என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவர்னர்"
- கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.
கன்னியாகுமரி:
கோவா மாநில கவர்னர் பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை நாளை (11-ந்தேதி) மதியம் 1 மணிக்கு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அவர் பிற்பகல் 2 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். மாலை 4.30 மணிக்கு விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர்கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா சபாக்கிரகத்தில் நடக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் 52- வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றியதை நினைவு கூறும் விழா ஆகிய விழாக்களில் பங்கேற்கிறார்.
இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார். கோவா கவர்னர் கன்னியாகுமரி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம்.
- பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம். பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் உள்ளனர். தடுப்பூசி எடுத்துக் கொள்வதே பாதுகாப்பு ஆகும் .
இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடை பெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது.
தொடரும் கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு, நமது பாரதப் பிரதமரின் தொலை நோக்குப் பார்வை கொண்ட இந்திய அரசு, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பொது மக்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏராளமான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நினைவாக 75 நாட்கள் நடைபெறுகிறது.என் அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
- கவர்னர் வருகை தரும் இடங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்தப் பேரி கிராமத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஷோகோ கார்ப்பரேஷனின் நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.
நாளை (18-ந் தேதி) தூத்துக்குடி வருகை தர உள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது அவர் தனது நண்பரான ஸ்ரீதர் வேம்புவுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும் அருகிலுள்ள கிராமமான ராஜாங்க புரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் வளாகத்தில் கிராம மக்களை நேரில் சந்திக்க உள்ளார். அதனை தொடந்து அங்குள்ள பள்ளியை பார்வையிடும் கவர்னர் அதன்பின்னர் ராஜங்க புரத்தில் நடைபெறும் மிருதங்க கச்சேரியில் கலந்து கொள்கிறார்.
இதனையடுத்து அந்த பகுதிகளில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் மற்றும் கவர்னர் வரும் பாதைகளை பார்வையிடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
மேலும் ஸ்ரீதர் வீட்டில் கவர்னர் வருகைதரும் இடங்களையும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தென்காசி மாவட்ட கோட்டாட்சியர் கங்காதேவி, தாசில்தார் அருணாச்சலம் , கடையம் ஆணையாளர் முருகையா, பஞ்சாயத்து தலைவர்கள் கோவிந்த பேரி டி.கே.பாண்டியன், மந்தியூர் கல்யாணசுந்தரம்,தென்காசி எஸ்.பி. எஸ்.ஐ. முத்து கணேஷ்,
எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டு முருகன், ரவி, கிராம நிர்வாக அதிகாரி அண்ணாமலை, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருமலைக்குமார் ஆகிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாளை கடையம் பகுதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வர உள்ளதால் அப்பகுதி மக்கள் பரவசத்தில் உள்ளனர்.
பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களின் கவர்னர்கள், இந்த மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் கல்வி, விளையாட்டு மற்றும் நிதியுதவி சார்ந்த திட்டங்கள் அவர்களை முழுமையான அளவில் சென்றடையும் வகையில் உதவி செய்ய வேண்டும் எனவும் மோடி குறிப்பிட்டார். #centralschemes #GovernorsConference #Modi
கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.
கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் அரசியல் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 கட்சியை சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்படும் செயல்களும் அரங்கேறி உள்ளது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராய் மற்றும் கண்ணூரிலும் அதிகளவு அரசியல் கொலைகள் நடந்துள்ளது.
இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பாபு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் சமேஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகள் காரணமாக பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பாபு கொலையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அந்த கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல பாபு கொலை தொடர்பாக 4 பேர் மீதும் பாரதிய ஜனதா தொண்டர் சமேஜ் கொலை தொடர்பாக 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா நேரடியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே அரசியல் கட்சி தொண்டர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேரள கவர்னர் சதாசிவம் அறிக்கை கேட்டுள்ளார்.
ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு இதேபோல அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபோது கேரள அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaCM #PinarayiVijayan #Governor #Sathasivam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்