search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீண்டாமை"

    தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி, கொடூரமாக தாக்கியது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலத்தில் மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் மீது உயர் சாதி வகுப்பினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் 2 தலித் சிறுவர்கள், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு, மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததுதான்.

    ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவின் மனுதர்மம் பரப்பிய இத்தகைய நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்புணர்வு அரசியலை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #Dalit Boys
    மகாராஷ்டிராவின் ஜல்காவோன் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.

    மேலும், சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சமூக நீதி துறை மந்திரி தெரிவித்துள்ளார். 
    ஜாதியை காரணம் காட்டி ஆலயத்துக்குள் அனுமதிக்க மறுக்கும் தீண்டமையை ஒழிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார். #VenkaiahNaidu
    கொச்சி :

    கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள கலாடி பகுதியில் உள்ள ஆதி சங்கர பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்ற ஆதி சங்கர இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நாடு விடுதலை அடைந்து இவ்வளவு வருடங்கள் கழித்து சாதியை காரணம் காட்டி ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது, கடவுளை வணங்க எதிர்ப்பு தெரிவிப்பது, உயர் ஜாதி, கீழ் ஜாதி போன்ற வேற்றுமைகள் இப்போதும் நாடு முழுவதும் இருப்பது துரதிஷ்டமாகும். எனவே, இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கு எதிராக உள்ள இந்த தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார். 

    பழம் பெரும் ஆன்மிகவாதியும், இந்த கல்வி நிலையத்தை தோற்றுவித்தவருமான ஆதி சங்கரர் தீண்டாமைக்கு எதிராக பல சீர்திருத்தங்களை மேற்கொண்டவர். அவர் ஒரு போதும் இந்து மதத்தில் தீண்டாமையை அனுமதித்தது இல்லை. எனவே, அவர் வழியில் நாமும் தீண்டாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். யார் ஒருவரையும் நாம் விலக்கி வைக்க கூடாது, யார் ஒருவரிடத்திலும் நாம் வேற்றுமையை காட்ட கூடாது, யாரொருவரின் வாய்ப்புகளையும் நாம் மறுக்க கூடாது. இவற்றை செய்ய நமக்கு ஒரு மணி நேரம் போதுமானது என தெரிவித்தார்.

    மேலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அதிக கவணம் செலுத்தி, அணைத்து சமூகத்துடனும் இனக்கமாக இருந்து அதிக மகிழ்ச்சி மற்றும் சிறந்த வாழ்க்கையை வாழ்க்கை வாழ வேண்டும்

    இவ்வாறு  துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கூறினார். #VenkaiahNaidu
    ×