுனமும் கன்னியும் சொந்த வீடு. கன்னிராசியை உச்ச வீடாகவும், மிதுனம் நீச வீடாகவும் அமையப்பெற்றவர்.

    இங்கே இவருக்குப் பதினேழு தீபம் ஏற்றி, பதினேழு முறை வலம் வந்து புதபகவானை வழிபட்டால் திருமண தோஷம், புத்திரதோஷம் முதலியன நீங்கும். இவருக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து, வெண்காந்தள் மலர் சூட்டி, பாசிப்பருப்பு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும்.
    திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்த கோவில் பற்றி 20 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    1. திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    2. புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

    3. ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகம கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

    4. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

    5. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.

    6. திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.

    7. சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.

    8. திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.

    9. திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.

    10. அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.

    11. இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அந்த அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தி உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும் அதை பார்க்க முடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

    12. திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.

    13. திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

    14. இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.

    15. இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.

    16. காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

    17. இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தர வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.

    18. நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.

    19. திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.

    20. சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது.
    திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது.
    திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். சிவபெருமானின் பஞ்சப்பிரம மூர்த்தங்களுள் தென்முகமாக இருப்பது அகோரமூர்த்தியாவர். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் அகோர மூர்த்தி 43-வது மூர்த்தியாவார். இத்திருவுருவம் இத்தலத்தில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது.

    இப்பெரிய கோயிலின் மேலை பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியாக தன் அருள் மாட்சியைத் துலங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அகோர சிவம்.
    இவரை அடுத்துள்ள சன்னதியில் இப்பெருமானது உற்சவ படிமத்தைக் காணலாம். பக்தர்களைக் காக்க இதோ புறப்பட்டு விட்டேன்! என்று கூறுவார் போன்றும் - அருள் சிறக்க ஓடி வருவார் போன்றும் அமைந்துள்ளது. பெருமானின் முன்காலும், இடது காலும், உருவத்தில் கொஞ்சம் கடுமை காட்டுகிறார் தான் என்றாலும், அருட்கண்ணோட்டத்தில் இவரே சிறந்த வரப்பிரசாதி.

    அகோர மூர்த்தியின் திருவுருவைக் காணக்கண்கோடி வேண்டும். இவர் கரிய திருமேனி உடையவர். இவர் இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார்.

    எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார்.

    சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக்கக்க கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அப்பர் சுவாமிகள் இத்தலத்தைப் பற்றிப் பாடிய “தூண்டு சுடர் மேனி” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் அகோரமூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம்.

    இருபத்தெட்டு ஆகமங்களில் உத்தர காரண ஆகமத்தில் இவரை அகோராஸ்திர மூர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தட்ச யாகத்தை அழிக்க சிவபெருமானால் நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட அகோர வீரபத்திரர் வேறு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி வேறு ஆவார். இரு அம்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை வாசகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

    அகோரமூர்த்தி எப்படி உருவானார் என்ற வரலாறு வருமாறு:-

    மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு பல துன்பம் விளைத்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். அசுரன் வெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப்பின் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினார்.

    இதுபற்றி நந்தி, திருவெண் காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங் களில் ஒன்றாகிய அகோர முகத்தினின்று அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்டமாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடி யில் காணலாம். காயம் பட்ட இடபதேவரை சுவே தாரண்யே சுவரர் ஆட்கொண்டார். இன் றும் இக்கோவிலின் நிருத்த மண்டபத்தில் சிலை வடிவில் இதை காணலாம்.

    மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரபூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாக பூஜை நடைபெறுகின்றது.

    அகோர சிவமாம் அண்ணலின் சன்னதிக்கு எதிரே அமைந்த சன்னதி ஒன்றில் சுவேதமகாகாளி அழகெல்லாம் திரண்டு வீரக்கோலத்தில் அருட்பொலிவோடு ஐயனுக்கு ஏற்ற அம்மையாக வீற்றிருப்பதையும் காணலாம்.
    ×