என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 204939
நீங்கள் தேடியது "சனி"
நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. பெரும் பணக்காரனைக் கூட கடனாளி ஆக்கி, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட வைக்கும் சக்தி சனிக்கு உண்டு.
நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. நாள்பட்ட தீராத நோய்கள், முழுமையாக வளர்ச்சி பெறாத உடல், தீராத மனக்கவலை, நரம்பு தளர்வு, இளமையிலேயே முதுமையான முகத்தோற்றம் போன்றவற்றுக்கும் சனி பகவான் தான் காரணமாக இருக்கிறார்.
மனம் எப்போதும் துக்கத்திலேயே, ஒரு வித கலக்கத்திலேயே இருப்பதற்கும் இவர்தான் காரணம். ஆண்- பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்குபவர் சனி தான். விகாரமான அல்லது அருவறுப்பு தரக்கூடிய உடல், செம்பட்டையான, அழுக்கு படிந்த, தலைமுடிக்கும் சனிதான் காரணம் ஆவார்.
ஒருவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபடுவது, குளியல் அறையில் வழுக்கி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கும், சித்த பிரமை பிடிப்பதற்கும், இளம்பிள்ளை வாதம், உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் சனி பகவான் தான் காரணமாக திகழ்கிறார். மன அழுத்தம் காரணமாக ஒருவர் தற்கொலை செய்வதற்கும் சனியே தூண்டுதலாக இருக்கிறார். கெட்ட நடத்தையால் வரக்கூடிய நோய், வாகனங்களால் ஏற்படும் விபத்து, உடல் முழுவதும் வியர்த்து உடல் நடுக்கும் மன பயத்தைத் தருவது, வம்சாவழியாக வரும் நோய்கள், கெட்ட கனவுகள், கெட்ட குணங்கள் தோன்ற காரணமானவர் சனீஸ்வரன்.
பெரும் பணக்காரனைக் கூட கடனாளி ஆக்கி, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட வைக்கும் சக்தி சனிக்கு உண்டு. தீராத மலச்சிக்கல், மூல நோய், சாக்கடைகளால் வரும் நோய்கள், அசைவ உணவுகள் மூலம் உண்டாகும் நோய்கள், கண் திருஷ்டி, விதவை சாபம், ஒழுக்க நெறி தவறிய ஆன்மிக மடம், ஆலயங்கள் ஏற்படவும் சனியே காரணமாக இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதனின் ஆயுள் முடியும் அன்றைய தினம் முழுவதும் சனியே அந்த நபரை ஆதிக்கம் செய்கிறார்.
-ஆர். சூரிய நாராயணமூர்த்தி.
மனம் எப்போதும் துக்கத்திலேயே, ஒரு வித கலக்கத்திலேயே இருப்பதற்கும் இவர்தான் காரணம். ஆண்- பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்குபவர் சனி தான். விகாரமான அல்லது அருவறுப்பு தரக்கூடிய உடல், செம்பட்டையான, அழுக்கு படிந்த, தலைமுடிக்கும் சனிதான் காரணம் ஆவார்.
ஒருவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபடுவது, குளியல் அறையில் வழுக்கி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கும், சித்த பிரமை பிடிப்பதற்கும், இளம்பிள்ளை வாதம், உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் சனி பகவான் தான் காரணமாக திகழ்கிறார். மன அழுத்தம் காரணமாக ஒருவர் தற்கொலை செய்வதற்கும் சனியே தூண்டுதலாக இருக்கிறார். கெட்ட நடத்தையால் வரக்கூடிய நோய், வாகனங்களால் ஏற்படும் விபத்து, உடல் முழுவதும் வியர்த்து உடல் நடுக்கும் மன பயத்தைத் தருவது, வம்சாவழியாக வரும் நோய்கள், கெட்ட கனவுகள், கெட்ட குணங்கள் தோன்ற காரணமானவர் சனீஸ்வரன்.
பெரும் பணக்காரனைக் கூட கடனாளி ஆக்கி, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட வைக்கும் சக்தி சனிக்கு உண்டு. தீராத மலச்சிக்கல், மூல நோய், சாக்கடைகளால் வரும் நோய்கள், அசைவ உணவுகள் மூலம் உண்டாகும் நோய்கள், கண் திருஷ்டி, விதவை சாபம், ஒழுக்க நெறி தவறிய ஆன்மிக மடம், ஆலயங்கள் ஏற்படவும் சனியே காரணமாக இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதனின் ஆயுள் முடியும் அன்றைய தினம் முழுவதும் சனியே அந்த நபரை ஆதிக்கம் செய்கிறார்.
-ஆர். சூரிய நாராயணமூர்த்தி.
நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. சனி எந்த ராசியில் இருந்தால் என்ன நோய் தாக்கும் என்று பார்க்கலாம்.
* சனி பகை ராசியான கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிகளில் நின்று இருந்தால், உடல் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். மனம் சங்கடத்தில் இருக்கக்கூடும். நோய்க்குரிய மருந்துகள் எடுத்துக் கொள்வதில் கூட நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். சின்ன காய்ச்சல் வந்தால் கூட மரண பயம் அப்பிக் கொள்ளும்.
* சனி நீச்ச ராசியான மேஷ ராசியில் நின்று இருந்தால், மூலநோய் வரக்கூடும். மலச்சிக்கல் வரும். ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும். ஏழரைச் சனி அல்லது அஷ்டம சனி காலத்தில் இந்த ஜாதகருக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் உண்டாகும். வாகன பயணத்தில் கவனம் தேவை.
* சனி பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், உடலில் பித்த நீர் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதை வஸ்துகள் பயன்படுத்தக் கூடாது. கை, கால் சோர்வு அடிக்கடி ஏற்படும். வேலைக்கு உடல் ஒத்துழைப்பு இல்லாமல் போய்விடும்.
* பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் சனி நின்று இருந்தால், எந்த நேரமும் ஏதாவது உடல் உபாதை இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டு இருப்பார்கள். தன் உடலைப் பற்றியோ, நோயை பற்றியோ பெரிதும் அக்கறை காட்ட மாட்டார்கள். அடிக்கடி கால் இடறி விழுதல், கை, கால் எலும்பு முறிவுகள் உண்டாகும்.
