search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடாலூர்"

    பெரம்பலூர் அருகே பாடாலூரில் புதிய காவலர் குடியிருப்புகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூரில் தமிழக அரசின் சார்பில் ரூ.47.43 லட்சம் செலவில் காவலர்களுக்கான புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அந்த குடி யிருப்புகளை நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தி லிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதையொட்டி பாடாலூர் புதிய காவலர் குடியிருப்பில் நடந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, பெரம்பலூர் எம்.பி. மருதராஜா, எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். பின்னர் அவர்கள் காவலர் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    ரூ.47.43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்பில் 800 சதுர அடியில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்புகளும், 900 சதுர அடியில் 1 போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந் திரன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக செயற் பொறியாளர் நாச்சிமுத்து, ஆலத்தூர் தாலுகா தாசில்தார் சீனிவாசன், ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செய லாளர் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×