search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலுவை"

    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம்.
    கிறிஸ்துவின் பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூரும் இந்த நாட்களில் சிலுவையின் மேன்மை குறித்து தியானிப்போம். தேவனுடைய சாயலிலே படைக்கப்பட்ட மனிதன் பாவத்தின் மூலமாக தேவனோடு இருந்த நெருங்கிய உறவை இழந்து பாவியானான். ஆபிரகாமின் மூலமாக வரக்கூடிய சந்ததியின் மூலமாக முழு உலகையும் தேவன் ரட்சிக்கவும், பரிசுத்தமுள்ள ஒரு சந்ததியை உருவாக்கவும் விரும்பினார். மனிதனிடம் பரிசுத்தமுள்ள வாழ்வை எதிர்பார்த்த தேவன் மோசேயின் மூலமாக சீனாய் மலையிலே வைத்து இஸ்ரவேலருக்கான நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்.

    நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதமும், நியாயப்பிரமாணத்தை மீறினால் தண்டனையும், ஆக்கினை தீர்ப்பும் வரும் என்றும் மோசேயின் மூலம் கூறினார். நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு பரிசுத்த ஜாதியாக இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்தாலும் மாமிச பலவீனத்தினால் அநேகரால் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ள இயலவில்லை.

    நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டாலும் ஒன்றிலே தவறினாலும் அவர்கள் குற்றவாளிகளாகவும், தேவனுடைய தண்டனைக்குரியவர்களாகவும் மாறினர். நியாயப்பிரமாணத்தைக் காத்து நடந்து தேவனைக் கிட்டிச் சேர வேண்டிய இஸ்ரவேலர்கள் நாளுக்கு நாள் பிரமாணங்களை மீறி தேவனுக்கு தூரமானார்கள். ஆனால் மாமிச பலவீனத்தினால் இஸ்ரவேலர் செய்ய முடியாததை கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றி, தம் சொந்த மாமிசத்தினாலே தேவனையும் ,தூரமாயிருந்த தேவ ஜனங்களையும் ஒப்புரவாக்கினார்.

    எபே:2:13-16-ல் முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் ரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இரு திறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாமிசத்தினாலே ஒழித்து, இரு திறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இரு திறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் என்று பைபிளில் கூறுவது போல சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் ரத்தம் எல்லோருக்குமான மீட்கும் பொருளாக மாறி எல்லோரையும் தேவனோடுகூட ஒப்புரவாக்கியது. நாமும் அந்த மேன்மையான ரத்தினால் நம் பாவங்கள் கழுவ ஒப்புக்கொடுத்து நாமும் தேவனோடு ஒப்புரவாவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    - போதகர்.அமல்ராஜ்
    ‘உலகின் அனைத்து மக்களுக்கும் நானே கடவுள்’ என்பதைக் குறிப்பிடவே அவர் மோசேயிடம் இதைச் சொல்கிறார். அதில் நீங்களும் நானும் அடக்கம்.
    இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து அழைத்து வர மோசேயைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். மோசேயை அழைக்கும் போது, அவரிடம் ‘நான் உன் முற்பிதாக்களின் கடவுள்’ என அறிமுகம் செய்து கொள்கிறார்.

    ‘உலகின் அனைத்து மக்களுக்கும் நானே கடவுள்’ என்பதைக் குறிப்பிடவே அவர் மோசேயிடம் இதைச் சொல்கிறார். அதில் நீங்களும் நானும் அடக்கம்.

    கடவுளின் அழைப்பை ஏற்று முன் பின் பரிச்சயமற்ற ஒரு நாட்டிற்குச் சென்றவர் ஆபிரகாம். அவருக்கும் இவர் கடவுள்.

    வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறாமல் போனவர் ஈசாக்கு. அவருக்கும் இவர் கடவுள்.

    மூத்தவனுக்கு வரவேண்டிய தந்தையின் ஆசியைத் தந்திரமாய் பறித்தவர் யாக்கோபு, அவருக்கும் இவர் கடவுள்.

    பணிந்து நடக்கும் நல்லவருக்கும், வரலாற்றில் சிறப்பிடம் பெறாமல் போகிறவனுக்கும், தந்திரக்காரனுக்கும் இவரே கடவுள்.

