search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 197182"

    • தீவிர முதுகு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்தல் நல்லது.
    • முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது.

    வடமொழியில் 'அர்த்த' என்றால் 'பாதி' என்றும் 'ஹலா' என்றால் 'ஏர் கலப்பை' என்றும் பொருள். இவ்வாசனத்தில் ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த ஹலாசனம் என்று அழைக்கப்படுகிறது.

    அர்த்த ஹலாசனத்தில் மணிப்பூரக சக்கரம் தூண்டப்படுவதால் பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் வளர்கிறது; தன்மதிப்பு வளர்கிறது; தன்னம்பிக்கை வளர்கிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது. வயிற்று உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது. வயிற்றுத் தசைகளைப் பலப்படுத்துகிறது

    மலச்சிக்கலைப் போக்குகிறது. தொப்பையை கரைக்கிறது.

    இடுப்புப் பகுதியை நெகிழ்வடையச் செய்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் காலத்து வலியைப் போக்குகிறது.

    அடி முதுகு வலியைப் போக்குகிறது. வெரிகோஸ் வெயின் வலியைப் போக்குகிறது. தொடைப் பகுதியை உறுதியாக்குகிறது

    செய்முறை

    விரிப்பில் படுக்கவும். கால்களை அருகருகே வைக்கவும். கைகளை உடம்பின் பக்கவாட்டில் தரையில் வைக்கவும். மூச்சை வெளியேற்றியவாறு கால்களை உயர்த்தவும்.

    கால்கள் இடுப்புக்கு நேர் மேலாக 90 degree கோணத்தில் இருக்க வேண்டும். 20 வினாடிகள் இந்நிலையில் இருந்த பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களைத் தரையில் வைக்கவும்.

    தீவிர முதுகு வலி, அதிக இரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாறு உள்ளவர்கள் அர்த்த ஹலாசனத்தைத் தவிர்த்தல் நல்லது.

    • முதுகுத் தசைகளை வலுவாக்குகிறது.
    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதுடன் அதன் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது. முதுகுத் தசைகளை வலுவாக்குகிறது. முன்புற உடலை நன்கு நீட்சியடையச் செய்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது.

    இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியை நெகிழ்த்துகிறது வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. ஜுரணத்தைப் பலப்படுத்துகிறது. கால்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதுடன் கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் முட்டி போடவும். இரண்டு கால்களுக்கு சிறிது இடைவெளி விடவும். கைகளை மடித்து உள்ளங்கைகளை வணக்கம் சொல்லும் பாணியில் மார்புக்கு முன்னால் சேர்க்கவும். மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு கைகளை மேல் நோக்கி உயர்த்தி பின்னால் மேல் உடலை சாய்க்கவும். உடன் கைகளையும் பின்னோக்கி கொண்டு செல்லவும். உள்ளங்கைகளை பாதங்களுக்குப் பின்னால் தரையில் வைக்கவும். விரல்கள் பாதங்களை நோக்கி இருக்க வேண்டும். இடுப்பை நன்றாக மேல் நோக்கி உயர்த்தி கைகளை கால்களை நோக்கி கொண்டு வந்து பாதங்களுக்குப் பக்கவாட்டில் கை விரல்கள் இருக்குமாறு வைக்கவும்.

    மெதுவாகக் கால் விரல்களைப் பற்றி முன் கைகளைத் தரையில் வைக்கவும். கழுத்தை நன்றாக வளைத்துத் தலையை பாதத்தின் அருகே வைக்கவும். மாறாக, கைகளை பாதங்களின் அருகே வைத்துத் தலையைப் பாதத்தில் வைக்கலாம். 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இவ்வாசனத்தில் இருக்கவும். ஆசனத்தை விடுவிக்க, உள்ளங்கைகளைத் தரையில் வைத்துத் தரையிலிருந்து தலையை உயர்த்தவும். பின், கைகளைத் தரையிலிருந்து எடுத்து உடலை நேராக்கவும். பாலாசனத்தில் ஓய்வெடுக்கவும்.

