search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கோட்டை"

    • சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இப்பணிகளை செய்து வருகிறது என்று நீதிபதி சுனில்ராஜா பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள கற்குடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் சர்வதேச நீதி தினத்தை முன்னிட்டு செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி சுனில்ராஜா தலைமை தாங்கினார். கற்குடி ஊராட்சி மன்ற தலைவா் முத்துபாண்டியன், துணைத் தலைவா் பாக்கியலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    பணிநிறைவு சி.ஐ.டி. அண்ணா மலை வரவேற்றார். வழக்கறிஞா்கள் சுடர்முத்தையா, ராமலிங்கம், கார்த்திகைராஜன், பாத்திமாசித்திக் ஆகியோர் சட்ட நுணுக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி பேசினர்.

    நீதிபதி சுனில்ராஜா பேசியதாவது:-

    இந்த குழுவின் நோக்கம் என்னவென்றால் சட்டத்தின் முன் அனை வரும் சமம். ஏழை, வசதி படைத்தவன் என்ற வேறுபாடு கிடையாது. வசதியில்லாத காரணத்தால் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகத்தான் அரசே இலவசமாக இப்பணிகளை செய்து வருகிறது.

    நீண்ட காலமாக நடந்து வரும் வழக்குகளை மக்கள் நீதிமன்றம் சமரச தீர்ப்பாயம் மூலம் தீர்வு தேடிக்கொள்ளலாம். அப்படி தீர்வு கிடைக்கப் பெற்றவா்களுக்கு வழக்குக்காக தங்கள் செலவு செய்த தொகை உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்த முகாமில் அதிமாக பெண்கள் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. என்றார்.

    நிகழ்ச்சியில் வழக்கறி ஞா்கள் மாலதி, சாமி, குமார், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் குத்தா லிங்கம், வேல்விழி, பத்மாவதி, அம்பிகா, வடகாசி, வசந்தகாளி, திரு மலைக்கு மார், வேலம்மாள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ஊராட்சி செயலா் இசக்கி நன்றி கூறினார். ஏற்பாடு களை வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணின் செய்திருந்தார்.

    • சுமார் 300 மாணவர்கள் இந்த டி.என்.பி.எஸ்.சி. மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
    • தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகம் மற்றும் ஆகாஷ் அகாடமி சார்பில் மாதிரி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நன்னுலகர் ராமசாமி வரவேற்றார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாதிரித் தேர்வை தொடங்கி வைத்தார். சுமார் 300 மாணவர்கள் இந்த டி.என்.பி.எஸ்.சி. மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதன் நிறைவாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்து ஆகாஷ் அகாடமி நிர்வாகி மாரியப்பன் செந்தில் மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் அறிவுரைகளையும் விளக்கிக் கூறினர். தண்டழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

    • நேபாளத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலஞ்சி பள்ளி மாணவன் திருவேல்முருகன், கீரிஸ்குமார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
    • தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி துா்காவுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை ரூ.5ஆயிரம் வழங்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை மற்றும் அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் சார்பில் 2021-2022-ம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் கல்வி பயின்று 10-ம், 12-ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி செங்கோட்டையில் நடந்தது.

    முன்னதாக கொரோனா பரவல் காலம் தொட்டு இன்றுவரையில் சுமார் 100 ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கிவரும் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகத்திற்கு சிறந்த சேவைநாயகன் விருது அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞா் கணேசபாண்டியன் தலைமை தாங்கினார்.

    பண்பொழி ஐ.ஏ.எஸ். அகாடமி மருதையா முன்னிலை வகித்தார். அறம் செய்ய விரும்பு டிரஸ்ட் நிறுவனா் சுதர்சன் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து ஐந்தருவி விவேகானந்தா ஆசிரமம் ஸ்ரீஅகிலானந்தமகராஜ் மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி ஆசி உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்தமருத்துவா்கள் கலா, நாகராஜன், ஓமந்துாரார்அரசு மருத்துவமனை மருத்துவா் முருகானந்தம், விவேகானந்தா கேந்திர மாவட்ட ஒருங்கிணை்ப்பாளா் கருப்பசாமி, வல்லம் ஊராட்சி மன்ற தலைவா் ஜமீன்பாத்திமா பிரானுார் ஊராட்சி மன்ற தலைவா் ஆவுடையம்மாள்ராஜா, செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர் ஒளி ராமதாஸ், செண்பகராஜன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினா். பின்னா் நேபாளத்தில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலஞ்சி பள்ளி மாணவன் திருவேல்முருகன், கீரிஸ்குமார், ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற திருச்செந்துார் காஞ்சி ஸ்ரீசங்கரா மேல்நிலைப்பள்ளி மாணவி துா்காவுக்கு பாராட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை மற்றும் அறம்செய்ய விரும்பு டிரஸ்ட் உறுப்பினா்கள் செய்திருந்தனர்.

    • பிரானூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் குப்பைகள் அதிகளவில் சிதறி கிடக்கிறது.
    • குப்பைகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    தமிழக- கேரள எல்லையான செங்கோட்டை - பிரானூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழியில் ஏராளமானோர் வசித்து வரும்நிலையில் சாலையோரம் குப்பைகள் அதிகளவில் சிதறி கிடக்கிறது.

    அதனை ஆடுகள் சாப்பிட்டு வருவதால் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி, அவ்வப்போது குவியும் குப்பையை உடனடியாக அகற்றிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கேரள வனத்துறை சார்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    செங்கோட்டை:

    தமிழகம், கேரளா ஆகிய 2 மாநிலங்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லை பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இதில் கேரள எல்லைக்கு உட்பட்ட அச்சன்கோவிலில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. அங்கு 4,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

    கும்பாவுருட்டி அருவி

    இங்குள்ளவர்கள் ரப்பர் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அய்யப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தை மாதம் வரை தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இங்கு அமைந்துள்ள கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சி கொள்ளை கொள்ளும் அழகை கொண்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவிக்கு மேக்கரை சோதனை சாவடி அருகில் அமைந்துள்ள மணலாறு வழியாக செல்ல வேண்டும். செங்கோட்டையில் இருந்து கும்பாவுருட்டி அருவிக்கு சுமார் 21 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

    1,200 அடி உயரம்

    மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் வடபுறத்தில் தரைமட்டத்தில் இருந்து 1,200 அடி உயரத்தில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவி அச்சன்கோவிலிலுக்கு செல்லும் வழியில் 12 கொண்டைஊசி வளைவு கொண்ட குறுகிய மலை வழியாக செல்லும் சாலையில் இந்த அருவி அமைந்துள்ளது.

    இதன் அழகை காணவும், ஆனந்தமாக குளியல் போடவும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகம், கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள்அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்த அருவியானது முழுமையாக காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அருவிக்கு செல்லும் பாதையின் இருபுறத்திலும் அடர்ந்த மரங்கள் இருக்கும்.

    குளிக்க தடை

    இங்கு வாழும் வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கேரள வனத்துறை சார்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த அருவியானது பல்வேறு மூலிகைகளை சுமந்து வருவதால், மிகவும் புனிதமானதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இருந்தும் கடந்த 2018-ம்ஆண்டு அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் கவனக்குறைவால் நிலை தடுமாறி விழுந்ததால் அவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால் சிலர் உயிரிழக்கவும் நேரிட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது.

    மீண்டும் அனுமதி

    இந்நிலையில் தற்போது தடைவிதிக்கப்பட்ட அந்த அருவியில் குளிப்பதற்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழக-கேரள எல்லை பகுதி வரையிலான அருவி சாலையானது மிகவும் மோசமாக உள்ளதால் இங்கு வரும் பெரும்பாலான வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. மேலும் நடுக்காட்டில் அருவி உள்ளதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏதேனும் நேரிட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வழி இல்லாமல் போய்விடுகிறது.

    கோரிக்கை

    எனவே அருவிக்கு அருகிலேயே முதலுதவி அறைகள் அமைத்து டாக்டர்களை நியமிக்க வேண்டும். பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டால் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வர அருவி பகுதியில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை சுற்றுலா பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    தமிழக எல்லையான மேக்கரை வரை தென்காசியில் இருந்து பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆந்திரா, கர்நாடகம் சுற்றுலா பயணிகளின் வருகையை கருத்தில் கொண்டு தென்காசியில் இருந்து கும்பாவுருட்டி அருவி வரை போக்குவரத்து வசதி நீடித்தால் சுற்றுலா பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கேரளா நீர்வளத்துறை சார்பில் தற்போது அருவி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் 2 மாநில பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • ஊர்வலத்தில் தூய்மை மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையாளா் பார்கவி, மேலாளா் கண்ணன், பொறியாளா்கண்ணன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடா்ந்து தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் நகராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தில் தூய்மை மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு குப்பைகளை வாங்கும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, முருகையா, வேம்புராஜ், செண்பகராஜ், பேபிரெசவுபாத்திமா, மேரிஅந்தோணிராஜ், சுகாதார மேற்பார்வையாளா்கள், தூய்மை இந்திய திட்ட பணியாளா்கள், பள்ளி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • செங்கோட்டை அரசு மருத்துவ மனையின் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • காந்தி செல்வின் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் தொகைக்கு பிரசவ வார்டு கட்டிடம் முழுவதும் வர்ணம் தீட்டி தந்துள்ளார்.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற இயக்கத்தை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலா் அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் நமது மருத்துவ மனை மகத்தான மருத்துவ மனை என்ற மாபெரும் சுகாதார திட்டத்தின் கீழ் செங்கோட்டை அரசு மருத்துவ மனையின் பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் செங்கோட்டையை சேர்ந்த தொழிலதிபரும் பாவூர்சத்திரம் அருகில் மேலமெஞ்ஞானபுரம் குஷி வாட்டர் பார்க் அதிபருமான காந்தி செல்வின் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் தொகைக்கு பிரசவ வார்டு கட்டிடம் முழுவதும் வெள்ளையடித்து வர்ணம் தீட்டி தந்துள்ளார்.

