search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201442"

    தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். பெண்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய காப்பர் டி பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
    ஓரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள ஒன்று. தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே காப்பர் டி பயன்படும். நிரந்தர தடைக்கு வேறு வழி உண்டு.

    * மாதவிலக்கு வந்த 10 நாட்களுக்குள் போட்டுவிட வேண்டும்.

    * காப்பர் டி பொருத்தியவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, டாக்டரிடம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

    * காப்பர் டி பொருத்தியவுடன் அதிக ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

    * காப்பர் டி போட்டதும் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்தக் கர்ப்பத்தைத் தொடரக் கூடாது. குழந்தை கருக்குழாயிலேயே தங்கிவிடலாம். எனவே, அதை எடுத்துவிடுவது நல்லது.

    * காப்பர் டி- யில், காப்பர் (தாமிரம்) இருக்கும் வரைதான் நல்லது. அதில் காப்பர் இல்லாமல் போகும்போது, முட்டை, கர்ப்பப்பையைத் துளைத்துக்கொண்டு உள்ளே போக வாய்ப்புகள் அதிகம்.

    * குழந்தை இல்லாதவர்கள், போடவே கூடாது. இதனால், கர்ப்பப்பையில் ரணம் ஏற்பட்டு, குழந்தை நிரந்தரமாகத் தங்காமல் போய்விடும்.

    குறிப்பு: கர்ப்பப்பையில் புண், கட்டிகள், கர்ப்பப்பையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல் மற்றும் முற்றிய சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்சனை உள்ளவர்கள் போட்டுக்கொள்வதும் நல்லதல்ல.
    திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம்.
    மாதவிலக்கு முடிந்த 10-வது நாளில் இருந்து 20 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கரு முட்டை வெளியாகும். மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த இடைவெளி சரியாக இருக்கும். மாதவிலக்கு சுழற்சி நாட்கள் மாறும்போது கருமுட்டை வெளியாகும் நாள் கணக்கு மாறும்.

    மாதவிலக்கு முடிந்ததும் முதல் ஐந்து நாட்கள், மாதவிலக்கு நாளுக்கு முன் ஐந்து நாட்களிலும் உடலுறவு கொள்வதால் குழந்தை உருவாக வாய்ப்பில்லை. மாதவிலக்கு நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதுகாப்பான நாட்கள் எவை என்பதை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தெரிந்து கொள்ளலாம். இந்த நாட்களில் எந்தத் தயக்கமும் இன்றி தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம்.

    உடலுறவின்போது குழந்தை உருவாவதைத் தடுக்க காண்டம் பயன்படுத்துவதே பெரும்பாலானவர்களின் தேர்வாக உள்ளது. இது பாதுகாப்பானதும் பக்க விளைவுகள் இல்லாததும் ஆகும். உடலுறவின்போது காண்டம் கிழிந்து விடாமல் இருக்க ஆணுறுப்பில் சரியாகப் பொருத்த வேண்டும். காண்டம் போட்ட பிறகு காற்றுப் புகுவதற்கான வாய்ப்பிருந்தால்தான் உடலுறவின்போது கிழியும் வாய்ப்பு ஏற்படும். எனவே, ஆணுறையை சரியாக, இறுக்கமாகப் போட்டுக் கொண்டால் பயமின்றி உறவை அனுபவிக்கலாம்.

    உடலுறவின்போது பாதுகாப்பு இன்றி இருந்தாலோ, காண்டம் கிழிந்து விட்டாலோ கூடக் கவலைப்படத் தேவையில்லை. இந்த நேரங்களில் மருத்துவரின் ஆலோசனையுடன் எமர்ஜென்சி கான்ட்ராசெப்ஷன் மாத்திரை எடுத்து கருஉருவாகாமல் தடுத்திட முடியும். உடலுறவுக்குப் பின் 48 மணி நேரத்துக்குள் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.

    கரு உருவாவதைத் தடுக்க பெண்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். உடலுறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் மாத்திரை வைத்தும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். ஆனால், கரு உருவாவதைத் தடுக்க ஹார்மோன் மாத்திரைகள் பயன்படுத்துவது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நாட்கள் இதுபோன்ற மாத்திரைகளைத் தொடர்ந்து பெண்கள் பயன்படுத்தக் கூடாது.