    குறிப்பு

    ஆரம்ப நிலை பயிற்சியாளர்கள் இராஜ கபோடாசனத்தை முயற்சிப்பதைத் தவிர்க்கவும். ஆரம்பக் கட்டத்தில் இவ்வாசனம் செய்யும் போது சுவரை ஒட்டி பாதங்களை வைத்துப் பின்னால் வளையும் போது கைகளை சுவற்றின் மீது வைத்து மெல்ல கீழ் நோக்கிப் போகவும். இராஜ கபோடாசனத்தை உஸ்ட்ராசனம், வஜ்ஜிராசனம் மற்றும் சுப்த வஜ்ஜிராசனம் நிலையிலிருந்தும் செய்யலாம். தீவிர முதுகுத்தண்டு கோளாறு, தீவிர கழுத்து வலி, தோள், இடுப்பு மற்றும் முட்டி பிரச்சினைகள் உள்ளவர்கள், அதிக மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்களும் இவ்வாசனத்தைத் தவிர்க்க வேண்டும்.

    • செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி.
    • மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக அரங்கில் தமிழகத்தின் மீதான பிம்பம் அதிகரித்துள்ளது. பிரம்மாண்டமும், பாரம்பரியமும் இணைந்திருந்தது. நம் நாட்டவர் மட்டுமல்ல வெளிநாட்டினரும் வாய் பிளந்து, ரசித்து, ருசித்து செஸ் ஒலிம்பியாட்டை ஒரு திருவிழாவாக கொண்டாடி தீர்த்தோம். நேப்பியார் பாலம் முதல் தம்பி சிலை வரை ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் என்றால் அது மிகையாகாது. செஸ் ஒலிம்பியாட்டில் மேலும் ஒரு மணி மகுடமாய் அமைந்தது, யோகா பயிற்சி. மன புத்துணர்ச்சி பெறவும், செஸ் வீரர்களை உற்சாகமாக வைக்கவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுரியின் பேராசிரியர் இந்திரா தேவி மேற்பார்வையில் செஸ் வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    அது குறித்த ஒரு நேர்காணல்!

    யோகா மூலம் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம்?

    யோகா என்பது மருந்தில்லா மருத்துவம். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு யோகா மூலமும், இயற்கை உணவின் மூலமுமே சரி செய்து விடுவோம். குறிப்பாக ஐடி துறையிலும், உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும் சீக்கிரம் சர்க்கரை, உடல் பருமனுக்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு நிச்சயம் இந்த யோகா வரப்பிரசாதம் தான்.

    செஸ் ஒலிம்பியாட்டில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

    ஆயுஷ் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு எங்களை அணுகியது. சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி தான் யோகாவில் தலைமையகம் என்பதால், வீரர்களுக்கு பயிற்சி அளிக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. 187 நாடுகளில் இருந்து வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டிற்கு தமிழகம் வந்தனர். கிட்டத்தட்ட 2000 வீரர்கள். அவர்கள் யோகா பயிற்சியில் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாங்கள் 21 குழுக்களாக பிரிந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தோம். சுமார் 60 யோகா மருத்துவர்கள் இதில் பங்கேற்றோம்.

    வெளிநாட்டு வீரர்கள் யோகாவில் எப்படி தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்?

    ஆரம்பத்தில் கொஞ்சம் பேர் தான் இதில் பங்கேற்றனர். யோகா பயிற்சியை பற்றி அறிந்ததும் நிறைய பேர் இதில் பங்கேற்க துவங்கினர். இது அவங்களுக்கு புதுவித அனுபவமா இருந்ததா சொன்னாங்க. ஸ்ட்ரெஸ் ரிலீபா இருந்ததாகவும், புத்துணர்ச்சியுடன் இருந்ததாகவும் சொன்னாங்க.

    எத்தனை நாட்கள் அவங்களுக்கு யோகா பயிற்சி அளித்தீர்கள்?

    செஸ் வீரர்கள் யோகா கத்துக்கிறதில ரொம்பவும் ஆர்வம் காட்டினாங்க. நம்ம தமிழக அரசு இலவசமாகவே யோகா பயிற்சி அளித்ததை வியந்து பார்த்தாங்க. எங்க நாட்ல யோகா மிகவும் காஸ்ட்லியானது. இங்கு இலவசமாக சொல்லிக் கொடுப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினர். செஸ் ஒலிம்பியாட் நடந்த 14 நாட்களுமே நாங்க யோகா வகுப்பு எடுத்தோம். காலை 8 மணி முதல் 12 மணி வரை நாங்க யோகா பயிற்சி சொல்லிக் கொடுத்தோம்.