    மோசே கடவுளின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான்கு எதிர்ப்புகளை அவர் தெரிவிக்கிறார்.

    முதலாவது, “நான் தகுதியற்றவன்” என்கிறார். நான் எம்மாத்திரம் என தன்னைப் பற்றி மோசே கூறுகிறார். கடவுளோ, “பயப் படாதே, நான் உன்னோடு இருப்பேன்” என அவருக்கு உறுதி கொடுக்கிறார். “நான் தகுதியற்றவன்” எனும் சிந்தனை நம்மை வலுவிழக்கச் செய்யலாம். ஆனால் இறைவன் நம்மோடு இருக்கிறார் எனும் சிந்தனை நம்மை வலுவூட்டும் செய்தியாக மாறிவிடுகிறது.

    இரண்டாவது, எதிர்ப்பு, ‘கடவுளுடைய பெயர் என்ன?’ எனும் சிந்தனை. கடவுள் யார் என்பது எனக்கே தெரியாவிட்டால் நான் எப்படி அடுத்தவர்களுக்குச் சொல்ல முடியும்.

    எகிப்தில் வாழ்ந்தவர் தான் மோசே. அங்கே பல கடவுள்களை வணங்கிய பழக்கம் அவருக்குத் தெரியும். அதனால் தான் “கடவுளின் பெயர் என்ன?” என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்பினார்.

    மூன்றாவது, ‘என்னை நம்புவார்களா?’ எனும் கேள்வி. நான் ஆண்டவரின் பணியை செய்யச் செல்லும் போது மக்கள் என்னை நம்பு வார்களா எனும் கேள்வி காலம் காலமாய் எழுகின்ற ஒரு கேள்வியே. இறைவன் செய்கின்ற வல்ல செயல்கள் மட்டுமே மக்களுக்கு சட்டென ஒரு நம்பிக்கையை உருவாக்கித் தருகிறது.

    பைபிளில் வருகின்ற, கிதியோனுடைய வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். “நான் வெட்ட வெளியில் ஒரு கம்பளி விரித்து வைக்கிறேன். நிலம் காய்ந்திருந்து, கம்பளி மட்டும் ஈரமாய் இருந்தால் உம்மை நம்புவேன்” என கடவுளிடம் சொல்கிறார் கிதியோன். அப்படியே நடக்கிறது.

    எனினும் நம்பிக்கை வரவில்லை, “நாளை கம்பளி மட்டும் காய்ந்து இருக்க வேண்டும் நிலம் ஈரமாய் இருக்கட்டும். அப்படி நடந்தால் உம்மை நம்புவேன்” என்கிறார். அப்படியே நடக்கிறது. இப்படிப்பட்ட வல்ல செயல்களே இறைவன் மீதான நம்பிக்கைகளை வளமையாக்குகின்றன.

    நான்காவது, ‘நான் திக்குவாயன்’ என்கிறார் மோசே. இது வெகு சகஜமாக இன்றும் நாம் கூறுகின்ற வார்த்தை. “எனக்கு பேச தெரியாதும்மா?”. நம்மையே நாம் குறைத்து மதிப்பிடுகின்ற செயல் தான் இது.

    இன்று சிலுவை நிழலில் நமக்குரிய சிந்தனை இந்த மறுப்புகளைத் தாண்டுகின்ற சிந்தனைகளால் அமைகிறது.

    1. பலவீனங்களைத் தாண்டிய பலம்.

    எப்போதெல்லாம் நான் எனும் எண்ணத்துடன் திரிகிறோமோ அப்போதெல்லாம் பலவீனராய் மாறிவிடுகிறோம். என்னை நம்புகிறார்களா? நம்மை நம்புவார்களா? என்பதெல்லாம் சுய பலத்தின் மீதான நம்பிக்கை. ‘நம்மை அனுப்பிய கடவுளை நம்புவார்களா?’ என்பதே கேட்கப்படவேண்டிய கேள்வி.

    ‘எனக்கு வலிமையில்லை, நான் சிறியவன், சமூகத்தில் முக்கியமற்றவன்’ என நாம் நினைக்கும் போதெல்லாம் நமக்கு சிலுவை பலம் தருகிறது. ‘பேசத் தெரியாது’ என சொன்ன மோசே தான் மாபெரும் விடுதலை வீரரானார். ‘பேசத்தெரியாத சிறுபிள்ளை நான்’ என்று சொன்ன எரேமியா தான் மாபெரும் தீர்க்கதரிசி ஆனார்.

