என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இணையதளம்"
- விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சமூக சேவைக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.
- முதலமைச்சரால் ஒங்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டகலெக்டர் மோகன் வேளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூகசேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சரால் ஒங்வொருஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
இந்த விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல்வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமைசேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்துபணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
சமூக சேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள்.
தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில்(https://awards.tn.gov.in/) இணையதளவழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 30.06.2022 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும்வி ண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்திற்கான இணைய தளம் (https://dindigul.nic.in) என்ற இணைப்பின் மூலம் எளிதாக காணலாம். மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் செயல்பாடுகள், தமிழகஅரசால் செயல் படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் தொடர்புடைய துறைகளால் வெளியிடப்படும் ஒப்பந்தபுள்ளி விரவங்கள், பத்திரிகை செய்திகள் மற்றும் பிற அரசுத்துறை சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட் போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் இந்த வலைதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வடிவமைக்கப்பட்ட இந்த வலைதளம் இந்திய அரசின் தகவல் தொடர்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி அனைத்து இணையதள பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் வெளிப்படையான செயல்பாடுகளை உறுதிபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே அரசுத்துறையின் பல்வேறு சேவைகளையும், விவரங்களையும் பெற்று பயன் அடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்