search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கியம்"

    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.
    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, குடும்ப உறவுகளின் ஆரோக்கியம், வாழ்வின் சுறுசுறுப்பு, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.

    இவற்றில் நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.

    கல்லீரல் ஜீரண உறுப்புகளின் ஒரு பகுதி 500க்கும் மேற்பட்ட வேலைகளை பார்ப்பது இதன் பொறுப்பு.

    * பித்த நீர் உற்பத்தி செய்து கொழுப்பு, புரதம், போன்ற இவற்றினை உடைத்து குடலில் உடனடி எளிதாய் உறிஞ்ச உதவுகின்றது.

    * வைட்டமின் கே உறிஞ்சப் பித்த நீர் மிக அவசியமாகின்றது. வைட்டமின் கே இல்லாவிடில் ரத்தம் கசிவு ஏற்பட்டால் கூட நிற்காது. ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    * கார் போன்ற டிரேட்டுகளை உடைத்து குளுகோசாக மாற்றி ரத்த ஓட்டத்தில் செலுத்தி திசுக்கள் அதனை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன. அதிக குளுகோஸ்களை கோனாம் கல்லீரலில் சேமிக்கப்பட்ட தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் தாது, உப்புகளை பாதுகாத்து வைக்கின்றது. வைட்டமின் ஏ. பி12, டி, ஈ, கே மற்றும் இரும்பு காப்லர் போன்ற தாது உப்புகளை சேமித்து குறைபாட்டின் போது உதவுகின்றது.

    ரத்தத்தினை வடிகட்டி நச்சினை நீக்கி சுத்திகரிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது. இப்படி எண்ணற்ற கல்லீரல் செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நம்மைத்தாக்கும் பல நோய்கள் கல்லீரலை பாதிக்கலாம்.

    * வைரஸ் தாக்குதல்

    மதுவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல், மது இல்லாமல் உணவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல், பித்த குழாய்கள் பாதிப்பு கல்லீரல் இறுகுதல், அதிக சர்க்கரை யால் ஏற்படும் பாதிப்பு என பல வகை பாதிப்புகள் ஏற்படலாம்.

    மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்துவதில் சுகாதாரமின்மை பச்சை குத்தி கொள்ளுவதில் சுகாதாரமின்மை ரசாயனங்கள், சர்க்கரை நோய், கூடுதலான எடை பொட்டாசியம் குறைபாடு ஆகியவைகளும் கல்லீரல் குறைபாட்டினை ஏற்படுத்தலாம்,

    மிக அதிகமாக பல்வேறு தாக்குதல்களுக்கும் ஈடு கொடுக்கும் கல்லீரலுக்கும் தாக்கு பிடிப்பதற்கும் ஒரு அளவு உண்டு அல்லவா.

    கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக மஞ்சள் காமாலை ஏற்படலாம், வயிற்றில் வலி, வீக்கம் ஏற்படலாம். கால் கணுக்காலில் வீக்கம் ஏற்படலாம்.

    * சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்
    * சிறுநீர் அடர்ந்து இருக்கலாம்
    * ரத்தம் அல்லது கறுநிற வெளிப்போக்கு இருக்கலாம்.
    * அதிக சோர்வு ஏற்படலாம்.
    * எப்பொழுது தூங்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.
    * வயிற்று பிரட்டல், வாந்தி, பசியின்மை இருக்கலாம்.
    * குழப்பமான உணர்வு இருக்கலாம்.

    * மூட்டுவலி, ரத்த கொதிப்பு, மன உளைச்சல் போன்றவைகளும் அறிகுறிகளாக இருக்கலாம்.
    இத்தகு பாதிப்புகள் இருப்பின் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. தவிர்ப்பு முறையாக கீழ்க்கண்டவைகளை பின் பற்றலாம்.
    * அதிகம் பதப்படுததப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.

    * காய்கறி ஜூஸ் அருந்துங்கள்- காரட், பீட்ரூட், முட்டைகோஸ், புடலை, பீர்க்கை இவைகளில் ஏதேனும் ஜூஸ் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.
    எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, இவற்றினையும் ஜூசாக எடுத்துக் கொள்ளலாம்.