    எந்த நாட்டினர் ஆர்வமுடன் யோகா கத்துக்கிட்டாங்க?

    நைஜீரியா, அமெரிக்கர், உகாண்டா இவங்க ரொம்ப ஆர்வமா கத்துக்கிட்டாங்க. ஜார்ஜியா, டான்சானியா, டொமினிகா, ஸ்பெயின், உக்ரைன் இந்த நாடுகளில் இருந்தும் யோகா கத்துக்கிட்டாங்க. அவங்க அனுபவங்களை வீடியோவா எங்க கிட்ட பகிர்ந்திக்கிட்டாங்க.

    செஸ் வீரர்களுக்கு யோகா எந்தளவுக்கு பயனுள்ளதா இருந்தது?

    முதல்ல செஸ் வீரர்களுக்கு ஏன் யோகா முக்கியம்னு சொல்றேன். மத்த விளையாட்டுக்கள் மாதிரி செஸ் கிடையாது. இது மைண்ட் கேம்ஸ். ஒரே இடத்தில் உக்கார்ந்து மூளைக்கும், கண்களுக்குமான ஒரு விளையாட்டு. இதனால், சீக்கிரமாவே அவங்க உடலும், மனமும் சோர்வடைந்துவிடும். புது இடம்ங்கிறதால தூங்குவதற்கும் சிரமம்பட்டிருப்பாங்க. யோகா பண்ணுவதால் நல்லா தூங்கினதா சொன்னாங்க. விளையாட்டுல நல்லா கவனம் செலுத்தினாங்க.

    என்னென்ன யோகா பயிற்சி அவங்களுக்கு சொல்லிக் கொடுத்தீங்க…

    யோகா ஆசனங்கள், மூச்சுப்பயிற்சி, தியானம், தாரன பயிற்சி, யோக நித்திரை பயிற்சி அளித்தோம். பிராண முத்திரை, இருதய முத்திரை, கைகளை தட்டுவதையும், சிரிப்பு யோக சிகிச்சையும் கொடுத்தோம். திராட்டகா என்ற கண்களுக்கான பயிற்சியும் அளித்தோம்.

    யோகா பயிற்சி பெற்ற வீரர்கள் என்ன சொன்னாங்க…

    யோகா பண்ணிட்டு போனதால தான் எங்களால நல்லா விளையாட முடிந்ததுனு சொன்னாங்க. தூங்கி எழுந்து புத்துணர்ச்சியோட இருந்ததா சொன்னாங்க. தன்னம்பிக்கையும், உற்சாகமும் இருந்ததாகவும் சிந்திக்கும் திறமை அதிகப்படுத்தியதுனு சொன்னாங்க.

    கொரோனா சமயத்தில் உங்களின் பங்களிப்பு எப்படி இருந்தது?

    கொரோனா சமயத்தில், எங்கள் மருத்துவக் குழு மருத்துவமனைக்கே சென்று நோயாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி, தியானம் சொல்லிக் கொடுத்தோம். ஆக்சிஜன் அளவு உடலில் குறையும் நோயாளிகளுக்கு நாங்கள் அளித்த மூச்சுப் பயிற்சியின் மூலம் அவர்களின் உடலில் இயற்கையான முறையில் ஆக்சிஜன் அளவு அதிகரித்தது.

    • காயகல்ப பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டன.
    • கல்பம் மற்றும் யோகாசன பயிற்சிகளால் மனது ஒருநிலைப்படும்.

    உடுமலை :

    உடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் அரசு கலைக்கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சிகளை நடத்தினர். இதில் காயகல்ப பயிற்சி ,எளிய உடற்பயிற்சிகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டன. உடுமலை மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பயிற்சியை நடத்தினர். கல்பம் மற்றும் யோகாசன பயிற்சிகளால் மனது ஒருநிலைப்படும் .படிக்கும் மாணவிகள் மனநிலை ஒருமைப்படுவதற்கு இந்த யோகாசனம் மற்றும் காயகல்ப பயிற்சிகள் உதவும் என பயிற்சி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    4 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் கல்லூரி மாணவ மாணவிகள்ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிக்கும் மாணவர்கள் அதன் பலனை உணர முடியும் என தெரிவித்தனர்.