* சனி குரூரர் என்பதால், அவர் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெறுவது நல்லது. என்றாலும் 6-ம் இடத்தை விட 8, 12 ஆகிய இடங்களில் நிற்பது மிகவும் நல்லது. 6-ம் இடத்தில் சனி நின்றால், அந்த நபர் நோய்க்காகவே பிறந்தவர் என்று தான் கூற வேண்டும். தொற்று நோய்கள் உடனே பிடிக்கும். ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி காலத்தில் உடலில் உள்ள அனைத்து நோய்களும் வெளிப்படும். சிலருக்கு மரணம் உண்டாகலாம்.
* சனி கிரகம் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பார். தொற்று நோய்கள் பருவகால நோய்கள் உடனே தாக்கக் கூடும். அந்த ஜாதகரின் ஆயுள் சராசரியாக எழுபது வயது வரை இருக்கலாம்.
* சனி கிரகம் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ, பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகர் மன நோயாளி போல் நடந்து கொள்வார். உடலுக்கு ஆகாது என தெரிந்தும் அந்த உணவுகளையே உண்டு அவதிப்படுவார்.
* சனி கிரகமே லக்னத்திற்கு பாவியாக பாதகாதிபதியாக இருந்தால், சனியின் நிலையை பொறுத்தே பலன் எழுத வேண்டும் என்றாலும் சனி கிரகம் அவ்வப்போது ஏதாவது உடல் உபாதையை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
* சனி கிரகத்தின் மீது பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதி பார்வை ஏற்பட்டால், அந்த ஜாதகர் மூலிகை எண்ணெய், நோய்க்கு உதவாத மருந்துகள் எடுத்து அவதிப்படுவார். போதை வஸ்துகள் மூலம் நோய்கள் வரக் கூடும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.
-ஆர். சூரிய நாராயணமூர்த்தி.
* சனி நீச்ச ராசியான மேஷ ராசியில் நின்று இருந்தால், மூலநோய் வரக்கூடும். மலச்சிக்கல் வரும். ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும். ஏழரைச் சனி அல்லது அஷ்டம சனி காலத்தில் இந்த ஜாதகருக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் உண்டாகும். வாகன பயணத்தில் கவனம் தேவை.
* சனி பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், உடலில் பித்த நீர் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதை வஸ்துகள் பயன்படுத்தக் கூடாது. கை, கால் சோர்வு அடிக்கடி ஏற்படும். வேலைக்கு உடல் ஒத்துழைப்பு இல்லாமல் போய்விடும்.
* பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் சனி நின்று இருந்தால், எந்த நேரமும் ஏதாவது உடல் உபாதை இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டு இருப்பார்கள். தன் உடலைப் பற்றியோ, நோயை பற்றியோ பெரிதும் அக்கறை காட்ட மாட்டார்கள். அடிக்கடி கால் இடறி விழுதல், கை, கால் எலும்பு முறிவுகள் உண்டாகும்.
* சனி குரூரர் என்பதால், அவர் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெறுவது நல்லது. என்றாலும் 6-ம் இடத்தை விட 8, 12 ஆகிய இடங்களில் நிற்பது மிகவும் நல்லது. 6-ம் இடத்தில் சனி நின்றால், அந்த நபர் நோய்க்காகவே பிறந்தவர் என்று தான் கூற வேண்டும். தொற்று நோய்கள் உடனே பிடிக்கும். ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி காலத்தில் உடலில் உள்ள அனைத்து நோய்களும் வெளிப்படும். சிலருக்கு மரணம் உண்டாகலாம்.
* சனி கிரகம் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பார். தொற்று நோய்கள் பருவகால நோய்கள் உடனே தாக்கக் கூடும். அந்த ஜாதகரின் ஆயுள் சராசரியாக எழுபது வயது வரை இருக்கலாம்.
* சனி கிரகம் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ, பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகர் மன நோயாளி போல் நடந்து கொள்வார். உடலுக்கு ஆகாது என தெரிந்தும் அந்த உணவுகளையே உண்டு அவதிப்படுவார்.
* சனி கிரகமே லக்னத்திற்கு பாவியாக பாதகாதிபதியாக இருந்தால், சனியின் நிலையை பொறுத்தே பலன் எழுத வேண்டும் என்றாலும் சனி கிரகம் அவ்வப்போது ஏதாவது உடல் உபாதையை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
* சனி கிரகத்தின் மீது பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதி பார்வை ஏற்பட்டால், அந்த ஜாதகர் மூலிகை எண்ணெய், நோய்க்கு உதவாத மருந்துகள் எடுத்து அவதிப்படுவார். போதை வஸ்துகள் மூலம் நோய்கள் வரக் கூடும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.
-ஆர். சூரிய நாராயணமூர்த்தி.
நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் சனி கிரகத்தின் பார்வை தான் ஒருவருடைய பாவ - புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது.
நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. இதன் பார்வை தான் ஒருவருடைய பாவ - புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது. சனியின் ஆதிக்கம் கொண்டவர்கள், நீதி நேர்மையுடனும், நன்னடத்தையோடும் வாழ விரும்புவார்கள். ஆனால் இவர்களது சத்தியத்திற்கு அவ்வப்போது சோதனை வந்து போகும். இந்த நபர்கள் தயாள குணம், தர்ம சிந்தனையை கடைப்பிடிப்பார்கள். இவர்களுக்கு தலைமைப் பதவி தேடி வரலாம். ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி முடியும் தருவாயில் ஒரு வருக்கு சனி கொடுக்கும் வாழ்வானது, நிரந்தர யோகமாக அமையும்.
ஏழு தலைமுறைகளுக்காக சொத்துகளைச் சேர்க்கும் யோகத்தை தருவது சனி பகவான் தான். அந்த சொத்துகளை கட்டிக்காக்கும் சக்தியும், சனியிடம் இருந்தே கிடைக்கிறது. தொழில் அதிபர் என்கிற தகுதியை தருபவரும் இவர்தான். எண்ணெய் நிறுவனம், இரும்பு கம்பெனி, பெட்ரோல், டீசல் பங்க் அதிபதிகள், சனி ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். வம்சாவழியாக வரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவர் சனி பகவான்.
