என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 197182"
- கை, கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் செய்வதை தவிர்க்கலாம்.
- நுரையீரலை பலப்படுத்தி நுரையீரல் சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது.
வஜ்ஜிராசனத்துக்கு மாற்றாக அதோ முக ஸ்வானாசனம் செய்யப்படுகிறது. இது நாயின் முகம் கீழ் நோக்கியவாறு உள்ளது போன்ற அமைப்பினை கொண்டதால் இந்த ஆசனம் இப்பெயர் பெற்றது.
வஜ்ஜிராசனம் என்பது உடலின் நடுப்பகுதியை உறுதிப்படுத்தக் கூடியது. இந்த ஆசனம் அதை முழுமைப்படுத்த கூடியது. மேலும், வஜ்ஜிராசனத்தில் இருக்கும் போது கால்களின் முன்பக்கம் இழுக்கப்படுகிறது. அதோ முக ஸ்வானாசனத்தில் காலின் பின்புறம் இழுக்கப்படுகிறது. குறிப்பாக, sciatic நரம்பு இழுக்கப்பட்டு உறுதியாவதுடன் பின்னங்கால் தசைகளும் உறுதியாகின்றன.
செய்முறை : குப்புறப்படுத்துக் கால்களை நீட்டி, உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முன்னோக்கி வைக்கவும். மூச்சை வெளிவிட்டு உடலை மேலே உயர்த்தவும் தலையைப் பாதங்களைப் பார்க்குமாறு திருப்பி உச்சந்தலையைத் தரையில் பதிக்கவும். முழங்கால்களை மடக்காமல் உள்ளங்கால்களை முன்பாக வைத்து முழுப் பாதமும் தரையில் வைத்து உடலின் எடை கால்கள் மற்றும் தலையில் இருப்பது போல் செய்யவும். இந்நிலையில் ஆழமாகச் சுமார் ஒரு நிமிடம் சுவாசித்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்யவும்.
பலன்கள் : விளையாட்டு வீரர்களின் களைப்பைப் போக்கும். கணுக்கால்கள், தோள்பட்டை வலுப்பெறுகின்றன. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஏற்ற ஆசனமாகும். இதயம் சரிவரச் செயல்படுகிறது. நாள்பட்ட தலைவலியை போக்க உதவுகிறது.
நுரையீரலை பலப்படுத்தி நுரையீரல் சம்பந்தமான கோளாறுகளை போக்க உதவுகிறது.
மாதவிடாய் நிற்கும் கட்டத்தில் (menopause) ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
அதோ முக ஸ்வானாசனம் ஜீரணத்தைப் பலப்படுத்தவும், மன அழுத்ததைப் போக்கவும் செய்வதால் இதன் காரணமாக ஏற்படக் கூடிய தலைவலியைச் சரி செய்யவும் தவிர்க்கவும் உதவுகிறது.
குறிப்பு : கர்ப்பிணி இதை செய்வதை தவிர்க்கவும். கை மற்றும் கை மணிக்கட்டுகளில் அடிபட்டவர்கள், வலி உள்ளவர்கள் செய்வதை தவிர்க்கலாம்.
- தீவிர இடுப்புப் பிரச்சினை, முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
- இடுப்புப் பகுதியை வலுவாக்கவும், விரிக்கவும் செய்யும் உத்கட் கோணாசனம்
வடமொழியில் 'உத்கட' என்றால் 'பலம் நிறைந்த' மற்றும் 'தீவிரமான' என்றும் 'கோண' என்றால் 'கோணம்' என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Goddess Squat என்று அழைக்கப்படுகிறது.
இடுப்புப் பகுதியை வலுவாக்கவும், விரிக்கவும் செய்யும் உத்கட் கோணாசனம் மூலாதாரம், சுவாதிட்டானம் மற்றும் மணிப்பூரக சக்கரங்களைத் தூண்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இவ்வாசனத்தைப் பயில்வதால் ஆளுமை, ஆற்றல் ஆகியவைப் பெருகிறது; படைப்புத் திறன் கூடுகிறது.
பலன்கள்
உடல் முழுவதற்கும் ஆற்றல் அளிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இருதய நலனை பாதுகாக்கிறது. தொடை முதல் பாதம் வரை உறுதியாக்குகிறது.
மூட்டுகளைப் பலப்படுத்துகிறது. சையாடிக் வலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. குழந்தை பாக்கியம் ஏற்பட உதவுகிறது.
சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது. உடலின் சமநிலையைப் பராமரிக்கிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதை ஒருமுகப்படுத்துகிறது.
செய்முறை
விரிப்பில் தாடாசனத்தில் நிற்கவும். கால்களுக்கிடையில் சுமார் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்கவும். பாதங்களை வெளிப்புறமாகத் திருப்பவும்.
மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பைச் சற்றுக் கீழிறக்கவும். கால் முட்டியும் கணுக்காலும் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். கைகளைத் தலைக்கு மேலாக உயர்த்தவும். உள்ளங்கைகள் ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும்.
30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இந்நிலையில் இருக்கவும்.
குறிப்பு
தீவிர இடுப்புப் பிரச்சினை மற்றும் தீவிர முட்டி வலி உள்ளவர்கள் இவ்வாசனத்தைத் தவிர்க்கவும்.
கைகளை மேல் நோக்கித் தூக்குவதில் சிரமம் உள்ளவர்கள் மார்புக்கு முன்னால் இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து வைக்கலாம்.
- ரத்த அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
- ஆசனப் பயிற்சிகள் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.
நாம் வாழும் முறையில் தான், நமது உடல் ஆரோக்கியம் அமைந்துள்ளதாகக் கூறுகிறார் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் அனுராதா ரங்கராஜ். இவர் 'யோகா சக்கரவர்த்தனி' விருது பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளில்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். புதுச்சேரி அரசு நடத்தும் 'சர்வதேச யோகாசனப் போட்டிகளின் தேர்வுக் குழு'விலும் இடம் பெற்றிருக்கிறார்.
''மனித உடலில் இருக்கும் நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்துமே முறையான அளவில் சுரக்க வேண்டும். அப்போது தான் உடல் உறுப்புகள் பாதிப்படையாமல் ஒழுங்காகச் செயல்படும். இன்சுலின், தைராய்டு உள்ளிட்ட பல சுரப்பிகளில், ஏதேனும் ஒரு சுரப்பியின் சமநிலை தவறினாலும், மனித உடல் தனது செயல்பாடுகளில் தடுமாறும். அவ்வாறு தவறும் போது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
தொடர்ந்து யோகாசனம் செய்து வருவதன் மூலம் இவற்றை குணப்படுத்தலாம். ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், இதயத்தின் செயல்பாடுகள் பாதிப்படையும். நாம் கசப்பு, துவர்ப்பு உள்ளிட்ட அறுசுவைகளையும் சமமாக உண்பதில்லை. மாறாக நாக்கின் சுவை விருப்பத்திற்கு ஏற்ப உணவை சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
உடலில் ரத்த அழுத்த மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை முறையான யோகாசனப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். குறைந்த ரத்த அழுத்தத்தினைப் பச்சிமோத்தாசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பாத கோனாசனம், சேது பந்தாசனம், அர்த்த ஹலாசனம் போன்ற ஆசனங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த அழுத்தத்தை பாலாசனம், தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை சீராக்கும். வயிற்றுப் பகுதிதான் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்பதால், அதற்குரிய பயிற்சிகளையும், செயல்பாட்டையும் முறையாக்க வேண்டும்.
இரவில் நேரம் தவறி சாப்பிடக்கூடாது. இரவு உணவை 7 மணிக்கு முன்பே முடித்து விட வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் அவசியம். ஆசனப் பயிற்சிகள் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். பசி உணர்வை அதிகரிக்கச் செய்யலாம். தூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் யோகாசனத்தில் பயிற்சிகள் இருக்கின்றன.
இவ்வாறு பல்வேறு உடல் உபாதைகள், சிக்கல்களுக்கும் யோகா மூலம் தீர்வு காண முடியும். இந்த அவசர உலகில் ஆண், பெண், மாணவர்கள் அனைவருமே நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். தகுந்த யோகாசனங்கள் மூலம் தங்கள் உடலினை அனைவரும் பேணிக்காப்பது சிறந்தது'' என்கிறார் அனுராதா ரங்கராஜ்
- தீவிர முதுகுத்தண்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
- வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
பலன்கள்
* நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது
* முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது
* நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
* கால்களை நீட்சியடையச் செய்வதோடு பலப்படுத்தவும் செய்கிறது
* நுரையீரலைப் பலப்படுத்துகிறது
* உடலின் சமநிலையை முன்னேற்றுகிறது
* இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது
* வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது
* சீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது
* மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது.
* மூட்டுகளை நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு மூட்டுகளையும் பலப்படுத்துகிறது.
* சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.
செய்முறை
விரிப்பில் நேராக நிற்கவும். பாதங்களை அருகருகே வைக்கவும். மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும். மூச்சை வெளியேற்றவும்.
மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளை மேலே உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்க்கவும். அதே நேரத்தில் இடுப்பைக் கீழ் நோக்கி இறக்கவும்.
கால் முட்டி விலகாமல் குதிகால்களுக்கு அருகே புட்டம் இருக்கும் அளவுக்குக் கீழிறங்கவும். பாதங்களை உயர்த்தக் கூடாது. 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், எழுந்து கைகளைப் பக்கவாட்டில் கொண்டு வரவும். தொடர் பயிற்சியில் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.
குறைவான இரத்த அழுத்தம், தூக்கமின்மை, தீவிர முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் முன்னால் நாற்காலி போன்ற ஒன்றைப் பற்றி முடிந்த அளவுசெய்தால் போதுமானது.
- வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன
- முதுகுத்தண்டை சீராக வைத்திருக்க உதவுகின்றன
* கால் தசைகளையும் மூட்டுக்களையும் பலப்படுத்துகின்றன
* உடல் முழுவது ஆற்றலைப் பெருக்குகின்றன
* நுரையீரலைப் பலப்படுத்துகின்றன
* இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகின்றன
* முதுகுத்தண்டை சீராக வைத்திருக்க உதவுகின்றன
* நிற்கும் நிலையை சரி செய்கின்றன; நாம் நிற்கும் நிலையில் இருக்கும் தவறுகளை சரி செய்ய உதவுகின்றன
* இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன
* சீரண ஆற்றலை அதிகரிக்கின்றன
* வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன
மேலும் பெரும்பாலான நின்று செய்யும் ஆசனங்கள் மூலாதார சக்கரத்தைத் தூண்டி அதன் செயல்பாட்டை மேம்படுத்துவதாக இருக்கும். சீரான மூலாதார இயக்கம் ஆற்றலை வளரும், வளர்ச்சியை ஊக்குவிக்கும், சோம்பலைப் போக்கும். மூலாதாரம் நிலையான தன்மையை உருவாக்கும்.
- அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி.
- யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.
யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள். யோகாசனம்= யோகா+ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள்.
ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உடல் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழவும், தன்னை உணரவும், தனக்குள் இறுக்கும் பேராற்றலை உணரவும் ஒரே வழி ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகம் என்ற 8 படிகளே வாழ்வின் வெற்றிப்படி என எளிமையாக விளக்கியுள்ளார்.
1. இயமம்
மனம் சம்பந்தப்பட்ட ஒழுக்க நியதிகள். முக்கியமான கட்டுப்பாடுகள் அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம், அஸ்தேயம், பேராசையின்மை போன்ற அடிப்படை மனித பண்புகளை வளர்க்க வேண்டும்.
2. நியமம்
இதுவும் மனம் சார்ந்த ஒழுக்க கோட்பாடுகள் – அகத்தூய்மை, புறத்தூய்மை, தவம், புனித நூல்கள் படித்தல், இறைவனிடம் சரணாகதி முதலியவற்றை விளக்குகிறது.
3. ஆசனம்
ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்
4. பிராணாயாமம்
பிராணயாமம் (சமசுகிருதம்: प्राणायाम prāṇāyāma ) என்பது ஒரு சமசுகிருத சொல், அதற்கு "பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்" என்று பொருள்
5. பிரத்தியாகாரம்
பிரத்தியாகாரம் என்பது அனைத்து புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆகும். மொத்தம் 11 புலன்கள் உள்ளன. அதாவது ஐந்து உணர்வுகள், ஐந்து செயல் புலன்கள் மற்றும் ஒரு மனம். பிரதி மற்றும் அகாரா, அதுவே பிரத்தியாகாரம் எனப்படுகிறது
6. தாரணை
மனதை ஒரு பொருளில் குவிய செய்தல். அதன் மூலம் எண்ணற்ற ஆற்றலை அடையலாம். தாரணை கை கூட வைராக்கியம், சாத்வீக உணவு, தனித்திருத்தல் முதலியவை தேவை.
7. தியானம்
ஒரே சிந்தனை. தாரனையின் முடிவு தியானமாகும். மன அமைதி. இதயம் பாதுகாக்கப்படும். எந்த நோயும் வராது. தியானம் கைகூடினால் எல்லாம் கைகூடும்.
