என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உயிரிழப்பு"
- சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி உயிரிழப்பு.
- 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
வேளச்சேரி:
செம்மஞ்சேரியை சேர்ந்தவர் கங்கையம்மாள் (வயது 85). இவர் அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென கங்கையம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கங்கையம்மாள் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டு ரோட்டில் வாலிபர்கள் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் 2 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியானவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
- 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த பெரியசாமி. இவா்களது மகன்கள் முனியசாமி (30), அருண்குமாா் (24), காசிசுமன் (20) மலைச்செல்வம் (18). இவர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது பலத்த காற்றில் படகு கவிழ்ந்து முனியசாமி, மலைச்செல்வன் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
மீனவர் முனியசாமிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க, பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினரை அவர்களது வீட்டுக்கு சென்று முனியசாமியின் மனைவி சவுபாக்கியம், மலை செல்வத்தின் தாயார் வேளாங்கண்ணியை சந்தித்து ஆறுதல் கூறினார். 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
மீனவர்களுக்கு வழங்கப்படும் அரசு நிதி உதவியும், முனியசாமி மனைவிக்கு அரசு வேலையும் வாங்கி தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், தி.மு.க மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 199 பேர் ரசாயான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அகபா துறைமுகத்தில் மதியம் 3.15 மணிக்கு குளோரின் டாங்க் விழுந்து வெடித்தது. இதனால் வாயு கசிவு ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 199 பேர் ரசாயான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியால், துறைமுகத்திற்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் உள்ள அகபா நகரவாசிகள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, அகபாவின் தெற்கு கடற்கறையில் இருந்து பொதுமக்கள் வெறியேற்றினர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு துறை சிறப்பு குழுக்கள் துறைமுகத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்