    2. ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கும் பலம்

    இருவர் இணைந்து பணி செய்வதை இறைவன் அனுமதிக்கிறார். மோசேக்கு துணையாய் ஆரோனை அனுப்புகிறார். எலியாவுக்குத் துணையாக எலிசா இருக்கிறார். பின்னாளில் எலிசா மாபெரும் தீர்க்க தரிசியாய் மாறினார். நாமும் இறைவனுக்கு ஒத்துழைப்பு நல்கும் மனிதர்களாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

    3. அற்பமானவை ஆச்சரியமாய் மாறும் பலம்

    எதிரி மன்னனுக்கு முன்னால் நின்ற மோசே தண்ணீரை ரத்தமாய் மாற்றிக் காட்டினார். இது ஒரு அடையாளமாய் மாறியது. மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் அடையாளம்.

    தாவீது எனும் சின்னப் பையனின் கையில் இருந்த சாதாரண கூழாங்கற்கள் கோலியாத் எனும் மாவீரனைச் சாய்த்தது. கூழாங்கல் அடையாளம், இறைவன் அதை ஆச்சரியமாய் மாற்றுகிறார்.

    அன்று எகிப்தின் எல்லைக்கோட்டை இஸ்ரயேல் மக்கள் தாண்ட ரத்தமாய் மாறிய தண்ணீர் அடையாளமாய் அமைந்தது.

    இன்று பாவம் எனும் எல்லைக்கோட்டைத் தாண்ட, சிலுவையின் ரத்தம் நமக்கு மீட்பின் அடையாளமாய் இருக்கிறது. 
    அன்று நிலைக்கால்களில் ரத்தம் பூசப்பட்டதது. இன்று நிரந்தரமாக சிலுவையில் நமக்காய் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்த ரத்தம் தற்காலிக மீட்பைத் தந்தது. இந்த ரத்தம் நிரந்தர மீட்பை நல்குகிறது.
    எகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்களை மோசே எனும் தலைவர் மூலமாக இறைவன் மீட்டுக் கொண்டு வந்த கதை அனைவரும் அறிந்ததே. அங்கே மோசேயுடன் துணையாகச் சென்றவர் ஆரோன் என்பவர்.

    மோசேயிடம் கடவுள், ‘ஆரோன் உனக்கு வாய் போல இருப்பான், நீ அவனுக்குக் கடவுளாய் இருப்பாய்’ என்கிறார்.

    அவர்கள் பார்வோன் மன்னனிடம் செல்ல வேண்டும். இப்போது கடவுள் மோசேயிடம், “உன்னை பார்வோனுக்குக் கடவுளாக ஏற்படுத்துகிறேன்” என்கிறார். பார்வோனின் மனதில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் சொல்கிறார்.

    எகிப்தில் மாந்திரீக செயல்கள் அதிகம். அதுதான் மதம் என அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு மாற்றுச் சிந்தனையாகத் தான் கடவுள் அங்கே ஆச்சரியங்களைச் செய்ய முடிவெடுக்கிறார்.

    மோசேயின் கையிலிருந்த கோல் ஒரு அடையாளமாய் இருந்தது. இஸ்ரயேல் மூப்பர்களையும், எகிப்தின் மந்திரவாதிகளையும் நம்ப வைப்பதற்காக அந்தக் கோலை தரையில் போட்டார் மோசே. அது பாம்பாக மாறியது. ஆனால் எகிப்தின் மந்திரவாதிகளும் அதே போல செய்தார்கள்.

    ஆரோனின் கோல் அவர்களுடைய கோல்களை விழுங்கி விட்டது என விவிலியம் குறிப்பிடுகிறது. இதன் மூலம், மாந்திரீகமும் அதன் சக்திகளும் கடவுளல்ல. உண்மைக் கடவுளுக்குள் அதெல்லாம் அடக்கம் எனும் சிந்தனை உறுதியாகிறது.

    மேய்ப்பனின் கோல், மந்திரவாதியின் கோல்களை அழிக்கிறது. அங்கே பத்து வாதைகள் நிகழ்கின்றன. கடைசியாக தலைச்சன் பிள்ளைகளும் மாண்டு போகின்றனர். ஆனால் இஸ்ரயேல் மக்கள் இழப்புகளின்றி தப்புகின்றனர்.