8. சமாதி
ஆதியில் சமம். எண்ணமற்ற நிலை. மனம் கரைந்த நிலை. மௌன நிலை. பேரின்ப நிலை. இதுவே நம் உண்மை இயல்பு.
அஷ்டாங்க யோக எட்டு படிகளை அனைவரும் கடை பிடிக்கலாம். ஆனந்த வாழ்வு வாழலாம்.
- இது சக்தி வாய்ந்த ஆசனமாகக்கருதப்படுகிறது.
- அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயில்வதை தவிர்க்கவும்.
ஆசனங்கள் பொதுவாக நின்று செய்பவை, அமர்ந்து செய்பவை, படுத்து செய்பவை என்பதாகவே இருக்கும். மூன்று நிலைகளிலும், முன் வளைதல், பின் வளைதல், பக்கவாட்டில் வளைதல் என்று வளைவதாகவே இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நின்று முன் வளையும் ஆசனங்களில் ஒன்றான, அர்த்த உத்தானாசனம் என்பதாகும்.
உத் என்றால் சமஸ்கிருதத்தில் "சக்தி வாய்ந்த" (powerful) என்று பொருள். "தான்" என்றால் "நீட்டுதல்" என்று பொருள். அதாவது சக்தி வாய்ந்த நீட்டுதல் (powerful stretching) என்று பொருள்.
ஆக, பெயரிலேயே புரிந்திருக்கும் இதன் பயன்பாடு. இந்த ஆசனத்தை பழகுதனால், உடலின் பின் பகுதி முழுவதும் பலம் பெறுகிறது. அடிப்பாதம் துவங்கி, பின்புற கால்கள் மூலம், கீழ், நடு, மேல் முதுகு வரை பரவி கழுத்து வழியக மண்டை வழி நெற்றிக்கு வந்து புருவ மத்தியில் நிற்கிறது. அதனால்தான் இது சக்தி வாய்ந்த ஆசனமாகக்கருதப்படுகிறது.
செய்முறை
விரிப்பில் நேராக நிற்கவும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேலாக உயர்த்தவும்.
மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்னால் குனிந்து பாதி நிலை குனிந்து கைகளை தோள் உயரத்தில் முன் பக்கமாக நீட்டி இருக்க வேண்டும்.
இந்த நிலையில் 20 வினாடிகள் இருந்த பின் முந்தைய நிலைக்கு வரவும்.
அதிக இரத்த அழுத்தம் மற்றும் தீவிர கண் கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை பயில்வதை தவிர்க்கவும்.
இதை முழுமையாக செய்ய முடியாதவர்கள் முழங்காலில் கைகளை வைத்து நிற்கலாம். இது ஊர்த்துவ உத்தானாசனம்.
பயன்கள்
உடல் முழுமையையும் நீட்டுகிறது (stretch)
மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
தோள்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது
கழுத்து வலியை போக்க உதவுகிறது
சையாடிக் பிரச்சினை தீர உதவுகிறது
- மகாத்மா வித்யாலயாவில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
- பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகா குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார்.
ஆசிரியை மாரியம்மாள் வரவேற்றார். மாணவர்கள், ஆசிரியர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகா குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.
- சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.
சிவகாசி
பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட நேரு யுகேந்திரா-விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து சர்வதேச யோகா தினத்தை கல்லூரி கலையரங்கில் கொண்டாடியது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் விஷ்ணுராம் மற்றும் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மாணவி சவுமியா வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட இளைஞர் நல அதிகாரி ஞானசந்திரன் கலந்து கொண்டார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட சமூக சுகாதார அலுவலர் ராஜாகுமார், யோகா அமைப்பை சேர்ந்த ஜெயக்குமார், ரமேஷ், கோபிநாத், கருப்பசாமி, அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். துர்க்கை ஈஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் சுந்தர மூர்த்தி, நேரு-யுகேந்திர அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
- முதல்வர் ராணி போஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார்.நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், முன்னாள் துணை ஆணையர் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் பள்ளியின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
காரைக்குடி என்.சி.சி பட்டாலியன் கர்னல் ரஜினீஷ் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொண்டார்.அவர் பேசுகையில், யோகாவின் சிறப்புகளை பற்றியும்,யோகாவால் உடல் ஆரோக்கியத்தை பராமரித்தல் பற்றியும்,மனநிலையை சீராக்கி பராமரித்தல் பற்றியும் எடுத்துக்கூறினார்.