மன வைராக்கியத்தை அருள்பவர், பிறரது மரணம் அடையும் கால நேரம் அறியும் சக்தி, மரணத்திற்கு பின் நடக்கும் சம்பவங்களை உணரும் சக்திகளைத் தருபவரும் சனி பகவானே. வக்கீல் தொழில், நீதிபதி பதவி, ரெயில்வே துறையில் பெரிய பதவிகள், காலணி கடை, கசாப்பு கடை, எருமை பண்ணை, மர விறகு கடை போன்றவற்றால் லாபத்தை அருள்பவர் சனீஸ்வரன். தவிர பிண அறையில் காவலாளி வேலை, பிணத்தை அறுத்து ஆய்வு செய்யும் (போஸ்மார்ட்டம்) பணி, சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பது, அவசர உதவி ஆம்புலன்ஸ் வண்டியில் வேலை போன்றவற்றுக்கு சனி பகவானின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது.
ஏழு தலைமுறைகளுக்காக சொத்துகளைச் சேர்க்கும் யோகத்தை தருவது சனி பகவான் தான். அந்த சொத்துகளை கட்டிக்காக்கும் சக்தியும், சனியிடம் இருந்தே கிடைக்கிறது. தொழில் அதிபர் என்கிற தகுதியை தருபவரும் இவர்தான். எண்ணெய் நிறுவனம், இரும்பு கம்பெனி, பெட்ரோல், டீசல் பங்க் அதிபதிகள், சனி ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். வம்சாவழியாக வரும் நோய்களைத் தீர்க்கும் சக்தி படைத்தவர் சனி பகவான்.
மன வைராக்கியத்தை அருள்பவர், பிறரது மரணம் அடையும் கால நேரம் அறியும் சக்தி, மரணத்திற்கு பின் நடக்கும் சம்பவங்களை உணரும் சக்திகளைத் தருபவரும் சனி பகவானே. வக்கீல் தொழில், நீதிபதி பதவி, ரெயில்வே துறையில் பெரிய பதவிகள், காலணி கடை, கசாப்பு கடை, எருமை பண்ணை, மர விறகு கடை போன்றவற்றால் லாபத்தை அருள்பவர் சனீஸ்வரன். தவிர பிண அறையில் காவலாளி வேலை, பிணத்தை அறுத்து ஆய்வு செய்யும் (போஸ்மார்ட்டம்) பணி, சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பது, அவசர உதவி ஆம்புலன்ஸ் வண்டியில் வேலை போன்றவற்றுக்கு சனி பகவானின் ஆதிக்கமே காரணமாக அமைகிறது.
நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. சனி பகவானுக்கு உகந்தவை, பகையான கிரகங்கள், நட்பு கிரகங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
காரகன் - ஆயுள்
தேவதை - ஈஸ்வரன்
தானியம் - எள்
உலோகம் - இரும்பு
நிறம் - கருப்பு
குணம் - தாமஸம்
சுபாவம் - குரூரர்
சுவை - கசப்பு
திக்கு - மேற்கு
உடல் அங்கம் - தொடை
தாது - நரம்பு
நோய் - வாதம்
பஞ்சபூதம் - காற்று
பார்வை நிலை - தான் நின்ற ராசியில்இருந்து 3,7,10 ஆகிய இடங்களின் மீது முழுமையானபார்வை, 5,9 ஆகிய இடங்களில் அரை பங்கு பார்வை, 4,8 ஆகிய இடங்களில் முக்கால் பங்கு பார்வை.
பாலினம் - ஆண்- பெண் இல்லாத தன்மை
உபகிரகம் - குளிகன் (மாந்தி)
ஆட்சி ராசி - மகரம், கும்பம்
உச்ச ராசி - துலாம்
மூலத்திரிகோண ராசி - கும்பம்
நட்பு ராசி - ரிஷபம், மிதுனம், கன்னி
சமமான ராசி - தனுசு, மீனம்
பகை ராசி - கடகம், சிம்மம், விருச்சிகம்
நீச்ச ராசி - மேஷம்
திசை ஆண்டுகள் - பத்தொன்பது ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - இரண்டரை ஆண்டுகள்
நட்பு கிரகங்கள் - புதன், சுக்ரன், ராகு, கேது
சமமான கிரகம் - குரு
பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
அதிக பகையான கிரகம் - சூரியன்
இதர பெயர்கள் - கரியவன், அந்தகன், காளி, கௌரி, மந்தன், முதுமகன், முடவன்
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
தேவதை - ஈஸ்வரன்
தானியம் - எள்
உலோகம் - இரும்பு
நிறம் - கருப்பு
குணம் - தாமஸம்
சுபாவம் - குரூரர்
சுவை - கசப்பு
திக்கு - மேற்கு
உடல் அங்கம் - தொடை
தாது - நரம்பு
நோய் - வாதம்
பஞ்சபூதம் - காற்று
பார்வை நிலை - தான் நின்ற ராசியில்இருந்து 3,7,10 ஆகிய இடங்களின் மீது முழுமையானபார்வை, 5,9 ஆகிய இடங்களில் அரை பங்கு பார்வை, 4,8 ஆகிய இடங்களில் முக்கால் பங்கு பார்வை.
பாலினம் - ஆண்- பெண் இல்லாத தன்மை
உபகிரகம் - குளிகன் (மாந்தி)
ஆட்சி ராசி - மகரம், கும்பம்
உச்ச ராசி - துலாம்
மூலத்திரிகோண ராசி - கும்பம்
நட்பு ராசி - ரிஷபம், மிதுனம், கன்னி
சமமான ராசி - தனுசு, மீனம்
பகை ராசி - கடகம், சிம்மம், விருச்சிகம்
நீச்ச ராசி - மேஷம்
திசை ஆண்டுகள் - பத்தொன்பது ஆண்டுகள்
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - இரண்டரை ஆண்டுகள்
நட்பு கிரகங்கள் - புதன், சுக்ரன், ராகு, கேது
சமமான கிரகம் - குரு
பகையான கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
அதிக பகையான கிரகம் - சூரியன்
இதர பெயர்கள் - கரியவன், அந்தகன், காளி, கௌரி, மந்தன், முதுமகன், முடவன்
நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி
அவரவருடைய பிறப்பு ஜாதக அடிப்படையில், ஒருவருக்கு துன்ப அனுபவங்களை தரும் சனி, கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருப்பவர் வரை அவரது முன்ஜென்ம கர்ம வினையின்படி துன்பங்களைத் தருவார்.
