என் மலர்
நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"
- பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது.
- ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் சிறப்புறையாற்றினார்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் உலக ஒற்றுமை நாள் சுடர் ஓட்டமானது பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். நகர்மன்ற துணை தலைவர் மா. சுப்பராயன் முன்னிலை வகித்தார்.
ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் சிறப்புறை யாற்றினார்.ஜோதி ஓட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்
உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல் ஹரிஹரன், ராகேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.
- போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.விமெட்ரிக் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முதல்வர் சசிகலா வரவேற்றார். பள்ளி செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதுமையை மறந்து இளமையான நினைவு கூற நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்துக்கு தாத்தா, பாட்டிகள் நன்றி கூறினார்.
- நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர்.
- துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர்.
உடுமலை:
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் தேசிய நூலக வார விழா 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது .முதல் நாள் நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி மற்றும் புதிய நூல்கள் அறிமுக விழா, உறுப்பினர் சேர்க்கை, நூலக புரவலர்கள் சேர்க்கைகள் நடைபெற்றன. இதில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் மாணவிகள் நூலகத்திற்கு சைக்கிளில் களப்பயணம் வந்தனர்.
நூலகத்தில் உள்ள புத்தகங்கள் ,புத்தக வரிசைகள் குறித்து நூலகர் கலாவதி மற்றும் நூலகர்கள் விளக்கினர். இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் ,சுபேதார் நடராஜ் ,பொருளாளர் சிவகுமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன், துணைத்தலைவர் சிவகுமார் ,முன்னாள் நூலகர் கணேசன் உட்படபலர் கலந்து கொண்டனர். வரும் 20ந் தேதி வரை நடக்கும் நூலக வார விழாவில் பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. முன்னால் ராணுவ வீரர் நலச் சங்கம் மற்றும் ஆசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் புரவலர்களாக சேர்ந்தனர்.
- மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
- காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க 2 கடல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும்.
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக மீனவர் நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மீனவர் தினம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதால் அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பும் வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது.
கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மாநாட்டு பொதுக்கூட்டம் முட்டம் கடற்கரை மைதானத்தில் வைத்து நடைபெறும். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகாகோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நகராட்சி மன்ற மீனவ தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர் அமைப்புகள், கடலோர மற்றும் உள்நாட்டு மீனவர்களும் திரளாக மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க 2 கடல் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்த்து தனி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மீன்பிடி படகுகள் ஆய்வு செய்வது ஏற்கனவே 3 ஆண்டுகள் என இருந்தது. அதை தற்போது ஒரு ஆண்டுகளாக ஒரு முறை படகுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட வேண்டும். கடலில் காணாமல் போன மீனவர்களை ஒரு ஆண்டு களுக்குள் இறந்து விட்டதாக அறிவித்து அவர்களுக்கு அதற்கான சலுகைகள் வழங்க வேண்டும். கட்டு மரங்களுக்கு 500 லிட்டர் மானிய மண்எண்ணை, விசைபடகுகளுக்கு 5 ஆயிரம் லிட்டர் மானிய மண்எண்ணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் முன் வைக்கப்படுகிறது.
மீனவர் தினத்தை யொட்டி வருகிற 19, 20-ந்தேதிகளில் கால்பந்தாட்ட போட்டி அம்மாண்டிவிளை ஜாண் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.
நாகர்கோவிலில் அமைந்துள்ள கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அலுவலகத்தில் 20-ந்தேதி பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டு ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. 21-ந்தேதி முட்டம் சின்ன மண்டபத்தில் வைத்து கடல் மீன் சமையல் போட்டி நடைபெறும். போட்டியில் பங்கெடுப்பவர் கடல் மீன் சமையலுக்கு தேவையான மீன், மசால், பாத்திரங்கள், எரிபொருள், ஸ்டவ்அடுப்பு முதலியவை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது முட்டம் பங்குத்சந்தை அமல்ராஜ், தமிழ்நாடு மீனவ கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்
- அரிட்டாபட்டி கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமம் உள்ளது. இதனை தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்பிரியா சாகு தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் அரிட்டாபட்டி அமைந்து உள்ளது.
அரிட்டாபட்டி கிராமம் 7 சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பகுதி இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இங்கு 72 ஏரிகள், 200 இயற்கை நீர் ஊற்று கொண்ட குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஆட்சியில் கட்ட ப்பட்டது.
இந்த கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் சிறு மற்றும் நடுத்தர பறவை இனங்கள் 300-க்கும் மேல் உள்ளன. இதில் லகர் ராஜாளி, சாகின் ராஜாளி மற்றும் ராஜாளி பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்னுருண்ணி பறவை இனங்கள் உள்ளன. எறும்புத்தின்னிகள், மலைப்பாம்பு மற்றும் அரிய வகை தேவாங்கு ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்விடமாக பல வருடங்களாக உள்ளது.
மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்ட எழுத்து கல்வெட்டுக்கள், 2200 ஆண்டுகள் பழமையான குடை வரை கோவில்கள் உள்ளன.
இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பையும் தருகின்றது. இதனை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பினார்.
அதேபோல் இப்ப குதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வன பாதுகாவலர் ஓடையன், நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், முன்னாள் நரசிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஓடையன் உள்பட பலர் அரசிற்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
மதுரையை சுற்றியுள்ள சமூக ஆர்வலர்களும் மற்றும் பறவை இன பாதுகாவலர்கள் வன பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்தனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழக அரசு அரிட்டா பட்டியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்தது. இதையொட்டி அரிட்டா பட்டி கிராம பிரமுகர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் தங்களது கிராமத்தை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்ததற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
- திருமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
- விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
திருமங்கலம்
தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் கோர்ட்டு சாலையில் ராஜாஜி தெரு சந்திப்பில் 45 கிலோ கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர். விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத் தலை வர் நாகராஜன், நகர அவைதலைவர் சேட், துணைச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர்கள் தங்கச்சாமி, தங்கேஸ்வரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், காசி பாண்டி, ரம்ஜான் பேகம், வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் குறித்து மாணவர்களது குறுநாடகமும் இடம் பெற்றது.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.
திருப்பூர் :
ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பற்றிய சிறப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார்.
மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அரசியலமைப்பு சட்டம் குறித்து உரையாற்றினர். மேலும் இந்திய அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் குறித்து மாணவர்களது குறுநாடகமும் இடம் பெற்றது. அரசியல் அமைப்பு சபையில் பங்கேற்ற தலைவர்கள் போல வேடமணிந்த மாணவர்கள் அந்தந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறு காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். பள்ளி தாளாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
- தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அவினாசி சாலை அசர்நகர் கிழக்கில் அமைந்துள்ள வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்மழலை குழந்தைகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொள்ளும் தாத்தா - பாட்டிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக அலுவலர் சாருலதா, மற்றும் முதல்வர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் துணை முதல்வர் சித்ராதேவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு கதைகள் கூறி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.மேலும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். தாத்தா பாட்டிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஆஷா நன்றி கூறினார்.
- பொதுமக்கள்,மங்கலம்- அங்கன்வாடி மைய குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- இளைஞர்அணி நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம் :
தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை புதிய அமைச்சராக சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.உதயநிதிஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
இதையடுத்து மங்கலம் ஊராட்சி சார்பில் சின்னப்புத்தூர் பகுதியில் தி.மு.க. கட்சியின் கொடியேற்றப்பட்டது. மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கொடியேற்றினார். அதனைத்தொடர்ந்து மங்கலம் பகுதியில் பட்டாசு வெடிக்கப்பட்டதுடன் பொதுமக்கள்,மங்கலம்- அங்கன்வாடி மைய குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சுல்தான்பேட்டை தம்பணன், தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சகாபுதீன் , மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளருமான எம்.ஏ.முகமது இத்ரீஸ், திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.முகமது ஜுனைத், தெற்கு ஒன்றிய கூடுதல் துணைச்செயலாளர் இடுவாய் ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இடுவாய் சரவணன், சீராணம்பாளையம் செயலாளர் முத்துவேல், இடுவாய் சுரேஷ், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், தெற்கு ஒன்றிய முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ், மற்றும் இளைஞர்அணி நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று 51 ஆண்டுகள் நிறைவு.
- வீரர்களின் இணையற்ற துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கிறது.
1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் (விஜய் திவஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம், சுதந்திர நாடாக மாறியது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இதையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 1971 ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கேக், நட்சத்திரம் விற்பனை அமோகம்.
- கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது.
கோவை :
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்து மசை வருகிற 25-ந் தேதி கொண்டாட தயாராகி வருகின்றனர்.
அன்பை வெளிப்படுத் தும் விதமாக ஏழைகளுக்கு உதவி செய்வதே இப் பண்டிகையின் நோக்க மாகும். 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் உற்சாகம் அடைந்து உள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தி லேயே வீடுகளில் நட்சத்தி ரங்கள், குடில்கள், கிறிஸ்து மஸ் மரம் ைவக்க தொடங்கி னார்கள். கிறிஸ்துவ ஆல யங்களிலும் நட்சத்தி ரங்கள், குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.கிறிஸ்துமஸ் தாத்தா வுடன் பாடகர் குழுவினர் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள், இனிப்பு கள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்னர். ஒவ்வொரு திருச்சபையிலும் நலிந்தோருக்கு உதவிகள், புத்தாைடகள் வழங்கப் படுகின்றன.
பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்து உள்ளது. ஆலயங் களை அழுகுபடுத்த வித விதமான அலங்கார பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
கோவை ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நட்சத்திரங்கள், வண்ண மின் விளக்குள், குடில்கள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
கிறிஸ்தவ தேவால யங்கள், திருச்சபைகளில் இப்போதே அலங்காரப் பணிகள் தொடங்கி விட்டன. ஆலயங்கள் முழுவதும் நட்சத்திரங்கள், மின் விளக்குகள் மூலம் அழகுப் படுத்தப்பட்டுள்ளன. குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் மாட்டுத் தொழுவம் அடங்கிய குடில்கள் கிறிஸ்தவ ஆலய ங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் பார்த்து வணங்கி செல்கின்றனர்.
மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் கேக் விற்பனையும் அதிகரித்து உள்ளது. பிரபல கேக் நிறுவனங்களில் பிளம் கேக் உள்ளிட்ட விதவிதமாக கேக்குகளை ஆர்டர் செய்துள்ளனர்.
ஆலயங்களில் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை யன்று கேக் வழங்குவதற்காக மொத்தமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இதனால் தற்போது கேக் கடைகளில் கூட்டம் நிரம்பி உள்ளது.
புத்தாடைகள் வாங்கு வதற்கு ஜவுளி கடைகளுக்கும் கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் நட்சத்திர ஓட்டல் கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள் போன்றவற்றிலும் கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஆதரவற்ற மையங்களில் உள்ள முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோருக்கு பல்வேறு கிறிஸ்துமஸ் அமைப்புகள் புத்தாடைகள், கேக் வழங்கி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கோவையில் உள்ள நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகம் அடைந்துள்ளது.
- தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
- பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்கினர்.
திருப்பூர்:
கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகை கிறிஸ்துமஸ்.அவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து கொண்டாடும் நாள். அன்பு, பகிர்வு, சகோதரத்துவம் ஆகிய பண்புகளை போதிக்கும் இவ்விழா நாளை கொண்டாடப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்தே தேவாலயங்கள் சார்பில் வீடுகள்தோறும் சென்று கிறிஸ்துமஸ் பூபாளம் பாடி, வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகள் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்துவின் பிறப்பின் நிகழ்வை காட்சிப்படுத்தும் வகையில், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று ஸ்டார்களும் தொங்கவிடப்பட்டு அவை வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.
மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தும் புத்தாடை எடுத்தும் பண்டிகையை கொண்டாட தயாராகி உள்ளனர் . தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு திருப்பலியும், சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் நாளை 25-ந் தேதி அதிகாலை 5மணிக்கு ஆராதனையும் நடக்கிறது.
இதில் உறவினர்கள், நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, பரஸ்பரம் கேக் உள்ளிட்ட இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வர். மேலும் நாளை தேவாலய குருக்களும், மக்களும் இணைந்து ஏழை மற்றும் ஆதரவற்றவர்களை சந்தித்து ஆடை, உணவு உள்ளிட்டவற்றை வழங்க உள்ளனர்.
இது குறித்து பேராயர்கள் கூறுகையில், உலகில், தீயவை ஒழிந்து நன்மை பெருக வேண்டும் என்பதற்காகவே ஏசு கிறிஸ்து மண்ணில் அவதரித்தார். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்து அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்ட வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார். அதை அடிப்படையாக வைத்தே கிறிஸ்து பிறப்பின் போது பிறருக்கு உதவும் செயல் அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் சமயத்தில் மெழுவர்த்தி ஏந்தி கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி ஆராதனை செய்வது வழக்கம். இது நாம் பிறருக்கு வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் என்றனர்.
திருப்பூரில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதனால் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், மாட்டுத் தொழுவம், குடில்கள், குழந்தை ஏசு, தாய் மரியன்னை, கிறிஸ்துமஸ் மரத்துண்டு, பரிசு பொருட்கள் ,அலங்கார விளக்குகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை திருப்பூர் நகரப் பகுதி கடைகளில் சூடுபிடித்தன. கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் முக வடிவிலான கவசம் மற்றும் உடைகளும் விற்பனை ஆகின. பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்கினர்.மேலும் பேக்கரி கடைகளில் விதவிதமான கேக்குகளை வாங்கி சென்றனர். இதனால் பேக்கரி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைேமாதியது. திருப்பூர் காங்கயம் சாலையில் ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன. கிறிஸ்துமஸ்சையொட்டி இங்குள்ள கடைகளில் அதிக அளவு பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையால் திருப்பூர் மாவட்டம் களை கட்டி காணப்படுகிறது.