search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐய்யனார்"

    திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தில் உள்ள ஐய்யனார் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
    திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தில் உள்ள ஐய்யனார் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் ஐய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    கடைசி நாள் திருவிழா வில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காளை மாடுகள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு வீதி உலா வந்து கோவிலில் வைத்தனர்.

    இந்த வருடம் நல்ல மழை பொழிய வேண்டும், விளைச்சல் பெருக வேண்டும் என்று நேர்த்திக் கடனுக்காக மண்ணால் செய்த குதிரை மற்றும் காளைகளை கோவிலுக்கு வழங்குவதாக தெரிவித்தார்கள். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    மதுரையில் உள்ள கோச்சடை ஐய்யனாரை குழந்தை பேறு இல்லாதவர்கள் ஐய்யனாரை வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    விருதுநகர் அருகே “ஏழாயிரம்பண்ணை’ என்ற பகுதியை சிதம்பரபாண்டியன் என்ற குறுநில மன்னர் ஆண்டு வந்தார். தனது குலதெய்வமான மதுரையில் உள்ள கோச்சடை ஐய்யனார் கோயிலுக்கு குதிரையில் சென்று வழிபட்டு வந்த பின்புதான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பார் சிதம்பர பாண்டியன்.

    அவரால் தனது முதுமை காலத்தில் ஐய்யனாரை வழிபட முடியாமல் போனது. இதனால் மனம் வருந்தி சோர்வுற்று இருந்தார். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய ஐய்யனார், “நான் உன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் குளத்தின் கரையில் தென் மேற்கில் கருவேலமரத்தின் கீழ் காட்சியளிப்பேன்’’ என்றார்.

    இதையடுத்து தனது பரிவாரங்களுடன் “ஏழாயிரம் பண்ணை’ அருகில் உள்ள திருவேங்கடம் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு சென்று தேடினார் சிதம்பர பாண்டியன். அப்போது மலையின் அடிவாரத்தில் உள்ள குளத்தின் கரையில் ஒரு மயில் பறந்து சென்றது. அதை மன்னரின் கண்கள் நோக்க, அப்போது ஐய்யனார் எலுமிச்சை கனியின் வடிவில் காட்சியளித்தார். மயில் மூலம் தன்னைக் காண்பித்த ஐய்யனாருக்கு அங்கே கோயில் எழுப்பினார் மன்னர். அங்கே பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் இருளாண்டி ஆகிய சுவாமிகளையும் பிரதிஷ்டை செய்தார்.

    சிதம்பர பாண்டியனுக்குப் பிறகு பராமரிப்பு இல்லாமல் இருந்தது இவ்வாலயம். கோயிலின் முன் குதிரைகள் மற்றும் வீரபத்திரன், லாடசன்னாசி, தவசி, தம்பிரான்,சனீஸ்வரர் மற்றும் பல்வேறு சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பப்பட்டு கடந்த 2007ஆம் வருடம் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது முறையாக பராமரிக்கப்பட்டு, இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது.

    இக்கோயிலின் சிறப்பு ஸ்ரீராமபுலி ஐய்யனார் தவக்கோலத்தில் உட்கார்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். மேலும் குழந்தை பேறு இல்லாதவர்கள் ஐய்யனாரை வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அமைவிடம்: ராஜபாளையத்தில் இருந்து திருவேங்கடம் வழியாக 43 கி.மீ. தொலைவு. கோவில்பட்டியில் இருந்து 14 கி.மீ தொலைவு.
    தஞ்சையை அடுத்த பள்ளியக்கிரஹாரம் சிறைகாத்த அய்யனார் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை-கும்பகோணம் புறவழிச்சாலை பள்ளியக்கிரஹாரம் பகுதியில் சிறைகாத்த அய்யனார் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா சன்னதி, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி மற்றும் காமாட்சி அம்மன் சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவிலில் உள்ள சாமிகளை, பள்ளிக்கிரஹாரம் மட்டுமின்றி தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் வந்து தங்கள் குலதெய்வங்களாக வழிபட்டுவருகின்றனர்.

    இவ்வாறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்துவருகின்றனர்.

    இந்தநிலையில், கோவிலில் தடைபட்ட காரியங்கள் மற்றும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் கோவிலில் பஞ்ச அஸ்திர ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை கோவிலில் மகா கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து மாலையில் கலச பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றன.

    நேற்று காலை சிறைகாத்த அய்யனார் சன்னதி முன்பாக பஞ்ச அஸ்திர ஹோமம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 வகையான ஹோமப்பொருட்களை தட்டில் ஏந்தி கோவிலை சுற்றி வலம்வந்தனர். பின்னர், சாமிக்கு கலசாபிஷேகமும் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சிறைகாத்த அய்யனாராகிய தர்மசாஸ்தா, விநாயகர், உதிரகருப்பண்ண சாமி, காமாட்சி அம்மன் மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் வழிபாட்டு குழுவினர், பள்ளியக்கிரஹாரம் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
    ×