ஏழரைச் சனி என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் பருவத்திற்கேற்ப துன்பம் தரும். குறிப்பாக வாழ்வில் மிக முக்கிய பருவத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் வரும் அமைப்பான இந்த சனிக்கு மனிதனாகப் பிறந்த எவரும் விதிவிலக்காக முடியாது.
அவரவருடைய பிறப்பு ஜாதக அடிப்படையில், ஒருவருக்கு துன்ப அனுபவங்களை தரும் சனி, கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருப்பவர் வரை அவரது முன்ஜென்ம கர்ம வினையின்படி துன்பங்களைத் தருவார். அதேபோல ஒரு குடும்பத்தில் பெரும்பாலானோருக்கு ஒரே நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்குமாயின் அந்தக் குடும்பம் அதன் தரத்திற்கும், உயரத்திற்கும் ஏற்றார் போல கஷ்டப்படும் என்பதும் சனியின் ஒரு மிக முக்கிய பலன்.
எத்தகைய உயர் யோகக் குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில், கோட்சார நிலையில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்கக் கூடாது. அப்படி நடக்குமாயின் யோகமான ஜாதக அமைப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் கொண்டிருந்தாலும், அந்த ஜாதகங்கள் செயலற்றுப் போகும். கெடுபலன்களே தூக்கலாக இருக்கும்.
யோகங்களை நிலையாக அனுபவிக்கும் குடும்பங்களில் உள்ளவர்களின் ராசிகளைப் பார்த்தால், பெரும்பாலோருக்கு ஒரே ராசியாகவோ அல்லது அடுத்தடுத்த ராசிகளாகவோ இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மூன்று, நான்கு ராசிகள் தள்ளி அல்லது கேந்திர ராசிகளில் பிறந்திருப்பதை கவனிக்கலாம்.
உதாரணமாக, கணவன் தனுசு ராசியாக இருந்தால், மனைவி மிதுனமாகவும், ஒரு குழந்தை கன்னி மற்றும், இன்னொரு குழந்தை மீனமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட அமைப்பில் ஏழரைச் சனி வரும்போது, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு சனி முடிந்த பிறகே, மற்றவருக்கு ஆரம்பிக்கும். இது போன்ற நிலையில் அக்குடும்பம் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படும்.
மாறாக குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்த தொடர் ராசிகளாகவோ, ஏக ராசி என்று சொல்லப்படும் ஒரே ராசியாகவோ இருக்கின்ற நிலையில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும்போது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பிரச்னைகள், மற்றும் தாங்க முடியாத இழப்புகள் என அந்தக் குடும்பம் கடும் புயலில் சிக்கித் தவிக்கும் சிறு படகு போலாகும்.
சனியின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்கு நமது புராணங்களில் நளன்- தமயந்தி கதை சொல்லப்பட்டிருப்பதை பெரும்பாலானாவர்கள் அறிவார்கள். நவகிரக ஸ்தலங்களில் சனியின் ஆலயமாக சொல்லப்படும் திருநள்ளாரின் ஸ்தல வரலாறும் நளனுடைய கதைதான்.
மன்னனாக இருந்த நள மகராஜன், ஏழரைச்சனி காலத்தில் மனைவியை இழந்து, சொந்த நாட்டை இழந்து, சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளாகி மீண்டதைத்தான் நளன் கதை சொல்கிறது. சொல்ல முடியா பெருமை வாய்ந்த நமது அதி உன்னத புராணங்களின் அத்தனை கதைகளும் மனித வாழ்க்கைச் சம்பவங்களின் குறியீடுகள் மற்றும் ஜோதிடத்தின் வேறுவடிவமான உண்மைகளே என்பதை “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்.
ஏழரைச்சனி, அஷ்டமச் சனி என்று ஆரம்பித்தாலே இதைப் படிக்கும் உங்களில் ஒவ்வொரு வருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்துதான் தீரும். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் காலகட்டத்தில் நாம் பாதிக்கப்பட்டிருக்கவே செய்வோம். சனி என்றாலே நமது உடல் சிலிர்த்து மனம் பதைக்கத்தான் செய்யும்.
எதிர்காலத்தைக் குறிக்கும் காலவியல் விஞ்ஞானமான வேத ஜோதிடத்தில், ஒரு மனிதனின் கஷ்டமான பருவத்தை மிகச் சுலபமாக முன்னரே அடையாளம் காட்டும் ஒரு நிலைதான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி எனப்படுவது. அதிலும் குடும்பத்தில் அனைவருக்கும் இது ஒன்று போல வரும் நிலையிலோ, அல்லது சம்பந்தப்பட்டவருக்கு பிறந்த ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடையவர்களின் தசா புக்தி வரும் நிலையிலோ கஷ்டம் கூடுதலாக இருக்கும் என்பதையும் முன் கூட்டியே அறியலாம் என்பதே வேத ஜோதிடத்தின் சிறப்பு.
அவரவருடைய பிறப்பு ஜாதக அடிப்படையில், ஒருவருக்கு துன்ப அனுபவங்களை தரும் சனி, கோடீஸ்வரன் முதல் தெருக்கோடியில் இருப்பவர் வரை அவரது முன்ஜென்ம கர்ம வினையின்படி துன்பங்களைத் தருவார். அதேபோல ஒரு குடும்பத்தில் பெரும்பாலானோருக்கு ஒரே நேரத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்குமாயின் அந்தக் குடும்பம் அதன் தரத்திற்கும், உயரத்திற்கும் ஏற்றார் போல கஷ்டப்படும் என்பதும் சனியின் ஒரு மிக முக்கிய பலன்.
