search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான்"

    • இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது.
    • யாரும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை.

    ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் தனது மனைவியின் கால்களை கட்டி ஒரு மோட்டார் சைக்கிளில் கணவன் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது. யாரும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தனது சகோதரியை பார்க்க வேண்டும் இழுத்து செல்லப்பட்ட பெண் தனது கணவனிடம் வற்புறுத்தியுள்ளார். அது கணவனுக்கு பிடிக்கவில்லை. கணவர் மறுத்தாலும் தனது சகோதரியை பார்க்க அவர் விரும்பியுள்ளார்.

    இதனால் கோவமான கணவன், தனது மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மனைவியின் கால்களை கட்டி இழுத்து சென்றுள்ளார். குடிப்பழக்கம் உள்ள கணவர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஒருவர், சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்துள்ளார்.
    • அவரிடம் ராணுவத்தைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசியுள்ளனர்

    ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரரை போலீசார் நிர்வாணாபடுத்தி அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஒருவர், சொந்த வேலையாக ஜெய்ப்பூர் வந்துள்ளார். அவரை எந்த காரணமும் இன்றி சாஸ்திரி பாத் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

    அங்கு வைத்து அவரது ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தி, அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரிடம் ராணுவத்தைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அம்மாநில தொழில் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு நேரில் சென்று அங்கிருந்த போலீசாரை அவர்களின் தரக்குறைவான செயலுக்காகக் கண்டித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ராணுவ வீரர் அடித்துத் துன்புறுத்தப்பட்டது மருத்துவ அறிக்கையில் உறுதியாகியுள்ளது, போலீசின் செயல் ஏற்றுக்கொள்ளமுடியாதது, சட்டத்தை மீறிய அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • 115 அடி உயரமான நீர்வீழ்ச்சிக்கு பைரவா என்ற இளைஞர் குளிக்க சென்றுள்ளார்.
    • மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கனமழையால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் குளிக்க சென்ற 3 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மேனல் நீர்வீழ்ச்சிக்கு 26 வயதான பைரவா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

    கிட்டத்தட்ட 115 அடி உயரமான அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்த பாறையில் நின்று தனது நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது நிலை தடுமாறி பைரவா கீழே விழுந்துள்ளார்.

    அங்கு கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த நண்பர்களும் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் கன மழையினால் நீரோட்டம் அதிகமாகி அந்த இளைஞன் இழுத்து செல்லப்பட்டு 115 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மீட்புப்படையினர் பைரவாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • ராஜஸ்தான் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடப்போவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் வட இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் தாக்கம் மிகவும் அதிகம். ராஜஸ்தான் மாவட்டத்தில் வெப்பத்தை குறைக்கும் வகையில் ராஜஸ்தான் கல்வி அமைச்சரான மதன் தில்வார் மிகப்பெரிய அளவில் தோட்ட இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

    அதுவும் அங்கு விமர்சையாக கொண்டாடப்படும் ஹரியாலி தீஜ் பண்டிகையை முன்னிட்டு இந்த இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த இயக்கத்தின் நோக்கமே நாம் அனைவரும் நம்மாள் முடிந்த அளவுக்கு மரக்கன்றுகளை நட வேண்டும் என்பது தான். நீங்கள் வீட்டில் ஒரு ஏசி வைத்து இருந்தால் நீங்கள் குறைந்தது 50 மரக்கன்றுகள் நட வேண்டும்.

    ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராஜஸ்தானில் நடைப்பெறவுள்ள ஹரியாலி தீஜ் பண்டிகையை முன்னிட்டு இந்த இயக்கத்தின் கீழ் ராஜஸ்தான் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இந்த பெரும் இயக்கத்தில் இரு சக்கர வாகனம், கார் மற்றும் கனரக வாகனம் ஓட்டுபவர்கள் 5- இல் இருந்து 20 மரக் கன்றுகள் நடவேண்டும். பெட்ரோல் பம்ப் மற்றும் கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் 300 மரக் கன்றுகளை நடவேண்டும் என கூறியுள்ளார்.

    அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் கட்டாயமாக மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும், நடப்பட்ட மரகன்றுகளை பராமரிக்க அதன் புகைப்படங்களை மொபைல் ஆப்- இல் பதிவிட வேண்டும் அதன் மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இந்த விஷயத்தில் யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியாது. யார் எவ்வளவு மரக்கன்றுகளை நடுகிறார்கள் என்றும் நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் ராஜஸ்தான் குடிமகன்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் தானாக முன் வந்து கலந்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார். ராஜஸ்தான் கல்வி அமைச்சரின் இந்த துவக்கம் மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    • நள்ளிரவில் மாணவி மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடி உள்ளார்.
    • மாணவியின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்காத விரக்தியில் 18 வயது மாணவி யதி அகர்வால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.

    ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார்.

    நள்ளிரவில் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிய மாணவி அடுத்த சில மணிநேரங்களிலேயே தற்கொலை செய்து இறந்துள்ளார்.

    மாணவியின் தற்கொலை கடிதத்தில், "தனது பெற்றோரின் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.

    இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் யதி அகர்வால் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால் அடுத்த வருடம் நடைபெறும் நீட் தேர்வுக்கு தயாராவதற்காக ஒரு பயிற்சி மையத்தில் அவர் சேர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது.
    • பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.

    பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.

    மேனகா பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று அம்மாநில கல்வித்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

    அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மேனகா, ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார்.
    • அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.

    ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் என்பவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க பல முறை அலைந்தும், முடியாததால் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மிதோரா கிராமத்தில் வசிக்கும் பாபுராம் பில்லுக்கு ராஜஸ்தான் அரசு தவறுதலாக இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் தனது அடையாளத்தையும், சொத்துக்களுக்கான உரிமையையும் பாபுராம் இழந்துள்ளார்.

    அரசின் இறப்பு சான்றிதழை ரத்து செய்வதற்கு சட்ட வழிகளை பாபுராம் நாடியுள்ளார். ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அவரது கோரிக்கை நிறைவேறவில்லை.

    இதனால் விரக்தியடைந்த பாபுராம் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதற்கு வித்தியாசமான வழிமுறையை கண்டறிந்தார்.

    அதன்படி, சமீபத்தில் பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் பள்ளி வளாகத்தில் புகுந்து பலரையும் பாபுராம் தாக்கியுள்ளார். பின்னர் போலீசார் விரைந்து வந்து பாபுராமை கைது செய்தனர். போலீசாரிடம் பிடிபட்ட போது, "போலீசார் என்னை கைது செய்தால்தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முடியும்" என்று பாபுராம் கூறியுள்ளார்

    பின்னர் போலீசாரின் விசாரணையில், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க செல்போன் டவரில் ஏறி மிரட்டிய பாபுராம் கடைசியாக பள்ளியில் புகுந்து ஆசிரியர்களை தாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

    பாபுராம் கூறிய விவரங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
    • பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரெயில் பாலத்தில் நின்று ட்ரோன் மூலமாக ஒரு புதுமண தம்பதி ஃபோட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    அப்போது ரெயில்வே தடத்தில் திடீரென ரயில் வந்ததால் பயத்தில் செய்வதறியாது 90 அடி பள்ளத்தில் கணவன் மனைவி இருவரும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலத்தில் இருந்து புதுமண தம்பதி குதிக்கும் வீடியோ உறவினரின் மொபைல் போனில் பதிவாகியுள்ளது.

    குறைவான வேகத்தில் ரெயில் வந்து கொண்டிருந்ததால் புதுமண தம்பதியை பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ஆனால் ரெயில் நிற்பதற்கு முன்பாக அவர்கள் இருவரும் பாலத்தில் இருந்து குதித்துள்ளனர்.

    ரயிலை நிறுத்திய ஓட்டுநர்கள், கீழே விழுந்த ராகுல் - ஜான்வி தம்பதியை அவர்களின் நண்பர்களுடன் இணைந்து மீட்டனர். படுகாயம் அடைந்த இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்ட்டர் கிரிராஜ் என்னிடம், உன்னை பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, ஒரு ராத்திரிக்கு எவ்வளவு என்று கேட்டார்.