    அதற்காக அவர்கள் பலி செலுத்தி அந்த ரத்தத்தை நிலைக்கால்களில் பூசுகின்றனர். அந்த ரத்தம் இருந்த இஸ்ரயேலரின் வீடுகள் தப்புகின்றன. ரத்தம் மீட்பைக் கொடுத்தது.

    இந்த ரத்தம் இருளிலிருந்து விடுதலை அளிக்கிறது. “தலைப்பேறானவர்களை அழிக்க வந்தவன் இஸ்ரயேலரைத் தீண்டாதபடி ரத்தத்தைத் தெளித்ததும் நம்பிக்கையினால் தான்” என்கிறது எபிரேயர் 11:28

    ஒட்டு மொத்த மனித சமூகத்திலிருந்து பிரிந்து இறைவனின் அன்போடு இணைந்திருக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் சிறப்பு உரிமை இது. நாம் புனிதமானவர்கள் என்பதல்ல அதன் பொருள், அவருக்குப் பிரியமானவர்கள் என்பதே அதன் பொருள்.

    இறைவனுடைய வார்த்தை வலிமையானது. அது படுபாவிகளையும் மீட்கும் வலிமையும், ஆசையும் கொண்டது. சிலுவையில் இறைமகன் இயேசு சிந்திய ரத்தம் மறைத்துக் காக்கும் ஆற்றல் கொண்டது.

    இறைவனின் அன்பையும், இயல்பையும் பல வகைகளில் கூறலாம்.

    1. கன்மலை இடுக்கில் மறைத்துக் காக் கிறவர்

    “என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்” (விடுதலைப்பயணம் 33:22) எனும் விடுதலைப்பயணம் நம்மை அவர் முழுமையாய் பாதுகாப்பவர் என்பதைச் சொல்கிறது.

    சிலுவையை நாம் ஏறெடுத்துப் பார்க்கும் போது இது நம்மைக் காப்பாற்றும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு அவருடைய பரிவும், இரக்கமும் காரணமாய் இருக்கிறது.

    2. சிறகு அடியில் புகலிடம் தரும் சிலுவை

    “கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.” (திருப்பாடல்கள் 57:1)

    இறைவனின் அன்பு, சிறகின் அடியில் பறவை தனது குஞ்சுக்கு தருகின்ற இதமான பாதுகாப்பைப் போன்றது. அழிவுக்கு மத்தியிலே வாழ்ந்து கொண்டிருந்தாலும் புகலிடமாகும் இடம் இறைவனின் சிறகுகளே. இடர்கள் முழுமையாய் நீங்கும் வரை அது நம்மைக் காக்கிறது.

    3. நிழலிலே அடைக்கலம் தரும் சிலுவை

    “உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர் என்கிறது சங்கீதம். புயல் காற்றும், கடும் வெப்பமும் அழித்து விடாதபடி நம்மைக் காக்கின்ற நிழல் இறைவனின் அன்பு எனும் நிழல். இந்த நிழலில் அடைக்கலம் கொள்ளும் போது காப்பாற்றப் படுகிறோம். சிலுவையின் நிழல் நம்மை பாவ வெயிலில் இருந்து மனமாற்றத்தின் நிழலில் இளைப்பாற வைக்கிறது.

    4. கை நிழலிலே மறைவு சிலுவை

    “நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்; மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்; சீயோனை நோக்கி, “நீ என் மக்கள்” என்றேன்; என் சொற்களை உன் நாவில் அருளினேன்; என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.” (ஏசாயா 51:16)

    கைகளின் நிழலில் நம்மைக் காக்கும் கடவுளாக இறைவன் இருக்கிறார். நாம் பாவத்தில் மாண்டு போகாமல் நம்மை அது காக்கிறது. அழிப்பவன் அசுர வேகத்தில் பாய்வான், சிலுவையோ நம்மை நிதானமாய்க் காக்கும். சரணடைதல் ஒன்றே அதை சாத்தியமாக்கும்.

