என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை கைது"

    • காயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக பத்தனாபுரததில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
    • போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனின் தந்தை வின்சு குமாரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பதானபுரம் பகுதியை சேர்ந்தவர் வின்சு குமார். இவருக்கு 11 வயதில் மகன் இருக்கிறான். சம்பவத்தன்று அவன் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளான். விளையாடிவிட்டு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறான்.

    இதனால் ஆத்திரமடைந்த வின்சுகுமார், நண்பர்களுடன் விளையாடச் சென்றது குறித்து கேட்டு தனது மகனை கண்டித்துள்ளார். மேலும் கம்பியை சூடாக்கி, மகனின் தொடை மற்றும் கால்களில் சூடு வைத்தார். இதில் காயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக பத்தனாபுரததில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

    இதுகுறித்து சிறுவனின் தாய், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனது தாயிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனின் தந்தை வின்சு குமாரை கைது செய்தனர்.

    • விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சபாபதி (வயது45). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.

    இவர் கடந்த 5-ந் தேதி தனது பைக்கில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் ஓட்டி வந்த பைக் சபாபதி பைக் மீது மோதியது. இதில் சபாபதிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

    விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.

    இதில் பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. எனவே புதிய மோட்டார் வாகன தடைச் சட்டத்தின் படி சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை கூலித் தொழிலாளி விஜயகாந்த் (43) என்பவரை குற்றவாளியாக சேர்த்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர். சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது எனவும் 12 மாதங்களுக்கு பைக்கின் பதிவு சான்றிதழை இடை நீக்கம் செய்யவும் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

    • வர பிரசாத்தின் மூத்த மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.
    • விரக்தியில் இருந்த வர பிரசாத் தனது 2-வது மகள் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் வர பிரசாத். இவர் சவ ஊர்வலம் வாகன டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர். 2-வது மகள் லிகிதா ஸ்ரீ (வயது 16).

    இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார். பிரசாத்தின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஆனாலும் தனது மகள்களை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அவர் எண்ணினார்.

    ஆனால் அவருடைய மூத்த மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த வர பிரசாத் தனது 2-வது மகள் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் லிகிதா ஸ்ரீயும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இவரது காதல் விவகாரம் தந்தை வரப்பிரசாத்திற்கு தெரியவந்தது. அப்போது தனது மகளிடம் நீ காதலிக்கும் வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. எனவே அவனை நீ காதலிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்தார்.

    இருப்பினும் லிகிதா ஸ்ரீ வாலிபர் உடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வரப்பிரசாத் நேற்று மாலை மகள் கல்லூரியில் இருந்து வந்தவுடன் வாலிபர் உடனான காதலை கைவிடும்படி எச்சரித்தார்.

    இதற்கு லிகிதாஸ்ரீ மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வரபிரசாத் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தை அறுத்தார். கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் லிகிதா கதறி துடித்தார்.

    சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறந்து போன மகள் உடலுடன் செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    அப்போது அவர் தனது பேச்சை கேட்காமல் வாலிபரை காதலித்ததால் மகளை கழுத்து அறுத்துக் கொண்டதாக வீடியோவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசில் சரண் அடைந்தார்.

    தனக்கு பிடிக்காத வாலிபரை காதலித்ததற்காக பெற்ற மகளையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தர்மராஜ் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார். இதுபற்றி அபிஷா மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
    • நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்த தர்மராஜை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழகோடன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். கட்டிட தொழிலாளி.

    இவருக்கும் பரப்பாடி அருகே உள்ள பாண்டிச்சேரியை சேர்ந்த அபிஷா (வயது 23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு எட்வின் (3), செல்லம் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவரது 2-வது ஆண் குழந்தை செல்லத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அபிஷா, தர்மராஜிடம் பணம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அபிஷா குளிப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் திரும்பி வந்த போது, ஆண் குழந்தை செல்லம் அழுதபடி இருந்தது. இதுபற்றி கணவர் தர்மராஜிடம் கேட்டதற்கு அவர் குழந்தைக்கு எறும்பு பொடியை பாலில் கலந்து கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிஷா உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக முனைஞ்சிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

    அப்போது தர்மராஜ் தானும் எறும்பு பொடியை குடித்து விட்டதாக கூறி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதற்கிடையே தர்மராஜ் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார். இதுபற்றி அபிஷா மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்த தர்மராஜை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், தர்மராஜின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு, தோட்டம் உள்ளது. இதில் தர்மராஜிக்கு இதுவரை பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவருக்கும், அவரது பெற்றோருக்கும் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் தர்மராஜின் தாயார் செல்வகனிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அபிஷா, மாமியார் வீட்டிற்கு சென்று வீட்டு வேலைகள் செய்து கொடுத்தார். இது தர்மராஜிக்கு பிடிக்கவில்லை. இதையொட்டி அவர் மனைவியிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

    அந்த ஆத்திரத்தில் குழந்தைக்கு விஷம் குடித்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

    • மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது.
    • பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனையின்பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

    அந்த சிறுமி கூறுகையில், நான் ஜெய்ஹிந்த்புரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை பெயிண்டராக உள்ளார். அவர் எனக்கு ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். நான் உயிருக்கு பயந்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தேன். அவரது தொல்லை சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. வேறு வழியின்றி தாயாரிடம் விஷயத்தை தெரிவித்தேன் என்றார்.

    இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • 13 வயது மாணவி ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • விமலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனையடுத்து சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் (வயது 35) என்பவரை திருமணம் செய்தார்.மாணவியின் தாய் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் மாணவியின் வளர்ப்பு தந்தை மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனை வெளியே கூறினார் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் மாணவி தனது தாயிடம் சொல்லாமல் இருந்தார்.இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட விமல் தொடர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.

    இதனையடுத்து மாணவியை அவரது தாய் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து டாக்டர்கள் அவரது தாயிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தார்.

    அப்போது மாணவி வளர்ப்பு தந்தை விமல் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாகவும், அவர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என தெரிவித்தார்.

    இது குறித்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை விமலை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே காரணை பெரியார் நகரில் வசித்து வருபவர் வருண். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வருணின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்துக்கு முன்பே வருணுடன் நெருங்கி பழகியதால் விஜயலட்சுமி கர்ப்பமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணை அழைத்து பேசி இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அப்போது வருண் இந்த திருமணத்தில் எனது பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அவர்கள் வரமாட்டார்கள். பின்னர் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். வருணின் பெற்றோர் இல்லாமலேயே திருமணம் அரங்கேறி உள்ளது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது பெற்றோருக்கு தெரியாமலேயே வருண் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் மாமனார் வீட்டின் ஆதரவுடனேயே வருண் வசித்து வந்த நிலையில் மாமனார் குடும்பத்தினருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோருடன் சென்று விடலாம் என்று வருண் எண்ணியுள்ளார்.

    வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றுவிட்டது தெரிந்தால் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைத்த வருண் தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராமல் 4 மாத ஆண் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தையை வெளியில் அழைத்துச் சென்ற வருண் வாய், மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.

    பின்னர் உடலை சிறிய படுக்கை விரிப்பில் சுற்றி பெரும்பாக்கம் சுடுகாட்டு பகுதிக்கு உடலை தூக்கிச் சென்று புதரில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். இதன் பின்னர் மனைவி விஜயலட்சுமியிடம் சென்று, தமது குழந்தை கூடுவாஞ்சேரியில் எனது தோழி மகாலட்சுமியின் வீட்டில் உள்ளது. எங்கள் வீட்டுக்கு சென்று நாம் காதலிக்கும் விஷயத்தை முதலில் சொல்வோம். குழந்தையை பற்றி எதுவும் கூறிவிடாதே என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியும் இதனை சரி என கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார்.

    இதன் பின்னர் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு தனது பெற்றோரை பார்க்க சென்ற வருண், இவர்தான் எனது காதலி, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வருணின் பெற்றோரும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, வருணிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். நான் உங்கள் வீட்டில் பேசி சமாதானம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வருணோ குழந்தை இருக்கும் இடம் பற்றி முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜய லட்சுமி, தனது கணவரின் தோழியான மகாலட்சுமியின் வீட்டை தேடி கண்டுபிடித்து நேரில் போய் விசாரித்தார்.

    அப்போது மகாலட்சுமி, விஜயலட்சுமியிடம் உங்கள் குழந்தையை 4 மாதங்களுக்கு முன்பே வருண் அழைத்து சென்று விட்டார். 3 நாட்கள் மட்டுமே எனது வீட்டில் குழந்தை இருந்தது என்று கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்தே விஜயலட்சுமி உஷாராகி மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி மற்றும் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    வருணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 4 மாத குழந்தையை கொலை செய்து உடலை முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உடல் வீசப்பட்ட இடத்துக்கு வருணை அழைத்துச் சென்ற போலீசார் சம்பவ இடத்தில் இருந்து எலும்புக் கூடுகள் சிலவற்றை மீட்டுள்ளனர். குழந்தையின் உடலை சுற்றி வீசிய சிறிய படுக்கையும் கையில் அணிவிக்கப்பட்டிருந்த சிறிய வளையத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • குடித்து விட்டு ஊர் சுற்றி வந்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை குறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மகன் விநாயகம் (28). இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்துக்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய விநாயகத்துடன் சண்டை ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தனது மகன் விநாயகம் நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விநாயகம் மாரடைப்பால் இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்ய தயார் செய்து கொண்டிருந்த நிலையில் ஆவினங்குடி போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மகனை கொலை செய்து நாடகமாடிய ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுகுறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.

