search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபட்"

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் XL 100 i-டச் ஸ்டார்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக இருக்கும் XL புதிய வேரியன்ட்-இன் XL 100 i-டச் ஸ்டார்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

    பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய டி.வி.எஸ். XL மாடலில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் புதிய நிறங்களில் கிடைக்கிறது. டி.வி.எஸ். XL 100 i-டச் ஸடார்ட் XL ஹெவி டியூட்டி வேரியன்ட் மாடலை தழுவி உருவக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் புதிய மாடலில் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி.எஸ். XL 100 i-டச் ஸ்டார்ட் மாடலில் 99 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 4.3 பி.ஹெச்.பி. பவர், 6.5 என்.எம். டார்கியூ மற்றும் சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். XL 100 மாடலில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் மற்றும் லிட்டருக்கு 67 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோக், பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி.எஸ். XL 100 எடை 80 கிலோ ஆகும். இந்தியாவில் டி.வி.எஸ். XL 100 i-டச் ஸ்டார்ட் விலை ரூ.36,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது XL ஹெவி டியூட்டி மாடலை விட ரூ.3,350 வரை அதிகம் ஆகும்.
    புதுக்கோட்டை அருகே அரசு பஸ்- பைக் மோதியதில் தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி பத்மா (45). இவர்கள் இருவரும் கறம்பக்குடியில் இன்று காலை நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் சென்றனர். சுப்பிரமணியன் மொபட்டை ஓட்ட, பத்மா பின்னால் அமர்ந்திருந்தார்.

    இந்த நிலையில் கறம்பக்குடி அருகே சடையன்தெரு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சும், மொபட்டும் நேருக்கு நேர் மோதின. இதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பத்மா காயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பத்மா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுப்பிரமணியன்-பத்மா தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் தாய்-தந்தையின் உடல்களை பார்த்து கதறி அழுதது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

    ×