    கீரை, பூண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றினையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் பொட்டாசியம் சத்து இருக்க வேண்டும். பீன்ஸ், பீட்ரூட், பசலை, கரும்பு ஜூஸ், சர்க்கரை வள்ளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றினை நன்கு எடுத்துக் கொள்ளுங்கள். இது சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதனை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாய் ஆல்கஹாலினை தவிர்த்து விடுங்கள்.

    இஞ்சி, மஞ்சள். பட்டை, லவங்கம் இவற்றினை நம் முன்னோர்கள் நன்கு உணவில் சேர்த்தனர். ஆரஞ்சு பழம், குடை மிளகாய், காரட், வெள்ளரி, ஆப்பிள் இவையும் நவீன விஞ்ஞான ஆய்வின் சிபாரிசாக கல்லீரல் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்படுகின்றது. 
    தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை சுத்தம் செய்கின்றன. செல்களை புதுப்பிக்கின்றன. தசைகளை வலுப்படுத்துகின்றது. கொழுப்பினை உடைக்கின்றது.

    ரத்தத்தில் சர்க்கரை அளவினை சீர் செய்கின்றது. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழ பழகுங்கள். அத்துடன் தினமும் 8-10 மணி நேரம் தூங்குங்கள். தூக்கம் வரவில்லை எனில் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். சீக்கிரம் தூங்கி விடுவீர்கள்.

    * இரவு உணவினை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்ற அறிவுரையினை மருத்துவ உலகம் கூறுகின்றது. 7 மணிக்குள் உணவினை முடித்துக் கொண்டால் 9 மணிக்கு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது என பலர் கூறுகின்றனர்.  ஏதேனும் புரதமாக சிறிதளவு எடுத்துக் கொள்வது வயிறு நிறைவினை தரும். ஆரோக்யத்தினையும் அளிக்கும். சிறிதளவு பன்னீர் அல்லது சில பாதாம் கொட்டைகள் இவையே போதும். மாவு சத்து, சர்க்கரை சேர்ந்த உணவு கண்டிப்பாக வேண்டாம்.

    * தூங்குவதற்கு முன்னால் சில எளிய யோகாசனங்கள் செய்யலாம்.

    * குடல், உணவுப் பாதை நன்கு இருந்தால் உடல் சிறந்த ஆரோக்கியம் பெறும். எனவே அன்றாட உணவில் கொழுப்பில்லாத தயிர், மோர் இவற்றினை எடுத்துக் கொள்வதும் தூக்கத்திற்கு உதவும்.

    * கால்ஷியம், மக்னீசியம் இவை தேவையான அளவு உங்கள் உடலில் உள்ளதா என்பதை உங்கள் மருத்துவர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

    * வெந்நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவது இரவில் உடலினை ஆசிட் தன்மை இல்லாது  வைக்கும். ஆசிட் தன்மை இல்லாது இருந்தாலே உடல் தொந்தரவின்றி இருக்கும். 
    ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
    மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டுவிட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.

    அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை ஆறு மணிக்கு காபி அல்லது டீ, எட்டு மணிக்கு இரண்டு இட்லி, பத்து மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, நான்கு மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை ஆறு மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.

    சிலர் வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படிச் சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்குப் பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது.

    சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம். பொதுவாக முப்பது வயதைக் கடந்துவிட்டாலே சரியான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.

    நம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, விடிகிற பொழுது நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம். இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
    அதிக மசாலா, ஸ்வீட் இவையெல்லாம் உங்களின் ஆரோக்கியத்திற்கு எதிரிகள். எளிமையான, ஆரோக்கியமான உணவிற்கு உடனடியாக மாறுங்கள்.
    ஆரோக்கியம் என்பது நம் உடலில் மட்டுமல்ல. நம் தோற்றத்திலும் இருக்க வேண்டும். சுத்தமான தோற்றம், நகங்கள், சீவி முறையாய் வைத்த முடி, வாயில் துர்நாற்றம் இன்மை இவையெல்லாமும் மிக அவசியம். இதில் வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களின் சுகாதாரம் அவசியம். எளிதில் கிருமிகள் உருவாகி விடும். சில உணவுகள், புகை பிடித்தல் போன்றவைகளும் காரணமாகி விடும். தொண்டை சதை வீக்கம், ஈறு வீக்கம், கிருமி தாக்குதல் இவையும் வாயில் துர்நாற்றத்தினை ஏற்படுத்தி விடும். முதலில் காரணமறிந்து தேவைப்படின் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொதுவில் கீழ்கண்ட முறைகளை பின்பற்றுவது நல்ல பலன்களைத் தரும்.

