search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிறுதி"

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் காலிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மூன்றரை மணி நேரம் போராடி தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Wimbledon2018 #RogerFederar #KevinAnderson
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    இரண்டாவது காலிறுதியில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 8ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொண்டார்.

    பெடரர் முதல் செட்டை 5-2, இரண்டாவது செட்டை 7-6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டர்சன் 5-7, 4-6 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் தீவிரமாக போராடினர். இறுதியில், ஆண்டர்சன் 11-13 என் அந்த செட்டை கைப்பற்றி அசத்தினார்.

    ஆட்டத்தின் முடிவில் 6-2, 7-6, 5-7, 4-6, 11-13 என்ற கணக்கில் பெடரர் போராடி தோல்வி அடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார் ரபேல் நடால். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotro
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரபேல் நடால் சிறப்பாக ஆடினார். இதனால் முதல் சுற்றை 6-4 என்ற கணக்கிலும், இரண்டாவது சுற்றை 6-1 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.

    இதையடுத்து, ரபேல் நடால் 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

    ரபேல் நடால் இதுவரை 16 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர். இவர் பிரெஞ்ச் ஓபனை 10 முறை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotr
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால் மற்றும் மரின் சிலிச் ஆகியோர் பங்கேற்ற காலிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
    தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் அர்ஜெண்டினாவின் டிகோ ஷ்வர்ட்ஸ்மான் மோதினர்.



    இதில், முதல் செட்டில் அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார். இதையடுத்து, ஆக்ரோஷமாக ஆடிய நடால் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் குரோசியா வீரர் மரின் சிலிச் மற்றும் அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவும் மோதினர். முதல் சுற்றில் 6-6 என்ற கணக்கில் சமநிலை வகித்தபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இந்த ஆட்டங்கள் மறுநாள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் செச்சினடோ முன்னாள் சாம்பியனான ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #FrenchOpen #MarcoCecchinato
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், இத்தாலியின் மார்கோ செச்சினடோவும் மோதினர்.



    இதில், இத்தாலி வீரர் செச்சினடோ முதல் இரண்டு சுற்றுகளை 6-3, 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து, மூன்றாம் சுற்றை 1-6 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார்.

    தொடர்ந்து நடைபெற்ற நான்காவது சுற்றில் செச்சினடோ அபாரமாக விளையாடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், இத்தாலி வீரர் மார்கோ செச்சினடோ 6-3 7-6(4) 1-6 7-6(11) என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். #FrenchOpen #MarcoCecchinato
    ×