என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் அலுவலகம்"

    • வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.

    இன்று காலை வழக்கம் போல் 8.45 மணி அளவில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிகளை தொடங்கினர். இந்த நிலையில் கலெக்டரின் அதிகாரபூர்வ மெயிலில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். கோரிமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது. பொதுமக்கள் அலுவலகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. சுமார் 1 ½ மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

    தமிழகத்தில் சவுக்கு சங்கர் வீட்டில் சமீபத்தில் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சூறையாடிய விவகாரத்தில் முறையான நடவடிக்கை இல்லாததை கண்டித்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

    • போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .
    • போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    நாகர்கோவில், அக்.27-

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர் .போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரசேகர் உட்பட 11 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்ட ரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.
    • அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ மக்கள், திருச்சபை கட்ட அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

    திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. சபை போதகர். இவர் அதே பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியார்பாளையம் பகுதியில் இடம் வாங்கி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கா ன பணிகளை தொட ங்கியபோது, ஒருசிலர் சபை கட்டுமான பணி நடந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, கட்டுமான பணிகளை தடுத்ததுடன், அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இதையடுத்து இதுதொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதிக்கோரி கடந்த பல மாதங்களாக கலெக்ட ரையும், வருவாய்துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் சொந்த இடத்தில் திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் செயல்களை கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் 50-க்கும் மேற்பட்டோரும், அனைத்து கிறிஸ்தவ சபை போதகர்களும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்ட த்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சப் கலெக்டர், வரு வாய்த் துறையினர், போலீஸ் உயரதிகாரிகள் பே ச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எங்களது சொந்த இடத்தில் திருச்சபை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அனுமதி கொடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறி, அந்த திருச்சபையைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட கிறிஸ்தவ மக்கள் விடிய, விடிய கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக நேற்றும் இன்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

    • வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
    • கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
    • 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

    வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம்‌. எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

    மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்.பி. கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகையில் லிப்ட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அதிக அளவில் பயனடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் அலுவலக வாளத்தில் உள்ள கூட்டரங்கில் பெரம்பலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், கூட்டுறவுத் துறையின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்குதல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்பதற்காக இன்று காலை போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரனும் உடனிருந்தார். இவர்கள் இருவரும் மேல் தளத்திற்கு செல்வதற்காக அங்கு இருந்த லிப்டில் ஏறி சென்றனர்.

    அப்போது திடீரென லிப்டின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து ஆபத்து மற்றும் அவசர கால கதவின் வழியே, சிக்கிக்கொண்ட அனைவரையும் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    சுமார் 30 நிமிடங்களாக நடந்த போராட்டத்திற்கு பின் லிப்ட் ஆபரேட்டரின் உதவியுடன் அமைச்சர், எம்.எல்.ஏ. மற்றும் உடனிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள லிப்டுகளை பராமரிக்க செய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் 30 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • கலெக்டர் அலுவலக போர்டிக்கோவில் 3 பேர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
    • மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    பொங்கல் பண்டிகை அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்துவது தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டியினர் மாவட்ட கலெக்டரிடம் மனுஅளித்து வந்தனர்.

    இங்கு பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியை அவனியாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் நடத்துவதாகவும், அதில் தற்போது அனைத்து சமுதாய மக்களையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    இதுதொடர்பாக இருதரப்பினரிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. நீதிமன்றம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து போட்டியை நடத்துமாறு அறிவுறுத்தியது. ஆனால் இதை ஏற்க மறுத்த ஒரு தரப்பினர் மேல்முறையீட்டு மனு செய்தனர்.

    அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நிர்வாகம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தாங்கள் தான் நடத்துவோம் என 2 தரப்பினரும் கூறிவருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    நேற்று மீண்டும் இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

    பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது கலெக்டர் அலுவலக போர்டிக்கோவில் 3 பேர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தென்கால் விவசாய சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டி சார்பில் இன்று தனித்தனியே போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து அவனியாபுரம், மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில் கோரிக்கையை வலியுறுத்தி தென்கால் பாசன விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.
    • கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொண்டு வந்து அதிகாரியிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில் புவனகிரியை சேர்ந்த சசிகலா தனது தாய் அஞ்சம்மாள் (வயது67) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.

    அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கோரிக்கை மனுவும் அவர்கள் வைத்திருந்த பையில் மண்எண்ணை கேன் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த மண்எண்ணை கேனை போலீசார் பறிமுதல் செய்தனர் பின்னர் அவர்களிடம் இருந்த கோரிக்கை மனுவில், எனது மகள் ராதிகா பிரியா என்பவருக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ராதிகாப்பிரியா கடந்த10.2.2022 அன்று இறந்து விட்டதால் மேற்படி இறப்பு தொடர்பாக அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறதுசதீஷ்குமார் என்பவரிடம் இருந்து தனது மகளுடைய நகை, பொருட்கள் அனைத்தையும் பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உரிய முறையில் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி மனு அளிக்க அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • கஞ்சா விற்பதாக கூறி மிரட்டுகின்றனர்
    • வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    வீர மார்த்தாண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் அன்றாடம் சிறு, குறு தொழில் செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம்.

    இந்நிலையில் எங்கள் பகுதிக்கு கடந்த 28-ந்தேதி மாலை மது விலக்கு பிரிவு போலீசார் என கூறி 2 பேர் வந்தனர். அவர்கள் எங்களிடம் கஞ்சா மற்றும் மது வியாபாரம் செய்வதாக கூறி எங்களை மிரட்டினர். ஆதலால் திருநங்கைகளுக்கு அவப்பெயர் ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நுழைவு வாயிலில் உள்ள கேமிராவில் அந்த நபர் உருவம் பதிவானது தெரியவந்தது.
    • சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 32), கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் கேட்டார். ஆனால் கடன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அவரது செல்போனுக்கு பேசிய நபர் சேலம் 5 ரோட்டில் இருந்து பேசுவதாகவும், இங்குள்ள பைனான்சில் 50 லட்சம் வரை கடன் பெற்று தருவதாகவும் கூறினார். மேலும் 50 லட்சம் கடனுக்கு 3 லட்சம் ரூபாய் பத்திரம் ஆவணங்கள் வழங்க வேண்டும், சேலம் கலெக்டர் அலுலலகத்தில் உள்ள கருவூலத்தில் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய கதிரேசன் 3 லட்சம் பணத்துடன் சேலம் கலெக்டர் அலுலவலகத்திற்கு வந்தார். பணத்தை வாங்கி கொண்டு கருவூலத்திற்கு சென்ற அந்த நபர் திரும்பி வரவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த கதிரேசன் இது குறித்து சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போலீசார் அங்குள்ள கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நுழைவு வாயிலில் உள்ள கேமிராவில் அந்த நபர் உருவம் பதிவானது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் அங்கு ஓடி வந்து அவர் கையில் இருந்த பாம்பை கைப்பற்றினர்.
    • பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்ணால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. இவருக்கு சமரச செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு சமர செல்விக்கு சொந்தமான இடத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளார். வீட்டுக்கான மின் இணைப்பு கேட்டு 2019-ம் ஆண்டு மனு அளித்த நிலையில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

    பலமுறை மின்வாரியம் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு வேண்டி புகார் அளித்துள்ளார்.

    முருகனின் மூத்த மகள் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் மின்சாரம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்து வருவதாகவும் நன்றாக படிக்கும் நிலையில் மகள் இருந்தும் படிப்பிற்கு உதவ முடியாத நிலையில் நாங்கள் இருப்பதாக வேதனையுடன் முருகன் மற்றும் மனைவி, கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.

    இந்நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறியும் கடந்த சில நாட்களாக வீட்டுக்குள் விஷ ஜந்துக்கள் மற்றும் பாம்புகள் வருவதாகவும் தெரிவித்ததுடன் நேற்றைய தினம் வீட்டிற்குள் புகுந்த 3 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புடன் சமரச செல்வி தனது மகளையும் அழைத்துக் கொண்டு இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

    இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர் அங்கு ஓடி வந்து அவர் கையில் இருந்த பாம்பை கைப்பற்றினர்.

    தொடர்ந்து பணியில் இருந்த போலீசார் அவரை அழைத்து வந்து கலெக்டரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்ணால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    இது தொடர்பாக மின்சார துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீட்டுக்கு செல்வதற்கு வழிப்பாதை இல்லை. அங்கு மின்கம்பம் அமைப்பதற்கு அருகில் இருப்பவர்களிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே மின்கம்பம் அமைத்து மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளோம்.

    ஆனாலும் இதுவரை சான்று கிடைக்கவில்லை.இதனால் மின்சாரம் வழங்கும்பணி தாமதப்பட்டு வருகிறது என்றனர்.

    ×