    அன்று நிலைக்கால்களில் ரத்தம் பூசப்பட்டதது. இன்று நிரந்தரமாக சிலுவையில் நமக்காய் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்த ரத்தம் தற்காலிக மீட்பைத் தந்தது. இந்த ரத்தம் நிரந்தர மீட்பை நல்குகிறது. 
    சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.
    குளிர்கால கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு, தொண்டர் ஒருவரின் வீட்டில் இரவு தங்கினார் தலைவர். அந்த வீடு ஒரு வசந்த பவனாக இருந்தது. தொண்டரோ வெளியில் தூங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    குளிர் ரத்தத்தை உறையச் செய்தது. கை, கால் விரல்கள் நடுங்கின. காலையில் தலைவர் தொண்டரை நலம் விசாரித்தபோது குளிர் என்றால் என்ன வென்றே தெரியாது போல பாவனை செய்தார் தொண்டர். தலைவர் மீது வைத்த அன்புக்காக அத்தொண்டர் இரவெல்லாம் துன்புற நேர்ந்தது. இதுதான் அன்பு வருத்தம் என்பது. அன்பு, துன்பங்களை கொண்டுவரும்.

    அத்துன்பங்களிலே தான் மகிழ்ச்சி மலர்ந்து மணம் வீசும். ஏழை கைம்பெண் (லூக் 21:4) தனக்கு பற்றாக்குறை இருந்தும் தனக்கு உள்ளது எல்லாவற்றையும் இறைவனுக்கு காணிக்கையாக்கினாள். மறுநாள் கடினப்பட்டு உழைத்து உண்ண நேர்ந்திருக்கும். இங்கே தான் அன்பு துன்புறுத்துகிறது. பேறுகாலத்துயரை கடந்த தாய், தன் பச்சிளம் குழந்தையை பார்க்கிறபோது உலகில் ஒரு மகான் உதித்துவிட்டான் என்று பேருவகை கொள்கிறாள்.

    நாம் துன்புற்றாலும் ஏழைகளுக்கும் எளியவருக்கும் உதவுவது நம் கடமை. இயேசுபிரான் சிலுவையை சுமந்து தான் மனுக்குலத்தை அன்பு செய்தார். சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.

    குழந்தை, காணியிருப்பு. 
    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.
    “எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30.

    இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது.

    ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது.

    இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது.

    சுற்றியிருந்த மக்கள் நினைத்தது போலவோ, ஆளும் வர்க்கம் நிறைவேறியது போலவோ இது அவர்களுடைய வெற்றியல்ல.

    ‘எல்லாம் முடிந்தது’ என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் “எல்லாம் நிறைவேறியது” என இயேசு அதை தனது வெற்றியாய் மாற்றி எழுதினார்.

    தந்தை தனக்கு இட்ட பணியை இயேசு நிறைவேற்றி முடித்தார் என்பதே அந்த வாக்கியத்தின் சுருக்கமான விளக்கம்.

    இதன் எபிரேய வார்த்தை ‘டிடிலெஸ்தாய்’ என்பது. அதன் பொருள், ‘கடனை எல்லாம் செலுத்தி முடித்தாயிற்று’ என்பதே. இயேசுவும் பாவங்களுக்கு விலையாகக் கொடுக்க வேண்டிய தன்னுடைய உயிரைக் கொடுத்து இதோ முடித்து விட்டார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இந்த வாக்கியம் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளை விதைக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது.

    முதலாவது, நமது பாவங்களிலிருந்து நாம் விடுதலையாகி விட்டோம். “கிறிஸ்து ரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்” (எபேசியர் 1:7) எனும் இறைவார்த்தை இதை உறுதி செய்கிறது.

    பழைய ஏற்பாட்டில் பாவங்களுக்கு ஏற்பவும், பாவம் செய்யும் நபருக்கு ஏற்பவும், பலிகள் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்த பலிகளையெல்லாம் இறை மகன் இயேசுவின் ஒற்றைப் பலி தேவையற்றதாகிவிட்டது.

    இப்போது நாம் செய்யவேண்டிய பலி விலங்குகளை வெட்டுவதல்ல, நம்மை நாமே வெறுத்து இறைவனிடம் சரணடைவது.

    இரண்டாவது, அவர் சாவை வென்று விட்டார். “நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண் கிறோம்” (எபி 2:9) என்கிறது விவிலியம்.

