search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரோகம்"

    கோடிக்கணக்கான இந்துக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி துரோகம் செய்துவிட்டதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியுள்ளார். #ModiBetrayedHindus #Togadia
    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்திய பிரதமர் மோடிக்கு அயோத்தியில் வந்து தரிசனம் செய்யக்கூட நேரம் இல்லை என்றும், ஆனால் வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்ல நேரம் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

    மேலும், அயோத்தி, மதுரா, மற்றும் காசி ஆகிய பகுதிகளில் கோவில் கட்டப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மோடி பல கோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தாம் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்து வருவதாகவும், அதனை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    மேலும், அந்தரஷ்ட்ரியா இந்து பரிஷத் எனும் புதிய அமைப்பைத் துவங்கியுள்ள தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #ModiBetrayedHindus #Togadia
    காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #cauveryissue

    திண்டுக்கல்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.

    கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது.

    ஆகையால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வரவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவது தொடர்பாக 2 கட்சிகளும் ஒன்று சேர்ந்து தண்ணீர் தராமல் துரோகம் செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனை சரி செய்வது ஆளுங்கட்சியின் கடமையாகும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #cauveryissue

    சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதின் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதின் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ள யோசனை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலம் தான் தங்களின் தீர்ப்பை செயல்படுத்த முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியிருந்த நிலையில், அதற்கு மாறாக மேற்பார்வை வாரியம் அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டம் தமிழக நலன்களுக்கு எதிரானது என்பதால் இந்த திட்டத்தை நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணையின் போது தமிழகம் கடுமையாக எதிர்க்க வேண்டும். மத்திய அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். காவிரி மேற்பார்வை வாரியம் தான் இறுதியான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டால், அதைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் எதிர்க்கிறது என்பதை காரணமாக காட்டி, அரசியல் சட்ட அதிகாரம் இல்லாத ஒரு வெற்று மேற்பார்வை குழுவை அமைக்க செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மன்னிக்கவே முடியாத அநீதி.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு நிகரான நடுவர் மன்ற தீர்ப்பை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்திடும் வகையில் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உருவாக்கி, தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை தட்டிப்பறிக்க நினைப்பதை தமிழக மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதித்தீர்ப்பு வெளியாகும், அது நிரந்த தீர்வுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடந்த தமிழக விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தாலும் வருகிற 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக, அது நிரந்த தீர்வாக அமைந்து தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அந்த இறுதி அறிவிப்புக்கு பிறகு உடனே மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, அதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட இருக்கும் அமைப்புக்கோ அல்லது குழுவுக்கோ அல்லது ஆணையத்துக்கோ எதுவாக இருந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுகுறித்து அரசிதழில் வெளியிட வேண்டும்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் செயல்திட்டம் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த காவிரி அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் நதிநீர் பங்கீடு எந்த அளவுக்கு உண்மைத்தன்மையுடன் பகிர்ந்தளிக்கப்படும் என்ற சந்தேகம் எழுகிறது. நதிநீர் பங்கீட்டில் நடுநிலையாக செயல்பட்டு முழு அதிகாரம் செலுத்தும் ஆளுமை காவிரி அமைப்புக்கு இல்லாதபட்சத்தில் இந்த செயல்திட்ட வரைவினை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணும் வரை உரிமையை மீட்க போராடும் தமிழர்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் உறுதுணையாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் துரோகம். அந்த வரைவு திட்டத்தின் நகல் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள விவரங்களை விவாதித்து தமிழக அரசின் சார்பில் 16-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. காவிரி பிரச்சினை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து நிலையான கருத்தை இறுதி செய்ய உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்:-

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு செயல் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை முற்றிலும் தமிழக நலனுக்கு எதிரானதும், கர்நாடகாவுக்கு ஆதரவானதும் ஆகும். இதுகுறித்து விவாதிக்க அவசரமாக அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். 
    காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். #GKVasan #Cauvery
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினவிழாவையொட்டி சாதனையாளர்கள் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

    வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைதங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில இணைச்செயலாளர் மால்மருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய நடிகர் ரமேஷ்கண்ணா(கலைத்துறை), கே.ராஜா(வணிகத்துறை), தேவானந்த்(கல்வித்துறை), கே.கே.பில்டர்ஸ் (கட்டிடத்துறை), சங்கர்ராஜ்(உணவுத்துறை), டாக்டர் காமராஜ்(மருத்துவத்துறை) உள்பட 9 பேருக்கு ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை விமானநிலையம் காமராஜ் உள்நாட்டு முனையம் என்று இருந்ததை, அதில் உள்ள காமராஜ் பெயரை நீக்க இருக்கின்றனர். அதை நீக்கக்கூடாது. காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    * தமிழக அரசு வணிக நல வாரியத்தை சீரமைத்து அதில் வணிக பிரதிநிதிகளை வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

    * ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மருந்து பொருட்கள் கூட ஆன்லைனில் விற்கும் நிலை இருக்கிறது. அதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் என்று ஏங்கிக்கொண்டு இருந்த விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரசும் துரோகத்தையும், அநீதியையும் இழைத்து இருக்கின்றன. தொடர்ந்து இந்த 2 கட்சிகளும் தேர்தல் தான் முக்கியம் என்றும், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் உறுதியாக இருக்கிறார்கள்.

    இந்த கட்சிகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்.

    த.மா.கா. தனித்தன்மையோடு இயக்கத்தை பலப்படுத்துகிறது. பெரிய கட்சிகளோ, சின்ன கட்சிகளோ இப்போதுள்ள சூழ்நிலையில் கூட்டணி அவசியம். தேர்தல் வரும்போது, த.மா.கா. சார்பில் கூட்டணி குறித்து ஆலோசிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×