    • வெளிநாட்டில் மகேஷ் வேலை பார்த்தபோது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வித்யா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
    • படுகாயம் அடைந்த நக்‌ஷத்ராவை மீட்டு சிகிச்சைக்காக மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை அடுத்த புன்னமூடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). இவருடைய மனைவி வித்யா. இந்த தம்பதியின் ஒரே மகள் நக்ஷத்ரா (6). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். வெளிநாட்டில் மகேஷ் வேலை பார்த்தபோது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வித்யா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மகேஷ் சொந்த ஊர் திரும்பினார். அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.

    தொடர்ந்து மகேஷின் தந்தையும் ரெயிலில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் தாய் சுனந்தா (62), மகள் நக்ஷத்ராவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சுனந்தா பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் நக்ஷத்ராவும், மகேசும் மட்டும் இருந்தனர். அந்த சமயத்தில் நக்ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே பதற்றத்துடன் அங்கு சுனந்தா ஓடி வந்தார்.

    வீட்டு சோபாவில் கழுத்தில் வெட்டுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் நக்ஷத்ரா கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கு கையில் கோடாரியுடன் மகேஷ் ஆவேசமாக நின்றார்.

    பின்னர் திடீரென சுனந்தாவையும் அவர் தாக்கினார். அவர் தடுத்ததால் கையில் வெட்டு விழுந்தது. இதற்கிடையே அங்கு பொதுமக்கள் திரண்டதால் மகேஷ் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் படுகாயம் அடைந்த நக்ஷத்ராவை மீட்டு சிகிச்சைக்காக மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகேஷின் தாயார் சுனந்தாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த நிலையில் 2-வது திருமணம் செய்ய மகேஷ் பெண் பார்த்து வந்துள்ளார்.

    ஆனால் மகேசுக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததால், பலரும் மகேசுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. இதனால் மகேசுக்கு தன்னுடைய மகள் மீது வெறுப்பு ஏற்பட்டு கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து மாவேலிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி மகேஷை சிறையில் அடைத்தனர். 2-வது திருமணம் செய்ய இடையூறாக இருந்ததால் 6 வயது மகளை தந்தை கொடூரமாக வெட்டிக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
    • ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது தந்தை கூலித் தொழிலாளி. தாயார் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரி முடித்துவிட்டு மாலையில் சிவகாசியில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மாணவி பகுதி நேரமாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது தாயார் வேலைக்கு சென்றுவிட, வீட்டில் மாணவி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் தவறாக நடக்க முயன்றதோடு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    ஆனாலும் தந்தையின் பிடியில் இருந்து மாணவி தப்பி வீட்டிற்கு வெளியே வந்தார். சிறிது நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம், தந்தை தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றதை கண்ணீருடன் மாணவி தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் கணவரை கண்டித்துள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியையும், மகளையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வீட்டை விட்டு துரத்தினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கைது செய்தனர்.

    • வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    • வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் கேமிராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார். இதனை கண்டுபிடிப்பதற்காக அவர் வீட்டிலேயே தந்தைக்கு தெரியாமல் அவரை கண்காணிப்பதற்காக வீட்டில் மொபைல் கேமிரா பொருத்தி உள்ளார்.

    இந்நிலையில் அந்த கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த மகனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த முதியவர் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது மொபைல் கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதை பார்த்த மகன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீடியோவில் இருக்கும் பெண் குறித்து அவர் விசாரித்த போது தான் அது பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும், அந்த சிறுமியை முதியவர் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    இதையறிந்த முதியவரின் மகன் வீடியோ காட்சிகளை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.

    இந்நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசில் எதுவும் புகார் அளிக்க வேண்டாம் எனவும் அவர் சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் சிறுமியின் தந்தை இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் தந்தையை மிரட்டியதாக அவரின் மகனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைதான முதியவர் சிறுமியின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நைசாக பேசி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கைதான முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல சம்பவத்தை வீடியோ பதிவு செய்து பகிர்ந்ததற்காகவும், அதனை மறைத்து வைத்து மிரட்டியதற்காகவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் கேமிராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
    • ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சிவானந்தனா (வயது 12), தேவனந்தனா (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

    கடந்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி மகள்கள் 2 பேரையும் குருவாயூர் பாடிச்சேரே நாடாவிற்கு அழைத்துச்சென்றார். அங்குள்ள லாட்ஜில் மகள்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால் சோதனை செய்யப்பட்டது. அப்போது சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரது மகள்கள் அதே அறையில் இறந்து கிடந்தனர்.

    ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார். காயத்துடன் கிடந்த சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகள்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சிகிச்சையில் இருந்த சந்திரசேகரிடம் விசாரித்தபோது 2 மகள்களில் ஒருவருக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்தும், மற்றொரு மகளை தூக்கில் தொங்க விட்டும் கொன்றது தெரியவந்தது. மேலும் தனது கையை பிளேடால் அறுத்தும் தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். எதற்காக மகள்களை கொன்றார்? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×