    • தைராய்டு பிரச்சனைக்கு ஆசனப்பயிற்சிகள் பயனுள்ளதாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.
    • தினசரி தியானம் பழகி வந்தால் தைராய்டு ஹார்மோன் சுரப்பி சீராகும்.

    தைராய்டு கோளாறால் அதிகரித்த உடல் எடை குறையவும், அதனால் உண்டாகும் மனஅழுத்தம் குறையவும் பல்வேறு ஆசனப்பயிற்சிகள் பயனுள்ளதாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. சாவாசனம், சர்வாங்காசனம், உஷ்ட்ராசனம், அர்த்தகட்டி சக்ராசனம், புஜங்காசனம், சலபாசனம், நவாசனம், ஜானு சிரசாசனம், சேது பந்தாசனம், வஜ்ராசனம், பாத ஹஸ்தாசனம் ஆகிய இவற்றுடன் சூரிய வணக்கமும், மூச்சு பயிற்சியும், தியானமும் தினசரி பழகி வந்தால் தைராய்டு ஹார்மோன் சுரப்பி சீராவதோடு, உடல் எடை குறையும். மன அழுத்தம் நீங்கி மாதவிடாய் சீராகும் என்கிறது ஆய்வுகள்.

    அதிலும் முக்கியமாக சர்வாங்காசனம் பழகி வருவது தைராய்டு சுரப்பியை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். இது கழுத்து பகுதிக்கும், அப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க உதவும்.

    பரம்பரை வழியாக வரும் தைராய்டு குறைவு நோயினை கண்டு அஞ்சி வருந்தும் மகளிர் தினசரி மஞ்சளை பாலில் கலந்து எடுத்துக்கொள்வதுடன் சர்வாங்காசனம், தியானம் ஆகியவற்றை பழகுதல் மூலம் ஹைப்போதைராய்டு வராமல் தடுக்க முடியும்.

    இவ்வாறு உணவே மருந்தாகவும், மூலிகையே மருந்தாகவும் பயன்படுத்தி எமனை வென்றவர்கள் நம் முன்னோர்கள். அவர்கள் வழியை பின்பற்றி வாழ்ந்தால் தைராய்டு கோளாறுக்கு மட்டுமல்ல, இன்னும் பல்வேறு நோய்நிலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

    • தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
    • மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளை போக்க உதவுகிறது.

    படுத்து செய்யும் ஆசனங்களில் எளிமையான, அதே நேரத்தில் மிகுந்த பலன்களைத் தரும் ஆசனங்களில் சேதுபந்தாசனமும் ஒன்று. வடமொழியில் 'சேது' என்பதற்கு 'பாலம்' என்றும் 'பந்த' என்பதற்கு 'பிணைக்கப்பட்ட' என்றும் பொருள். உள்புற அழுத்தம் மற்றும் வெளிப்புறம் இழுக்கும் ஆற்றலும் ஒரு பாலத்தை பலமாக வைக்க உதவுவது போல், சேதுபந்தாசனத்தில் வயிற்றுப் பகுதி அழுத்தம் பெறுவதோடு முதுகுத்தண்டு பகுதி நீட்சியடைந்து உடல் பலம் பெறுகிறது. சேதுபந்தாசனம் ஆங்கிலத்தில் Bridge Pose என்று அழைக்கப்படுகிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது. முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது. கழுத்து, மார்பு பகுதிகளை விரிக்கிறது

    தைராய்டு சுரப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது.

    ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. இருதய நலனைப் பாதுகாக்கிறது. அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது. இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    அசீரணத்தைப் போக்குகிறது. தலைவலியைப் போக்க உதவுகிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளை போக்க உதவுகிறது. கால்களில் சோர்வைப் போக்குகிறது. உடல் சோர்வைப் போக்குகிறது. தூக்கமின்மையைப் போக்குகிறது. மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது.