    பெண்ணுக்கான கருத்தடை சாதனமாக டயாப்ரம்(Diaphragm) பயன்படுத்தலாம். இந்த சாதனம் 2 முதல் 4 இன்ச் வரை வட்ட வடிவில் ரிங் இணைக்கப்பட்டிருக்கும். இந்த கருத்தடை சாதனத்தை துவக்கத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் பொருத்திக் கொள்ளலாம். பின்னர் பெண் சுயமாக தனது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ளலாம். இதை அணிந்து கொள்வதால் விந்தணு கரு முட்டையுடன் இணைவதைத் தடுக்கலாம்.

    IUD என்கிற Intrauterine device என்ற சிறிய பிளாஸ்டிக் சாதன வடிவிலான கருத்தடை சாதனமும் உண்டு. இதனைப் பொருத்திக் கொள்வதன் மூலமும் கரு உருவாவதைத் தடுக்க முடியும். காப்பர் டி கருத்தடை சாதனமும் கருத்தடைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

    இதனைப் பொருத்திக் கொள்வதால் வலி, அதிக ரத்தப்போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இதேபோல கரு உருவாவதைத் தடுக்க எடுக்கப்படும் ஹார்மோன் மாத்திரைகளின் பக்க விளைவுகளும் மோசமானவை.

    திருமணமான புதிதில் ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் கரு உருவாவதைத் தள்ளிப் போடலாம். அதற்கு அதிக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான கருத்தடை முறைகளைப் பின்பற்றலாம். ஆண்டுக்கணக்கில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுவது நல்லதல்ல. இதனால் பின்னாளில் குழந்தைப் பேற்றில் பிரச்னை வரலாம். எனவே, தாம்பத்யம் இனிக்க பாதுகாப்பான உடலுறவில் கவனம் செலுத்துவதைப் போலவே நீண்ட நாட்கள் தள்ளிப் போடாமலும் இருங்கள்.

    தாம்பத்யம் இனிப்பதோடு இணையின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஒவ்வாத கருத்தடை முறைகளாக இருந்தால் அவற்றால் உடல்நலக் குறைபாடுகள் உண்டாகி கண்டிப்பாக தாம்பத்ய இன்பத்தைக் குறைத்திடும். 
    நீரிழிவு நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருவது, நீரிழிவுடன் கூடிய கருத்தரிப்பின்மையையும் அதிகரிக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘கருத்தரிப்பின்மை என்பது ஒரு வருடம் முழுவதும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்ட போதும், கருத்தரிக்க இயலாமல் போவதைக் குறிக்கிறது. இந்த கருத்தரிப்பின்மை, கணவர் மனைவி இருவரையும் பாதிக்கலாம். அதனால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, பிரச்னைக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான சரியான தீர்வைப் பெற்று பலனடைவது மிகவும் அவசியம்.

    கருத்தரிப்பின்மைக்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்பட்டால், அப்பிரச்னைக்குரிய சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியும். ‘டைப் 1’ மற்றும் ‘டைப் 2’ நீரிழிவு நோய், தற்போது உலகளவில் அதிகரித்து வரும் வேளையில், நவீன வாழ்க்கை முறையால் ஆரோக்கியமில்லாத உணவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றால் உண்டாகும் ‘டைப் 2’ நீரிழிவு நோய் ஒரு நவீன நோயாக கூறப்படுகிறது. இந்த நீரிழிவு கருத்தரிப்பின்மைக்கும் காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ‘டைப் 1’ நீரிழிவு நோய் பொதுவாக இளம் வயதுடையவர்களுக்கு உண்டாவது. தற்போதுள்ள நிலவரப்படி, நீரிழிவு நோயானது இன்னும் சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. சில ஆய்வுகளில் டைப் 1 நீரிழிவு நோயானது, இளைஞர்களை பெருமளவில் பாதிக்கிறது என்றும், இன்னும் 10 ஆண்டுகளில் இதன் பாதிப்பு 50% ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றன.

    நீரிழிவு நோயின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்து வருவது, நீரிழிவுடன் கூடிய கருத்தரிப்பின்மையையும் அதிகரிக்கும். மேலும் நீரிழிவு நோயானது ஆண்கள் மற்றும் பெண்களிடம் இனப்பெருக்கத்துக்கான ஆரோக்கியத்தையும் அதிகம் பாதிக்கும்.