    தினமும் இருவேளை பல் துலக்குங்கள். காலை, இரவு இரு வேளையும் பல் துலக்குவது மிக அவசியம். காரமான பற்பசைகளைத் தவிருங்கள். ஒவ்வொரு முறை உணவு அருந்திய பின்னும் நன்கு வாய் கொப்பளியுங்கள். பற்களுக்கு இடையேஇருக்கும் உணவு துண்டுகளை Floss என்ற முறையில் நீக்குங்கள்.
    கை விரலால் பல் தேய்த்த பிறகு ஈறுகளை மசாஜ் செய்யுங்கள். பல் செட் வைப்பவர்கள் அன்றாடம் அதனை சுத்தம் செய்யுங்கள்.

    முடிந்த வரை ‘எண்ணெய் கொப்பளித்தல்’ oil pulling செய்யுங்கள் இதனை ஆயுர் வேத முறையில் மிகவும் அறிவுறுத்துகின்றனர். நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையினை காலையில் வாயில் ஊற்றி இருபது நிமிடங்கள் வைத்திருந்து துப்பி விடுங்கள். பற்கள் சுத்தம் ஆகின்றது. ஈறுகள் வலுப்பெறுகின்றன. வாய் துர்நாற்றம் நீங்குகின்றது. நாக்கினை நன்கு சுத்தம் செய்யுங்கள்.

    வாய் துர்நாற்றம் வயிற்றில் சரியான ஜீரணம் இன்மை காரணமாக இருக்கலாம். probiotics உணவுகள் உணவுப் பாதைக்கு மிகவும் நல்லது. நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி கெட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடும். கொழுப்பு குறைந்த தயிர், மோர் இவை உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். காய்கறி சாலட், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். முளை கட்டிய பயறு, புதினா, கொத்தமல்லி, இஞ்சி, எலுமிச்சை இவை உங்களின் அன்றாட உணவில் இருக்கட்டும்.

    அதிக மசாலா, ஸ்வீட் இவையெல்லாம் உங்களின் எதிரிகள். எளிமையான, ஆரோக்யமான உணவிற்கு உடனடியாக மாறுங்கள்.  

    * உணவு உண்ணும் பொழுது அளவாகவே நீர் குடியுங்கள். சாப்பிட்டு 1/2 மணி நேரம் சென்று நீர் எடுத்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும் நீர் எடுத்துக் கொள்ளலாம்.

    * அதிக ஸ்ட்ரெஸ் இருக்கும் பொழுது உணவு அருந்தாதீர்கள்.

    * உங்களுக்கு பிகாம்ப்ளெக்ஸ் சத்து தேவைப்படுகின்றதா என்று மருத்துவரிடம் கேட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

    * உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும். இவையெல்லாம் உங்கள் உணவுப் பாதையை ஆரோக்கியமாய் வைக்கும். இதனால் உங்கள் வாயும் துர்நாற்றமின்றி ஆரோக்கியமாய் இருக்கும்.

    * இலவங்கம், ஏலக்காய், சோம்பு இவை வாய் துர்நாற்றத்தினை நீக்க வல்லவை.

    வைட்டமின் டி: பல தடவை இதனைப் பற்றி எழுதி இருந்தாலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் வைட்டமின் ‘டி’ சத்து குறைபாடு அதிகமாகவே காணப்படுகின்றது.

    உடல் மீது சூரிய ஒளிபடும் பொழுது கொலஸ்டிராலில் இருந்து இச்சத்து உருவாகின்றது. எனவே தான் வைட்டமின் ‘டி’ குறைபாடு இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் 10 - 20 நிமிடம் இளம் வெயிலில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகின்றது. வைட்டமின் ‘டி’யின் மற்றொரு பெயர் ‘சூரிய ஒளி வைட்டமின்’ என்பதாகும். சூரிய ஒளியில் உள்ள UUB கதிர் உடலின் மீது பட்டு சரும செல்களில் உள்ள கொலஸ்டிராலில் இருந்து வைட்டமின் ‘டி’ சத்து உருவாகச் செய்கின்றது.