    செய்முறை

    விரிப்பில் படுக்கவும். கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும். கணுக்கால் முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும். கைகள் நீட்டியிருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரையோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும்.

    தோள்கள் விரிந்து இருக்க வேண்டும். கைகள் உடலின் அருகே இருக்கலாம்; அல்லது உடலின் கீழ் இரண்டு கைவிரல்களும் பிணைந்திருக்கலாம். ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும். பின் இடுப்பைத் தரையில் வைத்து கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.

    குறிப்பு

    தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சனை உள்ளவர்கள் சேதுபந்தாசனத்தைத் தவிர்க்கவும்.

    • வாரத்தில் 3 நாட்கள் குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
    • யோகா நமது பாரம்பரிய கலை

    உடற்பயிற்சியும், யோகாசனமும் நோய்களை கட்டுப்படுத்த கூடுதல் பக்கபலமாக இருக்கும். சிறுநீரக நோயாளிகள் கூட வாரத்தில் 3 நாட்கள் குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஆரோக்கியமாக இருப்பவர்கள் 45 முதல் 60 நிமிடங்கள் தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் மக்களிடம் உடற்பயிற்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்காக மாரத்தான் ஓடியே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முன்னுதாரணம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இவ்வாறு இருப்பது நிச்சயம் மக்களிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    நடைபயிற்சியோ, உடற்பயிற்சியோ எதில் ஈடுபட்டாலும் எப்போது நிறுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது தலைசுற்றல், வாந்தி, மயக்கம், இதயம் வித்தியாசமாக துடிப்பது, வலிப்பது, கால் மரத்து போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே நிறுத்திவிட வேண்டும்.

    யோகா நமது பாரம்பரிய கலை. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கிட்னி பிரச்சினைகளை தடுக்கும் யோகாசனங்களும் உள்ளது. சிறுநீரக பாதிப்பு உடையவர்கள் சிரசாசனம், கபாலபதி, பஸ்கி போன்ற ஆசனங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது.

    தச ஊர்த்வா ஹஸ்தாசனம், பாத ஹஸ்தாசனம், அர்த்தகதி சக்ராசனம் ஆகிய ஆசனங்கள் நல்ல பலனை தரும் என்கிறார்கள். யோகாசனத்தை பொறுத்தவரை பயிற்சியாளரிடம் சென்று முறையாக கற்று பயிற்சி செய்வதே நல்லது. நல்ல பலனையும் கொடுக்கும்.

    • தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
    • நுரையீரல் தொடர்பான நோய்களை வராமல் தடுக்கிறது.

    1. புற்றுநோயாளிகளுக்கு உதவலாம்

    புற்றுநோய் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்கள் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஒரு ஆய்வின் படி, யோகா நித்ரா நோயாளிகளின் வலி, தூக்கக் கலக்கம் மற்றும் சோர்வு போன்ற உடல் அறிகுறிகளை மேம்படுத்துவதோடு, துன்பம் மற்றும் மனச்சோர்வு அறிகுறிகள் போன்ற உளவியல் விளைவுகளை மேம்படுத்த உதவும்.

    2. மாதவிடாய் முறைகேடுகளுக்கு உதவலாம்

    மாதவிடாய் முறைகேடுகள், ஒருவேளை மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காரணமாக, பொதுவானவை. ஒரு ஆய்வின்படி, யோகா நித்ரா மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஒரு நபரின் பொது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை அதிகரிக்க உதவுகிறது, இதனால் மாதவிடாய் பிரச்சினைகள் போன்ற உடல் அறிகுறிகளை மேம்படுத்துகிறது.

    3. நுரையீரல் பிரச்சனைகளுக்கு உதவலாம்

    நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், நுரையீரல் தொடர்பான நோய்களைத் தடுக்கவும் பல பயனுள்ள யோகா ஆசனங்கள் இருந்தாலும், சில ஆய்வுகள் யோகா நித்ரா, மற்ற யோகா வகைகளுடன் மேற்கொள்ளப்படும் போது, ​​ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகள் மற்றும் நுரையீரலின் மற்ற அழற்சியை மேம்படுத்த உதவும் என்று கூறுகின்றன.