எத்தகைய உயர் யோகக் குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில், கோட்சார நிலையில் ஏழரைச்சனி, அஷ்டமச் சனி நடக்கக் கூடாது. அப்படி நடக்குமாயின் யோகமான ஜாதக அமைப்பை குடும்பத்தில் இருப்பவர்கள் கொண்டிருந்தாலும், அந்த ஜாதகங்கள் செயலற்றுப் போகும். கெடுபலன்களே தூக்கலாக இருக்கும்.
யோகங்களை நிலையாக அனுபவிக்கும் குடும்பங்களில் உள்ளவர்களின் ராசிகளைப் பார்த்தால், பெரும்பாலோருக்கு ஒரே ராசியாகவோ அல்லது அடுத்தடுத்த ராசிகளாகவோ இருக்காது. குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மூன்று, நான்கு ராசிகள் தள்ளி அல்லது கேந்திர ராசிகளில் பிறந்திருப்பதை கவனிக்கலாம்.
உதாரணமாக, கணவன் தனுசு ராசியாக இருந்தால், மனைவி மிதுனமாகவும், ஒரு குழந்தை கன்னி மற்றும், இன்னொரு குழந்தை மீனமாகவும் இருக்கும். இப்படிப்பட்ட அமைப்பில் ஏழரைச் சனி வரும்போது, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு சனி முடிந்த பிறகே, மற்றவருக்கு ஆரம்பிக்கும். இது போன்ற நிலையில் அக்குடும்பம் மிகப்பெரிய பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படும்.
மாறாக குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்த தொடர் ராசிகளாகவோ, ஏக ராசி என்று சொல்லப்படும் ஒரே ராசியாகவோ இருக்கின்ற நிலையில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும்போது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், குடும்பப் பிரச்னைகள், மற்றும் தாங்க முடியாத இழப்புகள் என அந்தக் குடும்பம் கடும் புயலில் சிக்கித் தவிக்கும் சிறு படகு போலாகும்.
சனியின் தாக்கத்தை புரிந்து கொள்வதற்கு நமது புராணங்களில் நளன்- தமயந்தி கதை சொல்லப்பட்டிருப்பதை பெரும்பாலானாவர்கள் அறிவார்கள். நவகிரக ஸ்தலங்களில் சனியின் ஆலயமாக சொல்லப்படும் திருநள்ளாரின் ஸ்தல வரலாறும் நளனுடைய கதைதான்.
மன்னனாக இருந்த நள மகராஜன், ஏழரைச்சனி காலத்தில் மனைவியை இழந்து, சொந்த நாட்டை இழந்து, சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளாகி மீண்டதைத்தான் நளன் கதை சொல்கிறது. சொல்ல முடியா பெருமை வாய்ந்த நமது அதி உன்னத புராணங்களின் அத்தனை கதைகளும் மனித வாழ்க்கைச் சம்பவங்களின் குறியீடுகள் மற்றும் ஜோதிடத்தின் வேறுவடிவமான உண்மைகளே என்பதை “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்.
ஏழரைச்சனி, அஷ்டமச் சனி என்று ஆரம்பித்தாலே இதைப் படிக்கும் உங்களில் ஒவ்வொரு வருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருந்துதான் தீரும். ஏதோ ஒரு விதத்தில் அந்தக் காலகட்டத்தில் நாம் பாதிக்கப்பட்டிருக்கவே செய்வோம். சனி என்றாலே நமது உடல் சிலிர்த்து மனம் பதைக்கத்தான் செய்யும்.
எதிர்காலத்தைக் குறிக்கும் காலவியல் விஞ்ஞானமான வேத ஜோதிடத்தில், ஒரு மனிதனின் கஷ்டமான பருவத்தை மிகச் சுலபமாக முன்னரே அடையாளம் காட்டும் ஒரு நிலைதான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி எனப்படுவது. அதிலும் குடும்பத்தில் அனைவருக்கும் இது ஒன்று போல வரும் நிலையிலோ, அல்லது சம்பந்தப்பட்டவருக்கு பிறந்த ஜாதகத்தில் ஆறு, எட்டுக்குடையவர்களின் தசா புக்தி வரும் நிலையிலோ கஷ்டம் கூடுதலாக இருக்கும் என்பதையும் முன் கூட்டியே அறியலாம் என்பதே வேத ஜோதிடத்தின் சிறப்பு.
சனிபகவானின் சாபமும், விமோசனமும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வதில் தொடக்கத்தில் சிறிது துன்பம் ஏற்பட்டாலும், பின்னர் நமக்கு நல்லதொரு நிலையைத் தரும்.
சனி பகவானின் மனைவியும், சித்திரதன் என்ற கந்தர்வன் மகளுமான பரம்தேஜஸ்விக்கு குழந்தையில்லையே என்கிற கவலை தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. சனி பகவான், கிருஷ்ணரை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த பரம்தேஜஸ்வி, தியானத்தில் இருந்த சனி பகவானிடம், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டுமென்று கேட்டாள். தியானத்தில் ஆழ்ந்திருந்ததால் அவளின் கோரிக்கையை சனீஸ்வரன் கவனிக்கவில்லை. அவள் மேலும் சிலமுறை தனக்குக் குழந்தைப்பேறு அளித்திட வேண்டுமென்று கேட்டும், பதில் ஏதும் கிடைக்காததால் வருத்தமடைந்தாள்.
சாபம்
மனைவியான தன்னைக் கவனிக்காமல், தியானத்தில் இருப்பது போல் தனது வேண்டுகோளைப் புறக்கணிப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஆகையால் பொறுமை இழந்த அவள் கோபத்துடன், ‘மனைவியான என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தராமல், என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் புறக்கணித்த நீங்கள், இனி யாரையும், எப்போதும் நேர்பார்வையில் பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் அழிந்து போகட்டும்’ என்று சாபமிட்டாள்.
இதனால் சனிபகவான் யாரையும் நேரடியாகப் பார்க்க முடியாமல், பூமியைப் பார்த்து தலை குனிந்தபடியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பார்வதிதேவி, குழந்தைப்பேறு வேண்டி கிருஷ்ணரை நோக்கி விரதம் இருந்தாள். இதைத் தொடர்ந்து கிருஷ்ணனே ஒரு குழந்தையாக அவள் படுக்கையில் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்த அவள், சிவபெருமானிடம் குழந்தையைக் காண்பித்து குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழ்வதற்கான விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தாள்.
