என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மொபட்"
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி பத்மா (45). இவர்கள் இருவரும் கறம்பக்குடியில் இன்று காலை நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் சென்றனர். சுப்பிரமணியன் மொபட்டை ஓட்ட, பத்மா பின்னால் அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில் கறம்பக்குடி அருகே சடையன்தெரு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சும், மொபட்டும் நேருக்கு நேர் மோதின. இதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பத்மா காயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பத்மா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுப்பிரமணியன்-பத்மா தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் தாய்-தந்தையின் உடல்களை பார்த்து கதறி அழுதது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்