search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 201649"

    • சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற தூய்மை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நிகழ்ச்சியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைக்கான உறுதிமொழி கலெக்டர் கார்மேகம் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை சுற்றுலா பிரச்சார ஊர்தியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் , துணை மேயர் சாரதா தேவி, மண்டல க்குழுத்தலைவர்கள் எஸ்.டி. கலையமுதன், அசோகன், மாநகர பொறியாளர் ரவி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோகுல்நாத் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 100 மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தூய்மை சுற்றுலா மேற்கொள்ளும் வகையில் 4 மண்டலங்களுக்கு தனிதனியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 25 மாணவ- மாணவியர்களை கலந்து கொள்ள செய்து, குப்பைகளை பிரிக்கும் செயல்முறை பணிகளையும், வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பெறும் பணிகளையும், நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று நேரடியாக மாணவ- மாணவியர்களுக்கு தூய்மை குறித்தும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும், குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் முறைக்குறித்தும் நேரடியாக எடுத்துரைக்கப்பட்டது.

    இதையடுத்து அஸ்தம்பட்டி மண்டலம் சங்கர் நகர் பகுதியில் வீடு வீடாக பிரித்த நிலையில் குப்பைகளை பார்வையிடும் நிகழ்ச்சி, காக்காயன்காடு நுண் உயிரி உரம் தயாரிக்கும் நிலையம் பார்வையிடும் நிகழ்ச்சியில் மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 25 மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • முகாமில் பள்ளி மாணவிகளுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.

    முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி அழகேசன், பட்டுக்கோட்டை நீதித்துறை நடுவர் சத்யா, அரசு வழக்கறிஞர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் இளம்பெண்களுக்கு இன்றைய சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்தும், இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், உரிமை, பாதுகாப்பு, ஒழுக்கம், இவற்றை நன்கு அறிந்து செயல்பட வேண்டுமெனவும் நீதிபதிகள் மாணவிகளுக்கு அறிவுறுத்தினர்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்ட சட்ட பணிக்குழு சட்டப் பணியாளர்கள் மணிகண்டன், தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • தொழில்நெறி விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
    • கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் அனுசரித்தல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 11.07.2022 முதல் 15.07.2022 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பாக பல்வேறு சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

    11.07.2022 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாலை 2.30 மணியளவில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடக்கிறது.

    12.07.2022 அன்று மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11.00 மணியளவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 13.07.2022 அன்று மூன்றாம் பாலினத்தவருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும் நடைபெறுகிறது.

    14.07.2022 அன்று அமைப்புசாரா உடலுழைப்புத் தொழிலாளர்களது முன்கற்றல் திறனை அங்கீகரித்தல் மற்றும் பயிற்சியளித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திலும், 15.07.2022 அன்று அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 11.00 மணியளவில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.

    எனவே, மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய உணவுகளில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
    • மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திரும ருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையின் சார்பாக பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்ல ம்மாள் தலைமை தாங்கினார். பள்ளியின் கணித ஆசிரியர் சண்முகநாதன் பாரம்பரிய உணவு பொருட்களின் முக்கியத்துவம் பற்றியும் அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.ஆசிரியர்கள் தமிழ்செல்வி, கோகிலா ஆகியோர் துரித உணவினால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.மாணவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்து எடுத்து வந்த விதவிதமான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினர்.மாணவர்கள் அனை வருக்கும் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டது.பள்ளியின் தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர் பவித்ரா நன்றி கூறினார். 

    • கல்லூரி கனவு நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிவகை செய்யும் சேலம் கலெக்டர் கார்மேகம் பேச்சினார்.
    • “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழக முதல்- அமைச்சர் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, இன்று சேலம் அம்மாப்பேட்டையில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் இந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து நான் முதல்வன் "கல்லூரி கனவு " எனும் மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டும் புத்தகத்தினை வெளியிட்டார்.

    இதையடுத்து கலெக்டர் கார்மேகம், பேசியதாவது-

    சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்ற 1,600 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. மேலும், மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கு தேவையான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய நான் முதல்வன் "கல்லூரி கனவு" எனும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும், தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பார்த்திபன், செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், அருள், எஸ்.சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ஹேமலதா விஜயக்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

    • தமிழ்நாடு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 5-ந் தேதி நடக்கிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடுநாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

    பேச்சுப் போட்டி பின்வரும் தலைப்புகளில் நடத்தப்படும்.

    1. தமிழ்நாடு உரு வான வரலாறு, 2. மொழி வாரி மாகாணமும் தமிழ்நாட்டில்நடைபெற்ற போராட்டங்களும், 3. தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், 4. பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, 5. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம், 6. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், 7. மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் ம.பொ.சி, 8. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, 9. எல்லைப்போர்த் தியாகிகள், 10. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு.