    வைட்டமின் ‘டி’யின் உபயோகங்கள் மிக முக்கியமானதாக சமீப கால மருத்துவத்தில் வலியுறுத்தப்படுகின்றது. இந்த வைட்டமின்தான் குடலில் கால்ஷியம், பாஸ்பரஸ் உறிஞ்சச் செய்கின்றது. இந்த இரண்டு தாதுக்களும் ஆரோக்யமான உறுதியான எலும்பிற்கு மிக அவசியமானவை.

    வைட்டமின் ‘டி’ சத்து குறைபாடு கீழ்கண்ட பாதிப்புகளுக்கு காரணம் ஆகின்றது என மருத்துவ உலகம் நீண்ட ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றது.

    * எலும்பு தேய்மானம்
    * எலும்பு கரைதல்
    * புற்று நோய்
    * மனஉளைச்சல்
    * தசைகள் பலவீனம்
    * இறப்பு
    ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு இவற்றின் மூலமும் வைட்டமின் டி கிடைக்கும். இவற்றினை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    சூரிய ஒளி மூலம் பெறுவது எளிதான வழி என்பது அனுபவ உண்மையாகும். ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளி மூலம், இதனைப் பெற முடியாது. எனவே சோம்பல் படாமல் காலை, மாலை நடைபயிற்சி மூலம் இதனைப் பெறுங்கள்.

    நம் நாட்டில் பகல் வேலைகளில் மிகவும் கொளுத்தும் வெய்யிலாக இருப்பதால் இந்த நேரத்தினை சிபாரிசு செய்வதில்லை. காலை 10 மணி முதல் மாலை 3.00 - 4.30 மணி வரை (அக்னி நட்த்த்திர நேரத்தில் சூரிய உஷ்ணத்தினைப் பொறுத்து செய்யவும்) 10-20 நிமிடங்கள் உடல் மீது சூரிய ஒளி பட்டால் நல்லது.

    சற்று அடர்ந்த நிறம் கொண்டவர்களுக்கு அவர்களது நிறமே சிறந்த சரும பாதுகாப்பினை அளித்து விடுகின்றது. இது இயற்கை sun screen ஆகும். ஆனால் இவர்களுக்கு சற்று கூடுதல் நேரம் சூரிய ஒளி தேவைப்படும். எனவேத்தான் அடர்ந்த நிறம் கொண்டவர்களுக்கு வைட்டமின் ‘டி’ குறைபாடு சற்று கூடுதலாகவே உள்ளது. ஆனால் கறுப்பு கண்ணாடி, தலையில் தொப்பி அணிந்து செல்வது இவையெல்லாம் தேவையே என்று கூறப்படுகின்றது.

    sun screen போட்டு வெய்யிலில் இருக்கலாமா என்ற கேள்வியினை இளைய சமுதாயம் நிறையவே கேட்கின்றது. இவர்கள் ‘ஏசி’யினை விட்டு வெளியே வருவதே கடினமாகி விட்டது. இவர்கள் காலையில் உடற்பயிற்சி என்ற முயற்சியில் திறந்த வெளியில் இருந்தாலே இவர்களது உடல் ஆரோக்கியம் காக்கப்படும். எந்த ஒரு நல்ல முயற்சியினையும் ஒன்று செய்யாது இருப்பது அல்லது அதிகமாக செய்து அதனை தீமையாக்கிக் கொள்வது மனித இயல்பாகி விட்டது.

    எந்த அளவிற்கு சூரிய ஒளி பெற வேண்டுமோ அந்த அளவே பெற வேண்டும். நம் ஊர் வெயிலுக்கு கூடுதலாக வெயிலில் இருந்தால்

    * sun brun எனப்படும் சரும பாதிப்பு ஏற்படும். சருமம் சிவந்து, வீங்கி, வலியுடன் கொப்பளங்கள் ஏற்படும்.
    * கண் நோய்கள் உண்டாகும்.
    * சருமம் வயோதிக தோற்றத்தினை அளிக்கும்.
    * Heat Stroke எனப்படும் பாதிப்பு ஏற்படும்.
    * சரும புற்று நோய் ஏற்படும்.
    ×