    வான தூதர்களுக்கு மரணம் இல்லை. கடவுளுக்கும் மரணம் என்பதில்லை. மரணம் இல்லாமல் மீட்பு இல்லை. அதனாலேயே இறைமகன் இயேசு மனிதனாய் பூமியில் வரவேண்டியிருந்தது. அவர் பூமியில் வந்து நிராகரிப்பையும், வலியையும், மரணத்தையும் ஏந்தினார்.

    ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இயேசுவின் வார்த்தை மரணத்தை வென்ற வார்த்தை. நம்முடைய ஆன்மிக மரணத்துக்கு முடிவு கட்டும் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தை.

    அவரது மரணத்தையும், உயிர்ப்பையும் நம்பி அவரை ஏற்றுக்கொள்பவர்கள் இதன் மூலம் விண்ணக வாழ்வின் அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர்.

    மூன்றாவதாக, இறைவனுக்கும் நமக்கும் இடையேயான நேரடி உறவுக்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறது இயேசுவின் சிலுவை மரணம்.

    பழைய ஏற்பாட்டில் ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் மனிதர்களுக்கு அனுமதியற்ற ஒன்றாகவே இருந்தது. அதன் திரைச்சீலையைக் கடந்து செல்ல தலைமைக்குருவுக்கு அதுவும் ஆண்டுக்கு ஒரே ஒரு முறைமட்டுமே அனுமதி உண்டு. அதை மாற்றி நேரடி உறவை உருவாக்கியது, “எல்லாம் நிறைவேறியது” எனும் இயேசுவின் பணியே.

    “இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் ரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி” என்கிறது எபிரேயர் 10:19.

    இறைவனின் மரணம் நம்மை இறைவனின் அருகில் நெருங்குவதற்கு மட்டுமல்ல, நம்மை அவருக்கு ஏற்புடையவராக மாற்றவும் செய்கிறது.

    “தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்” (எபி 10:14) எனும் வசனம் நமக்கு முழுமையான மீட்பின் நம்பிக்கையாய் இருக்கிறது.

    “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என இறை மகனின் வருகையின் நோக்கத்தை மிகத் துல்லியமாக மார்க் 10:45 விளக்குகிறது.

    நமது வாழ்க்கையை நாம் ஒரு அலசலுக்கு உட்படுத்த இந்த சிலுவை வார்த்தை அழைப்பு விடுக்கிறது.

    “எல்லாம் நிறைவேறிற்று” என மகிழ்ச்சியாக சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோமா?. முழுமையாக இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோமா?. இந்த நேரம் நமது வாழ்க்கை முடிந்தால், என்னிடம் தரப்பட்ட பணிகள் “எல்லாம் நிறைவேறிற்று” என சொல்ல முடியுமா? இல்லை, “ஐயோ இன்னும் நான் தொடங்கவே இல்லையே என பதறுவோமா”.

    இறை சித்தத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதலும், சோதனைகளைத் தாங்கும் மனமும் உள்ளவர்களாக இருக்கிறோமா?

    ‘எல்லாம் நிறைவேறியது’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.

    சேவியர்
    இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மிகப் புரிதல்களின் தொடக்கப் புள்ளியாய் இருக்கிறது.
    “தாகமாய் இருக்கிறது” (யோவான் 19:28)

    இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மிகப் புரிதல்களின் தொடக்கப் புள்ளியாய் இருக்கிறது.

    இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி. வெயில் உடலை வறுக்க, ரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்று மணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது.

    மூன்று மணி நேர இருளின் முடிவில் இயேசு “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என கதறினார். பின்னர் ‘தாகமாய் இருக்கிறது’ என கூறுகிறார். அப்போது அவர்கள் காடியை கடற்பஞ்சில் தோய்த்து குடிக்கக் கொடுத்தனர்.

    “தாகமாய் இருக்கிறேன்” எனும் வார்த்தை இறைமகன் இயேசுவின் மனிதத் தன்மையை உறுதிப்படுத்தும் வார்த்தை. விண்ணின் மகனாக இருந்தாலும், மண்ணில் வருகையில் அந்த விண்ணக மனிதனாக வராமல் மானிட மகனாகவே வந்தார் என்பதன் சான்று. நம்மைப் போலவே வலிகளோடும், சோதனைகளோடும் வாழ்ந்தார் என்பதன் சான்று.

    ‘தாகமாய் இருக்கிறேன்’ எனும் வார்த்தை இறைவாக்கை நிறைவேற்றுதல்.