    அவருக்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் அனைத்து பணியாளர்கள் சார்பாக நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

    • 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
    • மீட்புப்பணி வீரர்கள் புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் திவான்மைதீன் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஊர் பொதுமக்களால் செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் மீட்புப்பணி வீரர்கள் செல்வம், சந்திரமோகன், செந்தில்குமார், சிவக்குமார், ராஜா, கோமதி சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    • இயற்கை எழில் சூழ்ந்த பகுதி குண்டாறு நீர்த் தேக்கமாகும்
    • நெய்யருவி சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் அருவியாக மாறி வருகிறது

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி குண்டாறு நீர்த் தேக்கமாகும். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த அணைக்கும் வந்து செல்வது வழக்கம்.

    இந்த அணையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நெய்யருவி சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் அருவியாக மாறி வருகிறது.

    இந்த அருவியை சுற்றி 5 க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் உள்ளன. இந்த அருவிகளுக்கு செல்லும் சாலை மிகவும் கரடு முரடான சாலை என்பதால் தனியார் ஜீப் முலம் தான் செல்ல முடியும்.

    மேலும் நெய்யருவி அருகாமையில் அமைந்துள்ள ஆற்றை கடந்து தான் மேலே குறிப்பிட்ட அருவிகளுக்கு செல்ல முடியும்.

    இந்த ஜீப் பாதை மிக புதுவித அனுபவம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால் பிரதான அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றன.

    குற்றாலம் ஐந்தருவி, புளியருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தற்போது நெய்யருவிக்கு அதிகளவில் வர தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.

    அண்டை மாலநிலத்தவரும், தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது குண்டாறுக்கு மேல் உள்ள தனியார் அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அவ்வாறு வரும் பயணிகள் தனியார்அருவிகளுக்கு செல்ல ஜீப்களை பயன் படுத்தி வருகின்றனர். தற்போது கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாலைகள் முழுவதும் கரடு முரடாக காட்சியளிக்கிறது. ஆற்றில் தண்ணீர் வருவதால் ஜீப்பில் பயணிக்கு சுற்றுலா பயணிகள் தங்களுக்குள் இருக்கும் ஆபத்தை உணராமல் தங்களின் சந்தோசத்திற்காக ஜீப்பயணத்தை தேர்வு செய்து பயணித்து வருகின்றனர்.

    ஓடையை கடக்கும் போது எதிர்பாராவண்ணம் பேராபத்து நடக்கவாய்ப்புகள் அதிகம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெய்யருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பிட வசதிகள், பெண்கள் உடை மாற்றும் அறை சாலை வசதி என அடிப்படைகளை வசதிகளை செய்து தர வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கேரளாவின் பாலக்காடு - புனலூர் இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    சென்னை:

    கேரளாவின் பாலக்காடு முதல் புனலூர் வரை தினமும் இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்பட உள்ளது. முழுவதும் பொதுப்பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் வரும் 9-ம் தேதி முதல் நெல்லை வரை தனது சேவையை நீட்டிக்க உள்ளது.

    செங்கோட்டை - புனலூர் இடையே அகலரெயில் பாதை பணிகள் முடிவடைந்து சமீபத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது வாரம் இருமுறை கொல்லம் - தாம்பரம் இடையே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகுந்த பயன் தரும் என கூறப்படுகிறது.

    கொல்லம் - எடமன் வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பாசாஞ்சர் ரெயிலும் விரைவில் நெல்லைக்கு நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 
    ×