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் கன்னத்தில் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. இவர் கடந்த ஜூலை 11 வியாழக்கிழமை அதிகாலை சக ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை நிறுத்தி, விமான நிலைய நுழைவுவாயிலில் விமான குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது அனுராதாவிடம் தகாத முறையில் ஆபாசமாக கிரிராஜ் பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம்ஏற்பட்டு அனுராதா ராணி கிரிராஜின் கன்னத்தில் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் அனுராதா ராணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. ஆனால் அவர் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளால் தகாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையை அணுகி உள்ளோம். இந்த விஷயத்தில் எங்கள் ஊழியருக்கு முழு ஆதரவையும் வழங்குகிறோம் என்றார்.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனுராதா ராணி தற்போது கிரிராஜ் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முனவித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், 'ஜூலை 11 காலை 4.30 மணிக்கு நான் எனது வேலையை செய்ய வந்தேன். அப்போது சப்-இன்ஸ்பெக்ட்டர் கிரிராஜ் என்னிடம், உன்னை பார்த்துக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடு, ஒரு ராத்திரிக்கு எவ்வளவு ரேட் என்று கேட்டார்.

     உங்கள் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்று நான் கூறியதற்கு, நான் சொல்வதைக் கேள், நீ நன்றாக உணர்வாய், வேலை வேகமாக முடிந்துவிடும் என்று தெரிவித்தார். இதனால் அவரை அறைந்தேன். நான் போலீஸ் புகார் அளிப்பதற்கு முன் அவர் என்மீது புகார் அளித்துவிட்டார்' என்று தெரிவித்தார். விமான நிலையத்தில் இரவு நேரத்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் இல்லாததால் மற்ற பெண் பணியாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

    • கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர்.
    • தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

     

    இந்நிலையில் மக்களவையில் சபாநாயகராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லா கடந்த நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்ட ஓம் பிர்லா ராஜஸ்தானை சேர்நதவர் ஆவார். கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநில கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓம் பிர்லா கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் கோட்டா தொகுதியின் எம்.பியாக தேர்வாகி பாராளுமன்றம் சென்றார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.

     

     தனது வெற்றி குறித்து தற்போது PTI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி பிர்லா, தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்து வரும் சேவையைபோல தானும் இந்த சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் ஆவதற்கு முன்னதாக அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். மேலும்  தேர்வு எழுத்தமேலேயே அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.

     

     

    • இந்த பெண் 150 ரூபாய்க்கு கிடைப்பாள் என்று அந்த நபர் பேசியுள்ளார்.
    • வீடியோவில் அந்த நபர் இந்தியில் பேசியதால் வெளிநாட்டை சேர்ந்த பெண்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அமர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பெண்களை படம் பிடித்து அவர்களுக்கு என்ன விலை என்று ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அந்த வீடியோவில், வெளிநாட்டை சேர்ந்த பெண்களை காட்டி இந்த பெண் 150 ரூபாய்க்கு கிடைப்பாள், அந்த பெண் 300 ரூபாய்க்கு கிடைப்பாள் என்று அந்த நபர் பேசியுள்ளார்.

    அந்த நபர் இந்தியில் பேசியதால் அதனை புரிந்து கொள்ள முடியாத வெளிநாட்டு பெண்கள் அந்த வீடியோவில் சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த வீடியோ கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது என்றும், தன்னை ஒரு டூரிஸ்ட் கைடு என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டு பெண்களிடம் இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
    • பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்

    ராஜஸ்தானில் போக்ஸோ வழக்கில் போலீஸ் கஸ்டடியில் இருந்த நபர் தனது பிறப்பு உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 35 வயதான அப்துல் வாசித் என்னும் மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு, தான் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் இருந்த அப்துல் வாசித், காவல் நிலைய கழிவறைக்குச் சென்று தனது பையில் வைத்திருத்த கூர்மையான பொருளை வைத்து தனது பிறப்பு உறுப்பை அறுத்துத் துண்டித்துக் கொண்டுள்ளார்.

    போலீஸ் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர்பிழைத்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×