குறிப்பிட்ட நாளில் அந்தக் குழந்தைக்கு ‘கணேசர்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இதற்காக ஏற்பாடு செய்திருந்த விழாவில் தேவர்கள், முனிவர்கள் பலரும் கலந்து கொண்டு குழந்தையைப் பார்த்து வாழ்த்தி வணங்கினர். சனீஸ்வரனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால் அவர் குழந்தையை ஏறெடுத்தும் பார்க்காமல், ஓரமாக தலையை குனிந்தபடி நின்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த பார்வதி சனிபகவானிடம், ‘இங்கு வந்த அனைவரும் குழந்தையைப் பார்த்து வாழ்த்தி வணங்கிச் செல்லும் பொழுது, நீ மட்டும் ஏன் ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டாள்.
உடனே சனிபகவான், ‘அன்னையே! என் மீது ஒரு சாபம் இருக்கிறது. என் மனைவியின் வேண்டுகோள் ஒன்றை நான் புறக்கணித்ததாகக் கூறி, என் மனைவி நான் யாரை நேரடியாகப் பார்த்தாலும் அவர்கள் அழிந்திட வேண்டும் என்று சாபமிட்டிருக்கிறாள். இந்தச் சாபத்தால்தான், நான் ஒதுங்கி நிற்கின்றேன். நான் தங்கள் குழந்தையை நேரடியாகப் பார்க்க இயலாது’ என்றார்.
இதைக் கேட்ட பார்வதியும், அங்கு கூடியிருந்த பெண்களும் சிரித்தனர். சனிபகவான் கூறியதை சாதாரணமாக எண்ணிய பார்வதி அவரிடம், ‘நீ பயப்படாமல் வந்து என் குழந்தையை நேரடியாகப் பார்த்து வாழ்த்திச் செல்’ என்றாள். இதன் பிறகு சனிபகவான் குழந்தையை நேரிடையாகப் பார்க்காமல் தன் ஓரக்கண்ணால் குழந்தையைப் பார்த்தார். அவர் பார்வை பட்டவுடன் பார்வதியின் மடியிலிருந்த குழந்தை, தலையின்றி கீழே விழுந்தது. குழந்தையின் தலையில்லாத உருவத்தைக் கண்டு பார்வதி மயக்கமடைந்தாள். அங்கிருந்தவர்கள் அனைவரும் இதைக்கண்டு பயந்து போனார்கள்.
கிருஷ்ணர் குறிப்பிட்ட நேரத்துக்குள் அக்குழந்தைக்குப் பொருந்தும் சரியான தலையை எடுத்து வந்து பொருத்தினால் குழந்தை உயிர் பிழைத்துவிடும் என்று சொன்னார். பின்னர் அவரே குழந்தைக்கான தலையைத் தான் கொண்டு வருவதாகக் கூறி அங்கிருந்து சென்றார். அப்போது ஓர் ஆற்றங்கரையில் வெள்ளையானை (ஐராவதம்) ஒன்று வடக்கு நோக்கித் தலைவைத்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் தலையைத் தனது சுதர்சன சக்கரத்தால் அகற்றிக் கொண்டு வந்தார். கயிலாயத்தில் தலையின்றிக் கிடந்த பார்வதியின் குழந்தைக்கு அந்த வெள்ளையானையின் தலையைப் பொருத்தி உயிர் பெறச்செய்தார்.
யானைத் தலையுடன் குழந்தை உயிர்பெற்று எழுந்ததைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர். பார்வதியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். தன் குழந்தை யானைத்தலையுடன் உயிர்பெற்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், தனது குழந்தை உயிர் பெற்றதே என்று மகிழ்ச்சியடைந்தாள். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததற்கு சனிபகவானே காரணம் என்று அவள் கோபம் கொண்டாள்.
கோபமடைந்த அவள் சனிக்கு வாதநோய் ஏற்பட்டு முடமாகிப் போகும்படி சாபமிட்டாள். இந்தச் சாபத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சனிபகவான் தன் மீதான சாபத்தால் குழந்தையைப் பார்க்காமல் ஒதுங்கி நின்ற போதும், சனிபகவானை அழைத்து அருகில் வந்து குழந்தையைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தி விட்டு, அவருக்குச் சாபமும் அளித்தது நியாயமானதல்ல என்று அனைவரும் பார்வதியிடம் தெரிவித்தனர். இதனால் அவளது கோபம் சற்று குறைந்தது. இருப்பினும், சனிபகவான் வாத நோயினால் முழுவதும் முடமாகாமல் சிறிது ஊனம் மட்டும் ஏற்பட்டுப் போனது.
சனிபகவான் வாதநோயால் வந்த தன் ஊனம் மறைந்து முழுமையாகக் குணமடைந்திட சாபவிமோசனம் வேண்டினார். உடனே பார்வதி, ‘சனிபகவானே பூலோகத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில்கள் ஒவ்வொன்றாகச் சென்று தொடர்ந்து நீ வழிபட்டு வரும்போது ஒரு கோவிலில் சிவபெருமான் உனக்குக் காட்சியளித்து உன் வாத நோயைப் போக்கி, ஊனம் நீக்கி அருள்வார்’ என்றார்.
விமோசனம்
பார்வதி அளித்த சாப விமோசனத்திற்கான வழிமுறையைத் தொடர்ந்து, சனிபகவான் பூலோகம் வந்து சிவபெருமான் கோவில்கள் ஒவ்வொன்றாகச் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்துக்கு வழிபாடுகள் செய்து வணங்கிக் கொண்டே வந்தார். இப்படி வணங்கிக் கொண்டே வந்த அவர் ஒரு நாள் வேதபுரி திருமறைநாதர் கோவிலை வந்தடைந்தார்.