மாணவர்கள் அனைத்து விதமான யோகாசனஙகளையும் செய்தனர். குறிப்பாக 7-ம் வகுப்பு மாணவன் மாநில அளவிலான யோகா சாம்பியன் யஷ்வந்த் செய்த யோகாசனங்கள் வியப்பில் ஆழ்த்தியது.முதல்வர் ராணி போஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- யோகாசங்களை முறையாக தினமும் பயின்றால் பரம்பரை வியாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
- யோகாசனங்களை முறையாக கற்க குருவின் மேற்பார்வையில் பயிலுங்கள்.
மாணவர்களுக்கு நன்மைகள்
படிக்கும் பள்ளி மாணவர்கள் அவசியம் தினமும் யோகாசனம் செய்ய வேண்டும். செய்தால்
• ஞாபக சக்தி அதிகரிக்கும்
• மன அழுத்தம் நீங்கும்
• கோபம் குறையும்
• பொறுமை, நிதானம் பிறக்கும்
• தன்னம்பிக்கை அதிகமாகும்
• எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்
• நேர்முகமான எண்ணங்கள் வளரும்
• பெரியவர்கள் மதிப்பார்கள்
• பிற்கால வாழ்க்கை ஆரோக்கியமாக அமையும்
• சமுதாயத்தில் சிறந்த பண்புள்ள
தலைவனாக உருவாகுவார்கள்
மாணவர்கள், பத்மாசனம், வஜ்ராசனம், புஜங்காசனம், பச்சி மோஸ்தாசனம், சர்வாங்காசனம், மச்சாசனம், போன்ற ஆசனங்களை முறையாக தக்க ஆசானிடம் பயின்று பலன் அடையுங்கள்.
பெண்களுக்கு நன்மைகள்
பெண்களுக்கு யோகாசனத்தால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன
• மாதவிடாய் பிரச்சினை தீரும்
• மாதவிடாய் சரியாக வரும். அதிக உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் சரியாகும். மன அழுத்தம் நீங்கும்
• இடுப்பு வலி, எலும்பு தேய்மானம் வராது
• உடல் பருமன் குறையும்
• தைராய்டு பிரச்சினை சரியாகும்
• கருப்பை நன்கு இயங்கும்
• சுகப்பிரசவம் உண்டாகும்
• இளமையுடன் வாழலாம்
குடும்பத்தில் நன்மைகள்
குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மகள், தாத்தா, பாட்டி இருக்கலாம். இன்று பெரும்பாலான குடும்பத்தில் அனைவரும் மருத்துவரிடம் சென்று தொடர்ந்து BP மாத்திரை, சுகர் மாத்திரை என்று மாதம் வருமானத்தில் பெரும்பங்கு மருத்துவத்திற்கு செலவழிக்கின்றனர். முறையாக அவர்களுக்கு உகந்த எளிமையான யோகாசனங்கள் செய்தால் நிச்சயமாக மாத்திரை சாப்பிடாமல் வாழலாம். மருத்துவ செலவு மிச்சமாகும். மன அழுத்தம் இல்லாமல் வாழலாம்.
ஒரு குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படும். மன அமைதி குறையும். பணம் ஒரு பக்கம் செலவாகும், மறுபக்கம் மன அழுத்தம் அதிகமாகும். எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் எளிமையான யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்து நோயின்றி ஆனந்தமாக வாழுங்கள்.
உங்களது, உடல் நிலை, வயது, உடலில் உள்ள வியாதியின் தன்மைக்கேற்ப தக்க குருவிடம் யோகக்கலைகளை பயின்று வளமாக வாழுங்கள்.
- திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- யோகா தினம் விழா கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் ஷகிலா ஷா ஆகியோர் வழிகாட்டுதலின்படி கல்லூரி இயக்குனர் ஆர்.சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா தினம் விழா கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் ஷகிலா ஷா ஆகியோர் வழிகாட்டுதலின்படி கல்லூரி இயக்குனர் ஆர்.சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த யோகா தினம் விழாவில் கல்லூரி முதல்வர் மு.நயாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி ஒருங்கிணைப்பாளரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனியாண்டி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியை கல்லூரி வளாக அதிகாரி சத்திய மூர்த்தி மற்றும் தேசிய மாணவர் படை அலுவரும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனருமான நாராயணபிரபு ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
இந்த யோகா தினம் விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் யோகா தினம் விழாவில் திரளாக கலந்து கொண்டு யோகா செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்