    4. கவலையை குறைக்கலாம்

    உலக மக்கள்தொகையில் சுமார் 33.7 சதவீதம் பேரை கவலை பாதிக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. யோகா நித்ரா மனநலப் பிரச்சினைகளைக் குறைப்பதில் சிறந்தது மற்றும் சில வழிகளில் யோகாவை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கவலை மற்றும் தொடர்புடைய அறிகுறிகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு பதட்டத்தைத் தடுக்க உதவும் உடல் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    5. தூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது

    யோகா நித்ரா தன்னியக்க நரம்பு மண்டலம், மூளை அலைகள் மற்றும் தூக்கத்தின் தொடக்கத்தில் நம்பிக்கைக்குரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இது தூக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், தூக்கமின்மை போன்ற தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உதவுவதோடு, நபருக்கு சிறந்த தளர்வு உணர்வை வழங்கவும் உதவும்.

    • முதுகுத்தண்டு, இடுப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    பார்சுவோத்தானாசனம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததுதான். இது சகஸ்ராரம், விசுத்தி, மணிப்பூரகம், சுவாதிட்டானம் மற்றும் மூலாதாரம் ஆகிய அய்ந்து சக்கரங்களைத் தூண்டுகிறது. சகஸ்ராரச் சக்கரம் பிரபஞ்ச ஆற்றலோடு நம் ஆழ்மனதுக்கு தொடர்பை ஏற்படுத்துகிறது. தன்னை உணர்தல் மற்றும் ஞானம் பெறுதல் ஆகியவை இந்தச் சக்கரத்தின் சீரிய செயல்பாட்டால் மட்டுமே சாத்தியப்படும்.

    பலன்கள்

    மூளைக்குச் செல்லும் பிராணவாயுவை அதிகரிக்கிறது. அனைத்து மூட்டுகளையும் பலப்படுத்துகிறது. கால்களைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    ஜுரண கோளாறுகளைச் சரி செய்கிறது. கவனத்தைக் கூர்மையாக்குகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது

    செய்முறை

    விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். வலது காலை இடது காலிலிருந்து சுமார் ஒன்றரை அடி இடைவெளி விட்டு தரையில் வைக்கவும். வலது கால் 90 degree கோணத்தில் கால் விரல்கள் வலப்புறம் நோக்கி இருக்க வேண்டும். கைகள் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று உள்ளங்கைகளை ஒன்றாக வணக்கம் சொல்லும் பாணியில் வைக்கவும்.

    மேல் உடலை வலப்புறமாகத் திருப்பவும். மூச்சை வெளியேற்றியவாறு வலதுபுறமாகக் குனிந்து நெற்றியை வலது முட்டி அல்லது அதற்குக் கீழே வைக்கவும்.

    30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், மூச்சை உள்ளிழுத்தவாறு நிமிரவும். பின் கால் மாற்றி இடது புறம் செய்யவும். 30 வினாடிகள் செய்த பின் தாடாசனத்தில் நிற்கவும்.

    குறிப்பு

    அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தீவிர மூட்டுப் பிரச்சனை, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

    முடிந்த வரை மட்டுமே குனியவும். கைகளைப் பின்னால் எடுத்துச் சென்று வணக்கம் நிலையில் வைக்க முடியாதவர்கள், வலது கை மணிக்கட்டை இடது கையால் பற்றி இந்த ஆசனத்தைப் பழகலாம். மாறாக முன்னால் உள்ள சுவற்றில் கைகளை வைத்துப் பழகலாம்.

    • யோகா போட்டியில் வைமா வித்யாலயா பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 57 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    ராஜபாளையம்

    மாநில அளவிலான யோகாசனப்போட்டி சாத்தூர் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து 458 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளியில் இருந்து 57 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    கிருஷ்ணசாமி கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரி, பேராசிரியர் கண்ணன் சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரி சேர்மன் அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு யோகா செய்து காட்டிய மாணவர்களைப் பாராட்டி வைமா வித்யாலயாவிற்கு "சாம்பியன் ஆப் சாம்பியன்" பட்டத்தை வழங்கினர். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணாதேவி மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் கேடயமும், பரிசும் பெற்ற மாணவர்களைப் பாரா ட்டினர்.

    மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்த யோகக் கலை பயிற்றுநர் இசக்கி முத்து மற்றும் ஆசிரியைகள் முத்துமாரி, ராமராதா, ராஜலட்சுமி, கீதாஞ்சலி, முத்துமணி ஆகியோரை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

    • இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படும்.
    • வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும் செலுத்த உதவுகிறது.

    பலன்கள்

    முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது. தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    உடலின் ஆற்றலை வளர்க்கிறது. இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது.

    சையாடிக் வலியைப் போக்க உதவுகிறது. உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது.

    செய்முறை

    விரிப்பில் நேராக நிற்கவும். இரண்டு கால்களுக்கு இடையில் சற்று இடைவெளி விட்டு நிற்கவும். வலது காலை பின்னால் நீட்டி முட்டியிலிருந்து பாதம் வரையில் தரையில் படுமாறு வைக்கவும். கைகளை மேல் நோக்கி உயர்த்தவும். இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும்.

    நேராகப் பார்க்கவும்.

    வயிற்றுப் பகுதியை முன்தள்ளி முதுகை வளைத்து தலையையும் கைகளையும் பின்னால் சாய்த்தவாறும் இவ்வாசனத்தைப் பழகலாம். 20 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும். பின் ஆரம்ப நிலைக்கு இடது காலைப் பின்னால் வைத்துப் பயிலவும்.

    குறிப்பு

    தீவிர இடுப்புப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும். கால் முட்டியில் வலி ஏற்பட்டால் விரிப்பை மடித்து காலுக்கடியில் வைத்துப் பழகலாம்.

    • நீரழிவு நோய் நீங்கவும் வராமல் இருக்கவும் இவ்வாசனம் செய்வது ஆசனம் சிறந்தது.
    • புஜம், தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன.

    உத்தித என்றால் மேல் என்று பொருள். பத்மம் என்றால் தாமரை. மேல் உயர்த்திய தாமரை நிலை என்பது தான் உத்தீத பத்மாசனம் (Utthita padmasana) என்பதன் அர்த்தம் ஆகும். உத்தித பத்மாசனம் (Utthita padmasana) என்பது, முதலில் பத்மாசனம் நிலையில் அமர்ந்து கொண்டு, பின்னர் உள்ளங்கை இரண்டையும் கால்களில் பக்கத்தில் தரையில் படும்படி வைத்து உடலை மேலே தூக்குதலாகும்.

    செய்முறை

    விரிப்பின் மேல் பத்மாசனம் நிலையில் அமர்ந்து கொள்ளவும். கைகளை பலமாக தரையில் பதித்துக் கொண்டு, பத்மாசனம் கலைந்துவிடாதவாறு மெதுவாக உடலை மேலே தூக்க வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது உடலை ஆடாமலும் நடுக்கம் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.பார்வை நேராக இருக்க வேண்டும்.அளவுக்கு உடல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். சாதாரண மூச்சில் செய்தால் போதுமானது. உத்தித பத்மாசனத்தை 3 தடவை செய்தால் போதும்.

    பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது. ஒரு முறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது. பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் சௌகரியம் போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும்.

    பயன்கள்

    தொப்பையை குறைக்க உதவுகிறது. சீராக செய்து வந்தால் வயிற்றில் காணப்படும் தேவையற்ற சதைகள் காணாமல் போய்விடும். உடலில் வாய்வுத் தொல்லைகள் அகன்றுவிடும்.

    புஜம், தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன. குடல் இறக்கம் தடுக்கப்படுகிறது. உடல் எடை குறைகிறது. கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது. ஜுரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். கணையம் நன்கு வேலை செய்வதால், நீரழிவு நோய் நீங்கவும் வராமல் இருக்கவும் இவ்வாசனம் செய்வது ஆசனம் சிறந்தது.

    நெஞ்சு விரிவடைவதால், ஆஸ்துமா நோயுள்ளவர்களுக்கு நுரையீரலில் அதிக காற்றை இழுக்கும் நிலை ஏற்படும்.

    ×