வேதபுரி திருமறைநாதர் மற்றும் ஆரணவல்லி ஆகியோரை வணங்கி வழிபாடு செய்த சனி பகவான் தனக்குச் சாப விமோசனம் தந்து தனது வாத நோயைப் போக்கி, ஊனத்தை நீக்கிட வேண்டினார். அப்போது அவர் முன் காட்சியளித்த சிவபெருமான், ‘இதுவரை உன் பார்வையினால் ஏற்பட்ட அழிவுகள் அனைத்தும் மாறி, ஒவ்வொருவரின் நற்செயல்களுக்கேற்ப நற்பலன்களும், கொடுஞ்செயல் செய்தவர்களுக்கு அவர்கள் தவறுகளுக்கேற்றபடி கேடான நிகழ்வுகளும் சனிபகவான் பார்வையினால் அமையும்’ என்று சனி பகவானின் சாபத்தினை மாற்றி அருளினார். அத்துடன் சனிபகவானுடைய வாதநோயைப் போக்கி, ஊனத்தையும் நீக்கி அருளினார். சனிபகவானின் வாதநோயைத் தீர்த்த தலம் என்பதால் இந்தத்தலம் ‘வாதவூர்’ என்று அழைக்கப்பெற்று, தற்போது திருவாதவூர் என்று அழைக்கப்படுகிறது.
மனைவியிடம் தான் பெற்ற சாபத்தால் பிறருக்குத் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்று உண்மையைச் சொல்லி, நேர்மையாக நடந்து கொண்ட அவருக்குப் பார்வதியால் மீண்டும் சாபம் கிடைத்தாலும், சிவபெருமான் மூலம் தன்னுடைய பார்வையினால் அழிவு என்கிற சாபத்திற்கு விமோசனத்துடன் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செயல்பாட்டிற்கேற்றபடி சமநீதியளிக்கும் நிலையினை சனிபகவான் பெற்றார்.
சனிபகவானின் இந்த சாபமும், விமோசனமும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வதில் தொடக்கத்தில் சிறிது துன்பம் ஏற்பட்டாலும், பின்னர் நமக்கு நல்லதொரு நிலையைத் தரும் என்பதை விளக்குவதாக அமைந்திருக்கின்றன.
சாபம்
மனைவியான தன்னைக் கவனிக்காமல், தியானத்தில் இருப்பது போல் தனது வேண்டுகோளைப் புறக்கணிப்பதாக அவளுக்குத் தோன்றியது. ஆகையால் பொறுமை இழந்த அவள் கோபத்துடன், ‘மனைவியான என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தராமல், என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் புறக்கணித்த நீங்கள், இனி யாரையும், எப்போதும் நேர்பார்வையில் பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் அழிந்து போகட்டும்’ என்று சாபமிட்டாள்.
இதனால் சனிபகவான் யாரையும் நேரடியாகப் பார்க்க முடியாமல், பூமியைப் பார்த்து தலை குனிந்தபடியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பார்வதிதேவி, குழந்தைப்பேறு வேண்டி கிருஷ்ணரை நோக்கி விரதம் இருந்தாள். இதைத் தொடர்ந்து கிருஷ்ணனே ஒரு குழந்தையாக அவள் படுக்கையில் தோன்றினார். அந்தக் குழந்தையைக் கண்டு மகிழ்ந்த அவள், சிவபெருமானிடம் குழந்தையைக் காண்பித்து குழந்தைக்குப் பெயர் சூட்டி மகிழ்வதற்கான விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தாள்.
குறிப்பிட்ட நாளில் அந்தக் குழந்தைக்கு ‘கணேசர்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இதற்காக ஏற்பாடு செய்திருந்த விழாவில் தேவர்கள், முனிவர்கள் பலரும் கலந்து கொண்டு குழந்தையைப் பார்த்து வாழ்த்தி வணங்கினர். சனீஸ்வரனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். ஆனால் அவர் குழந்தையை ஏறெடுத்தும் பார்க்காமல், ஓரமாக தலையை குனிந்தபடி நின்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த பார்வதி சனிபகவானிடம், ‘இங்கு வந்த அனைவரும் குழந்தையைப் பார்த்து வாழ்த்தி வணங்கிச் செல்லும் பொழுது, நீ மட்டும் ஏன் ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டாள்.
உடனே சனிபகவான், ‘அன்னையே! என் மீது ஒரு சாபம் இருக்கிறது. என் மனைவியின் வேண்டுகோள் ஒன்றை நான் புறக்கணித்ததாகக் கூறி, என் மனைவி நான் யாரை நேரடியாகப் பார்த்தாலும் அவர்கள் அழிந்திட வேண்டும் என்று சாபமிட்டிருக்கிறாள். இந்தச் சாபத்தால்தான், நான் ஒதுங்கி நிற்கின்றேன். நான் தங்கள் குழந்தையை நேரடியாகப் பார்க்க இயலாது’ என்றார்.
இதைக் கேட்ட பார்வதியும், அங்கு கூடியிருந்த பெண்களும் சிரித்தனர். சனிபகவான் கூறியதை சாதாரணமாக எண்ணிய பார்வதி அவரிடம், ‘நீ பயப்படாமல் வந்து என் குழந்தையை நேரடியாகப் பார்த்து வாழ்த்திச் செல்’ என்றாள். இதன் பிறகு சனிபகவான் குழந்தையை நேரிடையாகப் பார்க்காமல் தன் ஓரக்கண்ணால் குழந்தையைப் பார்த்தார். அவர் பார்வை பட்டவுடன் பார்வதியின் மடியிலிருந்த குழந்தை, தலையின்றி கீழே விழுந்தது. குழந்தையின் தலையில்லாத உருவத்தைக் கண்டு பார்வதி மயக்கமடைந்தாள். அங்கிருந்தவர்கள் அனைவரும் இதைக்கண்டு பயந்து போனார்கள்.
கிருஷ்ணர் குறிப்பிட்ட நேரத்துக்குள் அக்குழந்தைக்குப் பொருந்தும் சரியான தலையை எடுத்து வந்து பொருத்தினால் குழந்தை உயிர் பிழைத்துவிடும் என்று சொன்னார். பின்னர் அவரே குழந்தைக்கான தலையைத் தான் கொண்டு வருவதாகக் கூறி அங்கிருந்து சென்றார். அப்போது ஓர் ஆற்றங்கரையில் வெள்ளையானை (ஐராவதம்) ஒன்று வடக்கு நோக்கித் தலைவைத்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் தலையைத் தனது சுதர்சன சக்கரத்தால் அகற்றிக் கொண்டு வந்தார். கயிலாயத்தில் தலையின்றிக் கிடந்த பார்வதியின் குழந்தைக்கு அந்த வெள்ளையானையின் தலையைப் பொருத்தி உயிர் பெறச்செய்தார்.
