search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்ச்சுக்கல்"

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாளை நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ், உருகுவே-போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. #FIFA2018 #WorldCupfootball2018
    கசான்:

    21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கி யது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன. ‘லீக்’ சுற்றில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறைமோத வேண்டும். இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

    நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்’, பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஜப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    சவுதிஅரேபியா, எகிப்து (‘ஏ’ பிரிவு), ஈரான், மொராக்கோ (பி), பெரு, ஆஸ்திரேலியா (சி), நைஜீரியா, ஐஸ்லாந்து(டி), செர்பியா, கோஸ் டாரிகா (இ), தென் கொரியா, ஜெர்மனி (எப்), துனிசியா, பனாமா (ஜி), செனகல், போலந்து (எச்), ஆகிய 16 நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    இன்று ஓய்வு நாளாகும் 2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ‘சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த பிரான்ஸ்- ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அர்ஜன்டீனா அணிகள் முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30-க்கு இந்தப்போட்டி தொடங்குகிறது.

    இரண்டு அணிகளும் முன்னாள் சாம்பியன் ஆகும். அர்ஜென்டீனா 1978, 1986-ம் ஆண்டுகளிலும், பிரான்ஸ் 1998-ம் ஆண்டி லும் உலககோப்பையை வென்றுள்ளன. இந்த இரண்டு அணிகளில் ஒன்று வெளியேற்றப்பட்டுவிடும்.

    நாளை நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த உருகுவே -‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன.

    3-ந்தேதி வரை, 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. கால் இறுதி ஆட்டங்கள் 6 மற்றும் 7-ந்தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11-ந்தேதிகளிலும், 3-வது இடத்திற்கான போட்டி 14-ந்தேதியயும் நடைபெறுகிறது. இறுதி போட்டி 15-ந்தேதி நடக்கிறது. #FIFA2018 #WorldCupfootball2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் லியோனஸ் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ. அர்ஜென்டினா கேப்டனான மெஸ்சி பார்சிலோனா கிஸ்டிக்காவும், போர்ச்சுக்கல் கேப்டனான ரொனால்டோ ரியல் மாட்ரீட் அணிக்காகவும் ஆடுகிறார்.

    இந்த உலகக்கோப்பையில் இருவரும் நேருக்கு நேர் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. அர்ஜென்டினா 2-வது சுற்றில் பிரான்சுடனும், போர்ச்சுக்கல் அணி உருகுவேயுடனும் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் 30-ந்தேதி நடக்கிறது.

    3-வது சுற்றில் அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் அணிகள் வெற்றி பெற்றால் மெஸ்சியும் ரொனால்டோவும் கால் இறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள். பிரான்ஸ் அணி மிகவும் வலுவாக இருப்பதால் அர்ஜென்டினாவுக்கு மிகவும் கடினமே. ஆனால் மெஸ்சி தனது அபாரமான ஆட்டத்திறமையை வெளிப்படுத்தினால் பிரான்சால் தடுக்க முடியாது. #FifaWorldCup2018 #FIFA2018 #Ronaldo #Messi
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #WorldCup2018 #PORIRA
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் 45-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் ரிகார்டோ குவாரஸ்மா ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ பயன்படுத்தவில்லை. அவர் அடித்த பந்தை ஈரான் கோல் கீப்பர் தடுத்துவிட்டார். 

    ஆட்டம் முடியும் வரை ஈரான் அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. எனவே போர்ச்சுக்கல் வெற்றி பெற்று விடும் நிலை இருந்தது.

    கூடுதலாக கிடைத்த நிமிடங்களை ஈரான் அணி பயன்படுத்திக் கொண்டது. ஆட்டத்தின் 93-வது நிமிடத்தில் ஈரான் அணியின் கரிம் அன்சரிபர்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனிலை அடைந்தது. 

    அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஈரான் மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதனால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் 3 ஆட்டங்களின் முடிவில் 5 புள்ளிகள் பெற்ற போர்ச்சுக்கல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
    ரஷிய உலகக்கோப்பை போட்டியில் 4 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ இன்று ஈரானுக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FIFA2018 #CristianoRonaldo
    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. போர்ச்சுக்கல்லை சேர்ந்த அவர் உலக கோப்பையில் அபாரமாக ஆடி வருகிறார். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். அடுத்து மொராக்கோவுக்கு எதிராக 1 கோல் அடித்தார். 4 கோல்கள் அடித்துள்ள அவர் இன்று ஈரானுக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கோல் அடித்து முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேனை முந்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FIFA2018 #CristianoRonaldo
    நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காக 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உள்ளார். #WorldCupRussia2018 #WorldCup2018 #Ronaldo
    சோச்சி:

    உலக கோப்பை கால் பந்து போட்டியில் இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின்-போர்ச்சுக்கல் அணிகள் மோதின.

    சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய ஆட்டம் என்பதாலும், போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ மீது அதிக எதிர்பார்ப்பு இருந்ததாலும் போட்டி விறுவிறுப்பாக இருந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது.

    அதற்கு ஏற்றாற் போலவே ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக இருந்தது.

    இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    நட்சத்திர வீரரான கிறிஸ்டியனோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காக 6-வது முறையாக ஹாட்ரிக் கோல் அடித்து உள்ளார்.



    மேலும் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்த 4-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    பீலே (பிரேசில்), சீலர், குளோஸ் (ஜெர்மனி) ஆகியோர் நான்கு உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்துள்ளனர். #WorldCupRussia2018 #WorldCup2018 #Ronaldo
    ரஷியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டங்கள் குறித்த விவரத்தை காண்போம். #FIFO2018
    சோச்சி:

    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.

    32 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் தொடக்க நாளாக நேற்று ஒரே ஒரு ஆட்டம் நடந்தது. ரஷியா - சவுதி அரேபியா அணிகள் மோதின.

    இதில் ரஷியா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இதில் இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஸ்பெயின் - போர்ச்சுக்கல் (பிபிலா) அணிகள் மோதும் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நட்சத்தி வீரரும் கேப்டனுமான ரொனால்டோவை போர்ச்சுக்கல் அணி அதிகம் நம்பி இருக்கிறது. மேலும் அந்த அணியில் புருனே ஆல்வ்ஸ், பெபே, ரபெல் குயரிரோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. கேப்டன் செர்ஜியோ ரமோஸ், இனியஸ்டா சில்வா, பியூ, ஜோர்டி அல்பா ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

    இதனால் ஸ்பெயினின் அதிரடியை போர்ச்சுக்கல் சமாளிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ரொனால்டோ தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்.

    முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் உருகுவே - எகிப்து (ஏ) அணிகள் மோதுகின்றன. உருகுவே அணியில் லூயிஸ் சுவாரஸ், கலாஸ் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.

    எகிப்து அணி முன்னணி வீரரான முகமது சலாவை நம்பி இருக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மொராசகோ - ஈரான் (பி) மோதுகின்றன. #FIFO2018
    ×