    கட்டுரை ப்போட்டிக்கான தலைப்பு "சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம்" மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் , 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டுவருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.
    • உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப் பணித்திட்ட அலகு 2 மாணவா்கள் சாா்பில் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பது தொடா்பான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இடுவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் காளீஸ்வரி தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவா் க.கணேசன் பேசியதாவது:-

    மக்காத நெகிழி பொருள்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இவை மண்ணின் வளத்தை சிதைப்பதுடன், நிலத்தடி நீா்மட்டத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. உணவகங்களில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்களை வாங்குவதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. ஆகவே நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மளிகைக் கடைகள், உணவகங்களுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கி சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • அறிவியல் பரிசோதனைகள், அறிவியல் விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் மந்திரமா-தந்திரமா போன்ற அறிவியல் சிந்தனையில் தெளிவு பெறும் நிகழ்ச்சிகளை விழாவாக கொண்டாடினர்.
    • விழாவின் நிறைவில் மருத்துவர் பூபேஷ்தர்மேந்திரா மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து, துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது.

    அறிவியல்பரிசோதனைகள், காகிதக்கலை (ஒரிகாமி), அறிவியல்வி ளையா ட்டுக்கள், பாடல்கள் மற்றும் மந்திரமா?தந்திரமா? போன்றஅறிவியல் சிந்தனையில் தெளிவு பெறும் நிகழ்ச்சிகளை விழாவாக கொண்டாடினர். பேராசிரியர் சு.விழிநாதன் தலைமை வகித்தார்.

    சுபம் வித்யாமந்திர்பள்ளி தாளாளர் சுதீஷ்ஜெயின் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நந்த.ராஜேந்திரன், மாநிலசெ யலாளர் ஸ்டீபன்நாதன், முன்னாள்மாநில செயலா ளர் ப.ராயர் மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டு செயல்முறை விளக்கத்துடன் மாண வர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் பெற்றோர்களும், பள்ளிஆசிரியர்களும் கலந்து க்கொண்டனர். விழாவின் நிறைவில் மருத்துவர்தர்ம. பூபேஷ்தர்மேந்திரா மாணவர்க ளுக்கு சான்றிதழ்களை வழங்கி னார். சீர்காழி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

    • மகாத்மா வித்யாலயாவில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
    • பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகா குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. தாளாளர் முருகேசன் தலைமை தாங்கினார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார்.

    ஆசிரியை மாரியம்மாள் வரவேற்றார். மாணவர்கள், ஆசிரியர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். பயிற்சியாளர் பேச்சிமுத்து யோகா குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ஜோஸ்பிரியா நன்றி கூறினார்.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று மாலை நடக்கிறது.
    • குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குடிநீர், மின் வசதி, தற்காலிக கழிப்பறை மற்றும் சுகாதார பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும்.

    தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இைதயொட்டி மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்து வக்குழுவினர் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா, நிர்வாக உறுப்பினர்கள் செய்யது சிராஜுத்தீன், செய்யது இபுறாஹீம், சோட்டை எஸ்.பாதுஷா, ஹாஜி ஹுஸைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹஸன், முர்சல் இபுறாஹீம் ஆலிம், பாக்கிர் சுல்தான், சுல்தான் செய்யது இப்ராஹீம், சாதிகுல் ஆமீன், அப்துல் கனி, கலில் ரஹ்மான், செய்யது இபுறாஹிம், அமிர் ஹம்ஸா, சித்திக் லெவ்வை, அப்துல் ரஹீம், அம்ஜத் ஹுஸைன், சாதிக் பாட்சா, லெவ்வை கனி, செய்யது அபூதாஹிர், செய்யது இஸ்ஹாக் மற்றும் ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    • புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் புனிதஅந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின்ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி ஊர்வலம் தேவாலயத்தின் வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கியவீதிகள் வழியாக வந்து மீண்டும் தேவாலயத்தை வந்தடை ந்தது.

    நாகை மறை மாவட்ட அதிபர் வின்சென்ட் தேவராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

    டிவி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ள சம்மதமா? என்று தொலைபேசி அழைப்பு வந்ததாக சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன பெண் ஆசிரியர் தெரிவித்துள்ளார். #BigBoss
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முதல்வர் திரிவேந்திர ராவத் தலைமையில் பொதுமக்களிடம் குறை கேட்கும் ஜனதா தர்பார் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பகுகுணா, பணியிட மாறுதல் கேட்டு மனு அளித்தார்.

    அந்த மனுவில், தாம் உத்தரகாசியில் ஒரு ஊரகப் பகுதி அரசுப் பள்ளியில் 25 ஆண்டுகளாக ஆசிரியராக உள்ளதாகவும், தமது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் தமது பிள்ளைகள் வசிக்கும் டேராடூனுக்கு இடம் மாற்றம் செய்து தருமாறும் கோரினார்.

    ஆனால், சட்டப்படி அதற்கு வழி இல்லை என முதல்வர் கூறவே, அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் பகுகுணா முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த திரிவேந்திர ராவத் பகுகுணாவை கைது செய்யவும், பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். கடும் எதிர்ப்புக்கு பின் ஆசிரியர் பகுகுணாவை காவல்துறை விடுவித்துவிட்டனர். ஆனால், பணி நீக்க நடவடிக்கை தொடர்கிறது.

    இந்நிலையில், தனக்கு பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து போன் வந்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதமா? என அவர்கள் கேட்டதாக தெரிவித்துள்ளார். எனது குழந்தைகளை கவனித்து கொண்டு வீட்டோடு இருக்கவே விரும்புகிறேன் என கூறி அழைப்பை துண்டித்ததாக பகுகுணா கூறியுள்ளார்.
    ×