யானைத் தலையுடன் குழந்தை உயிர்பெற்று எழுந்ததைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர். பார்வதியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். தன் குழந்தை யானைத்தலையுடன் உயிர்பெற்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், தனது குழந்தை உயிர் பெற்றதே என்று மகிழ்ச்சியடைந்தாள். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததற்கு சனிபகவானே காரணம் என்று அவள் கோபம் கொண்டாள்.
கோபமடைந்த அவள் சனிக்கு வாதநோய் ஏற்பட்டு முடமாகிப் போகும்படி சாபமிட்டாள். இந்தச் சாபத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சனிபகவான் தன் மீதான சாபத்தால் குழந்தையைப் பார்க்காமல் ஒதுங்கி நின்ற போதும், சனிபகவானை அழைத்து அருகில் வந்து குழந்தையைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தி விட்டு, அவருக்குச் சாபமும் அளித்தது நியாயமானதல்ல என்று அனைவரும் பார்வதியிடம் தெரிவித்தனர். இதனால் அவளது கோபம் சற்று குறைந்தது. இருப்பினும், சனிபகவான் வாத நோயினால் முழுவதும் முடமாகாமல் சிறிது ஊனம் மட்டும் ஏற்பட்டுப் போனது.
சனிபகவான் வாதநோயால் வந்த தன் ஊனம் மறைந்து முழுமையாகக் குணமடைந்திட சாபவிமோசனம் வேண்டினார். உடனே பார்வதி, ‘சனிபகவானே பூலோகத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில்கள் ஒவ்வொன்றாகச் சென்று தொடர்ந்து நீ வழிபட்டு வரும்போது ஒரு கோவிலில் சிவபெருமான் உனக்குக் காட்சியளித்து உன் வாத நோயைப் போக்கி, ஊனம் நீக்கி அருள்வார்’ என்றார்.
விமோசனம்
பார்வதி அளித்த சாப விமோசனத்திற்கான வழிமுறையைத் தொடர்ந்து, சனிபகவான் பூலோகம் வந்து சிவபெருமான் கோவில்கள் ஒவ்வொன்றாகச் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்துக்கு வழிபாடுகள் செய்து வணங்கிக் கொண்டே வந்தார். இப்படி வணங்கிக் கொண்டே வந்த அவர் ஒரு நாள் வேதபுரி திருமறைநாதர் கோவிலை வந்தடைந்தார்.
வேதபுரி திருமறைநாதர் மற்றும் ஆரணவல்லி ஆகியோரை வணங்கி வழிபாடு செய்த சனி பகவான் தனக்குச் சாப விமோசனம் தந்து தனது வாத நோயைப் போக்கி, ஊனத்தை நீக்கிட வேண்டினார். அப்போது அவர் முன் காட்சியளித்த சிவபெருமான், ‘இதுவரை உன் பார்வையினால் ஏற்பட்ட அழிவுகள் அனைத்தும் மாறி, ஒவ்வொருவரின் நற்செயல்களுக்கேற்ப நற்பலன்களும், கொடுஞ்செயல் செய்தவர்களுக்கு அவர்கள் தவறுகளுக்கேற்றபடி கேடான நிகழ்வுகளும் சனிபகவான் பார்வையினால் அமையும்’ என்று சனி பகவானின் சாபத்தினை மாற்றி அருளினார். அத்துடன் சனிபகவானுடைய வாதநோயைப் போக்கி, ஊனத்தையும் நீக்கி அருளினார். சனிபகவானின் வாதநோயைத் தீர்த்த தலம் என்பதால் இந்தத்தலம் ‘வாதவூர்’ என்று அழைக்கப்பெற்று, தற்போது திருவாதவூர் என்று அழைக்கப்படுகிறது.
மனைவியிடம் தான் பெற்ற சாபத்தால் பிறருக்குத் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்று உண்மையைச் சொல்லி, நேர்மையாக நடந்து கொண்ட அவருக்குப் பார்வதியால் மீண்டும் சாபம் கிடைத்தாலும், சிவபெருமான் மூலம் தன்னுடைய பார்வையினால் அழிவு என்கிற சாபத்திற்கு விமோசனத்துடன் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செயல்பாட்டிற்கேற்றபடி சமநீதியளிக்கும் நிலையினை சனிபகவான் பெற்றார்.
சனிபகவானின் இந்த சாபமும், விமோசனமும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்வதில் தொடக்கத்தில் சிறிது துன்பம் ஏற்பட்டாலும், பின்னர் நமக்கு நல்லதொரு நிலையைத் தரும் என்பதை விளக்குவதாக அமைந்திருக்கின்றன.
ஏழரைச் சனியின் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்லப்படும் வார்த்தைகள் இவை. மங்கு சனி, பொங்கு சனி, பாதச் சனி குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏழரைச் சனியின் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்லப்படும் வார்த்தைகள் இவை. பொதுவாக சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரைச் சனியின் காலம் துவங்குகிறது. முந்தைய ராசி, ஜென்ம ராசி, அடுத்த ராசி என்று ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வீதம் இந்த மூன்று இராசிகளிலும் சனி சஞ்சரிக்கின்ற ஏழரை ஆண்டு காலமே ஏழரை நாட்டுச் சனி அல்லது ஏழரைச் சனி என்ற பெயரில் சொல்லப்படுகிறது.
ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்போது பொங்குசனி என்றும், ஜென்ம ராசியை விட்டு அகன்று அடுத்த ராசியில் அமரும் காலத்தை மங்கு சனி என்றும் அழைப்பர்.
ஜென்ம ராசிக்கு முந்தைய ராசியில் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்றும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்போது பொங்குசனி என்றும், ஜென்ம ராசியை விட்டு அகன்று அடுத்த ராசியில் அமரும் காலத்தை மங்கு சனி என்றும் அழைப்பர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X