என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாராயணசாமி"
- கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.
கடந்த தேர்தலிலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் மொத்தம் உள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 2 தொகுதியிலும், தி.மு.க. 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன.
இதனால் தங்கள் கட்சிக்கே பலம் உள்ளதாக கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.
அதே வேளையில் சிட்டிங் எம்.பி. என்ற பெயரில் காங்கிரசே போட்டியிடும் என்று அக்கட்சி தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:-
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு அப்போதைய கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை.
தற்போது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் கமிஷன் அரசு நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுவார். அவரின் பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். அவரை அபார வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.
- மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை
- கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், வருமான வரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுவதும் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு போட்டனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை விசாரித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள், ஒரு எம்.பி. மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் மீதும் 12 ஆண்டுக்கு முன் நடந்ததாகக்கூறி ராஜஸ்தான் முதல்-மந்திரி மகன் மீது அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறது.
ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் சோதனை நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எதிர்கட்சி தலைவர்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
உச்சகட்டமாக புதுடெல்லி முதல்-மந்திரி அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ஊழலில் சிக்கியுள்ள பா.ஜனதா முதல்-அமைச்சராக இருந்த பொம்மை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வியாபம் ஊழலில் சிக்கிய மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசாம் முதல்-மந்திரி மீது சி.பி.ஐ. வழக்கு தாக்கல் செய்தது.
அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததும் வழக்கு மூடி மறைக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் 750 சி.பி.ஐ. வழக்குகள்தான் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் 5 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முடிவுக்கு வந்தது 6 வழக்குகள் மட்டும்தான்.
இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். அவரின் வேஷம் கலைந்துவிட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா எப்படி வழக்கு போட்டார்களா?
அவை அனைத்தும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அம்பலத்துக்கு வருகிற 2024-ல் இண்டியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது மோடி ஆட்சியில் நடந்த ஊழல்கள் பட்டியலிடப்பட்டு அதானி, பிரதமர் மோடி, புதுவையில் உள்ள அமைச்சர்கள் வரை விசாரணை நடத்தப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள்.
தமிழக கவர்னர் ரவி அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வேலையை செய்து வருகிறார்.
மாநில கவர்னர்களுக்கு தனிப்பட்ட எந்த அதிகாரமும் இல்லை. அமைச்சரவை எடுக்கும் முடிவை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கவர்னராக கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த தொல்லையை தற்போது தமிழக அரசுக்கு கவர்னர் ரவி கொடுத்து வருகிறார்.
தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயக மரபுக்கும் எதிரானது. தமிழக தி.மு.க. கூட்டணி ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் செயல்படும் கவர்னரின் செயல்பாடு மக்களிடம் எடுபடாது.
கவர்னர் ரவியின் செயல்பாடு தமிழ்நாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது. இதனால் பாதிக்கப்போவது பா.ஜனதாவும், கவர்னர் ரவியும்தான். இண்டியா கூட்டணிக்கோ, தமிழக முதலமைச்சருக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
2024 தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம், புதுவை உட்பட 40 தொகுதியிலும் அமோக வெற்றி பெறுவோம்.
மோடிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் கவர்னர் ரவியை திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்கவே கவர்னர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நாராயணசாமி கூறுவதுபோல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.
- அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் கவர்னரோடு சண்டைபோடவே விரும்புகிறார்.
ஏற்கனவே இருந்த கவர்னரோடும் சண்டையிட்டுள்ளார். இப்போது என்னோடும் சண்டை போடுகிறார். அவருக்கு கவர்னர் என்றாலே பிடிக்கவில்லை.
அவர் முதலமைச்சராக இருந்தபோது தவறாக மொழி பெயர்த்தது போல நான் எதுவும் செய்யவில்லை. அவர் கூறுவது போல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.
அவர்கள் பெண்களுக்கு எவ்வளவு வாய்ப்பு தந்தார்கள்? அவர் ஆட்சிக்காலத்தில் பட்டியலின பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அமைச்சராக வாய்ப்பு தரவில்லை. இந்த விஷயத்தில் அவர் பேசுவதற்கே உரிமை இல்லை.
அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கூட இதுபோல முக்கிய துறைகள் பெண் அமைச்சர்களுக்கு வழங்கப்படவில்லை. இதைப்பற்றி தெரியாமல் கனிமொழி எம்.பி. பேசி வருகிறார்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
- 5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார்.
- மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என என்.ஆர்.காங்கிரஸ் மக்களிடம் தெரிவித்து தேர்தலை சந்தித்தது தேர்தல் நேரத்தில் புதுவைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியிருந்தார்.
ஆனால் இவை இரண்டுமே நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை முதல்-அமைச்சர்கள் மாநாட்டிலும், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்கும்போதும், தொடர்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.
சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பினோம். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த கோப்பை கிடப்பில் போட்டது.
மாநில அந்தஸ்து கொடுத்தால், காங்கிரஸ் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காகவும், களங்கம் விளைவிக்கும் எண்ணத்தோடும் தீர்மானத்தை ஏற்கவில்லை.
இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சிதானே நடக்கிறது. இவர்களால் ஏன் மாநில அந்தஸ்து பெற முடியவில்லை. இதிலிருந்து தெள்ளத்தெளிவாக பிரதமர் மோடி, புதுவை மாநில மக்களை பழிவாங்குகிறார் என தெரிகிறது. பா.ஜனதா புதுவை மக்களை உதாசீனப்படுத்துகிறது.
மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வர தயாரா? பா.ஜனதாவின் அடிமை ஆட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி நடத்துகிறார்.
5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார். அவரால் மாநில அந்தஸ்து பெற முடியாது. மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
- நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது.
புதுச்சேரி:
பிரதமர் மோடி பிறந்த நாளை வேலையின்மை தினமாக புதுவை மாநில இளைஞர் காங்கிரசார் கடைபிடித்து இளைஞர்கள் டீ, பக்கோடா, சமோசா விற்கும் நூதன போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு லோக்சபா தேர்தலின்போது நாங்கள் வெற்றிப் பெற்றால் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என ஆட்சிக்கு வந்தது. ஆனால் தர வில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல்- ரூ 65, டீசல்- ரூ 55 , கியாஸ் சிலிண்டர் ரூ 450 மானியத்துடன் கொடுத்தோம். ஆனால் இன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது. டீசல் சமையல் எரிவாயு விலை அனைத்தும் எகிறிவிட்டது.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மறைப்பதற்காக ஜி-20 மாநாட்டினை நடத்தி 4 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வீணடித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான அரசு சொத்துகளை பிரதமர் மோடி தனியாருக்கு தாரை வார்த்தும் உள்ளார். சிறுபான்மை, தலித் சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
புதுச்சேரியை ஊழல் இல்லாத பெஸ்ட் மாநிலமாக மாற்றுவேன் என்று மோடி கூறினார். ஆனால் புதுச்சேரி பெஸ்ட் அல்ல. வொஸ்ட் மாநிலமாக மாறிவிட்டது.
மது கடைகளை திறந்து விட்டதால், மக்களுக்கு அமைதி இல்லை. கல்வி தரம் குறைந்து விட்டது. வியாபாரம் படுத்துவிட்டது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வருகிற லோக்சபா தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும்.
- நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும்.
புதுச்சேரி:
ராகுல்காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.
புதுவை பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.
இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து ஆம்பூர் சாலை அருகே நிறைவடைந்தது.
ஊர்வலத்தின் முடிவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும். அப்போது ராகுல்காந்தி பிரதமராவார்.
இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. சோனியாகாந்தி 17 கேள்விகள் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலத் ஜோஷி பதில் சொல்லுகிறார்.
புதுவையில் கவர்னரும், முதலமைச்சரும் சேர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஆனால் மானியம் இன்னும் வரவில்லை. ஏனெனில் அந்த திட்டத்துக்கு ரூ.120 கோடி தேவை. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
- யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார்.
- ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி என்னால் எதுவும் செய்ய முடியாமல் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறேன் என்று விரக்தியாக பேசினார்.
இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில அரசின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறார்.
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. யாரும் நான் சொன்னால் கேட்பதில்லை என்று முதலமைச்சர் அழுது புலம்புகிறார். 1963 யூனியன் பிரதேச சட்டப்படி மாநில முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது.
மாநில அரசின் அதிகாரங்களை எல்லாம் கவர்னரிடம் சரண்டர் செய்து விட்டு தற்போது என்னால் முடியவில்லை என ரங்கசாமி கூறுகிறார். ஆளத்தெரியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே?
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் அதிக நிதி கிடைக்கும். மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு தற்போது என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று முதலமைச்சர் கூறுவது கபட நாடகம்.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜனதா ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கலால்துறை, உள்ளாட்சித்துறை என அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. குப்பை வாகனம் டெண்ட ரில் ஊழல் என்றதும் அதனை தடுத்து நிறுத்திவிட்டனர்.
போலீஸ் துறையில் ஆட்கள் தேர்வுக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் பெறப்படுகிறது என்று கூறியவுடன் அதனையும் சரி செய்துவிட்டனர் என்றார்.
- பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான்.
- அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
நாட்டின் ஒற்றுமைக்காகவும், மக்களை காக்கவும் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். புதுவையில் நான் முதலமைச்சராக இருந்த போது மோடி, அமித்ஷா ஆகியோர் கிரண்பேடியை கவர்னராக நியமித்து மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.
பொய் குற்றச்சாட்டுகளை அமைச்சர்கள் மீதும், முதல்வர் மீதும் சி.பி.ஐ.க்கு அனுப்பும் பணிகளை செய்து வந்தார். இதேநிலை தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது
பா.ஜனதாவிற்கு பிற கட்சிகளை விட சாதகமாக இருப்பது அமலாக்கம், வருமான வரி, சி.பி.ஐ. ஆகிய துறைகள் தான். பொய் குற்றச் சாட்டுகளை கூறி எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி, அமித்ஷா செய்து வருகின்றனர்.
எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படும் மோடி, அமித்ஷாவை தூக்கி எறியும் வகையில், பல மாநிலங்களின் முதல்வர்கள், தலைவர்கள் குழுவாக வருகிற 23-ந் தேதி சந்திக்கும் கூட்டம் நடக்கிறது.
புதுவை மாநிலத்தில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் இருக்க வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். ராகுல் பிரதமராக வர வேண்டும். நாகபாம்பை விட கொடியவர்கள் பா.ஜனதாவினர். பா.ஜனதாவை அழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான்.
- பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த ரவுடிகள் தமிழக பகுதிகளில் சென்று கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கண்மூடி உள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து குவிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கோவில் சொத்துக்களை எம்.எல்.ஏ.க்கள் வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா 40 சதவீதம் ஊழலில் கமிஷன் பெற்றனர். புதுவையில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீத கமிஷன் பெறுகின்றனர். இது வரும்காலத்தில் 40 சதவீதமாக உயரும்.
கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுவை விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதை புதுவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடிதான் நிதி அளிக்கப்பட்டது என்றும், தற்போது ரூ.2½ லட்சம் கோடி பா.ஜனதா ஆட்சியில் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்திலிருந்து பெறப்படும் நிதியை திருப்பித்தந்துவிட்டு மந்திரி அமித்ஷா மார்தட்டியுள்ளார். குஜராத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற நிதி வழங்குவதாக கூறி வருகின்றனர்.
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என முதுகெலும்பு உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் தனது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள கைகட்டி சேவகம் செய்கிறார்.
புதுவைக்கு கடந்த 2 ஆண்டுகளில் மத்திய பா.ஜனதா அரசு அளித்தது ரூ.250 கோடி நிதி மட்டும்தான். பா.ஜனதா பொய்யை மூலதனமாக வைத்து மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். புதுவை மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழகத்திலும், புதுவையிலும் பா.ஜனதாவுக்கு முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
- தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலின் 186-வது குரு பூஜை விழா நடைபெற்றுது. கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழின் செங்கோலுக்கு இவ்வளவு மரியாதை, அங்கீகாரம் கொடுத்த போது தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்க கூடாது. இதில் எதிர்கட்சியினர் சிலர் அரசியல் செய்கின்றனர் என்றார்.
தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் என நினைத்த நேரத்தில் வாக்கிங் ஸ்டிக்காக முடக்கியதை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
அவர்கள் இப்படி பேசுவது சரியானதல்ல எவ்வளவு மாற்றுக்கருத்து இருந்தாலும், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்க கூடாது. இப்படி ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் செங்கோலின் அருமை பெருமை மறைந்து போயிருக்கும்.
எந்த மாநிலத்துக்கும் மொழிக்கும் கிடைக்காத மரியாதை நமக்கு கிடைத்திருக்கிறதது. புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் காலையில் தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழ் ஆதீனங்கள் மட்டும் தான் அங்கு இருந்தனர். இது தமிழுக்கு கிடைத்த மரியாதை.
மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழ் மாநிலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.
தமிழர்களின் அடையாளம் நிலை நாட்டும் போது கருப்புக்கொடி ஏற்றுகின்றனர். அப்படியானால் இவர்களின் அடையாளத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் செங்கோல் என்பது மக்களாட்சியின் ஒரு அடையாளம் என்று சொல்லியிருக்கிறார்.
ஆகவே செங்கோல் பற்றி தவறாக சொல்பவர்கள் எல்லோரும் அதன் உண்மை தன்மையை புரியாதவர்களாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு நான் சிரிக்கத்தான் செய்வேன் என்று கவர்னர் தமிழிசை பதிலளித்தார்.
- புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.
- எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம்.
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் தனியார் ஓட்டலில் நடந்தது.
இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் இல்லாமல் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து சந்தித்தால், பா.ஜனதாவை வீழ்த்தலாம். லோக்சபா தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது உண்மையான தொண்டர்கள்தான் காங்கிரசில் உள்ளனர். 2 ஆண்டாக மத்திய பா.ஜனதா அரசு, ஊழல் நிறைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நாம் நடத்தி வரும் போராட்டங்களை மக்கள் பார்க்கின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி வந்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.
- புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அமைச்சர் முதலமைச்சர் ரங்கசாமிதான். அவர் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கை நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு புதுச்சேரிக்கு 1,250 கோடி அதிகம் தந்துள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது. அதில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை, ரூ.200 கோடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வழங்கப்பட்டது. உண்மையில் நமக்கு கிடைத்தது ரூ.350 கோடிதான்.
புதுவையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை. அதேபோல் தமிழ் கட்டாயம் என்று அறிவிக்கப்படவிலை. தமிழ் மண்ணில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வேதனையாக உள்ளது.
புதுவையில் பொதுப்பணித்துறையில் 20 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள். கலால்துறை முறைகேடு தொடர்பாக நிதித்துறை செயலாளர் ராஜூ, கலால்துறை துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர் என நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் நகரப்பகுதியில் அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைக்கும் கண்ட்ரோல் ரூம் ரூ.170 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை மத்திய அரசு நிறுவனமான ரெயில்டெல்லுக்கு அல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் வகையில் அவர்கள் இருவரும் சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு செயலாளராக இருந்த அருண் தலைமை செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால் அதனை தலைமை செயலாளர் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளார். உள்துறைதான் அவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னர் தான் இருவரும் மாற்றப்பட்டு உள்ளனர். தலைமை செயலாளர் இதில் நடவடிக்கை எடுக்காதிருந்தால் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கும்.
முதலமைச்சரின் உத்தரவு இல்லாமல் அவர்கள் இவ்வாறு நடந்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. எனக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும் பதில் சொல்கிறார். விரைவில் கவர்னர் மீதான ஊழல் புகாரையும் வெளியிடுவேன்.
இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து குறித்து எதுவும் பேசவில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்