    “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) எனும் இறைவார்த்தை இதன் மூலம் நிறைவேறியது.

    “என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது (சங்கீதம் 22:5) எனும் வார்த்தையும் அவரது தாகத்தின் நிலையை முன்குறித்த இறைவார்த்தையே.

    பழைய ஏற்பாட்டில் இறைமகன் இயேசுவைக் குறித்து 332 தீர்க்க தரிசனங்கள் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

    இயேசு எங்கே பிறப்பார், எப்படி பிறப்பார், எப்படி இறப்பார் எனும் அத்தனை விஷயங்களும் துல்லியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளன. பழைய ஏற்பாட்டின் முழுமை இயேசுவில் தான் என்பதன் மிகத்தெளிவான விளக்கமே இது.

    “தாகமாய் இருக்கிறேன்” என்பதற்கு ‘மனுக்குலத்தை மீட்க ஆவலாய் உள்ளேன்’ என்றும் பொருள் உண்டு. நமது பாவங்களை சுமந்தார் இயேசு. ‘அந்த பணி இதோ முடிவடையப் போகிறது. தனக்கு இடப்பட்ட பணியை செய்து முடிக்க தாகமாய் இருக்கிறேன்’ என இயேசு சொல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

    இயேசு சிலுவையில் நரக வேதனையை அனுபவித்தார் என்பதன் வெளிப்பாடு ‘தாகமாய் இருக்கிறேன்’. நரகம் தாகத்தின் இடம்.

    “இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும்” (லூக்கா 16:24) என நரகத்திலிருந்து செல்வந்தர் எழுப்பும் குரல் இதை நமக்கு புரிய வைக்கிறது.

    உண்மையிலேயே இயேசு சிலுவையில் நரக வலியை அடைந்தார் என்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். சொர்க்கத்தில் ‘பசியோ தாகமோ இரா’ என்கிறது திருவெளிப்பாடு 7:16.

    ‘தாகமாய் இருக்கிறேன்’ என்பது இறைமகன் இயேசுவின் கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என முடி வெடுத்த மகனின் தாழ்மையின் வெளிப்பாடு.

    “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” (பிலிப்பியர் 2:8) என்கிறது விவிலியம். மரணத்தை மட்டுமல்ல, தந்தையிடமிருந்த பிரிவை மட்டு மல்ல, வலியையும் அவர் விரும்பியே ஏற்றுக் கொண்டார். சிலுவை சுமந்து வருகையில் வீரர்கள் அவருக்கு “திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” (மார்க் 15:23). வலிகளையும் சுமந்தார் எனும் எசாயாவின் இறைவாக்கு இதனால் நிறை வேறியது.

    ‘நீதியின் பால் பசி தாகம் உடையோர் பேறுபெற்றோர்’ என மலைப்பொழிவில் பேசினார் இயேசு. இப்போது அவர் மீட்புக்காக தாகம் கொண்டார்.

    ‘என்பொருட்டு நீங்கள் பிறருக்குக் கொடுக்கும் ஒரு குவளை தண்ணீருக்கான பிரதிபலன் கூட உங்களுக்குக் கிடைக்கும்’ என இயேசு பகிர்தலை ஊக்கப்படுத்தினார். இப்போது தனது உயிரை நமக்காக கொடுக்கிறார்.

    இயேசுவின் தாகம், மனுக்குலம் மீட்கப்பட வேண்டும் எனும் தாகம். நமது தாகம் எதில் இருக்கிறது? இவ்வுலக வாழ்க்கைக்கான தேடல்களுக்கா? இல்லை விண்ணக வாழ்வுக்கான தயாரிப்புக்கா?

    கண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள் என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார்.

    காரணம் நம்மேல் அவர் கொண்டிருந்த தாகம். பழுதற்ற ஆட்டுக்குட்டியே பலியாக முடியும் என்பதால் பாவத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர். நாம் எதில் தாகம் கொண்டிருக்கிறோம்? பாவத்தில் பயணிக்கவா? இறைவனில் பயணிக்கவா?

    “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” (யோவான் 4:14) என இயேசு சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.

    இறைமகன் இயேசு அளிக்கின்ற அந்த வாழ்வின் நீரை நாம் பருகும் போது அவரது தாகம் தணிகிறது.

    சேவியர்
    ×