    நீரிழிவு நோயின் பாதிப்புள்ள ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் குறைவாகவும் இருக்கலாம். காரணம், அவர்களது விந்துவின் அடர்த்தி குறைவாகவும், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கக்கூடும்.



    மேலும் இவர்களுக்கு நீரிழிவு நோயின் காரணமாக விறைப்பு குறைபாடும், பாலுணர்வு குறைவாகவும் இருக்கும். ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை அடையாமல், சிறுநீரகத்துக்குள் சென்றுவிடுகின்றன. மேலும், நீரிழிவை கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் ஆணின் விறைப்பு செயலிழப்புக்குகாரணமாகிறது’ என்று குறிப்பிடுகிறது.’’

    ‘‘பெண்களைப் பொறுத்தவரை நீரிழிவு நோயானது ஹார்மோன்களின் சரிவிகித குறைபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இந்த ஹார்மோன் சரிவிகித குறைபாடு பிசிஓஎஸ்(PCOS) என்று அழைக்கப்படுகிறது.

    அதிக எடையுள்ள பெண்களுக்கு பிசிஓஎஸ் மற்றும் நீரிழிவு வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது பல்வேறு புதிய பிரச்சனைகளை உருவாக்கும். அதிக உடல் எடை அல்லது பருமன் அதிகமுள்ள பெண்கள் இயற்கையாக கருத்தரிக்க மிகவும் கடினமாக இருப்பதாக உணர்கிறார்கள்.  

    கருத்தரிப்புக்கான சிகிச்சை முறைகளின் வெற்றி வாய்ப்புகளையும் நீரிழிவு மற்றும் உடல்பருமன் பாதிக்கிறது. சாதாரண குளுக்கோஸ் அளவைவிட அதிகமாக இருக்கும் ஒரு பெண் கருத்தரிக்கும் மாதம் தள்ளிப்போகிறது.

    துரதிர்ஷ்டவசமாக கருவானது கருப்பைக்குள் செல்வதை நீரிழிவு நிலை தடுக்கிறது. அவள் கர்ப்பமாக இருப்பதை உணரும் முன்னே ஒரு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறது.

    சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    கருத்தரிப்பதை தடுக்க தான் கருத்தடை முறைகள் கையாளப்படுகின்றன. ஆயினும் சிலமுறை எதிர்பாராத வகையில் கருத்தரிப்பு ஏற்படுவது உண்டு. சில தவறான அணுகுமுறை அல்லது நீங்கள் முயன்ற கருத்தடை முறையில் ஏற்பட்ட தவறினால் கருத்தரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் தம்பதியர் மத்தியில் பொதுவான சில தவறுகள் தான் கருத்தடை முறையில் எழுகின்றன.

    அது மீண்டும் வராமல் இருக்க என்ன வழிகள் இருக்கின்றன. பாதுகாப்பான முறையில் உடலுறவுக் கொண்டு கருத்தரிப்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காணலாம்…

    உங்களுக்கு ஏற்ற கருத்தடை மாத்திரை உட்கொள்ள வேண்டியது அவசியம். பிறப்புறுப்பில் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு சில கருத்தடை மாத்திரைகள் சரியான பலன் தராது. எனவே, மருத்துவரிடம் ஆலோசித்து உங்களுக்கு ஏற்ற மாத்திரைகள் பயன்படுத்துவது அவசியம்.

    வேசிலின் அல்லது பேபி ஆயில் போன்றவை பயன்படுத்துவது ஆணுறையின் தன்மையை பாதிக்கிறது. அதனால் கூட கருத்தரிக்க வாய்ப்பிருப்பதாய் கூறப்படுகிறது. இதற்கு சிலிகான் எண்ணெய் பயன்படுத்துவது நல்ல தீர்வளிக்கும்.

    சீரான முறையில் அல்லது சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ள தவறுவதும் கூட கருத்தரிக்க வாய்ப்பாக அமையும்.

    மாதவிடாய் சுழற்சியில் பாதுகாப்பான நாட்களில் உடலுறவுக் கொள்வதன் மூலம் நீங்க கருத்தரிப்பதை தவிர்க்க முடியும்.

    தரமற்ற ஆணுறை உபயோகிப்பதன் காரணமாக கூட கருத்தரிப்பு ஏற்படுகின்றன. எனவே, தரமான ஆணுறைப் பயன்ப்படுத்த வேண்டியது அவசியம்.
    ×