search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலாத்காரம்"

    • வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை வண்டியூர் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் கார்த்திக்கிடமும் விசாரணை நடத்தி மருத்துவ பரிசோதனை செய்தபோது பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பண்ருட்டியில் வாலிபர் வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குபதிந்து செய்து வாலிபர்இளங்கோவனை கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் பண்ருட்டி பலாப்பட்டு, மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த இளங்கோவன் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். பின்னர் அடிக்கடி இதுபோன்று இளங்கோவன் உல்லாசமாக இருந்ததால் அந்த பெண் கர்ப்பம் ஆனார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இளங்கோவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இளங்கோவன் அதற்கு மறுத்துவிட்டார். எனவே இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த பெண் புகார்கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குபதிந்து செய்து  வாலிபர்இளங்கோவனை கைது செய்தனர். 

    டெல்லியில் கனடாவை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    கனடாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் டெல்லி ஜவுஸ் காஸ் பகுதியில் உள்ள ஒரு பப்பில் அங்குள்ள ஒருவரிடம் நட்பாக அறிமுகமாகியுள்ளார். இதனை அடுத்து, நேற்றிரவு அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் புகாரளித்துள்ளார்.

    பெண்ணின் புகாரை அடுத்து, அபிஷேக் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 
    ×